/indian-express-tamil/media/media_files/2025/08/27/deputy-2025-08-27-20-52-23.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையிலேயே குளித்து முடித்து பக்தர்கள் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தமிழகம் முழுவதிலுமுள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தன. தொடர்ந்து களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு கொழுக்கட்டை, மோதகம், லட்டு, சுண்டல் போன்ற பதார்த்தங்களை படையலிட்டு பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
- Aug 28, 2025 00:00 IST
தெற்காசிய கால்பந்து போட்டி - இந்தியா அணி அபாரம்
17 வயதுக்கு உட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து போட்டியில் பூடான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 5-0 கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அசத்தல்
- Aug 28, 2025 00:00 IST
பின்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப் பேசியுள்ளார். இதில், வர்த்தகம், தொழில்நுட்பம் முக்கிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாகவுமு், உக்ரைன் - ரஷ்யா மோதலை தீர்ப்பதற்கான முயற்சிகள் குறித்து இருவரும் கருத்துக்களை பரிமாறி கொண்டனர் என்றும், உக்ரைனில் அமைதியை மீட்டெடுப்பதற்கு, இந்தியா நிலையான ஆதரவை வழங்கும் எனறு பிரதமர் மோடி கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- Aug 27, 2025 23:58 IST
தேர்தல் ஆணையம் நினைப்பதை எல்லாம் செய்கிறது: ராகுல்காந்தி தாக்கு
தேர்தல் ஆணையம் எந்த பயமும் இல்லாமல், நினைப்பதை எல்லாம் செய்கிறது. 2023ல் பிரதமர் மோடி தேர்தல் ஆணையருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடியாது என்ற சட்டத்தை இயற்றினார்.ஒரு தொழிலாளி அல்லது விவசாயிக்கு எதிராக வழக்கு தொடரலாம், ஆனால் தேர்தல் ஆணையருக்கு எதிராக வழக்கு தொடர முடியாது. சிறுபான்மையினர் குரல் கொடுக்க கூடாது என்பதற்காக அரசியலமைப்பு சட்டம் தாக்கப்படுகிறது என பீகார் வாக்காளர் அதிகார யாத்திரையில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
- Aug 27, 2025 23:56 IST
விஜய் மீதான வழக்கு மதுரை காவல் நிலையத்திற்கு மாற்றம்
த.வெ.க மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்ட இளைஞர், குன்னம் காவல் நிலையத்தில் விஜய் மீது புகார் அளித்த நிலையில், இந்த வழக்கு குன்னம் காவல் நிலையத்திலிருந்து விசாரணைக்காக மதுரை, கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் த.வெ.க தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
- Aug 27, 2025 23:55 IST
மொட்டை தலையில் ஆட்டோகிராஃப் போட்ட நோவக் ஜோகோவிச்
யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின்போது, ரசிகரின் மொட்டை தலையில் ஆட்டோகிராஃப் போட்ட நோவக் ஜோகோவிச் வீடியோ இணையத்தில் வைரலாி வருகிறது.
- Aug 27, 2025 20:49 IST
துணை ஜனாதிபதி தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்க்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரும் செப் - 9.ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.தேர்தல் நடந்த அன்றே மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது,
- Aug 27, 2025 19:51 IST
ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பின் முதல் படமான ப்ரோ கோட் ப்ரோமோ வெளியீடு
டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் "ப்ரோ கோட்" என்ற திரைப்படத்தை தயாரித்து நடிக்கிறார் ரவி மோகன். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீனாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ வீடியோவை ரவி மோகன் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது.
- Aug 27, 2025 19:40 IST
பாலியல் குற்றச்சாட்டு - காங். எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு
கேரளா, பாலக்காடு காங். எம்எல்ஏ ராகுல் பாலியல் குற்றச்சாட்டால், கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் குற்றப்பிரிவு
போலீசார் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. - Aug 27, 2025 19:27 IST
குடமுழுக்கு - பட்டியலின மக்களை தடுத்தால் நடவடிக்கை: ஐகோர்ட்
கடலூர் ஸ்ரீபாலமுருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் பட்டியலின மக்களை தடுத்தால் நடவடிக்கை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கடலூரில் உள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. விழாவில் பட்டியலின மக்கள் கலந்து கொள்வதை தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கோயிலுக்குள் நுழைய அனுமதி இருக்க வேண்டும். அனைவரும் கடவுளிடம் தங்கள் பிரார்த்தனைகளை வைக்க அனுமதிக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க தேவையான நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
- Aug 27, 2025 19:26 IST
ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம்
ரூ.10.54 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறினால் ஜி.வி. பிலிம்ஸ் நிர்வாகி அப்துல் ஹமீதுக்கு ஓராண்டு சிறை விதிக்கபப்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் ரூ.10.54 கோடி வங்கிக் கடன் பெற்று மோசடி செய்ததாக வழக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மோசடி புகாரில் தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன், வங்கி அதிகாரிகள் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
1996ல் வழக்கு பதிவான நிலையில் 2023ல் தயாரிப்பாளர் வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். வங்கி அதிகாரிகள் 3 பேர் மரணமடைந்த நிலையில் வழக்கில் இருந்து 4 பேரும் விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் மீதான வழக்கை சென்னை சிபிஐ நீதிமன்றம் விசாரித்து 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. வங்கி கிளை மேலாளர்கள் வெங்கட்ராமன் சுவாமிநாதன் உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- Aug 27, 2025 18:57 IST
பித்தளை தட்டுகளால் உருவான விநாயகர் – வழிபாடும் மக்கள்
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், சென்னை கொளத்தூரில் 2500 பித்தளைத் தட்டு 1300 குங்கும சிமிழ்கள் மூலம் 42 அடி உயரத்தில் விநாயகர் வடிவில் செய்யப்பட்டது. காலை முதலே ஏராளமான மக்கள் குடும்பம் குடும்பமாக வழிபாடு செய்து வருகிறார்கள்.
- Aug 27, 2025 18:39 IST
8 மணி நேரம் நடந்த என்கவுண்டர் - 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை; மகாராஷ்டிராவில் பரபரப்பு
மகாராஷ்டிராவின் கட்சிரோலி-நாராயண்பூர் எல்லையில் உள்ள கோபர்ஷி வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் எட்டு மணி நேரம் நடத்திய என்கவுண்டரில் மூன்று பெண்கள் உட்பட நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 25 ஆம் தேதி அடர்ந்த வனப்பகுதியில் கட்சிரோலி பிரிவின் கட்டா தலம், கம்பெனி எண் 10 மற்றும் பிற மாவோயிஸ்ட் அமைப்புகள் இருப்பது குறித்து புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த தனிப்பட்ட தகவலின் பேரில், மகாராஷ்டிரா காவல்துறையின் 19 சி-60 கமாண்டோ பிரிவுகளும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) இரண்டு விரைவு நடவடிக்கைக் குழுக்களும் (கியூஏடி) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (செயல்பாடுகள்) எம். ரமேஷ் மேற்பார்வையில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
- Aug 27, 2025 18:19 IST
நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய கேரள ஐகோர்ட் தடை
ஐ.டி. ஊழியர் கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்கியது கேரள உயர்நீதிமன்றம். செப்.17-ம் தேதி வரை அவரை கைது செய்ய தடைவிதித்துள்ளது. மதுபான பாரில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஐ.டி. ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், பின்னர் கடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்தக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் நடிகை லட்சுமி மேனன் என குற்றம்சாட்டப்பட்டது.
- Aug 27, 2025 17:50 IST
காமன்வெல்த் போட்டி: விண்ணப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறையின் பரிந்துரையை ஏற்று, 2030 காமன்வெல்த் போட்டியை நடத்த விண்ணப்பம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிதுள்ளது. காமன்வெல்த் போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்வார்கள்.
- Aug 27, 2025 17:29 IST
கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி
கொலை, கொள்ளை வழக்கில், கோடநாடு பங்களாவை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கோடநாடு பங்களாவில் தடயங்கள் அழிக்கப்பட்டு உள்ளதால், வழக்கை விசாரித்து வரும் மாவட்ட நீதிபதி மற்றும் எதிர்தரப்பு வக்கீல்கள் கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி ஜித்தின் ஜாய் தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்தும், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 19-ந் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.
- Aug 27, 2025 17:07 IST
துணை ஜனாதிபதி தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிபி ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகிறார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 104ல் வரும் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- Aug 27, 2025 16:40 IST
பீகாரில் நடந்தது ஜனநாயக படுகொலை: ஸ்டாலின் கடும் தாக்கு
பீகாரில் ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகாரில் பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கப்போகிறது. தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கூட்டணி வெற்றி உறுதியாகியுள்ளது; அதனால்தான் பாஜக தடுக்க முயற்சிக்கிறது. 65 லட்சம் வாக்காளர்களை சொந்த மண்ணின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது பயங்கரவாதம் தவிர வேறு எதுவும் இல்லை. பீகாரில் வாக்காளர்களை நீக்கியது ஜனநாயக படுகொலை. சாவி கொடுத்தால் ஆடும் பொம்மைப்போல் தேர்தல் ஆணையம் ஆடுகிறது என்றார்.
- Aug 27, 2025 16:35 IST
கந்த சஷ்டி கவசம் புத்தகங்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை
மணலியில் 5,000 பகவத் கீதை, 1,500 வேல் விருத்தம், 1,008 கந்த சஷ்டி கவசம் புத்தகங்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை. பொதுமக்கள் பக்தியோடு வழிபாடு செய்து வருகின்றனர். 5 நாட்களுக்கு பிறகு அனைத்து புத்தகங்களையும் பொதுமக்களுக்கு வழங்க விழாக்குழு திட்டமிட்டுள்ளது.
- Aug 27, 2025 16:29 IST
சாவி போட்டால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை மாற்றி விட்டனர் - ஸ்டாலின்
நியாயமான தேர்தல் நடந்தால் பாஜக தோற்றுவிடும்; அதனால், பீகார் மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கின்றனர்; சாவி போட்டால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை மாற்றி விட்டனர்; 65 லட்சம் வாக்களர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை என்று பீகாரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியபோது கூறியுள்ளார்.
- Aug 27, 2025 16:01 IST
பரந்தூர் விமான நிலைய விவகாரம் - புதிய வழக்கு தாக்கல்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு. விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய்யப்பட்டுள்ளது.
- Aug 27, 2025 15:39 IST
"முதல்வருக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும்" - அன்புமணி
“இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை முதன்முதலில் வெளியிட்டு, நடைமுறைப்படுத்திய மாநிலம் பீகார்தான் அத்தகைய சிறப்பு மிக்க பீகார் மண் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கும் என்று எதிர்பார்ப்போம்” என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
- Aug 27, 2025 14:22 IST
வாக்குகளைத் திருடினால்தான் பா.ஜ.க ஆட்சி தொடரும் - வாக்காளர் அதிகார யாத்திரையில் ராகுல் காந்தி காட்டம்
பீகார்ல் வாக்காளர் அதிகார யாத்திரையில் பேசிய ராகுல் காந்தி, “40, 50 ஆண்டுகளுக்கு பா.ஜ.க-தான் இந்தியாவை ஆளும் என அமித்ஷா கூறினார். வாக்குகளைத் திருடினால்தான் பா.ஜ.க ஆட்சி தொடரும். பேரணியில் சிறு குழந்தைகள்கூட மோடி ஒரு வாக்குத் திருடர் என கோஷமிட்டனர்” என்று பேசினார்.
- Aug 27, 2025 14:18 IST
ராகுல் காந்தி எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டார், அரசியலுக்காக பேசுபவர் அல்ல - ஸ்டாலின் புகழாரம்
பீகாரில் ராகுல் காந்தி நடத்திவரும் வாக்காளர் அதிகார யாத்திரை பேரணியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து வரும்போது பீகார் போர்க்குரல் எழுப்புகிறது. ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம். உங்களை பார்க்க 2,000 கிலோமீட்டர் கடந்து வந்துள்ளேன். கடந்த ஒரு வாரமாக இந்தியாவே பீகாரை தான் பார்த்து வருகிறது, பீகாரின் வெற்றிக்கு நமது ஒற்றுமை அவசியம். ராகுல், தேஜஸ்வி செல்லும் இடமெல்லாம் மக்கள் கடல் போல் திரண்டு வருகின்றனர். மக்களை வாக்களிக்க விடாமல் பா.ஜ.க அரசு தடுக்கிறது. தேர்தல் ஆணையத்தை கீ கொடுக்கும் பொம்மையாக பா.ஜ.க அரசு மாற்றியுள்ளனர். பா.ஜ.க-வின் முறைகேடுகளுக்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டம். வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தால் பதிலளிக்க முடியவில்லை. ராகுல் காந்தி எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டார், அரசியலுக்காக பேசுபவர் அல்ல. பா.ஜ.க-வின் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் ராகுல் காந்தி. இந்தியா கூட்டணிக்கான அடித்தளம் பாட்னாவில் தான் அமைந்தது. 400 என கனவு கண்டவர்களை, 200 இடங்களில் அடக்கியது இந்தியா கூட்டணி. ராகுல் காந்தி இந்தியாவிற்கான வழக்கறிஞராக திகழ்கிறார். பீகாரின் வெற்றி தான், இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த வெற்றியாக அமையும்” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.
- Aug 27, 2025 14:14 IST
சிவகார்த்திகேயனோடு என்னை ஒப்பிட வேண்டாம் - கே.பி.ஒய் பாலா
நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன் காந்தி கண்ணாடி மோதுகிறது துணிச்சலான முடிவா? என்ற கேள்விக்கு கே.பி.ஒய் பாலா பதில், “மதராசி படம் வெற்றி பெறும், அந்த படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வருவார்கள் என சமாதானம் செய்தனர். நடிகர் சிவகார்த்திகேயனோடு என்னை ஒப்பிட வேண்டாம், அவர்
இருக்கும் உயரம் வேறு நான் இருக்கும் இடம் வேறு” என்று கூறினார். - Aug 27, 2025 13:53 IST
400 இடங்கள் கனவு கண்ட பா.ஜ.க-வை 240 இடங்களில் அடக்கியது இந்தியா கூட்டணி - ஸ்டாலின்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் நடத்திவரும் வாக்காளர் அதிகார யாத்திரையில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “400 இடங்கள் கனவு கண்ட பா.ஜ.க-வை 240 இடங்களில் அடக்கியது இந்தியா கூட்டணிதான்; மெஜாரிட்டி என ஆட்டம் போட்டவர்கள் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வருகின்றனர். மக்கள் சக்திக்கு முன் எப்பேர்பட்ட சவ்வாதிகாரர்மும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை பீகார் மக்கள் நிரூபிக்க வேண்டும்” என்று கூறினார்.
- Aug 27, 2025 13:35 IST
‘இந்தியாவுக்கான வழக்கறிஞராக சகோதரர் ராகுல்காந்தி’ - வாக்காளர் அதிகார யாத்திரையில் ஸ்டாலின் புகழாரம்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் நடத்திவரும் வாக்காளர் அதிகார யாத்திரையில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவுக்கான வழக்கறிஞராக சகோதரர் ராகுல்காந்தி உள்ளார். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும். பீகார் தேர்தலில் தேஜஸ்வி - ராகுல் பெறப்போகும் வெற்றி இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாக அமையப் போகிறது” என்று கூறினார்.
- Aug 27, 2025 13:19 IST
விரைவில் நான் அரசியலுக்கு வருவேன் - நடிகை அம்பிகா
சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி இல்லத்திற்கு சென்று ஆறுதல் சொன்ன நடிகை அம்பிகா, “அவர்களும் மனிதர்கள்தான். வெறும் எண்களாக அவர்களை பார்க்காதீர்கள். சீக்கிரமே நான் அரசியலுக்கு வந்துடறேன்” என்று கூறினார்.
- Aug 27, 2025 13:17 IST
‘வாக்காளர் உரிமை யாத்திரை’: பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தி பைக் பேரணி
பிஹார் ‘வாக்காளர் உரிமை யாத்திரை’யில் பைக் பேரணியில் தன் சகோதரியும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தியுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பைக் பேரணி நடத்தினார்.
- Aug 27, 2025 13:08 IST
ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரை பேரணியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல் குளறுபடியை கண்டித்து 'வாக்காளர் உரிமை யாத்திரை' பேரணியை பீகாரில் தர்பங்காவில் நடத்தி வருகிறார். இந்த பேரணியில் தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
- Aug 27, 2025 12:43 IST
அ.தி.மு.க.,வை ஆர்.எஸ்.எஸ் வழி நடத்துவதில் என்ன தவறு – எல்.முருகன்
அ.தி.மு.க.,வை ஆர்.எஸ்.எஸ் வழி நடத்துவதில் என்ன தவறு. ஆர்.எஸ்.எஸ் சமூக சேவைக்கான இயக்கம், அந்த இயக்கத்தின் கருத்துக்களை அ.தி.மு.க கேட்பது வரவேற்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ்-ஐ பார்த்து த.வெ.க தலைவர் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் கையில் அ.தி.மு.க என த.வெ.க தலைவர் விஜயின் விமர்சனத்திற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்
- Aug 27, 2025 12:22 IST
ராப் பாடகர் வேடனுக்கு முன்ஜாமின்; கேரள ஐகோர்ட் உத்தரவு
கேரளாவில் இளம் பெண் மருத்துவர் அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில் ராப் பாடகர் வேடனுக்கு முன் ஜாமின் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 9ம் தேதி விசாரணை அதிகாரி முன் ஆஜராக ராப் பாடகர் வேடனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
- Aug 27, 2025 12:10 IST
திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற 3 பேர் மரணம்; கள்ளக்குறிச்சி அருகே சோகம்
கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் பகண்டைக் கூட்டுச்சாலை அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுப்பதற்காக சென்ற நாராயணன் மற்றும் அவரது பெற்றோர் விபத்தில் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த நாராயணனுக்கு வரும் செப்டம்பர் 4ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்தது. விபத்தை ஏற்படுத்திய த.வெ.க நிர்வாகியான கார் ஒட்டுநரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இருந்து வருகின்றனர். பத்திரிக்கை கொடுக்க சென்ற போது கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நாராயணன், அவரது தந்தை ஆறுமுகம், தாய் செல்லியம்மாள் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்
- Aug 27, 2025 11:43 IST
நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
கேரளா, கொச்சியில் ஒரு தனியார் மதுபான விடுதியில் நடந்த மோதலில், ஒரு தகவல் தொழில்நுட்ப ஊழியர் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், இந்த வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தலைமறைவாக இருக்கும் லட்சுமி மேனனைப் பிடிக்க காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
- Aug 27, 2025 11:10 IST
எடப்பாடி பழனிசாமியின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!
பிரணவப் பொருளாகத் திகழ்ந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமானின் திருவருளால், அனைவருக்கும் அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று வினை தீர்க்கும் விநாயகப் பெருமானை பிரார்த்தித்து, அனைவருக்கும் எனது உளமார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரணவப் பொருளாகத் திகழ்ந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமானின் திருவருளால், அனைவருக்கும் அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று வினை தீர்க்கும் விநாயகப் பெருமானை பிரார்த்தித்து,
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) August 27, 2025
அனைவருக்கும் எனது உளமார்ந்த #விநாயகர்சதுர்த்தி… pic.twitter.com/8yX0hqsHIl - Aug 27, 2025 10:45 IST
ஐபிஎல் போட்டிகளில் இருந்து அஷ்வின் ஓய்வு
ஐபிஎஸ்-ல் இருந்து ஓய்வு பெறுவதாக சிஎஸ்கே வீரர் அஷ்வின் அறிவிப்பு. மற்ற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் விளையாடப் போவதாக X தளத்தில் பதிவு செய்துள்ளார்.
- Aug 27, 2025 10:43 IST
நெல்லையில் மாநில மாநாடு: செல்வப்பெருந்தகை
வாக்கு திருட்டு குறித்து விளக்க வரும் 7ம் தேதி நெல்லையில் மாநில மாநாடு நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
- Aug 27, 2025 10:36 IST
விநாயகர் சதுர்த்தி- விஜய் வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
— TVK Vijay (@TVKVijayHQ) August 27, 2025 - Aug 27, 2025 09:46 IST
ராணுவ வீரர் 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்கத் தடை
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் SPICEJET ஊழியரைத் தாக்கிய ராணுவ வீரர் 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்கத் தடை விதித்தது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம். நிர்ணயிக்கப்பட்ட 7 கிலோ எடையை விட கூடுதாக லக்கேஜ் வைத்திருந்த அவரிடம், ஸ்பைஸ்ஜெட் ஊழியர் கூடுதல் கட்டணம் கேட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஊழியர்கள் மீது சரமாரித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
- Aug 27, 2025 09:37 IST
சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை கால அட்டவணை இன்று பின்பற்றப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 27, 2025 09:00 IST
செப்.7 சந்திர கிரகணம்: 12 மணி நேரம் திருப்பதி மூடல்
செப்டம்பர் 7-ந்தேதி இரவு 9.50 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பித்து, மறுநாள் அதிகாலை 1.31 மணிக்கு நிறைவடைகிறது. கிரகண நேரத்திற்கு 6 மணி நேரங்களுக்கு முன்பே திருப்பதி கோயில் கதவுகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி 7-ந்தேதி மாலை 3 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை சுமார் 12 மணி நேரம் மூடப்படும். பின்னர் 8-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் மூலம் கோவில் கதவுகள் திறந்து கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்படும். காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 27, 2025 08:58 IST
விநாயகர் சதுர்த்தி பண்டிகை - பிரதமர் மோடி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டு வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது: உங்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். நம்பிக்கையும் பக்தியும் நிறைந்த இந்த நாள் அனைவருக்கும் மங்களகரமானதாக அமையட்டும். கஜானன் தனது பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை அருள பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- Aug 27, 2025 08:56 IST
விஜய் பேசிய கருத்துகளை ஏற்க முடியாது: ஓ.பி.எஸ்.
கடந்த 4½ ஆண்டு தி.மு.க. அரசின் செயல்பாடுகள், தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறேன். தமிழகத்தில் அ.தி.மு.க. தான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படும். மாநாட்டில் விஜய் பேசிய ஒரு சில கருத்துகள் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம். த.வெ.க. மாநாட்டில் அரசியல் ரீதியாக ஈர்க்கும் கருத்துகள் இல்லை என்றார்.
- Aug 27, 2025 08:30 IST
8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, மதுரை, திருவள்ளூர், சென்னை, கோயம்புத்தூர், தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 27, 2025 08:26 IST
நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 29ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 1ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
- Aug 27, 2025 08:24 IST
ஜம்மு காஷ்மீர் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் பலி
ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி கோவில் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவம் களமிறங்கியுள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
- Aug 27, 2025 08:21 IST
சுபமுகூர்த்த தினம்: பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்
சுபமுகூர்த்த தினத்தையொட்டி பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தின நாட்களில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 27, 2025 08:05 IST
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 10 முதல் 25 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15 முதல் 26 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 27, 2025 07:43 IST
ராகுல் பேரணியில் பங்கேற்க பீகார் புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பீகார் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நடத்தி வரும் பேரணியில் பங்கேற்க உள்ளார் முதலமைச்சர்
- Aug 27, 2025 07:22 IST
பீகாரில் ராகுல்காந்தி பேரணி: ஸ்டாலின் பங்கேற்பு
பீகாரில், ராகுல்காந்தி நடத்தி வரும் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்க உள்ளார். இதற்காக அவர், சென்னையில் இருந்து காலை 7.30 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் பீகார் புறப்பட்டு செல்கிறார். தர்பங்கா விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்று ராகுல்காந்தி பேரணியில் கலந்துகொள்கிறார்.
- Aug 27, 2025 07:20 IST
த.வெ.க. தலைவர் விஜய் மீது போலீஸ் வழக்குப்பதிவு
மதுரையில் நடைபெற்ற த.வெ.க. 2-வது மாநில மாநாட்டில் விஜயயை பார்க்க வந்த சரத்குமார் என்பவரை உடனிருந்த பவுன்சர்கள் தூக்கி வீசியதாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டிருந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.