/indian-express-tamil/media/media_files/2025/04/28/PZMqNlVWYDuwIdvHqOim.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏரிகளின் நீர் நிலவரம்: சென்னை குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியில் நீர் இருப்பு 2,823 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரியில் 140 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர் இருப்பு 344 மில்லியன் கனஅடியாக உள்ளது.
-
Apr 29, 2025 00:46 IST
ஆந்திரா மாநிலங்களவை பதவி: அணணாமலை பெயர் பட்டியலில் இல்லை
ஆந்திராவில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, பா.ஜ.க. சார்பில் பகா வெங்கடசத்யநாராயணா போட்டியிடுகிறார். தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பகா வெங்கடசத்யநாராயணா போட்டியிடுவதாக பா.ஜ.க. தலைமை அறிவித்துள்ளது.
-
Apr 28, 2025 21:21 IST
மே 3-ந் தேதி, தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வரும் மே 3-ந் தேதி, தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
Apr 28, 2025 20:11 IST
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: காஷ்மீர் சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்
ஏப்ரல் 20 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் எழுந்த பொதுமக்களின் சீற்றத்தை "பயங்கரவாதத்தின் முடிவின் ஆரம்பம்" என்று வர்ணித்து, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் உள்ள கருவூலம் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், "நாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மத நல்லிணக்கத்தையும் முன்னேற்றத்தையும் சீர்குலைக்க முயல்பவர்களின் தீய சதித்திட்டங்களை உறுதியாகத் தோற்கடிக்க" தீர்மானம் நிறைவேற்றினர்.
"இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து குறிவைப்பதன் பின்னணியில் உள்ள தீய நோக்கத்தை இந்த அவை நினைவில் கொண்டுள்ளது" என்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் கண்டித்து ஒருமனதாக மூன்று பக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. -
Apr 28, 2025 20:05 IST
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒரு நாள் சிறப்புக் கூட்டம்
ஜம்முவில் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒரு நாள் சிறப்புக் கூட்டத்தொடரின் போது, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மவுன அஞ்சலி செலுத்தினார்.
-
Apr 28, 2025 20:00 IST
தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு!
வருகிற மே 3 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
-
Apr 28, 2025 19:51 IST
பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து
பத்ம பூஷன் விருது பெற்ற திரைப்பட நடிகர் அஜித் குமாருக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து
-
Apr 28, 2025 18:50 IST
பூவிருந்தவல்லி - போரூர் இடையே ஓட்டுநர் இல்லா 2-ம் கட்ட மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு
பூவிருந்தவல்லி - போரூர் இடையே 9.1 கி.மீ தொலைவிலான 2-ம் கட்ட ஓட்டுநர் இல்லா சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 35-40 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது.
-
Apr 28, 2025 18:47 IST
அமைச்சராக பொறுப்பேற்ற மனோ தங்கராஜ்-க்கு பால்வளத்துறை ஒதுக்கீடு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் இரண்டாவது முறையாக இன்று அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார் மனோ தங்கராஜ். அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மனோ தங்கராஜ்-க்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
Apr 28, 2025 18:21 IST
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்
தலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் இரண்டாவது முறையாக இன்று அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார் மனோ தங்கராஜ். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ர விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
-
Apr 28, 2025 17:55 IST
தமிழகத்தில் 77 நீதிபதிகள் பணி இடமாற்றம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி உள்பட 77 நீதிபதிகள் பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, கரூர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் கரூர் மாவட்ட நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த எழில்வேலன், சேலம் மாவட்ட கூடுதல் நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
Apr 28, 2025 17:14 IST
கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
கடலூரில் 22 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு - கொலையாளிகளுக்கான ஆயுள் தண்டனைனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. உயர் நீதிமன்ற அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.
-
Apr 28, 2025 16:13 IST
காஷ்மீர் தாக்குதல்: இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் - அஸ்வின்
காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சிப்பதை தடுக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்
-
Apr 28, 2025 16:11 IST
கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து - 5 பேர் மரணம்
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரியின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது
-
Apr 28, 2025 15:44 IST
இபிஎஸ்-ன் குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் பதில்
திமுக ஆட்சியின் சட்ட, ஒழுங்கை பற்றிப் பேச அதிமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது
காவல்துறை மீதான இபிஎஸ்-ன் குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் பதில்
-
Apr 28, 2025 15:26 IST
ஆந்திரா கார் விபத்து: 5 பேர் உயிரிழப்பு
ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் பாகாலா பகுதியில், சாலையில் முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த கார் மோதியதில், காரில் பயணித்த 5 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு
இறந்த 5 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தகவல்
-
Apr 28, 2025 15:13 IST
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு- இபிஎஸ் கேள்விக்கு ஸ்டாலின் பதில்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில், உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த அவையில் நான் அளித்த உறுதியின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிட்டது. யார் அந்த சார் என்றெல்லாம் கதை விட்டீர்கள்
பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகள் எப்படியெல்லாம் காப்பாற்றப்பட்டார்கள் என்று நான் மீண்டும் பட்டியலிட வேண்டும்
- சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில் -
Apr 28, 2025 14:47 IST
செந்தில் பாலாஜியின் ஜாமினுக்கு எதிரான வழக்கு- உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்துவைத்தது
வழக்கின் விசாரணை முடியும் வரை அவர் எந்த அரசுப் பதவியும் ஏற்கக் கூடாது என அமலாக்கத்துறை வாதம்
வழக்கு முடிய 15 ஆண்டுகள் ஆகலாம். அதற்காக, எந்த பதவியும் வகிக்க முடியாது என உத்தரவிட முடியாது என செந்தில் பாலாஜி தரப்பு வாதம்
“செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. அந்த வகையில், புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கத் தேவையில்லை. அவரது ஜாமினுக்கு எதிரான வழக்கை முடித்து வைக்கிறோம்” - நீதிபதிகள்
-
Apr 28, 2025 14:20 IST
குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது- இபிஎஸ்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் போதை பொருள் நடமாட்டம், கொள்ளை சம்பவம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. காவல்துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை - எடப்பாடி பழனிசாமி
-
Apr 28, 2025 14:00 IST
அமைச்சர் ஐ. பெரியசாமி விடுவிப்பு ரத்து - ஐகோர்ட்
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 2006 - 2010 வரை அமைச்சராக இருந்த போது, ரூ. 2.01 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஐ. பெரியசாமி மீது புகாரளிக்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக திண்டுக்கல் மாவட்ட நீதிமறத்தின் உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
-
Apr 28, 2025 13:53 IST
முகலாய அரசர்கள் குறித்த பாடங்கள் நீக்கம்
7-ஆம் வகுப்பு பாடத்தில் இருந்து பாபர், அக்பர் உள்ளிட்ட முகலாய அரசர்களின் ஆட்சி காலம் தொடர்பான பாடங்களை என்.சி.இ.ஆர்.டி நீக்கியுள்ளது. அதற்கு பதிலாக இந்திய பேரரசுகள், கும்பமேளா நிகழ்வு உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.
-
Apr 28, 2025 13:35 IST
தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது - ஸ்டாலின் உறுதி
தமிழ்நாட்டில் மதவாதம் எந்த ரூபத்திலும் நுழைய முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் மதவாதம் எங்கு இருக்கிறது என்று சொல்லுங்கள் என கேள்வி எழுப்பிய அவர், காஷ்மீர் போன்ற சம்பவம் இங்கு நடைபெறாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-
Apr 28, 2025 13:00 IST
பினராயி விஜயன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டிற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
-
Apr 28, 2025 12:46 IST
ஆபாச படங்கள் - ஆன்லைன் தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், உல்லு, ALT, எக்ஸ் (X), ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட பல ஓடிடி தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த தளங்களில் ஆபாச படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியிடப்படுவதை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
Apr 28, 2025 12:35 IST
பிபிசி-யின் இந்திய பிரிவிற்கு மத்திய அரசு நோட்டீஸ்
பிபிசி தொலைக்காட்சியின் இந்திய பிரிவிற்கு மத்திய அரசு தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக போராளிகள் என்று குறிப்பிட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்து பிபிசி இந்தியா தலைவர் ஜாக்கி மார்டினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
Apr 28, 2025 12:12 IST
ஊராட்சி பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தால் ஓராண்டு சிறை - தமிழக அரசு
ஊராட்சி பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பலகைகள், மின்னணு திரைகள் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், ஊராட்சிகளில் விளம்பர பலகைகளை ஒழுங்குப்படுத்தும் மசோதாவை அமைச்சர் ஐ. பெரியசாமி தாக்கல் செய்தார்.
-
Apr 28, 2025 10:58 IST
16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை
பஹல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு எதிராக ஆத்திரம் மூட்டும் வகையில் செயல்பட்டதால் டான் நியூஸ், சமா டிவி, ஆரி நியூஸ், ஜியோ நியூஸ் உள்ளிட்ட 16 யூடியூப் சேனல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
-
Apr 28, 2025 10:45 IST
மே 4-ம் தேதி முதல் தொடங்குகிறது கத்திரி வெயில்!
தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை கூடுதலாக பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Apr 28, 2025 10:21 IST
செந்தில்பாலாஜி ஜாமின் ரத்து செய்யக்கோரும் மனு மீது விசாரணை
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை வருகிறது. கடந்த விசாரணையின் போது அமைச்சர் பதவியா?, ஜாமினா என கேள்வி எழுப்பி இருந்தது உச்சநீதிமன்றம். ஓரிரு நாட்கள் கால அவகாசம் கேட்ட நிலையில், நேற்று அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகினார். செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் பதவி விலகல் குறித்து உச்சநீதிமன்றத்துக்கு முறைப்படி தெரிவிப்பார்கள்.
-
Apr 28, 2025 10:15 IST
செந்தில் பாலாஜி, பொன்முடி பெயர்கள் நீக்கம்
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதனால், அமைச்சரவை முதல் வரிசையில் இருந்து பொன்முடி பெயரும், 2-வது வரிசையில் இருந்து செந்தில் பாலாஜி பெயரும் நீக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மனோ தங்கராஜ் இன்று மாலை அமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கிறார். அதன் பிறகே, அமைச்சர்கள் இருக்கை வரிசையில் அவரது பெயர் இடம்பெறும். நாளை நிறைவு நாள் சட்டசபை கூட்டத்தின்போது, அமைச்சர்கள் வரிசையில் மனோ தங்கராஜ் இடம்பெறுவார். செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் 3-வது வரிசையான முன்னாள் அமைச்சர்கள் இருக்கையில் அமருவார்கள்.
-
Apr 28, 2025 10:07 IST
”அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள்”
தமிழக சட்டசபையின் இன்றைய நிகழ்வின்போது, அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
1.அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்
2. அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கான பனபலன் இந்த ஆண்டே வழங்கப்படும். 01-10-2025 முதல் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பனப்பலன் பெறலாம்.
3. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படும்.
4. 3 வகையான ஓய்வூதியங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு செப்டம்பரில் அறிக்கை அளிக்கும்.
5. அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி தொழில்நுட்பக் கல்லூரி படிப்புக்காக ரூ.1 லட்சமும், கலை அறிவியல் படிப்புக்கு ரூ.50 ஆயிரமும் முன்பணம் வழங்கப்படும்.
6. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் தேவை அடிப்படையில் திருமண முன் பணம் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
7. பொங்கல் போனஸ் ரூ.500-ல் இருந்து ரூ.1,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
8. ஓய்வூதியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
9. பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்."
-
Apr 28, 2025 09:42 IST
அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கு பண பலன்
அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறை இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது. 1.10.2025 முதல் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பலன் பெறலாம். சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Apr 28, 2025 09:06 IST
திமுகவை கண்டித்து அதிமுக கண்டன பொதுக்கூட்டம்
திமுக அரசைக் கண்டித்து மே 3 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் மே 3 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அதிமுக கண்டன பொதுக்கூட்டம் அறிவித்துள்ளது.
-
Apr 28, 2025 08:33 IST
பஹல்காம் தாக்குதல் - திருமா கேள்வி
பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகள், பயங்கரவாதத்திற்கு இடம் கொடுத்துவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீரில் ஒரு லட்சத்து 80,000 வீரர்களை வெளியேற்றியது ஏன் என்றும் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Apr 28, 2025 08:32 IST
கலைஞர் பல்கலைக்கழக சட்ட மசோதா இன்று தாக்கல்
கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட முன் வடிவை பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் இன்று தாக்கல் செய்கிறார். உறுப்பினர்களின் கோரிக்கையை அடுத்து கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.
-
Apr 28, 2025 08:03 IST
எடப்பாடி பழனிசாமி கருத்து
திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன. செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
-
Apr 28, 2025 08:01 IST
பஹலாம் தாக்குதல் - என்.ஐ.ஏ வழக்குப்பதிவு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்தது தேசியப் புலனாய்வு முகமை தாக்குதலை நேரில் பார்த்தவர்கள், வீடியோ எடுத்தவர்களிடம் விசாரணையை தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Apr 28, 2025 08:00 IST
மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு
மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட பெண்கள் முறையான ஆவணங்களுடன் வரும் ஜூன் 4 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
-
Apr 28, 2025 07:59 IST
தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயில்
கோடை விடுமுறையையொட்டி தாம்பரம் - திருச்சி இடையே நாளை முதல் ஜூன் 29 வரை இருமார்க்கத்திலும் வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும். திருச்சியில் இருந்து அதிகாலை 5.35 க்கு புறப்படும் ரயில் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்தில் இருந்து மதியம் 3.45 க்கு புறப்படும் ரயில் இரவு 10. 40 மணிக்கு திருச்சி சென்றடையும்.
-
Apr 28, 2025 07:57 IST
ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் - இன்று சோதனை ஓட்டம்
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை 3 முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடக்க உள்ளது. ஏற்கனவே மார்ச் 20 யில் 2.5 கி.மீ தூரத்திற்கு 25 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
-
Apr 28, 2025 07:40 IST
இன்று மாலை பதவியேற்பு
தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட 7 மாதத்திற்குள் மீண்டும் அமைச்சராக மனோஜ் தங்கராஜ் இன்று மாலை 6 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்கிறார்.
-
Apr 28, 2025 07:37 IST
மழை நிலவரம்
கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Apr 28, 2025 07:36 IST
திமுக பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் கைது
சிவகங்கை, சாமியார்பட்டியில் திமுக பிரமூகர் பிரவீன்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரு(21), கருணாகரன்(20), பிரபாகரன்(19) ஆகியோரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Apr 28, 2025 07:35 IST
இஸ்ரேல் தாக்குதல் - 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
-
Apr 28, 2025 07:33 IST
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு
ஈரான் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் ஏற்பட்ட கண்டெய்னர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. ஏவுகணை உந்துசக்தியை உருவாக்கப் பயன்படுத்தும் ரசாயனம் வெடித்ததில் இந்த கோர விபத்து நடந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Apr 28, 2025 07:29 IST
நடிகர் அஜித் பத்மபூஷன் விருது பெறுகிறார்
டெல்லியில் நடிகர் அஜித்குமாருக்கு இன்று மாலை பத்மபூஷன் விருது வழங்கப்படவுள்ளது. இன்று மாலை நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அஜித்திற்கு விருது வழங்குகிறார்.
-
Apr 28, 2025 07:28 IST
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Apr 28, 2025 07:27 IST
ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னை குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியில் நீர் இருப்பு 2,823 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 140 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர் இருப்பு 344 மில்லியன் கனஅடியாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.