சென்னை வானிலை மையம் விடுத்த வானிலை எச்சரிக்கை அறிக்கையில், ‘தென் மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்’ என கூறப்பட்டிருக்கிறது.
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: 'அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு அரபிக்கடலில் உருவான வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும். நாளை மறுநாள் (மே 23) வரை மீனவர்கள் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் . இலங்கை, தென்மேற்கு வங்கக்கடலின் வளிமண்டல மேலடுக்கில் நிலவும் சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் மழை பெய்யும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.