/indian-express-tamil/media/media_files/2025/06/20/modi-yoga-2025-06-20-20-43-43.jpg)
Today Latest Live News Update in Tamil 20 June 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.90 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.48 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Jun 20, 2025 23:42 IST
மெரினாவில் சீறி பாய்ந்த கார் - போலீசார் விசாரணை
சென்னை மெரினா கடற்கரையில் அதிவேகமாக கார் ஓட்டிய விவகாரத்தில் கணவன் - மனைவியை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை. காரில் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் கோபத்தில் வேகமாக காரை ஓட்டியதாக அபிஷேக் என்பவர் போலீசாரிடம் வாக்குமூலம்
-
Jun 20, 2025 23:41 IST
3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது
-
Jun 20, 2025 23:41 IST
தென்னை மரம் முறிந்து விழுந்து ஆட்டோ ஓட்டுனர் உயிரிழப்பு
சென்னை வியாசர்பாடி அருகே பலத்த காற்றால் தென்னை மரம் முறிந்து ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோ ஓட்டுனர் உயிரிழப்பு
-
Jun 20, 2025 23:39 IST
கீழடி விவகாரம் - அதிமுகவுக்கு திமுக பதிலடி
கீழடி ஆராய்ச்சி நிறுத்தப்பட்டபோது முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். ஆய்வு நிறுத்தப்பட்டபோது அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி கனிமொழி ஆராய்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியை ஏன் நிறுத்தினீர்கள் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 13,000 பொருட்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது அதிமுக ஆட்சி காலத்தில் 2 அகழ்வாராய்ச்சிக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என எம்.எல்.ஏ எழிலன் கூறியுள்ளார்.
-
Jun 20, 2025 23:37 IST
தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் மழை!
சென்னை குரோம்பேட்டை, மீனம்பாக்கம், மேடவாக்கம், வண்டலூர், ஓ.எம்.ஆர் சாலை, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை.
-
Jun 20, 2025 20:40 IST
ஆந்திராவில் நடைபெற உள்ள யோகா தின நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்பு
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாளை ஆந்திராவில் நடைபெற உள்ள யோகா தின நிகழ்வில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பதாக எதிர்பார்ப்பு
-
Jun 20, 2025 20:39 IST
பீகாரில் ரயிலும் ரயில்வே டிராலியும் மோதி விபத்து
பீகாரில் விரைவு ரயிலும் ரயில்வே தண்டவாளங்களை பராமரிக்கும் ரயில்வே டிராலியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி . 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
-
Jun 20, 2025 20:35 IST
இஸ்ரேலில் தூதரகத்திலிருந்து ஊழியர்களை திரும்பப் பெறுவதாக இங்கிலாந்து அறிவிப்பு
பாதுகாப்பு காரணங்களுக்காக, தெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்திலிருந்து தற்காலிகமாக ஊழியர்களை திரும்பப் பெறுவதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது என்று வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்ததாக பிபிசி தெரிவித்துள்ளது .
இஸ்ரேலில் உள்ள அதன் தூதரகம் மற்றும் துணைத் தூதரகத்திலிருந்து ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பு காரணங்களுக்காக இங்கிலாந்து தற்காலிகமாக திரும்பப் பெற்றதை அடுத்து, இந்த தூதரகம் தொலைதூரத்தில் இருந்து தொடர்ந்து செயல்படும்.
-
Jun 20, 2025 19:31 IST
இஸ்ரேலியர்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்
இஸ்ரேலியர்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேற இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது, இது ஏவுகணைத் தாக்குதலின் உடனடி அச்சுறுத்தல் கடந்துவிட்டதைக் குறிக்கிறது.
எக்ஸ் தளத்தில் ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் வீழ்ச்சிகள் குறித்த தகவல்கள் வந்துள்ள. பல பகுதிகளில் மீட்புப் படையினர் தற்போது செயல்பட்டு வருகின்றனர், தாக்குதலால் ஏற்பட்ட ஏதேனும் சேதம் அல்லது காயங்களை மதிப்பிட்டு பதிலளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
Jun 20, 2025 19:14 IST
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் - தெஹ்ரானில் இருந்து 1,000 இந்திய மாணவர்கள் வெளியேற்றம்
இஸ்ரேல் – ஈரான் இடையேயான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தெஹ்ரானில் இருந்து 1,000 இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர், 3 விமானங்களில் திரும்ப அழைத்து வரப்படுவார்கள்.
-
Jun 20, 2025 19:07 IST
பங்குச்சந்தை அதிரடி உயர்வு
வார இறுதி நாளான இன்று (20.6.2025 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 319 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 112 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 675 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 252 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
349 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 648 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1,046 புள்ளிகள் ஏற்றம்பெற்ற சென்செக்ஸ் 82 ஆயிரத்து 408 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
256 புள்ளிகள் அதிகரித்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 984 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 722 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 412 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
Jun 20, 2025 18:55 IST
டெல்லி மெட்ரோ ரயிலில் பாம்பு ? – பெண்கள் அலறல்
டெல்லி மெட்ரோ ரயிலில் பாம்பு இருந்ததாக சிலர் கூறியதை அடுத்து பெண்கள் அலறினர். மெட்ரோ ரயில் பெட்டியில் இருந்த பெண்கள் பயத்தில் குதித்து அலறும் வீடியோ வெளியாகி உள்ளது. பயத்தில் அலறி குதித்த பெண்கள், இருக்கைகள் மீது ஏறிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரயிலை நிறுத்தி சோதனை செய்ததில், பெண்கள் பெட்டியில் பாம்பு இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
-
Jun 20, 2025 18:54 IST
பிளஸ் 2 மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல் 23ல் வெளியீடு
பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் பட்டியல் வரும் 23ம் தேதி தேர்வு ஆணையத்தின் இணையதளத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளது.
-
Jun 20, 2025 18:52 IST
ரயில்கள் அனைத்திலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?: மும்பை ஐகோர்ட் கேள்வி
ரயில்களில் ஏன் தானியங்கி கதவு அமைப்பை உருவாக்க முடியாது? என ரயில்வே அதிகாரிகளுக்கு மும்பை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. ரயில்கள் அனைத்திலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?. தினமும் 10 பேர் ரயில் விபத்தில் பலியாகும் நிலையில் ஏன் தானியங்கி கதவு அமைப்பை உருவாக்க முடியாது? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மும்பையில் நெரிசலால் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து 4 பேர் பலி; 8 பேர் படுகாயம் அடைந்தனர். மும்பை ஐகோர்ட்டில் தொடர்ந்த பொதுநல வழக்கு தலைமை நீதிபதி தேவேந்திர குமார் ஆராதே அமர்வில் விசாரணை நடைபெற்றது.
-
Jun 20, 2025 18:41 IST
சட்ட - ஒழுங்கு சீர்கேடு: ஜெகன் மூர்த்தி பேச்சு
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளது. இதனால் மக்கள் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர், அரசுக்கு எதிராக சட்ட மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நான் பேசிவருவதால், காழ்ப்புணர்ச்சியோடு என் மீது குற்றச்சாட்டை சுமத்தி சிக்க வைக்க நினைக்கிறது” என்று வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி கூறியுள்ளார்.
-
Jun 20, 2025 18:22 IST
'ஜன நாயகன்' அப்டேட்
விஜயின் பிறந்தநாளை ஒட்டி, வரும் 22ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு 'ஜன நாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியாகிறது
-
Jun 20, 2025 17:53 IST
ஜி.கே மணியை நலம் விசாரித்த ராமதாஸ்
சென்னை, வானகரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே. மணியை, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
-
Jun 20, 2025 17:50 IST
பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள், தி.மு.க ஆட்சியில் உச்சத்தை தொட்டுள்ளது - நயினார் நாகேந்திரன்
பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள், தி.மு.க ஆட்சியில் உச்சத்தை தொட்டுள்ளது என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, "கன்னியாகுமரி குலசேகரத்தில் காதலி வீட்டின் மாடியில் தூக்கிட்ட பட்டியலின இளைஞரின் இறப்பு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அரசியல் தலையீடுகள் இன்றி உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும்" என்று அவர் கூறினார்.
-
Jun 20, 2025 17:07 IST
நுழைவுத் தேர்வுகளில் உள்ள பிரச்சனைகளை ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தகவல்
நீட், ஜே.இ.இ போன்ற நுழைவுத் தேர்வுகளின் பயிற்சி, செயல்திறன் மற்றும் சம வாய்ப்பு தன்மை போன்றவை குறித்து ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
Jun 20, 2025 16:39 IST
பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை - சென்னை ஐகோர்ட்
பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் பெண்கள், தங்களது கணவரின் அனுமதி அல்லது கையொப்பம் பெற வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த பெண் தொடர்ந்த வழக்கில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், கணவரின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை, ஆணாதிக்கத்தை எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
Jun 20, 2025 16:12 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி அவரது சகோதரரும், கட்சியின் மாநில பொதுச் செயலாளருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
Jun 20, 2025 15:42 IST
சில இடங்களில் வெயில் அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை வ்ட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Jun 20, 2025 15:11 IST
புதிய பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்.. நாளை திறந்துவைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை நாளை ஸ்டாலின் திறந்து வைக்கிறார். குறிள் மணிமாடம், 100 பேர் அமரும் வகையில் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம், வாகன நிறுத்தம், உணவு, காபி அருந்தும் பகுதி என அனைத்தும் புதுபொலிவு பெற்றுள்ளன.
-
Jun 20, 2025 14:37 IST
ஆங்கிலம் குறித்து அமித்ஷா பேச்சு - ராகுல் விமர்சனம்
இன்றைய உலகில் தாய் மொழியை போலவே ஆங்கிலமும் மிக முக்கியமானது. ஆங்கிலம் என்பது அவமானம் அல்ல அதிகாரம், ஆங்கிலம் கை விலங்கல்ல, விலங்கை உடைக்கும் கருவி ஏழைகள் கேள்வி கேட்பதையோ, முன்னேறுவதையோ பாஜக விரும்புவதில்லை என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
-
Jun 20, 2025 14:33 IST
பாலியல் வழக்குகளை கவனமாக கையாளுங்கள் - உயர்நீதிமன்றம்
பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக்கூடாது. போலீசாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்க தமிழக் டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Jun 20, 2025 14:04 IST
குடியரசுத் தலைவருக்கு இபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து
நல்ல ஆரோக்கியத்துடன் கருணை, கண்ணியம், அர்ப்பணிப்போடு நாட்டை வழிநடத்த வாழ்த்துக்கள் என இபிஎஸ் குடியரசுத்தலைவர் முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Jun 20, 2025 13:24 IST
பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்டோர் அடையாளம் எந்த வடிவத்திலும் வெளியிடக் கூடாது - ஐகோர்ட் உத்தரவு!
பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை எந்த வடிவத்திலும் வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்குமாறு தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்குகளை கையாளுவதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும்; மீறினால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" என உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது
-
Jun 20, 2025 13:17 IST
சன் டிவி நெட்வொர்க்: ‘குற்றச்சாட்டுகள் அவதூறானவை; இது குடும்ப விவகாரம் மட்டுமே’
சன் டிவி நெட்வொர்க் லிமிடெட், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் "தவறானவை, அவதூறானவை மற்றும் ஆதாரமற்றவை" எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக இருந்தபோது நிகழ்ந்த பரிமாற்றங்கள் சட்டப்பூர்வமானவை என்றும், இது குடும்ப விவகாரம் மட்டுமே என்றும், வர்த்தகத்துடன் தொடர்பில்லாதது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு "சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே பிரச்சனை" என செய்திகள் வெளியான நிலையில், மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை நிர்வாகத்திற்கு சன் டிவி ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. 2024 ஜூன் 14 அன்று வெளியான இந்த செய்தி, நிறுவனம் அல்லது அதன் துணை நிறுவனங்களுடன் எந்த வகையிலும் தொடர்பு இல்லாத, தவறான மற்றும் ஆதாரமற்ற கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டது என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"செய்தித்தாள்களில் வெளிவந்துள்ள செய்திகளில் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மற்றும் அதன் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நடந்த தகராறு தொடர்பான ஒரு குறிப்பிட்ட தகவலை நாங்கள் மேற்கோள் காட்டுகிறோம். நிறுவனத்துக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும் மற்றும் சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 20, 2025 13:03 IST
ஜனவரி முதல் புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க உத்தரவு - மத்திய அரசு உத்தரவு
அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ABS எனப்படும் Anti-lock Breaking System பொருத்த உத்தரவு; தற்போது 40% வாகனங்களில் ABS பொருத்தப்படவில்லை. அதனால், வரும் ஜனவரி மாதம் முதல் புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
Jun 20, 2025 12:48 IST
டெல்லியில் ஜூன் 27-ல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம் வரும் 27ம் தேதி டெல்லியில் கூடுகிறது. கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீர் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஜூலை மாதத்திற்கு 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Jun 20, 2025 12:21 IST
வேங்கைவயல் விவகாரத்தில் ஏன் மனிதச் சங்கிலி நடத்தவில்லை? திருமாவளவனுக்கு தமிழிசை கேள்வி
பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்: “முருக பக்தர்கள் மாநாட்டை எதிர்த்து மனிதச்சங்கிலி நடத்திய திருமாவளவன் வேங்கைவயலுக்கு ஏன் நடத்தவில்லை; கூட்டணி ஆட்சி, துணை முதல்வர் என திருமாவளன்தான் முதலில் ஆரம்பித்தார்; செல்வப்பெருந்தகைக்கு துணை முதல்வர் ஆசை இருந்தாலும் காட்டிக்கொள்ள மாட்டார்.” என்று கூறியுள்ளார்.
-
Jun 20, 2025 12:17 IST
8 விமானங்கள் ரத்து - ஏர் இந்தியா அறிவிப்பு
துபாய் - சென்னை, டெல்லி - மெல்போன், மெல்போர்ன் - டெல்லி, புனே - டெல்லி, துபாய் - ஹைதராபாத், அகமதாபாத் - டெல்லி, சென்னை - மும்பை, ஹைதராபாத் - மும்பை புறப்பட வேண்டிய 8 ஏர் இந்தியா விமானங்கள் சேவையை பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்டு செய்யப்படுவதாக ஏர் இந்தியா விமான அறிவித்துள்ளது.
-
Jun 20, 2025 11:25 IST
ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்த தடை - ஐகோர்ட்
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், சோதனை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை. கைப்பற்ற ஆவணங்களை அமலாக்கத்துறை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது
-
Jun 20, 2025 10:58 IST
கடற்படை விமானம் மீது லேசர் லைட் - பரபரப்பு
கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் 228 விமானம் கடலோரத்தில் ரோந்து பணியை முடித்து விட்டு பரங்கி மலை விமான தளத்திற்கு வந்தது. சென்னையில் தரையிறங்க தாழ்வாக பறந்த போது லேசர் லைட் விமானத்தை நோக்கி அடிக்கப்பட்ட நிலையில், கடலோர கடற்படை சார்பில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தனர்
-
Jun 20, 2025 10:31 IST
சென்னையில் புறப்பட்ட இண்டிகோ விமானம்: நடுவானில் கோளாறு
சென்னையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் காலை 8 மணிக்கு 72 பயணிகளுடன் மதுரை புறப்பட்ட நிலையில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் சென்னையில் தரையிறக்கம்
-
Jun 20, 2025 10:14 IST
பல்வேறு காரணங்களால் 8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
துபாய் - சென்னை, டெல்லி - மெல்போர்ன், மெல்போர்ன் - டெல்லி, துபாய் - ஐதராபாத், புனே - டெல்லி, அகமதாபாத் - டெல்லி, சென்னை - மும்பை, ஐதராபாத் - மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
-
Jun 20, 2025 09:55 IST
திரௌபதி முர்மு பிறந்தநாள்: மோடி வாழ்த்து
"ஏழைகள், நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிக்க குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு எப்போதும் பாடுபட்டுள்ளார்"
- பிரதமர் மோடி -
Jun 20, 2025 09:42 IST
விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்துச்செல்லும் ஆக்ஸியம்-4 திட்டம் அடுத்தடுத்து 3 முறை இதே மாதம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒத்திவைப்பு
இதில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பயணம் செய்ய உள்ளார்.
-
Jun 20, 2025 09:41 IST
‘குபேரா’ படத்தை ரசிகர்களுடன் காண நடிகர் தனுஷ் வருகை
Credit: Sun News
#UPDATE | ‘குபேரா’ படத்தை ரசிகர்களுடன் காண நடிகர் தனுஷ் வருகை#SunNews | #Kubera | #Dhanush | @dhanushkraja pic.twitter.com/amdA2MCwC9
— Sun News (@sunnewstamil) June 20, 2025 -
Jun 20, 2025 08:55 IST
கிண்டி U வடிவ மெட்ரோ பாலம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னையின் நவீன அடையாளமாக #Kathipara மேம்பாலத்தை அமைத்தார் தலைவர் கலைஞர்!
— M.K.Stalin (@mkstalin) June 19, 2025
அந்த மேம்பாலத்தின் மேல் இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படும் பணிகளைப் பார்வையிட்டேன்.#EngineeringMarvel என அனைவரும் வியக்க உருவாகி வரும் இது உரிய காலத்தில் முடிக்கப்பட்டு,… pic.twitter.com/tI2XpiFwl4 -
Jun 20, 2025 08:54 IST
திரௌபதி முர்முக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நாட்டுக்கு நீங்கள் ஆற்றிவரும் சேவை மென்மேலும் சிறக்க நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சி உண்டாக வாழ்த்துகிறோம்
மு.க.ஸ்டாலின்
-
Jun 20, 2025 08:52 IST
TNPL - பிளே-ஆஃப் சுற்றுக்கு சேப்பாக் முன்னேற்றம்
TNPL கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சேலத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முன்னேறியுள்ளது
-
Jun 20, 2025 08:23 IST
அந்தியோதயா ரயில் சேவை மாற்றம்
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் விரிவாக்க பணிகளால், தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயில் சேவை மாற்றம்
ஜூன் 22 - ஜூலை 22 வரை அந்தியோதயா ரயில் நெல்லை வரை மட்டும் இயக்கப்படும், மறுமார்க்கமாக நெல்லையிலிருந்து புறப்படும்.
-
Jun 20, 2025 07:55 IST
தனியார் உணவக கிளைகளில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு
சென்னை அண்ணா நகர், தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் பிரபல தனியார் உணவக கிளைகளில் கடந்த 2 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு.
-
Jun 20, 2025 07:54 IST
குமரி கடலில் குளிக்கவும், இறங்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
குமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், இறங்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்.
குமரி கடல் பகுதியில் நிலவி வந்த கடல் சீற்றம் காரணமாக கடந்த 4 நாட்களாக கடலில் குளிக்கவோ இறங்கவோ கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது!
-
Jun 20, 2025 07:27 IST
தென்காசி, திருநெல்வேலியில் லேசான மழைக்கு வாய்ப்பு
தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு
- சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Jun 20, 2025 07:22 IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
கபிணி அணையில் இருந்து தொடர்ந்து 25 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
-
Jun 20, 2025 07:21 IST
டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் தொடர்கள் கொண்ட போட்டியில் விளையாட உள்ளது. அதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று (ஜுன் 20) மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
-
Jun 20, 2025 07:21 IST
மன நிம்மதி போய் விட்டது: அன்புமணி ராமதாஸ்
பாமகவின் தலைவர் பதவியை ஏற்றதில் இருந்து மன நிம்மதி போய் விட்டது
தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.