/tamil-ie/media/media_files/uploads/2023/04/chennai-metro-5.jpg)
2026ஆம் ஆண்டுக்குள் மாதவரத்தில் இருந்து ரெட்டேரி சந்திப்பு வரை சென்னை மெட்ரோ ரயில் மக்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாதவரம், மஞ்சம்பாக்கம், ரெட்டேரி போன்ற வடக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் மூன்று ஆண்டுகளில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம், ஏனெனில் மாதவரத்தில் இருந்து ரெட்டேரி சந்திப்பு வரையிலான பாதை 2026 ஆம் ஆண்டுக்குள் பயணிகளுக்காக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) அதிகாரிகளின் கூற்றுப்படி, மாதவரம் முதல் ரெட்டேரி வரையிலான இந்த 11 கிமீ தூரத்திற்கான காலக்கெடுவை மீண்டும் ஒருமுறை நீட்டித்து, 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளனர்.
மாதவரம் டிப்போ மெட்ரோ, அசிசி நகர், மஞ்சம்பாக்கம், வேல்முருகன் நகர், மாதவரம் பேருந்து நிலையம், சாஸ்திரி நகர் மற்றும் ரெட்டேரி சந்திப்பு ஆகிய இடங்களில் இந்த ரயில் நிலையங்கள் கட்டப்படும். மாதவரம் டிப்போ மெட்ரோ ஆழமற்ற நிலத்தடி நிலையமாக இருக்கும்.
தற்போது, பூந்தமல்லி முதல் போரூர் வரை ரயில் பாதையை 2025ம் ஆண்டு வரையிலும் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. போரூர் முதல் பவர் ஹவுஸ் வரையிலான பாதை, அடுத்த ஆண்டு வரையிலும் முடிக்க கவனம் செலுத்தப்படுகிறது.
மாதவரம் டெப்போவில், ரயில்கள் நிறுத்தப்படும் மற்றும் பராமரிப்பு செய்யப்படும் கட்டுமானப் பணிகளும் நடந்து வருகின்றன, மேலும் சோதனை ஓட்டம் மற்றும் செயல்பாடுகளுக்கு தயாராக இருப்பதாக மற்றொரு அதிகாரி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.