சென்னை அரும்பாக்கம், நேரு பார்க் மெட்ரோ ரயில் ஸ்டேசன்களில் பீடர் கேப் ( சீருந்து) சேவை துவக்கப்பட்டுள்ளது. 8 கி.மீ. தொலைவு வரை செல்லும் இந்த சீருந்து சேவைக்கு ரூ. 10 ஒரே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் மொபைல் செயலியின் மூலம், இந்த சீருந்து பயண டிக்கெட்டை புக்கிங் செய்யலாம். இந்த சீருந்து சேவை, சைதாப்பேட்டை, கீழ்ப்பாக்கம் மற்றும் அண்ணா நகர் டவர் ஸ்டேசன்களில் விரைவில் துவக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ, பெங்களூரு மெகா கேப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்த சீருந்து சேவையை வழங்கிவருகிறது. நந்தனம். ஏஜி-டிஎம்எஸ், ஆயிரம் விளக்கு, எல்ஐசி, கவர்ன்மென்ட் எஸ்டேட், சென்ட்ரல், வண்ணாரப்பேட்டை, விமானநிலையம், ஷெனாய் நகர், நங்கநல்லூர் உள்ளிட்ட மெட்ரோ ரயில் ஸ்டேசன்களில், இந்த சீருந்து சேவை பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.