/indian-express-tamil/media/media_files/2025/08/07/ramadoss-pmk-leader-press-meet-anbumani-tamil-news-2025-08-07-14-00-35.jpg)
Today Latest News Update: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Aug 08, 2025 13:38 IST
ராமதாஸ், அன்புமணி நேரில் சந்திக்க நீதிபதி அழைப்பு
அன்புமணி நடத்தும் பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், ராமதாஸ் அன்புமணி ஆகியோரை கட்சி நலன் கருதி இருவருடன் தனியாக பேச வேண்டும், மாலை 5.30 மணிக்கு அறைக்கு வரும்படி இருவருக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
Aug 08, 2025 13:37 IST
வெள்ளை தாடியால் ரசிகர்கள் ஷாக்: கோலியின் ரீசன்ட் போட்டோ வைரல்
கிட்டத்தட்ட 1 மாதம் வெளியில் தலை காட்டாத விராட் கோலி, தற்போது லண்டனில் ஒரு ரசிகருடன் எடுத்துக் கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. அவரது முகத்தில் இருக்கும் வெள்ளை தாடியால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ரிட்டைர்மென்ட் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தாடிக்கு அடிக்கடி கலர் செய்ய வேண்டிய வயது வந்துவிட்டது என கோலி குறிப்பிட்டிருந்தார். ODIயில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரோ
என தாடியை பார்த்து கமென்ட் செய்யும் நெட்டிசன்கள் -
Aug 08, 2025 12:53 IST
பா.ஜ.க தலைவருக்கு `எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அதே கார் எண்'
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய அதே கார் எண்ணுடன் பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனுக்காக பிரச்சார வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் தயாராகியுள்ள இந்த வாகனத்தில் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க-வுக்காக வாக்கு சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
Aug 08, 2025 12:47 IST
வாக்காளர் பட்டியல் திருத்தம் முறைகேடு பற்றி பழனிசாமி இதுவரை வாய் திறக்காதது ஏன்? - அமைச்சர் துரைமுருகன் கேள்வி
எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு வாக்காளர்களையும் டெல்லியிடம் அடமானம் வைக்கத் துணிந்துவிட்டாரா? என அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்; முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி பழனிசாமி இதுவரை வாய் திறக்காதது ஏன்?. போலி வாக்காளர்களை சேர்த்து பாஜகவிற்கு துணை போகும் அதிமுகவிற்கு எதிராக தமிழ்நாடு ஓரணியில் நின்று வெல்லும். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தமிழ்நாட்டு அரசியல் உரிமையையே அபகரிக்க நினைக்கிறார்கள். நாட்டை தொடர்ந்து ஆள பாஜக எத்தனையோ குறுக்கு வழிகளைக் கையாண்டு வருவதாக துரைமுருகன் குற்றச்சாட்டியுள்ளார்.
-
Aug 08, 2025 12:46 IST
11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து
இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
-
Aug 08, 2025 12:45 IST
மாநில கல்வி கொள்கையை வெளியிட்ட ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் பள்ளி கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார். பள்ளி படிப்பு முதல் பட்டப் படிப்பு வரை தாய்மொழி வழியிலான கல்வி அவசியம் என குழு பரிந்துரை செய்துள்ளது.
-
Aug 08, 2025 12:27 IST
ஒரேயொரு வேட்பாளர் என்றால் நோட்டாவை மறுக்கலாமா? - தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
தேர்தலில் ஒரு தொகுதியில் ஒரேயொரு வேட்பாளர் போட்டியிட்டால் நோட்டாவை மறுக்க முடியுமா? என்றும், வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை என தெரிவிக்க நோட்டாவை வாக்காளர்கள் பயன்படுத்த வாய்ப்பு தரப்படுமா? என்றும் போட்டியின்றி தேர்வாகும்போது தேர்தல் நடத்தாதது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பல சமயங்களில் போட்டி வேட்பாளர்கள் விலைக்கு வாங்கப்படுவதால் தேர்தலில் ஒரேயொருவர் நிற்கும் சூழல் ஏற்படுகிறது. போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வாபஸ் பெற்று ஒரே ஒருவர் மட்டும் போட்டியின்றி தேர்வு என ஆணையம் அறிவிக்கிறது. ஒரேயொரு வேட்பாளரை பிடிக்கவில்லை என வாக்காளர்கள் தெரிவிக்கும் வாய்ப்பு தேர்தல் நடக்காததால் மறுக்கப்படுகிறது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
-
Aug 08, 2025 12:00 IST
புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து தி.மு.க போராட்டம்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து தி.மு.க சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜிப்மரில் வேலை வாய்ப்புகளில் புதுச்சேரி மக்களை புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டி, புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் திமுக சிவா தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
Aug 08, 2025 11:39 IST
பாலியல் பலாத்கார வழக்கு - சாமியார் ஆசாராம் பாபுவின் மருத்துவ பரோல் நீட்டிப்பு
பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மருத்துவ பரோல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. உடல்நிலை மோசமாக உள்ளதால் ஆசாராம் பாபுவின் மருத்துவ பரோலை நீட்டித்து குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Aug 08, 2025 11:37 IST
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துகின்றனர் - ஐகோர்ட் கடும் கண்டனம்
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர் என உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கவிஞர் வைரமுத்து வழக்கு தொடர்ந்த நிணலயில், எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது உணர்வு பூர்வமான விஷயம். இது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தெரியாது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இணையான ஒரு அரசாங்கத்தை நடத்துவது துரதிஷ்டவசமானது." என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
-
Aug 08, 2025 10:36 IST
பாலின உளவியல் விழிப்புணர்வு - குழு அமைப்பு: அமைச்சர் கோவி.செழியன்
"மாணவ மாணவிகளிடையே பாலின உளவியல் குறித்தான விழிப்புணர்வு காலத்தின் அவசியமாகிவிட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்த பேராசிரியர்கள் அடங்கிய குழு கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ளது" என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
Aug 08, 2025 10:12 IST
சென்னை: ஏ.சி. மின்சார பேருந்து ஆகஸ்ட் 11-ல் தொடக்கம்
சென்னையில் முதல்முறையாக குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்து ஆகஸ்ட் 11ல் தொடங்கப்பட உள்ளது. பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 55 ஏசி மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 80 சாதாரண மின்சார பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. 625 பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
Aug 08, 2025 10:09 IST
புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப எச்சரிக்கை
போராட்டத்தை கைவிட்டு பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மேலாண் இயக்குனர் எச்சரித்துள்ளார். நிர்வாகம் தரப்பில் உறுதிமொழி கடிதம் வழங்காததால் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 11-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது. போரட்டத்தில் ஈடுபட்டு வரும் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சிவக்குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
-
Aug 08, 2025 09:47 IST
ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் இன்று ஆர்ப்பாட்டம்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பா.ஜனதா தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து முறைகேடு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்த விஷயத்தில் பா.ஜனதா மற்றும் தேர்தல் ஆணைய செயல்பாடுகளை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் பெங்களூரு சுதந்திர பூங்காவில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
-
Aug 08, 2025 09:18 IST
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி
நாகாலாந்து மாநில ஆளுநராகப் இல.கணேசன் (வயது 80) பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார். இந்தநிலையில், இல.கணேசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
-
Aug 08, 2025 08:37 IST
காசாவை முழு கட்டுப்பாட்டில் எடுக்க விருப்பம்: இஸ்ரேல் பிரதமர்
காசாவை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கம் அளித்துள்ளார். காசா முழுவதையும் தங்களது ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டம்; காசாவை அரசின் கீழ் நிர்வகிக்க விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.
-
Aug 08, 2025 08:24 IST
சுதந்திர தினவிழா-காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
இந்தியாவின் 79வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சியில், முதலமைச்சரை காவல்துறை வாகன அணிவகுப்புடன் அழைத்து வருவதற்கான போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுகிறது. 2ம் மற்றும் 3ம் கட்ட ஒத்திகை ஆகஸ்ட் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
-
Aug 08, 2025 08:00 IST
நெல்லை: திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் ராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுககனி திருட்டு மற்றும் நகை பறித்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார். திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரப்படி நேற்று (7.8.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
-
Aug 08, 2025 07:53 IST
சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்
சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு 900 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற பிரகாஷ் என்பவரை எழும்பூர் ரயில் நிலையத்தில் மடக்கிப் பிடித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் கைது செய்தனர். கடத்தல்காரர்களிடம் இருந்து 36 மூட்டைகள் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
-
Aug 08, 2025 07:42 IST
8 மாவட்டங்களில் இன்று 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Aug 08, 2025 07:24 IST
3 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Aug 08, 2025 07:20 IST
அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை - விஜய் திட்டவட்டம்
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள த.வெ.க. தலைவர் விஜய் முழுவீச்சில் தயாராகி வரும்நிலையில், மதுரையில் நடக்கும் 2-வது மாநில மாநாட்டின் மீது அவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். விஜய் தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளரிடம் கலந்துரையாடியுள்ளார். அதில், எனக்கு எதிராக வரும் எந்த விமர்சனத்தை கண்டும் நான் கலங்குவதில்லை. மாற்றத்தை நோக்கியே என் பயணம் இருக்கிறது. அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். த.வெ.க. முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் நாங்கள் எந்த சமரசமும் இல்லாமல் உறுதியாக இருக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
-
Aug 08, 2025 07:19 IST
மாநில கல்விக் கொள்கை - இன்று வெளியிடுகிறார் ஸ்டாலின்
மாநில கல்விக் கொள்கையை இன்று(ஆகஸ்ட் 08) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். மாநில கல்விக் கொள்கை உருவாக்க 2022ல் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீதிபதி முருகேசன் குழு தயாரித்த மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2024-ஜூலையில் சமர்ப்பித்தது.14 பேர் கொண்ட குழு 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. பள்ளி, உயர்கல்விக்கு என்று தனித்தனியாக மாநில கல்வி கொள்கைகளை முதல்வர் வெளியிடுகிறார். 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது என மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரைத்துள்ளது. தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.