Chennai News Highlights: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் - ட்ரம்ப் பெருமிதம்

Tamilnadu Latest Live News Update in Tamil 21June 2025: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamilnadu Latest Live News Update in Tamil 21June 2025: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trum

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
    • Jun 21, 2025 23:59 IST

      முருக பக்தர்கள் மாநாடு - ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

      சென்னை எழும்பூரிலிருந்து இரவு 9.55 மணிக்கு நெல்லை புறப்படும் சிறப்பு ரயிலில்,இந்து முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் பயணம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எழும்பூரில் இருந்து மதுரை வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு



    • Jun 21, 2025 23:59 IST

      போதைப்பொருள் - மலையாள தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி

      போதை பொருள் பயன்பாட்டிற்கு கடிவாளம் போட மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. மலையாள சினிமாவில் பணிபுரிய போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன் என உறுதிமொழி கொடுக்க வேண்டும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்பட அனைவரும்
      உறுதிமொழி எழுதிக் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.



    • Advertisment
      Advertisements
    • Jun 21, 2025 23:58 IST

      SSLV ராக்கெட் - HAL தயாரிக்க ஒப்பந்தம்

      இஸ்ரோவின் SSLV ராக்கெட்டுகளை தயாரிக்கும் ஒப்பந்தத்தை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் பெற்றுள்ளது தாழ் புவி சுற்றுவட்டப் பாதைக்கு செயற்கைக்கோள்களை ஏவும் SSLV ராக்கெட்டுகளை HAL நிறுவனம் தயாரிக்க உள்ளது



    • Jun 21, 2025 20:50 IST

      சீட்டுக்காக கூட்டணிக்கான பொது நோக்கம் கெட்டுவிடக்கூடாது: துரை வைகோ

      கூட்டணியில் உள்ள கட்சிகள் கூடுதல் சீட் கேட்பது உரிமை. தவறில்லை“ மதிமுகவுக்கு அதிக சீட் கேட்பது பற்றி என்னால் முடிவு எடுக்க முடியாது. அதிக சீட்டுகள் கேட்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் கட்சியினருக்கும் உள்ளது. சீட்டுக்காக கூட்டணிக்கான பொது நோக்கம் கெட்டுவிடக்கூடாது. எவ்வளவு சீட்டுகளை கேட்கப்போகிறோம் என்பதை தலைமைதான் முடிவு செய்யும் என துரை வைகோ கூறியுள்ளார்.



    • Jun 21, 2025 20:47 IST

      அதிமுக எம்.எல்.ஏ மறைவு - ஆளுநர் இரங்கல்

      உடல்நல குறைவால் உயிரிழந்த வால்பாறை எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி
      மறைவுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கல் "மக்கள் சேவையில் அவரது ஈடுபாடு மற்றும் சமூக நலனுக்கான அவரது அர்ப்பணிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்" - ஆளுநர் ரவி



    • Jun 21, 2025 20:27 IST

      முருகன் மாநாடு - உலக சாதனைக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

      மதுரையில் நடைபெற உள்ள முருகன் மாநாட்டில், 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை செய்யும் நிகழ்வு உலக சாதனை படைப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்



    • Jun 21, 2025 20:27 IST

      சென்னையில் ஈச்சர் வாகனம் மோதி சிறுமி காயம்

      சென்னையில், ஈச்சர் வாகனம் மோதி ஜனனி என்ற சிறுமி லேசான காயங்களோடு தப்பினார். கனரக வாகனங்களுக்கு பீக் ஹவர்ஸில் தடை விதிக்கப்பட்ட நிலையில், மாணவி தனது சித்தியோடு பள்ளிக்கு  சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், சிறுமிக்கு முழங்கால் மற்றும் முட்டியில் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தடையை மீறி ஈச்சர் வாகனம் வந்தது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • Jun 21, 2025 18:57 IST

      இருநாடுகளும் சமாதான தீர்வை எட்டவேண்டும்: ஈரான் - இஸ்ரேலுக்கு ஐ.நா கோரிக்கை

      ஈரான்–இஸ்ரேல் மோதல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த  அவசர கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர், சர்வதேச அணுசக்தி ஆணைய தலைவர், பல நாட்டு தூதர்கள் பங்கேற்றிருந்த நிலையில், போர் நிறுத்தம் செய்ய உடனடி சர்வதேச அரசியல் தலையீடு தேவை என வலியுறுத்தப்பட்டது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர் குற்றம். அமெரிக்கா போரில் ஈடுபட்டால் NPT ஒப்பந்தத்தை மீறுவதற்கு சமம் என ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல் முடிவடையும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் தூதர் டேனி டானன்  தெரிவித்துள்ளார். அணு உலைகள் மீது தாக்குதல் நடத்துவது மிக ஆபத்தானது என சர்வதேச அணுசக்தி ஆணைய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், போர் பேரழிவுக்கு வழிவகுக்கும். உடனடி இருநாடுகளும் சமாதான தீர்வை எட்டவேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.



    • Jun 21, 2025 17:22 IST

      இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் இந்திய துணை கேப்டன் ரிஷப் பண்ட்!!

      இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய துணை கேப்டன் ரிஷப் பண்ட் சதம் விளாசி அசத்தி உள்ளார். 146 பந்துகளை சந்தித்த ரிஷப் பண்ட் 4 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். ஏற்கெனவே போட்டியின் முதல் நாளில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்திருந்தனர்.



    • Jun 21, 2025 16:43 IST

      'ஹிட் 3' கதை வழக்கு - நானி பதிலளிக்க ஆணை

      தனது கதையை திருடி ‘ஹிட் 3’ படத்தை எடுத்துள்ளதாக விமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் நானி, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இப்படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் 20% இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.



    • Jun 21, 2025 16:18 IST

      இஸ்ரேல், ஈரான் நாடுகளில் உள்ள தமிழர் விவரங்களை பெற்று உடனே உதவிகளை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

      இஸ்ரேல், ஈரான் நாடுகளில் உள்ள தமிழர் விவரங்களை பெற்று உடனே உதவிகளை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், இஸ்ரேல் – ஈரானில் உள்ள தமிழர்களுக்கு உதவ டெல்லியில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. தொலைபேசி எண் 011 24193300 கைப்பேசி எண் 9289516712 எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    • Jun 21, 2025 15:45 IST

      அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக் கோரி மனு

      அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரன் யார் எனவும், யாரிடம் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறிய, பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல். ரவி மனு தாக்கல் செய்துள்ளார். 



    • Jun 21, 2025 15:42 IST

      ஈரான் - இஸ்ரேல் மோதல்; தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு

      ஈரான் - இஸ்ரேல் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 011 24193300, 9289516712 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.



    • Jun 21, 2025 15:35 IST

      மெட்ரோ குடிநீர் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு

      சென்னையில், காலை 7:30 மணி முதல் 9 மணி வரை மெட்ரோ குடிநீர் லாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் சென்னை காவல் ஆணையர் அருண் நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ குடிநீர் லாரிகள் காலை 5 மணி முதல் 7:30 மணிக்குள்ளாக தண்ணீர் விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சாலைகள் குறித்த பட்டியலை 3 நாட்களுக்கு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



    • Jun 21, 2025 15:06 IST

      ஜூன் 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

      தமிழகத்தில் ஜூன் 27-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    • Jun 21, 2025 15:02 IST

      செம்மண் முறைகேடு வழக்கு - நேரில் ஆஜராவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு

      செம்மண் முறைகேடு தொடர்பாக சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கில், குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட நடைமுறைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில், நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    • Jun 21, 2025 14:47 IST

      காரை வேகமாக ஓட்டிச் சென்ற நபர் மீது வழக்குப் பதிவு

      சென்னை மெரினா கடற்கரை சாலையில் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்ற அபிஷேக் என்ற நபர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காவலர் மீது காரை ஏற்றுவது போன்று ஓட்டிச் சென்ற அபிஷேக், காரில் அவருடன் பயணித்த அபிஷேக்கின் மனைவி மற்றும் அவர்களது நண்பர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



    • Jun 21, 2025 13:54 IST

      வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது - ஸ்டாலின்  நெகிழ்ச்சி பதிவு

      ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை பொதுமக்களின் பார்வைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

      "தமிழரின் அடையாளங்களை எங்கும் நிறுவிய தலைவர் கலைஞரின் கனவுப் படைப்பான வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது. அனைவருக்கும் பொதுவான வள்ளுவரையும் - வள்ளுவத்தையும் போற்றுவோம்! மானிடச் சமுதாயம் முழுக்கக் கொண்டு சேர்ப்போம்!" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



    • Jun 21, 2025 13:53 IST

      3 அதிகாரிகளை வேறு பணிக்கு மாற்றம் - ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவு

      இந்தியா நிறுவனத்தில் 3 மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விமான போக்குவரத்துத் துறை ஆணையிட்டுள்ளது. 3 மூத்த அதிகாரிகளை அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்க ஏர் இந்தியா நிறுவனத்துக்கு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

       



    • Jun 21, 2025 12:54 IST

      இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக ஈரானில் 22 பேர் கைது!

      இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக 22 பேரை ஈரான் காவல் துறை கைது செய்துள்ளது. இஸ்ரேல் -ஈரான் இடையே தாக்குதல் நீடித்து வரும் நிலையில் அந்நாட்டு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.



    • Jun 21, 2025 12:54 IST

      இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட்டுகள் வழங்க மத்திய அரசு உத்தரவு

      2026 ஜன.1 முதல் இந்தியாவில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட்டுகள் வழங்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய தர நிர்ணயத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 ஹெல்மெட் வழங்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜன.1 முதல் அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் எனப்படும் பிரேக் சிஸ்டத்தை பொருத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏ.பி.எஸ். அமைப்பை பொருத்துவதால் 35 முதல் 45 சதவீதம் வரை விபத்துகள் குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.



    • Jun 21, 2025 12:54 IST

      காசா, ஈரான் விவகாரம்: இந்தியா குரல் எழுப்பாமல் மவுனம் - சோனியா காந்தி குற்றச்சாட்டு

      காசா, ஈரான் விவகாரத்தில் இந்தியா குரல் எழுப்பாமல் மவுனம் காப்பதாக சோனியா காந்தி குற்றம் சாட்டி உள்ளார். காசா விவகாரத்தில் இந்தியாவின் நீண்ட நாள் நிலைப்பாட்டை மோடி அரசு கைவிட்டுள்ளது என்றும் இந்தியா தனது குரலை இழந்தது மட்டுமில்லாமல் அதன் மதிப்புகளையும் சரணடைய வைத்துள்ளது என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.



    • Jun 21, 2025 12:25 IST

      மொழி தடைக்கல்லாக இருக்க கூடாது - அமித் ஷா பேச்சுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி

      ஆங்கிலம் குறித்த அமித் ஷாவின் சர்ச்சைப் பேச்சுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “மொழி என்பது வளர்ச்சிக்கான ஏணியாக இருக்க வேண்டுமே தவிர, தடைக்கல்லாக இருக்க கூடாது. ஆங்கில மொழியை உலக நாடுகள், தங்களது வளர்ச்சிக்கு அவசியமானதாக கருதுகின்றன. ஆங்கிலம் என்பது உலக முன்னேற்றத்துக்கான கருவி,”என்று அவர் தெரிவித்தார்.



    • Jun 21, 2025 12:18 IST

      அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆலோசனை

      2026 தேர்தல் பணி தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கிருஷ்ணகிரி, அணைக்கட்டு, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.



    • Jun 21, 2025 12:16 IST

      இணையத்தில் வெளியான "குபேரா"

      நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று "குபேரா"திரைப்படம் வெளியானது. இந்தப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர். “பைரசி“ பிரச்சினை தற்போது திரையுலகினருக்கு தலைவலியாக மாறியுள்ளது. 



    • Jun 21, 2025 12:15 IST

      புதிய மினி பஸ் சேவை திட்டம் - 1 கோடி மக்கள் பயன்

      திருத்தி அமைக்கப்பட்ட புதிய மினி பஸ் சேவை திட்டம் மூலம் 3,103 வழித்தடங்களில் 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பயனடைந்துள்ளனர். ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயன்பெறுவதாக தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 



    • Jun 21, 2025 11:47 IST

      பருவமழை முன்னெச்சரிக்கை: மாநகராட்சி உத்தரவு

      பருவமழைக்கு முன்பாக மெட்ரோ பணிகளால் பாதிக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களை கணக்கெடுக்க அலுவலர்களுக்கு மாநகராட்சி உத்தரவு

      எத்தனை இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்து கணக்கெடுக்க உத்தரவு. தொழில்நுட்ப ஆய்வுக்குழு தாக்கல் செய்த அறிக்கையை மையப்படுத்தி வெள்ள தடுப்பு பிரச்சினையை சென்னை மாநகராட்சி கையாள உள்ளது



    • Jun 21, 2025 11:15 IST

      குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தந்தை- மகள் கைது

      அகமதாபாத்தில் உள்ள பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னையை சேர்ந்த தந்தை – மகள். குஜராத் போலீசார் சென்னை வந்து இருவரையும் அழைத்துச் சென்று தீவிர விசாரணை



    • Jun 21, 2025 11:07 IST

      ஸ்டாலின் நிர்வாகிகளுடன் சந்திப்பு

      2026 தேர்தல் பணி தொடர்பாக சட்டமன்ற தொகுதி வாரியான நிர்வாகிகளை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறார். 

      இன்று கிருஷ்ணகிரி, அணைக்கட்டு, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் ஒன் டூ ஒன் சந்திப்பு. 



    • Jun 21, 2025 11:01 IST

      2 பெண் குழந்தைகளுக்கு தாய்- உலகின் மிக உயரமான சிகரங்களில் ஏறி விருதுநகர் பெண் சாதனை

      Video: Sun News Twitter 



    • Jun 21, 2025 10:36 IST

      திருப்பதியில் குவிந்த பக்தர்கள்

      Video Credit: Sun News 



    • Jun 21, 2025 10:15 IST

      விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை- இபிஎஸ்

      விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை

      -பாஜக முருக பக்தர்கள் மாநாடு குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து.



    • Jun 21, 2025 09:58 IST

      காவலர் மீது ஏற்றுவது போல மிரட்டல்-வழக்குப்பதிவு

      சென்னை மெரினா கடற்கரை சாலையில் காவலர் மீது ஏற்றுவது போல போக்கு காட்டி அதிவேகமாக கார் ஓட்டிய விவகாரத்தில் மயிலாப்பூரை சேர்ந்த அபிஷேக் (25) மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பின்பு காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார். காரை ஓட்டிய அபிஷேக் மற்றும் அவரது மனைவி நந்தினி மற்றும் மற்றொரு நண்பர் ஆகிய மூவரும் ஐடி ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக அபிஷேக் மற்றும் அவரது மனைவி நந்தினியிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. 



    • Jun 21, 2025 09:55 IST

      ”விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை”

      விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை, அந்த அடிப்படையில் மதுரை பாஜக முருக மாநாட்டுக்கு வாழ்த்துகள் என்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.



    • Jun 21, 2025 09:48 IST

      நாடு முழுவதும் பா.ஜ. தலைவர்கள் தலைமையில் யோகா தினவிழா

      சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் யோகா பயிற்சிக்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 8 லட்சம் இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் எல்லாம் காலை முதல் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. யோகா நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்களும் பங்கேற்று யோகா செய்தனர்.



    • Jun 21, 2025 09:22 IST

      186 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

      மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 186 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.



    • Jun 21, 2025 09:03 IST

      ”இஸ்ரேலில் இருந்தும் விரைவில் இந்தியர்கள் மீட்கப்படுவர்”

      மத்திய வெளிவிவகார அமைச்சக செயலாளர் அருண் குமார் சாட்டர்ஜி கூறும்போது, 290 இந்தியர்களை சுமந்து கொண்டு ஈரானில் இருந்து வந்த 3-வது சிறப்பு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளது. இதில், 190 பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள். டெல்லி, அரியானா, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர். நமக்காக ஈரான் அரசு தன்னுடைய வான்வெளியை திறந்து, இந்தியர்கள் செல்ல அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளிக்கும் விசயம். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை இது காட்டுகிறது. ஆபரேஷன் சிந்து விமானங்கள் இஸ்ரேலில் இருந்தும் விரைவில் சொந்த நாட்டுக்கு வந்து சேரும் என்று அவர் கூறியுள்ளார். இதனால், இஸ்ரேல் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் என தெரிகிறது என்றார்.



    • Jun 21, 2025 08:57 IST

      ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை

      ஈரான் நாட்டில் சிக்கியுள்ள மீனவர்களை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே போர் நிலவும் இவ்வேளையில், ஈரான் நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இருக்கின்றனர் என்ற செய்தி அறிந்ததும் அவர்களைப் பற்றியான தகவல்களை சேகரித்திட  முதற்கட்டமாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கலந்தாலோசித்தாக தெரிவித்துள்ளார்.



    • Jun 21, 2025 08:33 IST

      இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ஈரான்

      ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு குழந்தைகள் மையத்தை ஈரான் தாக்கியதாக கூறியுள்ளது. ஏற்கனவே பீர்ஷீபா நகரில் உள்ள மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் மீண்டும் குடியிருப்புகளை குறிவைத்து ஈரான் தாக்கி உள்ளது .

       



    • Jun 21, 2025 08:32 IST

      ”பட்டியலின மக்கள் மீதான வன்முறை திமுக ஆட்சியில் உச்சம்”

      பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.



    • Jun 21, 2025 08:27 IST

      அமைதியின் முக்கியத்துவத்தை தருகிறது யோகா -மோடி

      சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "சர்வே பவன்தூ சுக்கினா என்ற பழங்கால சமஸ்கிருத பழமொழியை பயன்படுத்தி அமைதியான சமூகத்தை உருவாக்க இந்த தத்துவத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உலகில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் அமைதியின்மை குறித்து கவலை அளிக்கிறது. இன்று முழு உலகமும் ஏதோ ஒரு பதற்றத்தை சந்தித்து வருகிறது. பல பகுதிகளில் அமைதியின்மை மற்றும் உறுதியற்றதன்மை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற காலங்களில் யோகா நமக்கு அமைதியின் முக்கியத்துவத்தை தருகிறது. யோகா என்பது மனிதகுலம் சுவாசிக்கவும், சமநிலைப்படுத்தவும் மீண்டும் முழுமை அடையவும் தேவையான இடைவெளியை தருகிறது” என தெரிவித்துள்ளார்.



    • Jun 21, 2025 08:10 IST

      ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20,000 கனஅடியாக அதிகரிப்பு

      நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் கரையோரங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



    • Jun 21, 2025 07:58 IST

      முழு உலகத்தையும் இணைத்துள்ளது யோகா - பிரதமர் மோடி

      ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரதமா் மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சர்வதேச யோகாசன தினத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகள். இன்று முழு உலகத்தையும் யோகா இணைத்துள்ளது பெருமைக்குரியது, மகிழ்ச்சி தருகிறது. யோகா அனைவருக்குமானது. அதற்கு எல்லைகள் கிடையாது. யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. விசாகப்பட்டினத்தில் இந்த ஆண்டு யோகா தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    • Jun 21, 2025 07:54 IST

      தமிழ்நாட்டில் 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்-வானிலை மையம்

      தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில், இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று 13 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதாவது அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி, வேலூரில் 104 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், மதுரை மாநகரம், ஈரோடு ஆகிய இடங்களில் தலா 103 டிகிரி, கடலூர், திருச்சி, திருத்தணி, தூத்துக்குடியில் தலா 102 டிகிரி, கரூர் பரமத்தி, பரங்கிப்பேட்டையில் தலா 101 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், தஞ்சாவூரில் தலா 100 டிகிரி வெயில் பதிவானது.



    • Jun 21, 2025 07:46 IST

      விமான விபத்து: ஏா் இந்தியா பயணச்சீட்டு முன்பதிவு 20% சரிவு

      குஜராத் விமான விபத்தை தொடா்ந்து, ஏா் இந்தியா விமான பயணச்சீட்டு முன்பதிவுகள் சுமாா் 20 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த விமானங்களின் பயணச்சீட்டு கட்டணமும் 8 முதல் 15 சரிந்துள்ளது என்று இந்திய சுற்றுலா ஏற்பட்டாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் ரவி கோசாய்ன் கூறினார்.



    • Jun 21, 2025 07:20 IST

      சர்வதேச யோகா தினம்: மாமல்லபுரத்தில் அனுமதி இலவசம்

      ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க தொல்லியல்துறை இன்று அனுமதி அளித்துள்ளது.



    • Jun 21, 2025 07:20 IST

      பாரிஸ் டயமண்ட் லீக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ரா வெற்றி

      பாரிசில் டயமண்ட் லீக் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா நேற்று இரவு பட்டத்தை வென்றதன் மூலம் உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தார். நேற்று நடந்த போட்டியின் முதல் சுற்றிலேயே 88.16 மீட்டர் தூரம் எறிந்தார். நடு சுற்றுகளில் 3 புள்ளிகள் இல்லாதபோதும், அவரது தொடக்க முயற்சியே போட்டி முழுவதும் அவரை முதலிடத்தில் வைத்திருந்தது. 



    • Jun 21, 2025 07:18 IST

      புதிய பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்- இன்று திறந்துவைப்பு

      10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழடைந்திருந்த வள்ளுவர் கோட்டம், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைடைந்த நிலையில், வள்ளுவர் கோட்டம் புதிய பொலிவுடன் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். வள்ளுவர் கோட்டத்தில், அய்யன் வள்ளுவர் கலையரங்கம்: 1,548 இருக்கைகளுடன் அதிநவீன ஏர் கண்டிஷனர் வசதி, குறள் மணிமாடம்: 1,330 திருக்குறள்களும் பளிங்கு கற்களில் செதுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன.



    • Jun 21, 2025 07:16 IST

      இன்று சர்வதேச யோகா தினம்: கின்னஸ் சாதனை நிகழ்ச்சி

      11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது. இதையொட்டி 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் யோகா பயிற்சிக்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 8 லட்சம் இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த யோகா நிகழ்ச்சியை மிகப்பிரமாண்டமாக நடத்துவதற்கு, ஆந்திர மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலும், விசாகப்பட்டினத்தில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. கடற்கரையில் இருந்து போகபுரம் வரை உள்ள 26 கி.மீ நீள நடைபாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது.



    • Jun 21, 2025 07:12 IST

      ஈரானிலிருந்து வெளியேறிய 290 இந்தியர்கள் டெல்லி வருகை

      ஈரான் தலைநகரில் இருந்து மக்கள் வெளியேறும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய குடிமக்களை அறிவுறுத்தி உள்ளன. இதன் ஒரு பகுதியாக ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ் இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். ஈரானில் இருந்து 290 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் நேற்றிரவு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு உள்ளனர். டெல்லியில் உள்ள சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர்களை மத்திய வெளிவிவகார அமைச்சக செயலாளர் அருண் குமார் சாட்டர்ஜி வரவேற்றார். மாணவர்கள், புனித யாத்திரை சென்றவர்கள் உள்பட பலரும் பாதுகாப்பாக வந்திறங்கினர். 



    Chennai Tamilnadu News Update

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: