New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/01/tamil-indian-express-2022-06-24T170014.005.jpg)
சென்னை மெட்ரோ ரயில் சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Advertisment
இந்த மெட்ரோ ரயில் சேவையின் இரண்டாம் கட்ட பணியில், மூன்றாவது வழித்தடம் அமைப்பதற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டலம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இந்த திட்டம் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த மெட்ரோ ரயில் சேவையின் மூன்றாவது வழித்தடம், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 45.8 கிலோமீட்டருக்கு அமைக்கப்படவுள்ளது.
மேலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை அடையாறு ஆற்றின் கீழ் மெட்ரோ ரயில் சுரங்கம் அமைப்பதற்கும், பக்கிங்காம் கால்வாயில் மெட்ரோ சுரங்கப் பாதை அமைப்பதற்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.