Chennai News Highlights: பீகாரில் ராகுல்காந்தி நடை பயணம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Tamil Nadu Latest News Update: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu Latest News Update: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mk stalin rahul gandhi

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நிலவரம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 59.15% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 6.954 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. குறிப்பாக புழல் ஏரியில், 3 மாதங்களுக்குப் பிறகு நீர் இருப்பு 3 டி.எம்.சி. ஆக உயர்ந்துள்ளது.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் காலை 8.30 மணியளவில் தொடங்கியது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை விரிவாக்கம் செய்துவைத்தார். 

  • Aug 27, 2025 00:13 IST

    பீகாரில் ராகுல்காந்தி நடை பயணம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

    வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் நடைபயணத்தில் பங்கேற்கிறார். காலை 7.30 மணிக்கு புறப்பட்டு, 10.30 மணிக்கு பீகார் சென்றடையும் முதலமைச்சர் ஸ்டாலின், நடைபயணத்தில் பங்கேற்கிறார். ராகுல்காந்தி உடனான நடைபயணத்தில் பங்கேற்று விட்டு, பிற்பகல் 2.40 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்



  • Aug 26, 2025 21:03 IST

    ஆர்.டி.இ  இணையதளப் பக்கம் திறக்காதது ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி 

    கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்காக இணையதள பக்கத்தை திறக்காதது ஏன்? ஆர்.டி.இ-ன் கீழ் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் சேர்க்கை வழங்குவது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்,  மத்திய அரசு 60% நிதியை ஒதுக்காததால் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த இயலவில்லை என தமிழக அரசு  விளக்கம் அளித்துள்ளர். ஆனாலும், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இணையதள பக்கத்தை திறக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Aug 26, 2025 20:06 IST

    இடைவிடாத கனமழை - ஜம்மு-காஷ்மீரை புரட்டிய வெள்ளம்; 9 பேர் பலி

    ஜம்மு-காஷ்மீரில் இடைவிடாத கனமழையால் பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்ததில் இன்று செவ்வாய்க்கிழமை குறைந்தது ஒன்பது பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். ரியாசி மாவட்டத்தின் கத்ரா நகருக்கு அருகிலுள்ள திரிகுடா மலைகளில் உள்ள வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஆத் குன்வாரி அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் ஐந்து பேர் இறந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்.

    ஹிம்கோடி மலையேற்றப் பாதையில் காலை முதல் யாத்திரை நிறுத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மழையைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் ஒரு இரும்பு கொட்டகையின் கீழ் தஞ்சம் புகுந்தனர். சம்பவத்திற்குப் பிறகு, பழைய பாரம்பரிய பாதையில் யாத்திரையை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க ஆலய வாரியம் முடிவு செய்தது.



  • Aug 26, 2025 20:01 IST

    மோடி, புதினுக்கு சிறப்பு வரவேற்பு - சீன அதிபர் ஜின்பிங் ஏற்பாடு

    சீனா செல்லும் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுக்கு சிறப்பான வரவேற்பு தர சீன அதிபர் ஸி ஜின்பிங் திட்டமிட்டுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனாவின் டியான்ஜின் நகரில் நடைபெற உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, கஜக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் இடம்பெற்றுள்ளன. கல்வான் பள்ளத்தாக்கு மோதலை அடுத்து இந்தியா-சீன உறவில் சுமுக உறவு இல்லாமல் போனது. 7 ஆண்டுகளுக்குப் பின் உறவு சற்று சீரடைந்துள்ளதால் பிரதமர் மோடி சீனாவுக்கு செல்ல உள்ளார்.



  • Aug 26, 2025 19:58 IST

    விநாயகர் சதுர்த்தி  - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி சென்னையில் 1,519 சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியது. சென்னை முழுவதும் 16,500 காவலர்கள், 1,500 ஊர்க்காவல்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். சிலைகள் உள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள், 2 தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொதுமக்கள் அமைதியான முறையில் வழிபட வேண்டுகோள் விடுத்துள்ளது.



  • Aug 26, 2025 18:55 IST

    கோவா-வில் அரங்கேறும் உலகக் கோப்பை - மேக்னஸ் கார்ல்சன் பங்கேற்கபதில் சந்தேகம் 

    2025 ஆம் ஆண்டு ஃபிடே உலகக் கோப்பை போட்டிகள் கோவா-வில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை நடைபெறும் செஸ் உலகக் கோப்பையில், 5 முறை சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், தலைநகர் டெல்லி போட்டியை நடத்தும் இடமாக அறிவிக்கப்பட்டது, ஆனால் அது குறித்து கவலைகள் இருந்த சூழலில், மறுபரிசீலனை செய்யப்பட்டு கோவா-வில் அரங்கேற உள்ளது. 



  • Aug 26, 2025 18:47 IST

    சண்டை போடக்கூடாது - அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல் 

    அரசுப் பேருந்தை நிறுத்தவில்லை என்றால் ஓட்டுநர்கள், நடத்துனர்களிடம்  சண்டை போடக்கூடாது; பள்ளி ஆசிரியர்களிடம் புகார் தெரிவியுங்கள். அவர்கள் எங்களிடம் தெரிவிப்பார்கள் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 



  • Aug 26, 2025 18:25 IST

    கெனிஷா கடவுள் கொடுத்த பரிசு - ரவி மோகன்

    "அவங்க கடவுள் கொடுத்த  கிப்ட். நான் யார்னு உணர வைத்தது கெனிஷா தான். இப்படி ஒருத்தர் லைஃப்ல எல்லாருக்கும் இருக்கனும்" என்று ரவி மோகன் ஸ்டுடியோ தொடக்க விழாவில் எமோஷனலாக பேசியுள்ளார் ரவி மோகன். 



  • Aug 26, 2025 18:24 IST

    இந்தி திணிப்பை ஊக்குவிக்கும் தெற்கு ரயில்வே - சுற்றறிக்கையை ரத்து செய்ய சு.வெங்கடேசன் கோரிக்கை 

    இந்தி திணிப்பை ஊக்குவிக்கும் தெற்கு ரயில்வே சுற்றறிக்கையை உடனே ரத்து செய்ய வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். தெற்கு ரயில்வே பதவி உயர்வு தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தப்படுவதாக சு.வெ. கண்டனம் தெரிவித்துள்ளார். 'ஒன்றிய அரசின் அலுவலகங்களில் கடுமையாக இந்தியை திணிக்கிறார்கள். ரயில்வே துறையில் ஏற்படும் விபத்துகளுக்கு காரணம் மொழிதான். இந்தி திணிப்பை கைவிட வேண்டும்' எனவும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.



  • Aug 26, 2025 17:54 IST

    சீனா மீது திடீர் பாசம் - ட்ரம்ப் போட்ட யூ -டர்ன்

    அமெரிக்காவில் சீனா உள்பட வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்த நிலையில் திடீரென அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் 6 லட்சம் சீன மாணவர்கள் படிக்க அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே முக்கியமான உறவு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டாது சொந்தக் கட்சிக்குள் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 



  • Aug 26, 2025 17:39 IST

    மெரினா பாரம்பரிய வழித்தட திட்டப் பணிகளை செயல்படுத்த சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி!

    தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மெரினா பாரம்பரிய வழித்தட திட்டப் பணிகளை செயல்படுத்த சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டது. இத்திட்டம் மூலம் ரூ.10 கோடி செலவில் சைக்கிள் பாதைகள். 9 பேருந்து நிறுத்தங்கள், 3 புறக்காவல் நிலையங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.



  • Aug 26, 2025 17:08 IST

    நிதி முறைகேடு புகாரில் கைதான ரணிலுக்கு பிணை வழங்கியது இலங்கை நீதிமன்றம்!

    இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கிற்கு அந்நாட்டு நீதிமன்றம் பிணை வழங்கியது. கடந்த 22 ஆம் தேதி அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய புகாரில் ரணில் கைது செய்யப்பட்டார்.



  • Aug 26, 2025 16:48 IST

    நுங்கம்பாக்கம் கல்லூரி பாதை இனி ஜெய்சங்கர் சாலை

    சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை 'ஜெய்சங்கர் சாலை' என மாற்ற மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1964 - 2000 வரை கல்லூரிப் பாதையில் நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்தார். நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சாலையின் பெயரை மாற்ற மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



  • Aug 26, 2025 16:41 IST

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் ஹிமகிரி, ஐ.என்.எஸ் உதயகிரி ஆகிய இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கப்பட்டன. இந்தக் கப்பல்களில் இருந்து சூப்பர்சோனிக், பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகளை கடலில் உள்ள இலக்குகளுக்கு எதிராக செலுத்த முடியும் எனக் கூறப்படுகிறது. 



  • Aug 26, 2025 16:39 IST

    விஜயின் பவுன்சர்கள் மீது தவெக தொண்டர்கள் காவல்துறையில் புகார்!

    தவெக தலைவர் விஜயின் பவுன்சர்கள் மீது அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தொண்டர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் விஜயை அருகில் சென்று பார்க்க முயன்ற தொண்டரை விஜயின் பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வீசியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்க விடுத்துள்ளனர்.



  • Aug 26, 2025 16:35 IST

    மத்திய அரசுக்கு ஆதரவாக 3 மாநில அரசுகள் வாதம்

    மசோதா ஒப்புதலுக்கு கால வரம்பு நிர்ணயம் குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு ஆதரவாக ஒடிசா, ராஜஸ்தான், உ.பி, அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டனர். மசோதாவை மீண்டும் ஒப்புதலுக்கு அனுப்பினால் ஆளுநர் அரசமைப்பு 200யில் வாய்ப்புகளை பயன்படுத்தலாம். மசோதாவை சட்டசபைக்கு திருப்பி அனுப்பத் தேவையில்லை என முடிவெடுப்பது ஆளுநரின் அதிகாரம் என ராஜஸ்தான் அரசு வாதம்.



  • Aug 26, 2025 16:08 IST

    கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜ கண்டிகை அரசு பள்ளியில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல்

    கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜ கண்டிகை அரசு பள்ளியில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் ஏற்பட்டவுடன் 4 மாணவிகளும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டுள்ளனர். தனியார் ஆலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதா என விசாரணை எம்தற்கொள்ளப்பட்டு வருகிறது.



  • Aug 26, 2025 16:07 IST

    சார்-பதிவாளர் அலுவலகங்களில் ஆக.28, 29ல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பதிவுத்துறை ஆணை

    சார்-பதிவாளர் அலுவலகங்களில் முகூர்த்த தினமான ஆக.28, 29ல் அதிக பத்திரப் பதிவு நடக்கும் என்பதால் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பதிவுத்துறை ஆணையிட்டுள்ளது. ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யவும், 2 சார்-பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்குப் பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யவும், அதிகளவில் பத்திரப் பதிவு நடக்கும் அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யவும், 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.



  • Aug 26, 2025 16:06 IST

    மனித நேயத்தோடு நாய்களைக் காப்போம் - பிரேமலதா விஜயகாந்த்

    தெரு நாய்களை அழிக்காமல், கருத்தடை, தடுப்பூசி, காப்பகங்கள் மூலம் பாதுகாப்போம்; மனித நேயத்தோடு நாய்களை காப்போம்; இந்து மரபில், பைரவர் வடிவமாக வழிபடப்படும் நாய்கள், விஸ்வாசத்தையும், நன்றியையும் வெளிப்படுத்துகின்றன. நாய்க்கடி ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை என்று உலக நாய்கள் தினத்தையொட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கையிட்டுள்ளார். 



  • Aug 26, 2025 16:04 IST

    மத்திய அரசுக்கு ஆதரவாக 3 மாநில அரசுகள் வாதம்

    மசோதா ஒப்புதலுக்கு கால வரம்பு நிர்ணயம் குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு ஆதரவாக ஒடிசா, ராஜஸ்தான், உ.பி. அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வாதம். மசோதாவை மீண்டும் ஒப்புதலுக்கு அனுப்பினால் ஆளுநர் அரசமைப்பு 200இல் வாய்ப்புகளை பயன்படுத்தலாம்; மசோதாவை சட்டசபைக்கு திருப்பி அனுப்பத் தேவையில்லை என முடிவெடுப்பது ஆளுநரின் அதிகாரம் என்று ராஜஸ்தான் அரசு விதித்துள்ளது. 



  • Aug 26, 2025 15:20 IST

    "பொய்யை மறைப்பது மிகப் பெரிய குற்றம்!” - நடிகர் பிரகாஷ்ராஜ்

    ஒரு பிரதமர் பட்டம் பெறாதது குற்றமல்ல; ஆனால், பட்டம் பெற்றிருப்பதாக பொய் சொல்வதும், அந்தப் பொய்யை மறைக்க நிறுவனங்களைப் பயன்படுத்துவதும் மிகப் பெரிய குற்றம் என்று பிரதமர் மோடியின் இளங்கலை பட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Aug 26, 2025 15:17 IST

    மாணவர்கள் உயர, மாநிலம் உயரும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    “மழலை மாணவச் செல்வங்களின் முகங்களில், நான் காண்பது புன்னகையை மட்டுமல்ல! நம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே காண்கிறேன். மாணவர்களின் வயிற்றுப் பசியைப் போக்குவது மட்டுமல்ல, அவர்களின் கனவுகள் நனவாகத் துணைநிற்பதும் என்னுடைய கடமை எனச் செயலாற்றி வருகிறேன்!; மாணவர்கள் உயர, மாநிலம் உயரும்” என்று காலை உணவுத் திட்ட விரிவாக்கம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 



  • Aug 26, 2025 15:09 IST

    நடிகர் ஜெய்சங்கருக்கு மரியாதை; நுங்கம்பாக்கம் கல்லூரி பாதை பெயர் மாற்றம் - அரசாணை வெளியீடு

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையின் (College lane) பெயரை 'ஜெய்சங்கர் சாலை' என்று மாற்றம் செய்ய அனுமதி அளித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரி பாதையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்து வந்த நடிகர் ஜெய்சங்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • Aug 26, 2025 15:07 IST

    காலை உனவுத் திட்டம் விரிவாக்கம்: மாணவர்கள் உயர, மாநிலம் உயரும் - மு.க.ஸ்டாலின்

    காலை உனவுத் திட்டம் விரிவாக்கம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு: “மழலை மாணவச் செல்வங்களின் முகங்களில் நான் காண்பது புன்னகையை மட்டுமல்ல, நம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே காண்கிறேன். மாணவர்கள் வயிற்றுப் பசியைப் போக்குவது மட்டுமல்ல, அவர்களின் கனவுகள் நனவாகத் துணை நிற்பதும் என்னுடைய கடமை எனச் செயலாற்றி வருகிறேன். மாணவர்கள் உயர மாநிலம் உயரும்” என்று தெரிவித்துள்ளார்.



  • Aug 26, 2025 15:03 IST

    கல்லூரி பாதையின் பெயர் ஜெய்சங்கர் சாலை என மாற்றம்

    கல்லூரி பாதையின் பெயர், ஜெய்சங்கர் சாலை என்று மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையின் பெயரை ஜெய்சங்கர் சாலை என்று பெயர் மாற்ற செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி பாதைக்கு ஜெய்சங்கர் பெயர் சூட்ட வேண்டும் என அவரது மகன் விஜயசங்கர் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார். ஜெய்சங்கர் சாலை என்று மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



  • Aug 26, 2025 15:01 IST

    எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குழுமம் குத்தகை பாக்கி ரூ.20 கோடியை உடனே செலுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    திருச்சியில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குழுமம், ரூ.20 கோடி குத்தகை பாக்கியை தமிழக அரசுக்குச் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருச்சியில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமான இடம், எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குழுமத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. குத்தகை பாக்கி தொடர்பாக எழுந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்ஆர்எம் குழுமம் தமிழக அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.38 கோடியில், முதல் கட்டமாக ரூ.20 கோடியை ஆறு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.



  • Aug 26, 2025 14:05 IST

    பூந்தமல்லி - போரூர் வரை மெட்ரோ ரயில் சோதனை நிறைவு; விரைவில் தொடங்கும் சேவை 

    பூந்தமல்லி - போரூர் வரை, மெட்ரோ ரயில்கள் மற்றும் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கான சோதனைகள் நிறைவு பெற்றது. மெட்ரோ ரயில் பெட்டிகள் மற்றும் தண்டவாளத்தின் தரம் மதிப்பீடு செய்யப்பட்டது. "மின்சாரம், காற்றழுத்தம், அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் பிரேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது" ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்கிய சோதனைகளில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளின் பயண வசதி மதிப்பீடு செய்யப்பட்டது. திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்னதாகவே மெட்ரோ ரயில்  சோதனைகள் நிறைவடைந்துள்ளது.



  • Aug 26, 2025 13:56 IST

    சட்டசபையில் ஆர்.எஸ்.எஸ் பாடலைப் பாடியதற்கு மன்னிப்புக் கேட்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

    சட்டசபையில் ஆர்.எஸ்.எஸ் பாடலைப் பாடியதற்கு மன்னிப்புக் கேட்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்கர்நாடக சட்டமன்றத்தில் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பாடலைப் பாடிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மன்னிப்புக் கேட்டுள்ளார். காங்கிரஸ்காரனாகவே பிறந்த நான், ஒரு காங்கிரஸ்காரனாகவே இறப்பேன். ஆர்.எஸ்.எஸ்-ஐ புகழ்வது எனது நோக்கமல்ல. காந்தி குடும்பம்தான் எனது கடவுள்” என்று கூறியுள்ளார்.



  • Aug 26, 2025 13:42 IST

    உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க பொதுமக்களுக்கு மோடி வேண்டுகோள்

    எதிர்வரும் பண்டிகை காலங்களில், உள்ளூர் பொருட்களுக்கு பொதுமக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். மேலும், எவ்வளவு அழுத்தம் வந்தாலும் விவசாயிகளையும் உள்ளூர் வணிகர்களையும் காப்போம் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.



  • Aug 26, 2025 13:20 IST

    சென்னையில் டிசம்பருக்குள் 15 நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் - மேயர் பிரியா

    மேயர் பிரியா, “சென்னையில் டிசம்பருக்குள் மண்டலத்திற்கு ஒன்று என 15 நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள அமைக்கப்படும்; சென்னை மாநகராட்சியில் 1.80 நாய்கள் உள்ளன; அதில் 27% நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.



  • Aug 26, 2025 12:57 IST

    கால்நடை மருத்துவ கல்லூரி முறைகேடு - முதல்வர் பணியிடை நீக்கம்

    கால்நடை மருத்துவ கல்லூரியில் ரூ.5 கோடி வரை முறைகேடு புகாரில் வேப்பேரி மருத்துவக் கல்லூரி முதல்வர் சௌந்தர்ராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்



  • Aug 26, 2025 12:44 IST

    மாநில அரசின் மசோதா - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

    மாநில அரசு நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவர் வாயிலாக மத்திய அரசு நிராகரிக்க முடியுமா? என உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு அளித்தது குறித்து குடியரசுத் தலைவரின் விளக்க கேள்விக்கான ஆதரவு வாதங்களை இன்றே நிறைவு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Aug 26, 2025 12:40 IST

    செப்டம்பர் 2, 3 தேதிகளில் தமிழகம் வருகிறார் திரவுபதி முர்மு

    குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு செப்டம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் தமிழகம் வருகிறார். செப்டம்பர் 2ல் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். செப்டம்பர் 3 ஆம் தேதி திருவாரூரில் மத்திய பல்கலைக்கழக 10வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்கிறார் 



  • Aug 26, 2025 12:15 IST

    விநாயகர் சதுர்த்தி விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு

    விநாயகர் சதுர்த்தி விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தின எதிரொலியாக ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என பயணிகள் தெரிவித்துள்ளனர். இருக்கையில் பயணிக்க அதிகபட்சமாக ரூ.1,320 வசூலிக்கப்படுகிறது. சொகுசு பேருந்துகளில் படுக்கையில் பயணிக்க ரூ.4,000 வரை வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திருச்சி செல்ல ரூ.2,500, சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல ரூ.3,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பயணிகள் தெரிவித்துள்ளனர்



  • Aug 26, 2025 12:13 IST

    சென்னையில் 15 நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் - மேயர் பிரியா

    சென்னையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் மண்டலத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் 15 நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் பயன்பாட்டிற்கு வரும் என மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்



  • Aug 26, 2025 12:06 IST

    சீனாவுக்கு 200 சதவீதம் வரி - டிரம்ப் எச்சரிக்கை

    அரிய வகை தனிமங்களை விநியோகிக்காவிட்டால் சீனாவுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அமெரிக்காவால் சீனாவை அழிக்க முடியும், ஆனால் அதனை செய்ய மாட்டோம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்



  • Aug 26, 2025 11:59 IST

    மசோதா ஒப்புதல் தொடர்பாக விசாரணை

    மசோதா ஒப்புதல் தொடர்பாக குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் தொடங்கியது



  • Aug 26, 2025 11:07 IST

    மெட்ரோ ரயில்கள் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும்

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மெட்ரோ ரயில்கள் நாளை (ஆகஸ்ட் 27) சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

    அதேபோல், காலை 5 மணி முதல் 8 மணி வரையும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.



  • Aug 26, 2025 10:49 IST

    இந்தி பயன்பாட்டை அதிகரிக்க உத்தரவு

    தெற்கு ரயில்வே அலுவலகப் பணிகளில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க அனைத்துத் துறை ரயில்வே அதிகாரிகளுக்கும் ரயில்வே மேலாண்மை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    டிக்கெட் கவுண்டர்கள், அலுவலக ஆவணங்கள், உள்ளுறைக்கைகள் மற்றும் உத்தரவுகளின் அன்றாட செயல்பாடுகளில் இந்திக்கு இடம் அளிக்க வேண்டும்.



  • Aug 26, 2025 10:43 IST

    தென் மாநில உணவுகள்தான் தேசிய உணவுகள்- பகவந்த் மான்

    பஞ்சாப் மாநிலத்திலும் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்குவது குறித்து பரிசீலிக்கிறேன். பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது சிறப்பானது என்றும், மாணவர்களின் உடல்நலனை மேம்படுத்த காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது ஒரு நல்ல விஷயம்.

    தென் மாநில உணவுகள்தான் தேசிய உணவுகள் போல, பஞ்சாப் மாநிலத்தின் ஒவ்வொரு இடத்திலும் நிறைந்துள்ளன.  மேலும், பஞ்சாபி உணவுகள் தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் விற்கப்படுவது மகிழ்ச்சியான விஷயம்.



  • Aug 26, 2025 10:43 IST

    பஞ்சாப்க்கு அழைப்பு

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பஞ்சாப் மாநிலத்திற்கு வருகை தந்து, அங்குள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க வேண்டும் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அழைப்பு விடுத்தார்.

    பஞ்சாப் வீரமரணம் அடைந்தவர்களின் மண் என்றும், அதனை பார்க்க அவர் அவசியம் வர வேண்டும் என்றும் பகவந்த் மான் கேட்டுக்கொண்டார்.



  • Aug 26, 2025 10:37 IST

    இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 25% கூடுதல் வரி விதிப்பு- நாளை முதல் அமல்

    இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 25% கூடுதல் வரி விதிப்பு நாளை (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 25% வரி இருக்கும் நிலையில், கூடுதலாக விதிக்கப்பட்டுள்ள இந்த வரியையும் சேர்த்து மொத்தம் 50% வரி அமலுக்கு வரவுள்ளது.

    இந்த வரி உயர்வு, அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான வர்த்தக உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



  • Aug 26, 2025 10:35 IST

    கனடா போன்ற நாடுகளுக்கெல்லாம் முன்னோடியாக தமிழ்நாடு: ஸ்டாலின் பெருமிதம்

    "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் வெற்றி காரணமாக, பல மாநிலங்களும், நாடுகளும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளன. கனடா போன்ற நாடுகளுக்கெல்லாம் முன்னோடியாக நாம் இருக்கிறோம் என்பதுதான் நமக்கு பெருமை," என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.



  • Aug 26, 2025 10:35 IST

    குழந்தைகளுக்கு இரத்தசோகையை தடுக்க ஒரு ஸ்பூன் முருங்கை இலைப் பொடி: செளமியா சுவாமிநாதன்

    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தியதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டிய உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், உணவில் ஒரு ஸ்பூன் முருங்கை இலை பொடியை சேர்க்குமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

    முருங்கை இலை பொடியை சேர்ப்பதால் ரத்தசோகை தடுக்கப்படும் என்றும், 'குழந்தைகள் நலமே, நாட்டின் வளம்' என்றும் சௌமியா சுவாமிநாதன் கூறினார்.



  • Aug 26, 2025 09:49 IST

    பஞ்சாப் சி.எம் பங்கேற்பு

    சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கும் மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



  • Aug 26, 2025 09:27 IST

    காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    ஆண்டுக்கு ரூ.600 கோடிக்கு காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது செலவல்ல, சூப்பரான சமூக முதலீடு. இக்குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பணியாற்றுவார்கள். இதுதான் இத்திட்டத்தின் உண்மையான வளர்ச்சி என காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 



  • Aug 26, 2025 08:48 IST

    காலை உணவுத்திட்ட விரிவாக்கம்: தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

    தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் காலை 8.30 மணியளவில் தொடங்கியது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை விரிவாக்கம் செய்துவைத்தார். 



  • Aug 26, 2025 08:38 IST

    பஞ்சாப்பில் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை

    தமிழ்நாட்டை போல பஞ்சாப் மாநிலத்திலும், காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறி உள்ளார். சென்னை மயிலாப்பூரில், நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்க உள்ளார்.



  • Aug 26, 2025 08:36 IST

    கிழக்கு கடற்கரை சாலையில் உயர்மட்ட சாலை அமைக்க டெண்டர்

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ. தொலைவுக்கு 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்த சாலைப் பணிகளின் மதிப்பு சுமார் ரூ.2,100 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.



  • Aug 26, 2025 08:33 IST

    சில்லறை பணவீக்க விகிதம் துல்லியமாக கணிக்க திட்டம்

    நாட்டின் சில்லறை பணவீக்க விகிதத்தை மிகவும் துல்லியமாக கணிக்க ஒன்றிய அரசு புதிய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட மின்வணிக நிறுவனங்களிடம் பொருட்கள் விலை குறித்த விவரத்தை பெறவும் புதிய திட்டமிட்டுள்ளது.



Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: