Chennai News Highlights: “எங்கள் கட்சியில் ஈகோ என்பதே கிடையாது” -ஜெயக்குமார்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jacto-Geo Protest, Office Bearers Arrest

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:

Advertisment

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39-க்கும் விற்பனை ஆகிறது. இதேபோல், சி.என்.ஜி எரிபொருள் ஒரு கிலோ ரூ. 90.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாகிஸ்தானில் பேருந்தில் குண்டுவெடிப்பு - 5 பேர் பலி

பாகிஸ்தானில், பாதுகாப்பு படையினர் சென்ற பேருந்துகளில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயமடைந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. பலூசிஸ்தான் விடுதலை படையினர் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

  • Mar 16, 2025 22:46 IST

    ‘விமர்சனங்களை வரவேற்கிறேன்’ - நேர்காணலில் மோடி பேச்சு

    லெக்ஸ் ஃபிரிட்மேன் உடனான நேர்காணலில் பிரதமர் நரேந்த்ர மோடி பேச்சு: “ஜனநாயகத்தின் ஆன்மாவே விமர்சனங்கள் தான். விமர்சனங்களை வரவேற்கிறேன். எப்பொழுதும் விமர்சகர்களை நெருக்கமாக வைத்திருக்க வேண்டும். ஆனால், இப்போதெல்லாம் உண்மையான விமர்சனங்களை பார்க்கவே முடிவதில்லை. போதிய ஆராய்ச்சி இல்லாமல், நேரடியாக குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைக்கிறார்கள்” என்று கூறினார். 



  • Mar 16, 2025 22:10 IST

    வெற்று பட்ஜெட்டை மறைக்க ஸ்டாலின் வீடியோஷூட்... ‘சிம்ப்ளி வேஸ்ட்’ - இ.பி.எஸ் கடும் தாக்கு

    “இது பட்ஜெட் பற்றிய உங்களில் ஒருவன்!” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி, பதில்கள் வடிவில் நிகழ்த்திய உரையாடலை வீடியோவாக வெளியிட்ட நிலையில், “வெற்று பட்ஜெட்டை மறைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோஷூட் நடத்தியிருக்கிறார்” எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Mar 16, 2025 21:56 IST

    வெறிநாய் கடித்தால் உடனே ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் - சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தல்

    “வெறிநாய் கடித்தால் உடனே ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்; அந்த காயத்தை சோப்பு போட்டு 15 நிமிடங்களுக்கு கழுவ வேண்டும். நாய் கடித்ததில் இருந்து 28 நாட்களுக்குள் 4 தடுப்பூசிகள் போட வேண்டும். ரேபிஸ் மற்றும் இயூனோகுளோபின் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படும்” என்று தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.



  • Mar 16, 2025 21:22 IST

    ஒடிசாவின் பௌத்தில் அதிகபட்சமாக 110 டிகிரி, தமிழ்நாட்டில் வேலூரில் 99 டிகிரி வெப்பநிலை பதிவு

    ஒடிசாவின் பௌத்தில் அதிகபட்சமாக 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது, தமிழ்நாட்டில் வேலூரில் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.



  • Mar 16, 2025 21:15 IST

    ‘என் குழந்தைப் பருவம் பெரும் வறுமையில் கழிந்தது’ - நரேந்திர மோடி 

    பிரதமர் நரேந்திர மோடி: “‘என் குழந்தைப் பருவம் பெரும் வறுமையிலேயே கழிந்தது; என் வெள்ளை ஷூவை பாலிஷ் போட சாக்பீஸ் சேகரித்துக் கொண்டிருப்பேன்” என்று தனது இளமைப் பருவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.



  • Mar 16, 2025 20:08 IST

    பட்ஜெட்டில் வைத்த ‘ரூ' விவகாரம் பெரிதானது ஏன்? - ஸ்டாலின் விளக்கம்

    உங்களில் ஒருவன் கேள்விக்கு பதிலில் பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி வெளியிட்டுள்ளார். அதில், மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது: “மொழிக் கொள்கையில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்பதை காட்டவே ரூ என்ற எழுத்தை வைத்தோம். தமிழை பிடிக்காதவர்களே ரூ என்பதை பெரிதாக்கினார்கள். 100 நாள் வேலை, கல்வி நிதி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இதுவரை நிதியமைச்சர் பதில் தரவில்லை. தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு பதில் தரவில்லை. தமிழ்நாட்டின் கோர்க்கைகளுக்கு பதில் தராத நிதியமைச்சர் ரூ பற்றி உடனே பேசுகிறார். இந்திய அளவில் தமிழக பட்ஜெட்டும் தமிழும் வெற்றியடைந்துவிட்டது. பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பு அடித்தட்டு மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.” என்று தெரிவித்துள்ளார்.



  • Mar 16, 2025 19:14 IST

    சென்னை ராமாபுரத்தில் பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து; தீயை அணைக்கும் பணி தீவிரம்

    சென்னை ராமாபுரம் பகுதியில் பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரும்புகை சூழ்ந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் விருகம்பாக்கம், ராமாபுரம் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



  • Mar 16, 2025 18:24 IST

    தமிழக தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் ஏன்? ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம் 

    தமிழக தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் ஏன்? ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “இந்த தேர்வு முறை நாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. முடிந்தளவு தேர்வர்களுக்கு சொந்த மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளன. அதைத் தாண்டி உள்ளவர்களுக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை. இது ஏற்கெனவே பின்பற்றப்படும் நடைமுறைதான்: என்று ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.



  • Mar 16, 2025 17:19 IST

    ''பொதுமக்களுக்கு சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லை''


    பொது மக்களுக்கு சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லை என முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகரில், காவல் துறை சார்பில் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்று பேசிய சைலேந்திர பாபு, சைபர் மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

     

     



  • Mar 16, 2025 17:08 IST

    ''முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம்..''

    ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம்; நாங்கள் இருவரும் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. இருவரும் கணவன், மனைவி என்ற பந்தத்தில் இருக்கிறோம்..'' - ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு



  • Mar 16, 2025 17:08 IST

    நடிகை பிந்து கோஷ் மறைவு

    80களில் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு என முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியில் கலக்கிய நடிகை பிந்து கோஷ் உடல்நலக் குறைவால் காலமானார்



  • Mar 16, 2025 16:26 IST

    வண்டலூரில் பிளாஸ்டிக் கழிவுகளால் மான்கள் உயிரிழக்கும் அபாயம்!

    சென்னை வண்டலூரில் பிளாஸ்டிக் கழிவுகளால் மான்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும் மான்களை பாதுகாக்கவும் வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Mar 16, 2025 15:53 IST

    அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்- நாளை விவாதம்

    சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அளித்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம், நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.



  • Mar 16, 2025 15:29 IST

    சென்னை: வலி நிவாரண மாத்திரைகளைக் கடத்திய 2 பேர் கைது

    மும்பையில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளைக் கடத்திவந்து சென்னையில் விற்பனை செய்துவந்த மும்பையைச் சேர்ந்த முருகையா (40), கார்த்திக் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 வலி நிவாரண மாத்திரைகள், ரூ.3.85 லட்சம் ரொக்கம் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



  • Mar 16, 2025 15:09 IST

    தெலங்கானாவில் தேர்வு மையமா? - இ.பி.எஸ். வலியுறுத்தல்

    ரயில்வே தேர்வில் தமிழக தேர்வர்களுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 1,000 கி.மீ. க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும். தமிழக தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.



  • Mar 16, 2025 14:49 IST

    2 மொழிகளில் புலமை உடையவராக நமது குழந்தைகளை மாற்றுவோம் அதன்பிறகு 3-வது மொழி பற்றி சிந்திக்கலாம் -ப.சிதம்பரம்

    இரண்டு மொழிகளில் புலமை உடையவராக நமது குழந்தைகளை மாற்றுவோம் அதன்பிறகு மூன்றாவது மொழி, நான்காவது மொழியை பற்றி சிந்திக்கலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்



  • Mar 16, 2025 14:44 IST

    தமிழகத்தில் 22-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    தமிழகத்தில் இன்று முதல் வரும் 22ம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Mar 16, 2025 14:17 IST

    செங்கோட்டையன் மனசாட்சியின் உணர்வுகள் வெளிப்பட தொடங்கியுள்ளது; ஓ.பி.எஸ் மகன் ஜெயபிரதீப்

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மனசாட்சியின் உணர்வுகள் வெளிப்பட தொடங்கியுள்ளது. எனது அரசியல் குருமார்களில் ஒருவர், அ.தி.மு.க.,வின் உண்மை தொண்டன் செங்கோட்டையன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்



  • Mar 16, 2025 13:49 IST

    ஈகோவை விட்டு கொடுத்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் – ஓ.பி.எஸ்

    ஈகோவை விட்டு கொடுத்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என வாணியம்பாடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்



  • Mar 16, 2025 13:45 IST

    மதுரவாயலில் பேட்டரி பைக் சார்ஜ் போட்ட போது தீ பிடித்து எரிந்து விபத்து - 3 பேர் காயம்

    மதுரவாயலில் பேட்டரி பைக் சார்ஜ் போட்ட போது தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. நேற்றிரவு சார்ஜ் போட்டுவிட்ட நிலையில் இன்று அதிகாலை பைக் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் 3 பேர் தீக்காயம் அடைந்துள்ளனர் 



  • Mar 16, 2025 13:41 IST

    நெல்லை மாவட்ட த.வெ.க., செயலாளர் மரணம்; ஆனந்த் நேரில் அஞ்சலி

    மாரடைப்பால் மரணம் அடைந்த நெல்லை வடக்கு மாவட்ட த.வெ.க., செயலாளர் சஜி உடலுக்கு த.வெ.க பொதுச் செயலாளர் ஆனந்த் அஞ்சலி செலுத்தினார். கட்சித் தலைவர் விஜய் தொலைபேசி மூலம் உயிரிழந்த குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்தார் 



  • Mar 16, 2025 13:02 IST

    தி.மு.க செய்த ஊழலை வைத்து புத்தகமே எழுதலாம் என விஜய் கூறியது சரிதான் - தமிழிசை

    தி.மு.க செய்த ஊழலை வைத்து புத்தகமே எழுதலாம் என விஜய் கூறியது சரிதான், புத்தகம் மட்டும் அல்ல திரைப்படமே எடுக்கலாம் என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்



  • Mar 16, 2025 12:41 IST

    ஷிஹான் ஹுசைனிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதி உதவி

    வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஹுசைனியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது



  • Mar 16, 2025 12:32 IST

    ஏ.ஆர்.ரகுமான் நீர்ச்சத்து குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் – அப்போலோ நிர்வாகம்

    ஏ.ஆர்.ரகுமான் நீர்ச்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது



  • Mar 16, 2025 12:15 IST

    தமிழகத்தில் டெங்கு பாதிப்பு பெரிய அளவில் இல்லை - அமைச்சர் மா. சு

    தமிழகத்தை பொறுத்தவரை டெங்கு பாதிப்பு பெரிய அளவில் இல்லை. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார் 



  • Mar 16, 2025 12:00 IST

    வீடு திரும்பிய ஏ.ஆர். ரஹ்மான்

    உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான், சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். முன்னதாக, நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஏ.ஆர். ரஹ்மானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.



  • Mar 16, 2025 11:30 IST

    டாஸ்மாக் முறைகேடு குறித்து விஜய் அறிக்கை

    டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "டாஸ்மாக் முறைகேடு குறித்து நியாயமாக விசாரித்து தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



  • Mar 16, 2025 11:12 IST

    எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து விபத்து - 3 பேர் படுகாயம்

    சென்னை, மதுரவாயலில் எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி மற்றும் 9 மாத குழந்தை உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Mar 16, 2025 10:51 IST

    சமையல் உதவியாளர் பணியிடங்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு

    சத்துணவு மையங்களில் 8,997 சமையல் உதவியாளர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாதம் ரூ. 3000 தொகுப்பூதியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து கடந்தாண்டு வெளியிட்ட அரசாணையில், தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



  • Mar 16, 2025 10:07 IST

    சுனிதா வில்லியம்ஸை மீட்கும் பணியில் முன்னேற்றம்

    சுனிதா வில்லியம்ஸை விண்வெளியில் இருந்து மீட்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, நேற்றைய தினம் பால்கான் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், க்ரூ டிராகன் -10 விண்கலம் சர்வதேச
    விண்வெளி மையத்துடன் டாக்கிங் முறையில் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Mar 16, 2025 09:22 IST

    நெஞ்சு வலி காரணமாக ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி

    நெஞ்சு வலி காரணமாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, ஆஞ்சியோ சிகிச்சை மருத்துவர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.



  • Mar 16, 2025 08:54 IST

    அண்ணாமலை குறித்து சேகர்பாபு விமர்சனம்

    விலாசம் அற்ற அண்ணாமலைக்கு பதில் கூற விரும்பவில்லை என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். "எதை எடுத்தாலும் குறை சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த தலைவர் எனில், அது அணாமலை தான்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Mar 16, 2025 07:42 IST

    அடுத்த மாதம் இலங்கை செல்கிறார் நரேந்திர மோடி

    பிரதமர் மோடி, அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். அங்கு, திருகோணமலை அருகே அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் நிலையத்தை அவர் திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து இரு நாட்டு உறவு தொடர்பாக அவர் ஆலோசனை நடத்துகிறார்.



  • Mar 16, 2025 07:35 IST

    புதுச்சேரியில் ஐ.பி.எல் டிக்கெட் மோசடி

    புதுச்சேரியில் ஐ.பி.எல் டிக்கெட் மோசடியால், ரசிகர்கள் சுமார் ரூ. 2 லட்சத்திற்கும் மேல் இழந்தனர். இதைத் தொடர்ந்து, போலியான லிங்கை பயன்படுத்த வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



  • Mar 16, 2025 07:11 IST

    சீனாவில் போர் விமானம் விழுந்து விபத்து

    சீனாவின், ஹுனைன் மாகாணத்தில் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டது. எனினும், பாராசூட் மூலம் வெளியேறி பைலட் உயிர் தப்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Mar 16, 2025 07:03 IST

    வெப்பநிலை உயரக்கூடும் என்று எச்சரிக்கை

    தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை வெப்பநிலை படிப்படியாக உயரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.



Tamil News Update Tamil News Live Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: