/indian-express-tamil/media/media_files/2025/05/13/JfW4J1PMvrDKseC2UTug.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
May 13, 2025 21:32 IST
ஏர்டெல் சேவை பாதிப்பு என தகவல்
இந்தியா முழுவதும் கடந்த 2 மணி நேரமாக ஏர்டெல் நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அழைப்புகள் மேற்கொள்ள முடியாமல் பயனர்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர். இதன் பாதிப்பு விரைவில் சீரமைக்கப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 13, 2025 21:04 IST
பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என இந்தியா உத்தரவு
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றமான உறவுகளுக்கு மத்தியில், புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி "விரும்பத்தகாத செயல்களில்" ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய இந்தியா, அவரை வெளியேற்றியுள்ளது. மேலும், பெயர் குறிப்பிடப்படாத அந்த அதிகாரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளார்.
-
May 13, 2025 20:54 IST
புனிதர் வேடம் தரிக்க இ.பி.எஸ் முயற்சி - ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அதன்படி, நடுநிலையோடு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும், அதற்கான நீதி இன்று கிடைத்துள்ளது என்றும் கூறும் எடப்பாடி பழனிசாமி, சி.பி.ஐ கேடயத்தை தூக்கி புனிதர் வேடம் தரிக்க முயல்வதாக அவர் விமர்சித்துள்ளார்.
-
May 13, 2025 20:19 IST
இறால் பண்ணை விவகாரம் - மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு
திருவள்ளூரில் சட்ட விரோதமாக இறால் பண்ணை இயங்கி வருவதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அதனை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
May 13, 2025 20:07 IST
வட மாநிலங்களில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் விமான சேவை
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக வட மற்றும் மேற்கு இந்தியாவில் மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்களில் சிலவற்றில் விமான சேவைகள் பகுதியளவில் மீண்டும் தொடங்கின. அதன்படி, ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் ஹிண்டன் ஆகிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களின் வணிக விமான சேவைகள் இயக்கின.
-
May 13, 2025 19:36 IST
73 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
சென்னை மாநகர காவல் துறையில், 73 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
May 13, 2025 19:20 IST
சர்ச்சை பாடலை நீக்க வேண்டும் - இ.பி.எஸ்-இடம் ஜனசேனா கட்சியினர் வலியுறுத்தல்
சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் 'DD Next level' படத்தில் இடம்பெற்றுள்ள 'கிஸ்ஸா 47' என்ற பாடல் இந்துக்களின் மனதை புண்படுத்தும்படி இருப்பதாக ஜனசேனா கட்சியினர் புகாரளித்துள்ளனர். மேலும், திருப்பதி சென்ற எடப்பாடி பழனிசாமியிடம், அப்படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடலை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
-
May 13, 2025 18:58 IST
ஆப்ரேஷன் சிந்தூர்: ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கத்தின் போது தெரிவித்த 10 முக்கிய விஷயங்கள்
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், காஷ்மீர் குறித்த இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்புப் பிரச்சினை என்றும், இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறினார்.
“ஜம்மு காஷ்மீர் இந்திய யூனியன் பிரதேசம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியாகவே தீர்க்க வேண்டும் என்பது நமது நீண்டகால தேசிய நிலைப்பாடு,” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
“அந்தக் கொள்கை மாறவில்லை. உங்களுக்குத் தெரியும், சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதியை பாகிஸ்தான் விடுவிப்பதுதான் நிலுவையில் உள்ள விஷயம்,” என்று அவர் கூறினார். டிரம்பின் சலுகை குறித்த கேள்விக்கு ஜெய்ஸ்வால் பதிலளித்தார்.
அணு ஆயுதப் போர் குறித்த டிரம்பின் ஊகங்கள் குறித்து ஜெய்ஸ்வால் கூறுகையில், இராணுவ நடவடிக்கை முற்றிலும் வழக்கமான களத்தில் உள்ளது என்றார்.
“பாகிஸ்தானின் தேசிய ராணுவ ஆணையம் மே 10 அன்று கூடும் என்று சில தகவல்கள் வந்தன. ஆனால் இதை அவர்களே பின்னர் மறுத்தனர். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரே அணு ஆயுதக் கோணத்தை மறுத்துள்ளார்," என்று ஜெய்ஸ்வால் கூறினார்.
“உங்களுக்குத் தெரியும், அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணியவோ அல்லது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதைத் தூண்டிவிடவோ அனுமதிக்க மாட்டோம் என்பதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
“பல்வேறு நாடுகளுடனான உரையாடல்களில், இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்கள் பங்கேற்பது அவர்களின் சொந்த பிராந்தியத்தில் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் நாங்கள் எச்சரித்தோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும் மீளமுடியாத வகையிலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை கைவிடும் வரை சிந்து நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைக்கும் என்று ஜெய்ஸ்வால் கூறினார்.
பாகிஸ்தான் தொழில்துறை அளவில் பயங்கரவாதத்தை வளர்த்தது என்று அவர் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா அழித்த பயங்கரவாத உள்கட்டமைப்பு இந்தியர்கள் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பல அப்பாவிகளின் மரணத்திற்கும் காரணமாகும் என்று அவர் கூறினார்.
கூடுதல் தகவல்கள்: பி.டி.ஐ
-
May 13, 2025 18:21 IST
ராணுவ நடவடிக்கை பேச்சுவார்த்தையில் வர்த்தகம் குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை - வெளியுறவு அமைச்சகம்
வர்த்தகம் குறித்த தனது பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய ஒரு நாள் கழித்து, வளர்ந்து வரும் இராணுவ நடவடிக்கை குறித்த எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் வர்த்தகம் குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியது. ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியாக தீர்க்க வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
May 13, 2025 18:15 IST
ஆபரேஷன் சிந்தூர்- வெளியுறவுத் துறை விளக்கம்
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக டெல்லியில் வெளியுறவு அமைச்சகம் சார்பில், செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காஷ்மீர் தொடர்பான பிரச்சனையில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதிகளை விடுவிப்பதுதான் நிலுவையில் உள்ள பிரச்சனை என ரண்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்
-
May 13, 2025 16:33 IST
இந்தியாவை சீண்டினால் பேரழிவு நிச்சயம்: பிரதமர் மோடி எச்சரிக்கை
இது புதிய இந்தியா. பதில் தாக்குதலின்போது முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன.பாக். வேண்டுகோளுக்கு இணங்க ராணுவ நடவடிக்கைகள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது, இது புதிய இந்தியா, எதிரிக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்போம். புதிய இந்தியா அமைதியை விரும்புகிறது. மனித குலத்தை பாகிஸ்தான் தாக்கினால் அவர்களை அழிப்போம். ஆபரேஷன் சிந்தூர் பொதுவான ராணுவ நடவடிக்கை மட்டும் அல்ல. பயங்கரவாதிகள் மீண்டும் இந்தியாவை சீண்டினால் பேரழிவு நிச்சயம். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் அச்சத்தில் உள்ளனர். நாம் அணு ஆயுத அச்சுறுத்தலை முறியடிக்கும்போது திக்கெட்டும் பாரத் மாதா கி ஜெய் ஒலிக்கிறது. பயங்கரவாதிகளின் இல்லத்திற்குள்ளேயே நுழைந்து தாக்கினோம். நமது ஏவுகணைகளை நினைத்து பாகிஸ்தான் தூக்கத்தை தொலைத்துவிட்டது. பாக். பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்பதுதான் நமது லட்சியமாக இருந்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
May 13, 2025 15:39 IST
மே 18ல் விண்ணில் பாய்கிறது ரிசாட் -1B செயற்கைக்கோள்
ஆபரேஷன் சிந்தூரையடுத்து, இந்தியாவின் பாதுகாப்புக்காக PSLV-C61 ராக்கெட் மூலம் ரிசாட்-1B ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளை மே18ல் இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது
பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளை கண்காணிக்கும் வகையில் ரிசாட் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல்
-
May 13, 2025 15:00 IST
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் வரும் 16ம் தேதி வரை, 4 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு –
இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
கோவை, நீலகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
May 13, 2025 14:39 IST
பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு: முதல்வர் வரவேற்பு
பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!
- முதல்வர் ஸ்டாலின்
-
May 13, 2025 14:36 IST
பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு: அதிமுக வரவேற்பு
பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. அதிமுக அரசு பொள்ளாச்சி வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதால் இன்று உரிய நீதி கிடைத்துள்ளது. எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்பதால் சிபிஐக்கு வழக்கை மாற்றினோம்
- அதிமுக
-
May 13, 2025 13:31 IST
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் ஆன்லைனில் வெளியீடு; மொத்தம் 93.66% மாணாக்கர்கள் தேர்ச்சி. மொத்தம் 23.71 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 22.21 லட்சம் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
May 13, 2025 13:12 IST
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
"இன்று காலை, நான் AFS அடாம்பூருக்குச் சென்று எங்கள் துணிச்சலான விமான வீரர்களையும் படையினரையும் சந்தித்தேன். தைரியம், உறுதிப்பாடு மற்றும் அச்சமற்ற தன்மையை எடுத்துக்காட்டுவோருடன் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த அனுபவமாக இருந்தது. அவர்கள் நம் தேசத்திற்காக செய்யும் எல்லாவற்றிற்கும் இந்தியா நம் ஆயுதப் படைகளுக்கு நித்தியமாக நன்றியுள்ளவர்களாக இருக்கிறது." என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
May 13, 2025 12:50 IST
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே 4வது வாரத்தில் தொடங்கும் பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
May 13, 2025 12:08 IST
காஷ்மீரில் பாதுகாப்பு படை- பயங்கரவாதிகள் மோதல்
காஷ்மீர்: சோபியான் பகுதியில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே மோதல். ரோந்து பணியின்போது பாதுகாப்பு படையை தாக்க முயன்ற 4 பயங்கரவாதிகள் சுற்றி வளைப்பு. பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதில் தாக்குதல் நடந்துள்ளது.
-
May 13, 2025 12:07 IST
மாணவர்களை விட மாணவிகள் 5.94% கூடுதல் தேர்ச்சி
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.94% கூடுதலாக தேர்ச்சி பெற்றனர் 91.64% மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில் 85.70% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
-
May 13, 2025 12:06 IST
சென்னையில் 97.39% மாணாக்கர்கள் தேர்ச்சி
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் அதிகபட்சமாக விஜயவாடாவில் 99.60%, குறைந்தபட்சமாக பிரயாக்ராஜ் 79.53% மாணாக்கர்கள் தேர்ச்சி; சென்னை மண்டலத்தில் 97.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.94% கூடுதலாக தேர்ச்சி பெற்றனர்
-
May 13, 2025 12:04 IST
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் ஆன்லைனில் வெளியீடு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். cbseresults.nic.in, results.cbse.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை அறியலாம்
-
May 13, 2025 11:36 IST
ஏற்காடு மலர்க்கண்காட்சி அறிவிப்பு
சேலம் ஏற்காட்டில் மே 23 ஆம் தேதி 48 ஆவது கோடைவிழா தொடங்கப்படும் என அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
-
May 13, 2025 10:10 IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு!
பொள்ளாச்சி வழக்கில் காலை 10 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு சவரன் ரூ.70,120 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ரூ.8765 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
May 13, 2025 09:43 IST
அமைச்சர் சாமிநாதன் மருத்துவமனையில் அனுமதி
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் சாமிநாதன் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அமைச்சர் சாமிநாதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
-
May 13, 2025 09:41 IST
சென்னையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!
நேற்று ஒரே நாளில் இருமுறை குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.70,120க்கு விற்பனையாகிறது.
-
May 13, 2025 09:40 IST
ஜம்மு உள்ளிட்ட 6 இடங்களில் இன்று விமான சேவைகள் ரத்து
ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர், லே, ஸ்ரீநகர் மற்றும் ராஜ்கோட் விமான நிலையங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
-
May 13, 2025 09:20 IST
இன்று முதுமலை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்று பார்வையிடுகிறார். நாளை மறுநாள் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு பட்டா வழங்குகிறார். 16-ந் தேதி சுற்றுப்பயணம் முடிந்து கோவை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். முதல்வர் வருகையை ஒட்டி ஊட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
-
May 13, 2025 09:06 IST
பொள்ளாச்சி வழக்கு - கைதான 9 பேரும் நீதிமன்றம் வருகை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேர், சேலம் மத்திய சிறையில் இருந்து கோவைக்கு அழைத்துவரப்பட்டனர். சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இன்னும் சற்று நேரத்தில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.
-
May 13, 2025 09:03 IST
திருச்சி வழியாக செல்லும் 6 ரயில்கள் இன்று ரத்து
திருச்சி ரயில்வே கோட்டத்தின் கோட்டை-முத்தரசநல்லூர் பிரிவுக்கு இடையே தற்போதைய சாலை மேம்பாலம் அகற்றுதல் மற்றும் பொறியியல் பணிகள் காரணமாக, இன்று அந்த வழியாக செல்லும் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கரூர் - திருச்சி பயணிகள் ரயில், திருச்சி - கரூர் பயணிகள் ரயில், திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில், மயிலாடுதுறை - சேலம் பயணிகள் ரயில், சேலம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில், ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் உள்ளிட்ட ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
-
May 13, 2025 08:19 IST
போதை மாத்திரைகள் பறிமுதல்- ஒருவர் கைது
சென்னை, சைதாப்பேட்டை அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். டாட்டூ ஆர்ட்டிஸ்ட் திவாகர் என்பவரிடம் 3 கிலோ கஞ்சா, 104 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா, போதை மாத்திரைகளை வாங்கி சென்னையில் விற்பனையில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
May 13, 2025 08:07 IST
குன்னூர்அருகே குடியிருப்பில் உலா வந்த சிறுத்தை
குன்னூர் அருகே அட்டடி குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை உலா வந்தது. இதை கண்ட பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்தனர். தொடர்ந்து சிறுத்தை குடியிருப்பு பகுதியில் நடமாடியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். எனவே, சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
-
May 13, 2025 08:06 IST
ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு
கடவுள் ராமா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி உள்ள எம்.பி., எம்.எல்.ஏ. க்களுக்கு எதிரான புகாா்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் புகாரில் காங்கிரஸ் கட்சியின் பெயரும் சோ்க்கப்பட்டுள்ளது. இந்த மனுவை 19-ஆம் தேதி விசாரிக்க நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.
-
May 13, 2025 08:00 IST
ஊட்டியில் ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு
கோடை விழாவின் 3-வது நிகழ்ச்சியாக ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி கடந்த 10-ந் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சியில் 2 லட்சம் ரோஜா மலர்களை கொண்டு கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது குறித்த அலங்காரங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக, ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 நாட்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
May 13, 2025 07:40 IST
அந்தமானில் இன்று துவங்குகிறது தென்மேற்கு பருவமழை
அந்தமான் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில், தென்மேற்கு பருவமழை இன்று துவங்கலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு, இடி மின்னலுடன், மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்றும், நாளையும் அதிக பட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
May 13, 2025 07:38 IST
சித்திரை திருவிழா: தூய்மைப் பணியில் 3,000 பணியாளா்கள்
சித்திரைத் திருவிழாவை யொட்டி, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமான குப்பைகள் அகற்றும் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். ஏற்கெனவே பணிபுரியும் பணியாளா்களுடன் கூடுதலாக 431 பணியாளா்கள், குப்பை சேகரிப்புக்காக 17 இலகு ரக வாகனங்கள், 10 கனரக வானங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, தற்காலிகமாக ஆங்காங்கே 300 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
-
May 13, 2025 07:08 IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் கைதான 9 பேரும் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, அவர்கள் சேலம் சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இன்றுகாலை 10 மணியளவில் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார்கள். கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வர உள்ளது. கைதானவர்களுக்கு எந்த மாதிரியான தீர்ப்பு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.