/indian-express-tamil/media/media_files/2025/07/06/anwar-raja-2025-07-06-10-56-21.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம்!
3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 2,769 மில்லியன் கனஅடியாக உள்ளது. அதேபோல்,1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 157 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 260 மில்லியன் கனஅடியாக உள்ளது
-
Aug 09, 2025 14:29 IST
தமிழ்நாட்டில் 2019 முதல் தேர்தலில் போட்டியிடாத 22 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைய பட்டியலில் இருந்து நீக்கம்
தமிழ்நாட்டில் 2019 முதல் தேர்தலில் போட்டியிடாத 22 அரசியல் கட்சிகளின் பெயர்கள் தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டன. இந்த உத்தரவை எதிர்த்து 30 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
Aug 09, 2025 14:03 IST
திமுக இலக்கிய அணி தலைவராக அன்வர் ராஜாவை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் சேர்ந்த அன்வர் ராஜாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக இலக்கிய அணி தலைவராக அன்வர் ராஜாவை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
-
Aug 09, 2025 13:46 IST
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கிடப்பில் திட்டம் - எடப்பாடி பழனிசாமி
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஏரிகளை நிரப்பும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது அதிமுக ஆட்சியில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தில் 75% பணிகள் முடிந்தன; மீதமுள்ள 25% பணிகளை முடிக்காததால் பல ஏரிகள் வறண்டு கிடக்கின்றன என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்
-
Aug 09, 2025 13:14 IST
சென்னையில் தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
சென்னை மாநகராட்சியில் தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் மேயர் பிரியா. நாள் ஒன்றிற்கு தோராயமாக 3000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. ஒட்டுண்ணி நீக்க மருந்தும் செலுத்தப்பட்டு நாய்களுக்கு அடையாள மை வைக்கப்படும்.
-
Aug 09, 2025 13:14 IST
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மாதாந்திர சராசரி இருப்பு தொகை ரூ.50,000ஆக உயர்வு
புதிய கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்புத் தொகையை (Avg. Minimum Balance) நகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ரூ.50,000-ஆக உயர்த்தியது ஐ.சி.ஐ.சி.ஐ. இதுவே சிறு நகரங்களுக்கு ரூ.25,000-ஆகவும் கிராமப்புற பகுதிகளுக்கு ரூ.10,000-ஆகவும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பழைய AMB தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
-
Aug 09, 2025 13:08 IST
2026 வரை அன்புமணி தலைவர் - பா.ம.க பொதுக்குழுவில் தீர்மானம்
2026 ஆகஸ்ட் வரை பாமகவின் தலைவராக அன்புமணி தொடர்வார் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்புமணியின் பதவிக்காலம் மே 28ம் தேதி நிறைவடைந்த நிலையில் மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமக உட்கட்சி தேர்தல் நடைபெறும் வரை அன்புமணியே பாமக தலைவராக தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Aug 09, 2025 12:40 IST
மதுவிற்கு அடிமையான மகனை கொன்ற தாய்
சென்னையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சண்டையிட்டு மிரட்டி வந்த மகன் முகிலை தாய் ஆத்திரத்தில் கத்தியால் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு வடபழனி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
Aug 09, 2025 12:32 IST
வளர்ச்சியில் தமிழ்நாடு தான் முதலிடம் - ஸ்டாலின் பேச்சு
"கல்வியும் சுகாதாரமும் நமது தமிழ்நாட்டின் இரு கண்கள். காலிற்கு கீழ் நிலமும் தலைக்கு மேல் கூரையும் பலருக்கு கனவு, ஏழை மக்களுக்கு
இலவச பட்டா என்பது பேருதவி. 2021 முதல் தற்போது வரை சுமார் 17 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். -
Aug 09, 2025 12:31 IST
பா.ம.க பொதுக்குழு தொடங்கியது!
மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பா.ம.க பொதுக்குழு தொடங்கியது. ராமாதாஸின் எதிர்ப்புக்கு மத்தியில் அன்புமணி தலைமையில் பொதுக் குழு நடைபெறுகிறது. அன்புமணி பொதுக்குழுவுக்கு தடை கோரிய ராமதாஸ் தரப்பு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்ட பேனரில் ராமதாஸ் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
-
Aug 09, 2025 11:48 IST
பாலியல் உறவு: 18+ தான் சரி - மத்திய அரசு
பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு மேற்கொள்ள வயது வரம்பு 18 ஆகவே தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சம்மத வயதை நீர்த்துப்போகச் செய்வது, இளம் பருவ காதலென்ற போர்வையில் விதிவிலக்களிப்பது சட்டப்படி நியாயமற்றது, ஆபத்தானது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
Aug 09, 2025 11:44 IST
உறுப்பினர்களை ஆவணப்படுத்தும் அன்புமணி தரப்பு
செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அன்புமணி தலைமையில் இன்று பாமக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அன்புமணி தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்களை 16 சிசிடிவி வாயிலாக அடையாளம் காணவும், வருகையை பதிவு செய்யவும் அன்புமணி திட்டமிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தில் இருதரப்பினரும் ஆவணங்களை கொடுத்து வரும் நிலையில், அன்புமணி தரப்பு உறுப்பினர்களை ஆவணப்படுத்தி வருகிறது.
-
Aug 09, 2025 11:24 IST
திருப்பதி சென்ற கார் மீது லாரி மோதி விபத்து - 3 பேர் பலி
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் 3 பேர் பலியாகினர். ஆந்திரா நெல்லூர் மாவட்டம் சாகோலு அருகே கார் சென்றபோது நேர்ந்த விபத்தில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். நம்புலா வெங்கட நரசம்மா, நம்புலா சுபாஷினி, அபிராம் உள்ளிட்டோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
-
Aug 09, 2025 10:53 IST
தாம்பரம் சானடோரியத்தில் மருத்துவனை திறந்து வைக்கும் ஸ்டாலின்
தாம்பரம் சானடோரியத்தில்,ரூ.110 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை, ரூ.7 கோடியில் சிறப்பு பல்நோக்கு பல் மருத்துவமனை, ரூ.1 கோடியில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார ஆய்வகம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
Aug 09, 2025 10:30 IST
2030-க்குள் நிலவில் அணுமின் நிலையம்: நாசா திட்டம்
2030-க்குள் நிலவில் அணுமின் நிலையம் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது, நிலவில் மனிதன் நிரந்தரமாக வாழும் சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நிலவில், சூரியசக்தி மற்றும் பேட்ரிகளால் மட்டுமே மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பதால், அணுமின்நிலையம் அவசியமானதாக கருதப்படுகிறது. ஆனாலும் பூமியின் வலிமண்டலம் வழியாக அணுக்கதிர் பொருட்களை ஏவுவது பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
Aug 09, 2025 09:07 IST
திட்டமிட்டபடி இன்று பொதுக்குழு நடைபெறும்: அன்புமணி ராமதாஸ்
பாமக பொதுக்குழுவை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி. பொதுக்குழுவுக்கு தடையில்லை, வாருங்கள் சொந்தங்களே" என்று நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
Aug 09, 2025 09:06 IST
அமெரிக்க ஆயுத கொள்முதல் நிறுத்தமா? - மத்திய அரசு மறுப்பு
டிரம்பின் வரிவிதிப்புக்கு பதிலடியாக அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்கும் திட்டத்தை நிறுத்தியதாக பரவும் தகவலுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. பல்வேறு கொள்முதல் செயல்முறைகள், பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி நடந்து வருவதாக விளக்கம் அளித்துள்ளது,
-
Aug 09, 2025 09:05 IST
ஏழை என்ற சொல் இல்லை எனும் நிலை உருவாகும்: எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் ஏழை என்ற சொல் இல்லை என்னும் நிலையை உருவாக்குவது தான் அதிமுகவின் லட்சியம். தேர்தல் நேரத்தில் அதற்காக நிறைய திட்டங்களை அறிவிப்போம் என விருதுநகர் சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
-
Aug 09, 2025 09:03 IST
தமிழ்நாட்டு வாக்காளர்களை அடமானம் வைக்க ஈபிஎஸ் துணிந்துவிட்டாரா?துரைமுருகன் கேள்வி
வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம் தமிழ்நாட்டின் அரசியல் உரிமையை அபகரிக்க முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டு வாக்காளர்களை டெல்லியிடம் அடமானம் வைக்க ஈபிஎஸ் துணிந்துவிட்டாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Aug 09, 2025 08:16 IST
டிரம்ப், புதின் ஆக.15ல் பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சந்திப்பு நடைபெறும் என டிரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
-
Aug 09, 2025 08:16 IST
திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
-
Aug 09, 2025 08:14 IST
கடைசி வரை விஜயகாந்த் மகன், அந்த பெருமை போதும்: விஜய பிரபாகரன்
கேப்டன் பிரபாகரன்' படம் ஆகஸ்ட் 22ல் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது, இந்த படத்தின் இசை, ட்ரெய்லர் மறு வெளியீடு விழாவில், நடிகர் விஜயகாந்தின்
மகன் விஜய பிரபாகரன், எனக்கு வேற பெருமை ஏதும் வேண்டாம், கடைசி வரை விஜயகாந்த் மகன் என்கிற பெருமை மட்டும் போதும்"கண்ணீர் மல்க பேசியுள்ளார். -
Aug 09, 2025 07:31 IST
இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது: அதிபர் ட்ரம்ப்
வரி விதிப்பு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியா மீது 50 சதவீதம் வரி இருப்பதால், வர்த்தக பேச்சுவார்த்தை வலுவாகும் என்று எதிர்பாக்கிறீர்களா என்ற கேள்விக்கு ட்ரம்ப் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.