/tamil-ie/media/media_files/uploads/2021/01/sagayam-1.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை:
சென்னையில் இன்று (மே 3) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39-க்கும் விற்பனை ஆகிறது. இதேபோல், சி.என்.ஜி எரிபொருள் ஒரு கிலோ ரூ. 91.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
May 04, 2025 00:19 IST
எஞ்சின் கோளாறு - 2 மணி நேரமாக நிற்கும் ரயில்
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் விரைவு ரயிலில் எஞ்சின் கோளாறு காரணமாக சிவகங்கை ரயில் நிலையத்தில் சுமார் இரண்டு மணி நேரமாக நிற்ப்பதால் பயணிகள் அவதியடைந்துள்ளது.
-
May 04, 2025 00:18 IST
சோழப் பேரரசு 2,400 ஆண்டுகள் பழமையானது: பாடத்திட்டத்தில் சுருக்கியது யார்? மாதவன் கேள்வி
"இதை சொல்வதால் எனக்கு பிரச்சினை ஏற்படலாம். ஆனாலும் நான் சொல்வேன். ஆங்கிலேயர்களும் முகலாயர்களும் நம்மை 800 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தனர். ஆனால் சோழப் பேரரசு 2,400 ஆண்டுகள் பழமையானது. இதையெல்லாம் ஒரே ஒரு அத்தியாயத்தில் சுருக்கிவிட்டோம். இதையெல்லாம் முடிவு செய்வது யார்? பாடத்திட்டத்தை யார் தீர்மானித்தது? தமிழ் உலகின் பழமையான மொழி, ஆனால் அதைப் பற்றி யாருக்கும் தெரியாது. எங்கள் கலாச்சாரத்தில் மறைந்திருக்கும் அறிவியல் அறிவு இப்போது கேலிக்கு உள்ளாகிறது என பேட்டி ஒன்றில் நடிகர் மாதவன் பேசியுள்ளார்.
-
May 04, 2025 00:16 IST
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு: தமிழ்நாடு காவல்துறை உறுதி
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை உறுதி அளித்துள்ளது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சகாயம் புகார் கூறியிருந்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
May 03, 2025 18:38 IST
மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஷ்வரன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘பைசன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
-
May 03, 2025 18:36 IST
பிரதமருடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சந்திப்பு
பிரதமர் மோடியை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சந்தித்துப் பேசினார். அண்மையில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது
-
May 03, 2025 17:09 IST
பஹல்காம் தாக்குதல் தீவிரவாதி தப்ப முயற்சி? சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் சோதனை
பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய நபர், விமானத்தில் இலங்கை தப்ப முயன்றதாக, இலங்கை ஊடகங்கள் வெளியிட்ட தகவலால், சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் இலங்கை விமான சேவை நிறுவனம் அதிரடியாக சோதனை நடத்தியது. சென்னை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அளித்த தகவல் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
-
May 03, 2025 16:32 IST
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் இருந்து அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம் - இந்தியா அதிரடி முடிவு
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து வான்வழி மற்றும் தரைவழி மூலம் அனைத்து வகையான அஞ்சல்கள் மற்றும் பார்சல்களின் பரிமாற்றத்தை நிறுத்த மத்திய அரசின் அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.
-
May 03, 2025 16:29 IST
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி; அரசுப் பள்ளிகள், ஆசிரியர்களின் விரவரம் - பள்ளிக்கல்வித்துறை
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களின் விவரங்களை தேர்வு முடிவுகள் வெளிவந்த 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார்.
-
May 03, 2025 16:27 IST
தென்னிந்திய பேரரசுகள் பற்றி போதிய வரலாறு பாடப்புத்தகங்களில் இடம் பெறவில்லை - நடிகர் மாதவன்
CBSE 7-ம் வகுப்பு பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் பற்றிய குறிப்புகளை NCERT சமீபத்தில் நீக்கியது சர்ச்சையான நிலையில், NCERT பாடத்திட்டம் குறித்து நடிகர் மாதவன் கருத்து தெரிவிக்கையில், “ஆங்கிலேயர்களும் முகலாயர்களும் நம்மை சுமார் 800 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தனர். ஆனால், சோழப்பேரரசு 2,400 ஆண்டுகள் பழமையானது. நான் பள்ளியில் படித்தபோது பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி 4 பாடங்கள் இருந்தன. ஆனால், சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் பற்றி ஒரே பாடம் மட்டுமே இருந்தன. இதை முடிவு செய்வது யார்? பாடத்திட்டத்தை யார் தீர்மானித்தது? இதைச் சொல்வதால் எனக்குப் பிரச்னை வரலாம், ஆனாலும், சொல்வேன்” என்று கூறியுள்ளார்.
-
May 03, 2025 16:21 IST
தே.மு.தி.க-விலிருந்து விலகுவதாக சொல்லவில்லை - நல்லதம்பி விளக்கம்
தே.மு.தி.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி: “தே.மு.தி.க உயர்மட்டக் குழுவிலிருந்து என்னை விடுவிக்குமாறு மட்டுமே சொன்னேன். கட்சியிலிருந்து விலகுவதாக பொய்யான தகவலைப் பரப்பியுள்ளனர். தே.மு.தி.க-விலிருந்து ஒருபோதும் விலக மாட்டேன்; என்னை உலகிற்கு அறிமுகம் செய்த கேப்டனின் இயக்கத்தில் தொடர்ந்து பயணிப்பேன்” என்று கூறினார்.
-
May 03, 2025 15:56 IST
பாராட்டுச் சான்றிதழ்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களின் விவரங்களை தேர்வு முடிவுகள் வெளிவந்த 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார்.
-
May 03, 2025 15:54 IST
பாகிஸ்தானுக்கு தபால் சேவையை நிறுத்த முடிவு
பாகிஸ்தானில் இருந்து வான்வழி, தரைவழி மூலம் வரும் தபால்களின் பரிமாற்றத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு
-
May 03, 2025 15:13 IST
திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் திமுக நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும். திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் அதிகம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நிர்வாகிகளுக்கு தான் உள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
-
May 03, 2025 14:48 IST
நீட் தேர்வில் முறைகேடு: 3 ஆண்டுகள் தடை
நடப்பாண்டிற்கான இளநிலை நீட் நுழைவு தேர்வு, நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. நீட் தேர்வில் முறைகேடு செய்யும் தேர்வர்கள், 3 ஆண்டுகள் தடை செய்யப்படுவார்கள்.
தேர்வு காலத்திலோ அல்லது தேர்வுக்குப் பிறகோ முறைகேடுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டால், 3 ஆண்டுகள் தடை செய்யப்படுவார்கள்.
மத்திய கல்வி அமைச்சகம் எச்சரிக்கை
-
May 03, 2025 14:48 IST
6% சொத்துவரி உயர்வா? தமிழக அரசு மறுப்பு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் சொத்துவரி எதுவும் உயர்த்தப்படவில்லை. 6% சொத்து வரியை மீண்டும் உயர்த்தி, அமலுக்கு வந்துள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6% சொத்துவரி உயர்த்தப்பட்டதாக பரவும் தகவலுக்கு தமிழக அரசு மறுப்பு
-
May 03, 2025 14:27 IST
பாகிஸ்தான் கொடி தாங்கிய கப்பல்களுக்கு தடை
பாகிஸ்தான் கொடி தாங்கிய கப்பல்கள், இந்திய துறைமுகங்களில் நுழைய இந்தியா தடை
இந்திய கொடி ஏந்திய எந்த ஒரு கப்பலும் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்ல வேண்டாம். பொது நலன் மற்றும் இந்திய கப்பல் போக்குவரத்து நலனுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்
-கப்பல் போக்குவரத்திற்கான பொது இயக்குனரகம் அறிவிப்பு
-
May 03, 2025 13:50 IST
NCERT கூட்டம்: தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
டெல்லியில் நடைபெற்ற NCERT கவுன்சில் கூட்டத்தில் பிஎம்ஸ்ரீ திட்டம் மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு; மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருதம் மற்றும் இந்தியை திணிப்பதற்கு மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் குற்றச்சாட்டு NCERT புத்தகங்களில் இந்தி பெயர்களை திணிப்பதாக கேரள அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
May 03, 2025 13:28 IST
பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை
பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு வருவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்திய கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள், பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்லத் தடை என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் உத்தரவுவிட்டுள்ளது.
-
May 03, 2025 12:59 IST
ஒப்பாரி வைத்து அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம். கும்மியடித்தும், ஒப்பாரி பாடல் பாடியும்
நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் -
May 03, 2025 12:37 IST
நீட் முறைக்கேட்டில் சிக்கிய மாணவர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை!
2024ல் நடந்த நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்தது தேசிய தேர்வு முகமை. முறைகேட்டில் ஈடுபட்ட 42 தேர்வர்களுக்கு 3 ஆண்டுகள் தடை. மருத்துவ மாணவர்கள் 26 பேரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய உத்தரவு பிறப்பிப்பு. மேலும் 215 மாணவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
May 03, 2025 12:30 IST
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யத் தடை
பஹல்கம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்குத் தடை பாகிஸ்தான் வழியாக வரும் பொருட்களுக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவுவிட்டுள்ளது.
-
May 03, 2025 12:13 IST
அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற அனைத்துவித அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கிவிட்டது. பாஜக கூட்டணியை ஏற்காவிட்டால், கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு சிக்கல் வரும்; அந்த பயத்தில்தான் பாஜக கூட்டணியை ஏற்றுக்கொண்டுவிட்டார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கருது தெரிவித்துள்ளார்.
-
May 03, 2025 12:10 IST
"என்னை கொலை செய்ய சதி" - மதுரை ஆதினம் பேச்சு
நேற்று ஒரு சம்பவம் நடந்தது; என்னை கொலை செய்ய சதி செய்துவிட்டார்கள்; மீனாட்சி சுந்தரேச பெருமாள் தான் என்னைக் காப்பாற்றினார் என்று சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் மதுரை ஆதினம் பேசியபோது கூறியுள்ளார். நேற்று (மே 2) உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதினத்தின் வாகனம் மீது மற்றொரு வாகனம் மோதியதால் லேசான விபத்து ஏற்பட்டது
-
May 03, 2025 12:05 IST
அமைச்சர்கள் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
அமைச்சர்கள் சென்னையில் இருப்பதைவிட இனி மாவட்டங்களில் நேரத்தை செலவிட வேண்டும் வேட்பாளர்கள் யார் என்பதை தலைமை முடிவு செய்யும்; வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவர் திறமைவாய்ந்தவர் நிறுத்தப்படுவார்; அவரது வெற்றிக்கு உழைக்க வேண்டியது உங்கள் கடமை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
May 03, 2025 12:04 IST
ஜூன் 1-ல் தி.மு.க பொதுக்குழு கூட்டம் - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு
ஜூன் 1-ம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர், போப் பிரான்சிஸ்க்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இரங்கல். அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி அரசியல் நடத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு போற்றும் நான்காண்டு; தொடரட்டும் இது பல்லாண்டு! என்ற தலைப்பில் 1,244 இடங்களில் கூட்டம் நடத்த தீர்மானம். எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் சட்டப்பூர்வமாகவும் மக்கள் ஆதரவுடனும் திமுக எதிர்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 03, 2025 11:46 IST
தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. கட்சி வளர்ச்சிப் பணிகள், சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
May 03, 2025 11:43 IST
நாளை தொடங்கும் கத்திரி வெயில்
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி வரும் 28ம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை 84 டிகிரி முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் கடும் வெயில் சுட்டெரிக்கும் என்பதால் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
May 03, 2025 11:34 IST
டாஸ்மாக் கடையை அகற்ற கோரி தவெக போராட்டம்- சென்னையில் பரபரப்பு
சென்னை அமைந்தகரையில் பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை உடனே அகற்ற தவெகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற த.வெ.க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
May 03, 2025 10:48 IST
பெரியார் பல்கலை.-யில் கட்டணக் கொள்ளை - அன்புமணி கண்டனம்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக். (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்), பி.எஸ்.சி. (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) ஆகிய புதிய பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லாத பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் செயலாகும். இது கண்டிக்கத்தக்கது.
இம்மெர்சிவ் தொழில்நுட்பம் சார்ந்த இரு பட்டப்படிப்புகளை நடத்த தனியார் நிறுவனங்களிடமிருந்து பெரியார் பல்கலைக்கழகம் கடந்த மாதம் விருப்பம் கோரியிருந்தது. அப்போதே இப்பாடப்பிரிவுகளை நடத்த பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்த நான், இந்த சிக்கலில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவு இப்போது மாணவர் சேர்க்கை வரை வந்திருக்கிறது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இந்த படிப்புகளை நடத்துவது இரு வகைகளில் சட்ட விரோதமும், ஒரு வகையில் சமூக அநீதியும் ஆகும். முதலாவதாக கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகமான பெரியார் பல்கலைக்கழகத்தால் இத்தகைய தொழில்நுட்பப் படிப்புகளை நடத்த முடியாது; இரண்டாவதாக பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளை நடத்த இயலாது. மேலும், பெரியார் பல்கலைக்கழகத்தின் பெயரில் தனியார் நிறுவனங்கள் பட்டப்படிப்புகளை நடத்த அனுமதிப்பதும், அதற்கான மாணவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதும் மாணவர்களை சுரண்டும் செயலாகும்.
இதற்கு முன் 2023-24-ம் கல்வியாண்டில் பி.டெக். (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) என்ற புதிய பாடப்பிரிவை ஸ்கோபிக் எஜுடெக் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தபோவதாக பெரியார் பல்கலைக்கழகம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்தது. அப்போதே இத்தகையப் படிப்பை வழங்க பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தகுதி உண்டா? இந்தப் படிப்புக்கு அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? இந்தப் படிப்பு பட்டமேற்படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் தகுதியானது என்று ஒழுங்குமுறை அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா? என்று பா.ம.க. வினா எழுப்பியிருந்தது. அதற்கு விடையளித்த அன்றைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இத்தகைய பாடங்களை நடத்த பெரியார் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி இல்லை என்று கூறியதுடன், அப்படிப்பைக் கைவிடவும் செய்தார்.
இம்மெர்சிவ் தொழில்நுட்பம் படிப்பை நடத்த பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லை என்று இரு ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அதே படிப்பை நடத்த இப்போது அரசு அனுமதிப்பது எப்படி?. ஒருபுறம் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மீது விதிமீறல் வழக்கு, ஊழல் வழக்கு என தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் தமிழக அரசு, இன்னொருபுறம் இத்தகைய சட்டவிரோத செயல்களை எவ்வாறு அனுமதிக்கிறது? இந்த வினாக்களுக்கு தமிழக அரசு விடையளிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, புதிய படிப்புகளை தனியாருடன் இணைந்து நடத்த பல்கலைக்கழகம் துடிப்பது ஏன்? இந்தப் படிப்பு நடைமுறைக்கு வந்தால் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் தனியார் நிறுவனம் தான் மேற்கொள்ளும். மாணவர்களிடமிருந்து பல்வேறு தலைப்புகளில் கட்டணம் தண்டல் செய்யும் தனியார் நிறுவனம், அதில் கல்விக் கட்டணமாக பெறப்படும் தொகையில் மட்டும் ஒரு பகுதியை பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கிவிட்டு மீதமுள்ள தொகையை முழுமையாக எடுத்துக் கொள்ளும். அதற்காக பல்கலைக்கழகத்தின் பெயரையும், கட்டமைப்பு வசதிகளையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும். இத்தகைய அநீதியான முறை அனுமதிக்கப்பட்டால் அரசு பல்கலைக்கழகங்கள் படிப்படியாக தனியார்மயமாக்கப்படும். இதை தமிழக அரசு அனுமதிக்கப் போகிறதா?.
பெரியார் பல்கலைக்கழகத்துடன் ஸ்கோபிக் எஜுடெக், மோனோலித், யுனிட்டோஸ், ஹெலிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து ஏராளமான படிப்புகள் நடத்தப்படுகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் படிப்புகளுக்கு சில ஆயிரங்கள் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் படிப்புகளுக்கு ஆண்டுக்கு குறைந்தது ரூ.2 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது மிகப்பெரிய சுரண்டல். இதை அரசு அனுமதிக்கக்கூடாது.
பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மோனோலித் என்ற சென்னையைச் சேர்ந்த நிறுவனம் பி.டெக்/பி.எஸ்.சி கிரியேட்டிவ் மீடியா டெக் ஆகிய படிப்புகளை நடத்தி வருகிறது. இதற்காக மாணவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்த நிலையில், இந்தப் படிப்புகளுக்கான சான்றிதழ் செல்லுமா?. வேலை கிடைக்குமா? என்பது தெரியாமல் மாணவர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அதே நிலை இம்மெர்சிவ் தொழில்நுட்பம் பயிலவிருக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது.
எனவே, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகம் அதிக கட்டணத்தில் பட்டப்படிப்புகளை நடத்துவதை தடை செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய மாணவர் சேர்க்கை, கட்டணக் கொள்ளை ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். பெரியார் பல்கலைக்கழகமும், தனியார் நிறுவனங்களும் இணைந்து நடத்தும் பல்வேறு படிப்புகளில் சேர்ந்து எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம் என்று தமிழக அரசும், ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
May 03, 2025 10:40 IST
டிரம்ப் போப்பாண்டவர் போல் புகைப்படம்
அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, 'நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்' என ஏற்கெனவே தெரிவித்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போப்பாண்டவர் போல் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
-
May 03, 2025 09:30 IST
தே.மு.தி.க-வில் இருந்து உயர்மட்டக் குழு உறுப்பினர் நல்லதம்பி விலகல்
தே.மு.தி.க உயர்மட்டக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அக்கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு அவர் அனுப்பியுள்ளார்.
-
May 03, 2025 08:46 IST
கேரளா மருத்துவமனையில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு
கேரளாவில், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் உயிரிழந்தனர். குறிப்பாக, கடும் புகையினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
May 03, 2025 08:20 IST
விபத்தில் சிறுவன் படுகாயம்
சென்னை, விருகம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுவன் படுகாயம் அடைந்தான். இதைத் தொடர்ந்து, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர்.
-
May 03, 2025 08:12 IST
வந்தே பாரத் ரயில் 3 மணி நேரம் தாமதம்
சென்னை, எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலை 8 மணிக்கு மேல் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 3 மணி நேரம் ரயில் தாமதம் ஆனதால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
-
May 03, 2025 07:39 IST
பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்னை வருகை
பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று (மே 3) சென்னை வந்தடைந்தார். காட்டாங்குளத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் அவர் பங்கேற்கிறார்.
-
May 03, 2025 07:21 IST
ஸ்கைப் தளம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு
கடந்த 21 ஆண்டுகளாக வீடியோ காலிங் சேவையை வழங்கி வந்த ஸ்கைப் தளத்தின் பயன்பாட்டை, மே 5-ஆம் தேதி முதல் நிறுத்துவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. டீம்ஸ் தளத்தில் கவனம் செலுத்தவும், மக்களின் எளிய பயன்பாட்டிற்காக தங்கள் சேவைகளை மாற்றவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 03, 2025 07:08 IST
விஜய்யை வரவேற்க சென்ற காவலர் சஸ்பெண்ட்
மதுரையில், த.வெ.க தலைவர் விஜய்யை பார்க்கச் சென்ற காவலர் கதிரவன் மார்க்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எமர்ஜென்சி என்று அனுமதி பெற்று, மதுரை விமான நிலையத்திற்கு சென்று த.வெ.க கொடியுடன் விஜய்யை வரவேற்ற வீடியோ வெளியான நிலையில், மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நடவடிக்கை மேற்கொண்டார்.
-
May 03, 2025 06:35 IST
தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னையில் இன்று (மே 3) தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், 2026-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.