சென்னையில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில்களில் பயணிக்க ஒரே டிக்கெட்: செயலி உருவாக்க பணி ஆணை

முதற்கட்டமாக, வரும் டிசம்பரில் மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் மட்டும் இத்திட்டம் அறிமுகமாகிறது.

முதற்கட்டமாக, வரும் டிசம்பரில் மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் மட்டும் இத்திட்டம் அறிமுகமாகிறது.

author-image
WebDesk
New Update
metro train

சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில்களில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை செயல்படுத்த உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர அரசு திட்டமிடப்பட்டுள்ளது. 

Advertisment

இந்நிலையில், சென்னை முழுவதும் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் மூன்றிலும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் செயலியை உருவாக்க மூவிங் டெக் இன்னொவேஷன்ஸ் (Moving Tech Innovations Private Limited)நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கியுள்ளது. 

முதற்கட்டமாக, வரும் டிசம்பரில் மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் மட்டும் இத்திட்டம் அறிமுகமாகிறது.  2025 மார்ச் மாதத்தில் புறநகர் ரயில்களிலும் பயணம் செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.   

நீண்ட நாட்களாக பொது போக்குவரத்துக்கு ஒரே டிக்கெட் முறையை கொண்டு வர வேண்டும் என தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இதற்கான பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: