தூய்மைப் பணியாளர் கைதுக்கு எதிர்ப்பு: போராட்டத்தில் குதித்த நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள்!

தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி, ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்களை காவல்துறை நள்ளிரவில் அப்புறப்படுத்தி கைது செய்த நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதராவாக சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி, ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்களை காவல்துறை நள்ளிரவில் அப்புறப்படுத்தி கைது செய்த நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதராவாக சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
student protest

தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதராவாக சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி, ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்களை காவல்துறை நள்ளிரவில் அப்புறப்படுத்தி கைது செய்த நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதராவாக சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

Advertisment

சென்னை மாநகராட்சியில் 5 மற்றும் 6 மண்டலங்களில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தூய்மைப் பணியை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைப்பதை தடுத்து நிறுத்தக் கோரியும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு சி.பி.எம், வி.சி.க, நா.த.க, த.வெ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் ஆதரவு தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், தூய்மைப் பணியாளர்கள் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்துங்கள் என்றும், அவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment
Advertisements

இதையடுத்து, காவல்துறை 500-க்கும் மேற்பட்ட போலீசாருடன் சென்று ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாகக் கைது செய்தனர். அப்போது, தூய்மைப் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசாருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், போலீசார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிப் பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர். அவர்கள் அனைவரும் சென்னையின் பல்வேறு இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பணி நிரந்தரம் செய்யக் கோரி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாகப் போராடி வந்த 
தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக கைது செய்த காவல்துறையின் நடவடிக்கைக்கு சி.பி.எம். மாநில செயலாளர் பெ. சண்முகம், மதுரை எம்.பி சு. வெங்கடேசன், நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.


இந்நிலையில், பணி நிரந்தரம் செய்யக் கோரி ரிப்பன் மாளிகை முன்பு போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாகக் கைது செய்ததைக் கண்டித்தும், தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாகவும் சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் எஸ்.எஃப்.ஐ மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்து அப்புறப்படுத்திய காவல்துறையைக் கண்டித்தும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர்.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: