Advertisment

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: ‘தென் மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்’

சென்னை வானிலை மையம் விடுத்த வானிலை எச்சரிக்கை அறிக்கையில், ‘தென் மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்’ என கூறப்பட்டிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu Weather Today

Tamilnadu Weather Today

சென்னை வானிலை மையம் விடுத்த வானிலை எச்சரிக்கை அறிக்கையில், ‘தென் மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்’ என கூறப்பட்டிருக்கிறது.

Advertisment

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: 'அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு அரபிக்கடலில் உருவான வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும். நாளை மறுநாள் (மே 23) வரை மீனவர்கள் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் . இலங்கை, தென்மேற்கு வங்கக்கடலின் வளிமண்டல மேலடுக்கில் நிலவும் சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் மழை பெய்யும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment