New Update
/indian-express-tamil/media/media_files/bwyRqof0HN2ZaRCLynoR.jpg)
Chennai
சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் தங்களின் 'ரூட் தல' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக MTC பேருந்தின் மீது ஏறி ரகளை செய்யும் வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலானது
Chennai
சென்னையில் கோடை விடுமுறைக்குப் பின்னர் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் சாலையில் கும்பலாகவும், பேருந்துகளில் கானா பாடல்கள் பாடியும், முக்கியமாக கல்லூரிக்கு தினசரி வந்து செல்லும் பேருந்து மற்றும் ரயில் வழித்தடங்களில் ரூட் தல என்ற பெயரில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் தங்களின் 'ரூட் தல' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக MTC பேருந்தின் மீது ஏறி ரகளை செய்யும் வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலானது.
பிராட்வே மற்றும் பூந்தமல்லி இடையே இயக்கப்படும் வழித்தட எண் 53, எம்டிசி பேருந்தின் மேற்கூரையில் மாணவர்கள் ஏறிச் சென்றனர். அவர்களில் சிலர் சாலையில் ரகளை செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரும்பாக்கம் மற்றும் டிபி சத்திரம் காவல் எல்லையில், ஜூலை 5 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்களில் பலர் போலீசாரைக் கண்டதும் கலைந்து ஓடினர், சிலரை போலீஸார் சுற்றி வளைத்து எச்சரித்து அனுப்பினர்.
சில மாணவர்கள் நடுரோட்டில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்ததையும், இன்னும் சிலர் கல்லூரி கேட்டில் ஏறி உள்ளே செல்ல முயன்றதைக் காண முடிந்தது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.