Chennai News Updates: தமிழகத்தில் செப்.3 வரை மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

Tamil Nadu Latest News Update: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu Latest News Update: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN Rains today

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

கேரளாவின் ஓணம் திருவிழா: மகாபலியின் மறுவருகையை கொண்டாடும் பண்டிகையாகும். மகாபலியின் நற்குணங்களை நினைவுகூர்ந்து, மக்கள் வீடுகளை அலங்கரித்து, கலைநிகழ்ச்சிகள் நடத்தி, அறுசுவை உணவுகளை சமைத்து மகாபலியை வரவேற்கின்றனர். இந்த பண்டிகை, கேரள மக்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் முக்கியமான நிகழ்வாகும். 

  • Aug 29, 2025 07:02 IST

    தமிழகத்தில் செப்.3 வரை மழைக்கு வாய்ப்பு

    ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து சத்தீஸ்கரில் நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஆக.30 முதல் செப்.3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது



  • Aug 28, 2025 20:52 IST

    பாரதத்தை புரிந்துகொள்ள சமஸ்கிருதம் தேவை: மோகன் பகவத்

    குருகுல கல்வியை மாற்றாமல், அதனை இன்றைய கால கல்வியுடன் இணைக்க வேண்டும். நமது குருகுல கல்வி பின்லாந்து கல்வி மாடலை போன்றது. பாரதத்தை புரிந்துகொள்ள சமஸ்கிருதம் தேவை என மோகன் பகவத் கூறியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Aug 28, 2025 20:49 IST

    தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், திருப்பூர்,  திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லையில்  இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு  தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, திருவள்ளூரிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • Aug 28, 2025 19:44 IST

    ஒவ்வொரு இந்தியரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு

    ஒவ்வொரு இந்தியரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். சரியான வயதில் திருமணம் செய்துகொண்டு 3 குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோரும், குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் என்னிடம் கூறினார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.



  • Aug 28, 2025 18:38 IST

    லட்சுமி மேனன் நண்பர் குறித்து அதிர்ச்சி தகவல்

    கொச்சி, ஐடி ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனனின் நண்பர் மிதுன் மோகன் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. லட்சுமி மேனன் நண்பர் மிதுன் மோகன் பல்வேறு கடத்தல், கொள்ளை, வழக்குகளில் தொடர்புடையவர் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கூலிப்படையை சேர்ந்த மிதுன் மோகனுடன் லட்சுமி மேனனுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்ட‌து? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Aug 28, 2025 17:52 IST

    சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே

    தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே  அறிவித்துள்ளது.



  • Aug 28, 2025 17:19 IST

    பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை - கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..!

    தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக 80.29% இடங்கள் நிரம்பியுள்ளன. இந்த ஆண்டு 1,38,573 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இது 10% அதிக மாணவர் சேர்க்கை ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 423 பொறியியல் கல்லூரிகளில் 1,72,589 இடங்கள் உள்ளன. 



  • Aug 28, 2025 16:50 IST

    ஆளுநர் நீதிபதி அல்ல - குடியரசுத் தலைவரின் மனுவை எதிர்க்கும் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வாதம்

    ஆளுநரை பொறுத்தவரை அவர் நீதிபதி அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்; அரசியல் சாசன பிரிவு 200படி ஆளுநருக்கு 4வது வாய்ப்பு என்று ஒன்று இல்லை; கால வரம்பு இல்லாமல் மசோதாவை நிறுத்திவைக்க முடியாது. கிடப்பில் போட முடியாது என்று மசோதா ஒப்புதலுக்கு கால வரம்பு நிர்ணய வழக்கில் குடியரசுத் தலைவரின் மனுவை எதிர்க்கும் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வாதித்துள்ளது. 



  • Aug 28, 2025 16:29 IST

    "விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்!” - டிடிவி தினகரன் பேட்டி

    மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் போல், வருகின்ற 2026 தேர்தலில் தவெக தலைவர் விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். 



  • Aug 28, 2025 16:12 IST

    கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

    கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டிச.1ம் தேதி முதல் 4ம் தேதி வரை குரூப்-1 முதன்மைத் தேர்வுகள் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிக்காக ஜூன் 15ம் தேதி குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெற்றது. குரூப் 1 முதன்மை தேர்வுக்கு செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.



  • Aug 28, 2025 15:48 IST

    மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.10 கோடி நிதி - அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

    சாமானியர்களின் குரலுக்கு என்றும் நம் அரசு செவிசாய்க்கும்; கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் நடைபாதை, குழந்தைகள் விளையாடும் இடம், உடற்பயிற்சிக் கூடம் போன்ற வசதிகளுடன் கூடிய பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதமாக தெரிவித்துளளார். 



  • Aug 28, 2025 15:01 IST

    கர்நாடகாவில் நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி; ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்லும் மக்கள்

    கர்நாடகா, தாவணகெரேவில் சையத் நூர் என்பவரின் பண்ணையில் உள்ள கோழி நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். கோழியின் கணையத்தில் உள்ள ‘பிலிவர்டின்’ (Biliverdin) என்ற நிறமி காரணமாக முட்டை நீல நிறத்தில் மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது.



  • Aug 28, 2025 14:59 IST

    நல்லகண்ணு உடல்நிலை: மீண்டும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை; தீவிர கண்காணிப்பு - அமைச்சர் மா.சு

    கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

    கடந்த 48 மணி நேரத்தில் உடல் நிலை முன்னேறிய நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டு, அவரின் உறவினரை அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்தார். மீண்டும் அவர் உணவுக் குழாயில் அடைப்பு காரணமாக மூச்சு பிரச்சனை ஏற்பட்டது. அதனால் மீண்டும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து மக்களிடம் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்க தனி மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.



  • Aug 28, 2025 14:54 IST

    மூளையை தின்னும் அமீபா: யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சு

    அமைச்சர் மா. சுப்பிரமணியன்: “மூளையை தின்னும் அமீபா  என்பது பெரிய அளவில் பதட்டப்பட வேண்டிய தொற்று நோய் கிடையாது. அசுத்தமான நீர்நிலைகளில் குளிப்பதால் மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கேரளாவிலிருந்து வருபவர்களால் இந்த நோய் பரவும் என்ற அச்சம் யாருக்கும் வேண்டாம்” என்று கூறினார்.



  • Aug 28, 2025 14:38 IST

    நல்லகண்ணு உடல்நிலையை விசாரித்த அமைச்சர் மா.சு

    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல் நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவர்களிடம் விசாரித்தார்.



  • Aug 28, 2025 14:28 IST

    2006-ல் விஜயகாந்தைப் போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் - டி.டி.வி தினகரன்

    அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், “2006-ல் விஜயகாந்தைப் போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். நான் சொல்வது யதார்த்தமான உண்மை. அதற்காக நான் அந்த கட்சியுடன் கூட்டணிக்கு செல்வதாக அர்த்தமில்லை. 2026 தேர்தலில் எல்லா கட்சிக்கும் த.வெ.க பாதிப்பை ஏற்படுத்தும்.” என்று கூறினார். 



  • Aug 28, 2025 13:55 IST

    விஜய் தப்பான நோக்கத்தில் அங்கிள் என்ற வார்த்தையை குறிப்பிட்டதாக எனக்கு தோன்றவில்லை - கே.எஸ். ரவிக்குமார்

    இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், “விஜய் தப்பான நோக்கத்தில் அங்கிள் என்ற வார்த்தையை குறிப்பிட்டதாக எனக்கு தோன்றவில்லை. எங்களை போன்றோரை நேரில் பார்த்தால்கூட, ‘நல்லா இருக்கீங்களா அங்கிள்?’ என்றே கேட்பார் விஜய். அதையே இன்று பொதுவெளியில் கமர்சியல் செய்து பேசியுள்ளார்” என்று கூறினார்.



  • Aug 28, 2025 13:53 IST

    மத்திய அரசு தேர்வில் ஆள்மாறாட்டம் - 3 வடமாநில நபர்கள் கைது

    சென்னை, தரமணி தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனம் பல்நோக்கு பணியாளர்களுக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் உள்ளிட்ட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.



  • Aug 28, 2025 13:51 IST

    மிசோரத்தில் பிச்சை எடுப்பதற்கு தடை - மசோதா நிறைவேற்றம்

    பிச்சை எடுப்பதைக் குற்றமாக அறிவிக்கும் மசோதாவை மிசோராம் மாநில சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவின்படி, மாநிலத்தில் பிச்சை எடுப்பவர்களுக்குத் தடை விதிக்கப்படும். மாநில அளவில் நிவாரண வாரியம் ஒன்றை அமைக்கவும், பிச்சைக்காரர்களைத் தற்காலிகமாகத் தங்கவைத்து மறுவாழ்வு அளிப்பதற்காக மறுவாழ்வு மையங்களை உருவாக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. 



  • Aug 28, 2025 13:14 IST

    ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது - சுப்ரீம் கோர்ட்

    மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பது குறித்து ஆளுநரிடம் பதில் கேட்பதில் தவறில்லை. ஏனெனில், ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதிதான். அவர் மத்திய அரசின் பிரதிநிதி இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. அவருக்கான அதிகாரத்தை மத்திய அரசுதான் வழங்கியுள்ளது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீபதிபதி பி.ஆர். கவாய் கருத்து தெரிவித்துள்ளார்.



  • Aug 28, 2025 12:34 IST

    நல்லகண்ணு உடல் நிலை - அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

    கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். கடந்த 48 மணி நேரத்தில் உடல் நிலை முன்னேறிய நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டு, அவரின் உறவினரை அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்தார். மீண்டும் அவர் உணவுக் குழாயில் அடைப்பு காரணமாக மூச்சு பிரச்னை ஏற்பட்டது. அதனால் மீண்டும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து மக்களிடம் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்க தனி மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.



  • Aug 28, 2025 12:20 IST

    தி.மு.க.விற்கு எதிரான அவதூறுகளில் சத்தில்லை- ஸ்டாலின்

    திமுக ஆட்சிக்கு எதிராக அள்ளி வீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை. அமித் ஷா முதல் ஈபிஎஸ் வரை திமுகவை விமர்சித்தவர்களுக்கு நெத்தியடி பதில்தான் பாஜக அரசு தந்துள்ள அறிக்கை என மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதிக தொழிற்சாலைகள் மற்றும் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்



  • Aug 28, 2025 12:01 IST

    'கூலி' திரைப்படத்திற்கு 'U/A' சான்றிதழ் கோரிய வழக்கு தள்ளுபடி

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்கக் கோரி, தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



  • Aug 28, 2025 11:37 IST

    அன்புமணி குடும்பத்துடன் திருப்பதியில் தரிசனம்

    தங்களது திருமண நாளையொட்டி, குடும்பத்துடன் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி

    anb



  • Aug 28, 2025 11:31 IST

    ஸ்டாலின் வலியுறுத்தல்

    திருப்பூர், நாட்டின் முன்னணி ஜவுளி மையங்களில் ஒன்றாக இருந்தாலும், தற்போது பெரிய அளவில் வர்த்தக பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இதனால், சுமார் 3,000 கோடி ரூபாய் வர்த்தகம் இழக்கப்பட்டுள்ளதோடு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலமும் நிச்சயமற்றதாக மாறியுள்ளது.

    நமது தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, அவசர நிவாரண உதவிகளையும், தொலைநோக்கு சீர்திருத்தங்களையும் அறிவிக்க வேண்டும் என்று நான் மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன்.



  • Aug 28, 2025 10:51 IST

    தமிழ்நாடு முதலிடம்

    நாட்டின் மொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 15% பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

    மத்திய அரசு வெளியிட்ட, 2023-24 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தொழில் கணக்கெடுப்பு (Annual Survey of Industries - ASI) முடிவுகளின்படி, இப்பட்டியலில் குஜராத் (13%), மகாராஷ்டிரா (13%), உத்திரப் பிரதேசம் (8%), கர்நாடகா (6%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.



  • Aug 28, 2025 10:43 IST

    இ.பி.எஸ். வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது. நேப்பியர் பாலம் அருகே உள்ள கடலோர காவல் படை அலுவலகத்திற்கும் அதே மின்னஞ்சலில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்ததில், மிரட்டல் புரளி என தெரிய வந்தது.



  • Aug 28, 2025 10:41 IST

    மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

    சென்னை மெட்ரோ ரயிலுக்கான வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட் வாங்குவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், வாட்ஸ்அப் சாட்பாட் தற்காலிகமாக வேலை செய்யவில்லை எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    சிம்ஆர்எல் (CMRL) மொபைல் செயலி, பேடிம், போன்பே, சிங்கார சென்னை கார்டு (Paytm, phonepe, Singara Chennai Card, CMRL) பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 



  • Aug 28, 2025 09:20 IST

    தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

    தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7 முதல் 11 செமீ வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆகஸ்ட் 28, 29 ஆகிய 2 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.



  • Aug 28, 2025 09:00 IST

    சேப்பாக்கத்தின் சிங்கம் - அஸ்வினுக்கு CSk வாழ்த்து

    ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “சேப்பாக்கத்தின் சொந்த சிங்கம். கேரம் பந்தை திருப்புகிற சுந்தரன். முதல் முறையாக மஞ்சள் நிற சீருடையுடன் புழுதி பறக்கும் சேப்பாக்கம் ஆடுகளத்தில் அறிமுகமாகி உலக அரங்கில் சுழற்பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தியதுடன், அணிக்காக எல்லாவற்றையும் வழங்கினீர்கள். நமது பாரம்பரியத்தின் துணாக இருந்து சேப்பாக்கம் கோட்டையில் கர்ஜித்தீர்கள். நன்றி அஸ்வின்” என்று பதிவிட்டுள்ளது.



  • Aug 28, 2025 08:37 IST

    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

    ஜம்மு-காஷ்மீரின் பந்தேபோரா மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. குரேஸ் செக்டரில் இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் போலீசும் இணைந்து நடத்திய இந்த நடவடிக்கையில், இந்த இரு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.



  • Aug 28, 2025 08:34 IST

    அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 2 குழந்தைகள் பலி

    அமெரிக்காவில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள் புதன்கிழமை கொல்லப்பட்டனர். மேலும், 14 குழந்தைகள் உள்பட 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

     



  • Aug 28, 2025 08:15 IST

    திருவள்ளூர்: 6 வயது சிறுவனை கடித்த தெரு நாய்

    திருவள்ளூர் மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்ற 6 வயது சிறுவனை துரத்திச் சென்று கை, கால்களில் தெரு நாய் கடித்துள்ளது. சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்



  • Aug 28, 2025 07:56 IST

    தமிழக மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு விருது

    சென்னை ஓமந்தூரார், திருவள்ளூர், திருவண்ணாமலை, தேனி, கன்னியாகுமரி ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் தேசிய தர நிர்ணய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், மருத்துவர் நலன், ஆவணங்களை முறையாகப் பராமரித்தல் உள்ளிட்டவற்றில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.



  • Aug 28, 2025 07:50 IST

    வேளாங்கண்ணி கடலில் நாளை முதல் குளிக்கத் தடை

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத் திருவிழா தொடங்குவதையொட்டி நாளை முதல் கடலில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்படுதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.



  • Aug 28, 2025 07:49 IST

    சத்தீஸ்கர்: மழை வெள்ளத்தில் சிக்கி தமிழர்கள் 4 பேர் பலி

    சத்தீஸ்கர் மாநிலம் ஜகதல்பூரில் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தர்பபந்தா என்ற பகுதியில் காரில் பயணித்த 4 பேரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.



  • Aug 28, 2025 07:46 IST

    மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து 14 பேர் உயிரிழப்பு

    மும்பையில் விஜய் நகர் பகுதியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 8 முதல் 10 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



  • Aug 28, 2025 07:32 IST

    "ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால்.."

    ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை 25% வரை குறைப்போம் என அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ அறிவித்துள்ளார். இந்தியா மீதான 50% வரி விதிப்பு நேற்று (ஆக.27) முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.



  • Aug 28, 2025 07:29 IST

    10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 



  • Aug 28, 2025 07:21 IST

    மோடியுடன் பின்லாந்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை

    பிரதமர் மோடியை இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், குவாண்டம் தொழில்நுட்பம், 6ஜி சேவை, செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.



  • Aug 28, 2025 07:20 IST

    50% வரி -பிரதமர் மோடிக்கு திருப்பூர் எம்.பி. கடிதம்

    அமெரிக்காவின் 50% வரி விதிப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு திருப்பூர் எம்.பி. சுப்பராயன் கடிதம் எழுகியுள்ளார். அதில், திருப்பூர் பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு ரூ.15,000 கோடி வருவாய் இழப்பு, 2 லட்சம் வேலையிழப்பு ஏற்படும். பின்னலாடை தொழிலை பாதுகாக்க நிதி தொகுப்பு அறிவித்து, அனைத்து மூலப்பொருள்களுக்கான இறக்குமதி வரியை நிறுத்திவைக்க வேண்டும். பருத்திக்கு அறிவித்த தற்காலிக இறக்குமதி வரி விலக்கை நிரந்தரமாக்க வேண்டும், ஏற்றுமதியாளர்களுக்கு இலவச மின்சாரம், போக்குவரத்து வசதிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



  • Aug 28, 2025 07:18 IST

    14 ஐகோர்ட்டு நீதிபதிகள் பணியிட மாற்றம்- பரிந்துரை

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உள்பட 14 ஐகோர்ட்டு நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் கடந்த 25 மற்றும் 26-ந்தேதிகளில் கூடியது. இந்த கூட்டத்தில் நாட்டின் பல்வேறு ஐகோர்ட்டுகளில் பணியாற்றி வரும் 14 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.

     



  • Aug 28, 2025 07:17 IST

    சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம் நீட்டிப்பு

    ரூ.7,332 கோடி செலவில் 2030-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம் நீட்டிக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக 50 லட்சம் புதிய வியாபாரிகளை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. நீட்டிக்கப்படும் இந்த திட்டத்தில் கடன் உச்சவரம்பும் உயர்த்தப்படுகிறது.



  • Aug 28, 2025 07:16 IST

    ஜம்முவில் வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப் பணிகள்

    ஜம்மு-காஷ்மீரில் வெள்ளம் பாதித்த இடங்களில் இரவு பகலாக மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கனமழை நிலச்சரிவால் 41 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், வெள்ள நீர் சூழ்ந்துள்ள இடங்களில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு, தண்ணீர் உள்ளிட்டவை விநியோகிக்கப்படுகின்றன.



Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: