/indian-express-tamil/media/media_files/2025/06/13/fidyHRKSgYA3w4eopdlN.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அகமதாபாத் விமான விபத்து: நாட்டையே உலுக்கிய குஜராத் அகமதாபாத் விமான விபத்தில் பயணிகள் 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் ஒருவர் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பனார். தரையில் விழுந்தபோது விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Jun 13, 2025 22:33 IST
ஜூலை 25 முதல் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் - அன்புமணி அறிவிப்பு
பா.ம.க் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஜூலை 25-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்கிறார். அன்புமணியின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்க உள்ளது; சமூக நீதிக்கான உரிமை, வேலைக்கான உரிமை உள்ளிட்ட நோக்கக்களுடன் நவம்பர் 1 வரை அன்புமணி பயணம் மேற்கொள்கிறார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
-
Jun 13, 2025 21:27 IST
ஜே.இ.இ தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு முதல்வர் நேரில் வீடு ஒதுக்கீடு
ஜே.இ.இ. தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை ஐ.ஐ.டி.யில் உயர்கல்வி பயில தகுதி பெற்றுள்ள அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரிக்கு, தமிழக முதல்வர் தொல்குடி திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் சேலம் சுற்றுப்பயணத்தின்போது மாணவி ராஜேஷ்வரியை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பாராட்டினார். அத்துடன், வீடு ஒதுக்கீடு ஆணையையும், ரூ.70,000 மதிப்பிலான மடிக்கணினியையும் வழங்கி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
-
Jun 13, 2025 21:00 IST
விவசாயிகள் நலனுக்காகத் தனி பட்ஜெட் கொண்டு வந்தவர் ஸ்டாலின்: இ.பி.எஸ்-க்கு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி
விவசாயிகள் நலனுக்காகவே தனி பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும் நடைமுறையை கொண்டு வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளை வஞ்சிக்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மேலும் கூறுகையில், "மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை எப்போதும் நிறுத்தியதில்லை. விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண்மை சட்டங்களைக் கொண்டு வந்து தனது அதனை ஆதரித்து தினமும் கதாநாயகவேஷம் நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. உழவர்களின் துரோகி யார்? என்பதை விவசாயிகள் நன்கு அறிவார்கள்" என்று கூறியுள்ளார்.
-
Jun 13, 2025 20:57 IST
நடப்பு கல்வியாண்டில் 210 நாட்கள் பள்ளிகள் செயல்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
நடப்பு கல்வியாண்டில் 210 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2026 ஏப்ரல் 10-ம் தேதி முழு ஆண்டு தேர்வு தொடங்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 13, 2025 20:54 IST
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் நீலகிரி, தென்காசி, குமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Jun 13, 2025 20:49 IST
"எடப்பாடி பழனிசாமி பகல்வேஷம் போடுகிறார்" - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் காட்டம்
மத்திய அரசின் 3 வேளாண்மை சட்டங்களை ஆதரித்த எடப்பாடி பழனிசாமி, உழவர்களுக்கு பச்சை துரோகம் செய்துவிட்டு பகல்வேஷம் போடுவதாக தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "நான் ஒரு விவசாயி என பழனிசாமி நாவில் ஒன்று சொல்வார்; நினைவில் மாறாக இருப்பார். நான் ஒரு விவசாயி என்று பழனிசாமி போடும் கோமாளி வேடங்கள் எடுபடாது" என்று சாடியுள்ளார்.
-
Jun 13, 2025 20:00 IST
டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடைபெற இருப்பதால் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு - சென்னை பல்கலை அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதல்நிலை தேர்வானது ஜூன் 15-ம் நாள் நடைபெற இருப்பதால், அதே நாளில் நடைபெற இருந்த சென்னைப் பல்க்லைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் தேதிகள் www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
Jun 13, 2025 19:24 IST
திருச்சியில் வி.சி.க பேரணி: ஹெலிகாப்டரில் மலர் தூவ போலீஸ் கமிஷனர் அனுமதி மறுப்பு
திருச்சியில் நாளை (ஜூன் 14) வி.சி.க சார்பில் மதச்சார்பின்மை காப்போம் என்ற தலைப்பில் டி.வி.எஸ் டோல்கேட் முதல் மாநகராட்சி அலுவலகம் வரை பேரணி நடைபெறுகிறது. வி.சி.க பேரணியில் ஹெலிகாப்டரில் இருந்து மலர்களைத் தூவ காவல் ஆணையர் அனுமதி மறுத்துள்ளார்.
-
Jun 13, 2025 19:20 IST
வரலாற்றை அழிக்க பா.ஜ.க முற்படவில்லை - தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்: “வரலாற்றை அழிக்க பா.ஜ.க முற்படவில்லை; மாறாக கீழடிக்கு உலகளாவிய குரலைக் கொடுத்தது; கீழடி விவகாரத்தில் தமிழ் சகோதர, சகோதரிகளை முதல்வர் ஸ்டாலின் தவறாக வழிநடத்துகிறார்; உண்மையில் பிரதமர் மோடி ஆட்சியில்தான் கீழடி தேசிய கவனத்தை ஈர்த்து அதிக நிதியைப் பெற்றது” என்ண்று கூறியுள்ளார்.
-
Jun 13, 2025 18:23 IST
கீழடி வரலாற்றை அழிக்க முயற்சி – ஸ்டாலின்
கீழடி வரலாற்றை அழிக்க முயற்சி நடப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கீழடி அகழ்வாராய்ச்சிகள் குறித்து சர்வதேச ஆய்வகங்களிலிருந்து கார்பன்-தேதியிடப்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் அக்சலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி (AMS) அறிக்கைகளை இருந்தும் கூட, அவர்கள் தொடர்ந்து "கூடுதல் ஆதாரங்களை" கோருகிறார்கள்.
இதோ "சான்று".
ஆனால் மாறாக, மரியாதைக்குரிய வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும், பா.ஜ.க புராண சரஸ்வதி நாகரிகத்தை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. அவர்கள் நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல் அவ்வாறு செய்கிறார்கள், அதே நேரத்தில் தமிழ் கலாச்சாரத்தின் கடுமையாக நிரூபிக்கப்பட்ட தொன்மையை நிராகரிக்கின்றனர்.
கீழடி மற்றும் தமிழ் பாரம்பரியத்தின் நீடித்த உண்மை குறித்து வரும்போது, பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் பின்வாங்குகிறது - ஆதாரங்கள் இல்லாததால் அல்ல, மாறாக உண்மை அவர்களின் எழுத்துக்கு சேவை செய்யாததால்.
நமது வரலாற்றை வெளிக்கொணர பல நூற்றாண்டுகளாக நாங்கள் போராடினோம். அதை அழிக்க அவர்கள் ஒவ்வொரு நாளும் போராடுகிறார்கள்.
உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. காலமும் அப்படித்தான்.
Even when confronted with carbon-dated artefacts and Accelerator Mass Spectrometry (AMS) reports from International Laboratories on the #Keezhadi excavations, they continue to demand “more proof.”
— M.K.Stalin (@mkstalin) June 13, 2025
And here is the "Proof".
But on the contrary, despite strong opposition from… pic.twitter.com/VxJzAJpSpK -
Jun 13, 2025 17:38 IST
WTC இறுதிப் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்கு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்களை ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்துள்ளது
-
Jun 13, 2025 17:16 IST
விஜயுடன் பரந்தூர் போராட்டக் குழுவினர் சந்திப்பு
பரந்தூர் போராட்டக் குழுவினர் த.வெ.க தலைவர் விஜயை பனையூர் அலுவலகத்தில் சந்தித்து பேசினர்
-
Jun 13, 2025 16:22 IST
கடன் ஒழுங்கு மசோதா: ஆளுநர் ரவி ஒப்புதல்
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை , ரூ.5 லட்சம் அபராதம் கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால் 3 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்
-
Jun 13, 2025 16:12 IST
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கன அடியில் இருந்து 6000 கன அடியாக குறைப்பு
-
Jun 13, 2025 16:12 IST
கடன் ஒழுங்கு மசோதா: ஆளுநர் ரவி ஒப்புதல்
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை , ரூ.5 லட்சம் அபராதம் கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால் 3 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்
-
Jun 13, 2025 16:09 IST
தாராபுரம் அருகே அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து
Video credit: Sun News
தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் பழுதாகி நின்ற கார் மீது அடுத்தடுத்து கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து - நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் இல்லை#SunNews | #RoadAccident | #Dharapuram pic.twitter.com/Z19JNwCyRQ
— Sun News (@sunnewstamil) June 13, 2025 -
Jun 13, 2025 15:25 IST
சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நாளை திறப்பு
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில், ஆனி மாத பூஜைக்காக நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.
-
Jun 13, 2025 15:25 IST
குறுக்கே வந்த நாய்: சிறப்பு SI பலி
ஈரோட்டில் டூவீலரில் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறிய எஸ்.எஸ்.ஐ மோகன்ராஜ் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு
-
Jun 13, 2025 14:35 IST
விஜய்யை நாங்கள் அப்பாவாக பார்க்கிறோம்: விருது பெற்ற மாணவி பேச்சு
விஜய்யை நாங்கள் அப்பாவாக, அண்ணனாக, எங்கள் உயிராக நினைக்கிறோம், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் அப்பா என்று ஒரு மாணவி பேசிய நிலையில்,அவரின் பேச்சை கேட்டவுடன் விஜய் அணைத்துக் கொண்டார். கல்வி விருது விழா குறித்த த.வா.க தலைவர் வேல்முருகனின் கருத்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
-
Jun 13, 2025 13:49 IST
என் மூச்சுள்ளவரை நான் தான் தலைவர்: டாக்டர் ராமதாஸ்
மாநாட்டிற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. என் குடும்பத்தினர் யாரும் பதவிக்கு வரக்கூடாது என கட்சி ஆரம்பிக்கும்போது சொன்னேன், அதை என்னால் காப்பாற்ற முடியவில்லை. தந்தையும், தாயையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதாக சொல்லும் அன்புமணி,பாட்டிலைத் தூக்கி அடிப்பது தான் பெற்ற தாயை மகிழ்ச்சியாக வைத்திருப்பதா? 96,000 கிராமங்களுக்கு சென்று கட்சியை சுயம்புவாக உருவாக்கினேன், மாநாட்டிற்கு பிறகு அன்புமணியின் செயல்பாடுகள் மிகவும் மோசமாகி விட்டன என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
Jun 13, 2025 13:47 IST
மருத்துவ கழிவுகளை கொட்டுபவர் மீது குண்டாஸ்: ஒப்புதல் அளித்த ஆளுநர்
அண்டை மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டினால், உயிரி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாக விசாரணையின்றி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
Jun 13, 2025 13:45 IST
நீலகிரிக்கு நாளை, நாளை மறுநாள் ரெட் அலர்ட்
நீலகிரி மாவட்டத்தில் நாளை அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம். கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. நாளை கோவை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Jun 13, 2025 12:59 IST
பாம்பனில் விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து: 6 மீனவர்கள் உயிர் தப்பினர்
பாம்பனில் விசைப்படகு கடலில் மூழ்கி விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக 6 மீனவர்கள் உயிர் தப்பினர். காற்றின் வேகம் காரணமாக மீனவரின் கட்டுப்பாட்டை இழந்து விசைப்படகு கடலில் கவிழ்ந்தது. கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்கும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
Jun 13, 2025 12:58 IST
என் மூச்சு இருக்கும் வரை பாமக தலைவராக நானே தொடர்வேன்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு
என் மூச்சு இருக்கும் வரை பாமக தலைவராக நானே தொடர்வேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். என் மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை வழங்க மாட்டேன். என் குடும்ப பெண்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் என சத்தியம் செய்துள்ளேன். சென்னையில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ள நிலையில் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
Jun 13, 2025 12:19 IST
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “எதன் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது? விக்ரமின் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைப்பதற்கு ED-க்கு என்ன அதிகாரம் இருக்கிறது ?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ‘சோதனை நடத்த சென்ற போது வீடு மற்றும் அலுவலகம் பூட்டியிருந்ததால் அதன் காரணமாக சீல் வைக்கப்பட்டது’ அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.
-
Jun 13, 2025 12:19 IST
புகெட் தீவிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தாய்லாந்தின் புகெட் தீவில் இருந்து 156 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து விமானம் புறப்பட்ட சிறிதுநேரத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்திலிருந்து பயணிகள் வெறியேற்றப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
-
Jun 13, 2025 12:05 IST
தமிழ்நாட்டில் முதல் முறையாக 10 வழி விரைவுச்சாலை அமைக்க திட்டம்
தமிழ்நாட்டில் முதல் முறையாக 10 வழி விரைவுச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. 132 கி.மீ. நீள புறவட்டச் சாலை ஜனவரி 2026க்குள் திறக்கப்படும். சென்னை எல்லைச் சாலை என மறுவடிவமைப்பு செய்யப்பட்டு மறுபெயரிடப்பட்ட இந்த பசுமைவழி விரைவுச் சாலை, மாமல்லபுரத்திலிருந்து காட்டுப்பள்ளி துறைமுகம் வரை 196 அடி அகலத்துடன் அமையும். இதனால் வாகனங்கள் மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும்
-
Jun 13, 2025 11:32 IST
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்த்தித்து வருகிறார். திமுக பொதுக்குழு கூட்டத்தில் கூறியதுபோல நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் தனித்தனியாக சந்திக்கிறார். விழுப்புரம், சிதம்பரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளோடு சந்திக்கிறார். தொகுதிவாரியாக உள்ள பிரச்சனைகளை குறித்து கேட்டறிகிறார். அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
-
Jun 13, 2025 11:16 IST
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6896 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6327 கன அடியில் இருந்து 6896 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 10000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.89 அடியாக சரிந்துள்ளது.
-
Jun 13, 2025 11:08 IST
நீதிபதி கார் மீது மோதிய லாரி - 4 பேர் பலி
தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் நீதிபதி கார் மீது லாரி மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் நீதிபதி பாதுகாவலர் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர். நீதிபதி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூரைச் சேர்ந்த நீதிபதி உட்பட 6 பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிய போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
-
Jun 13, 2025 10:38 IST
இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம் - விஜய் வேண்டுகோள்
3ம் கட்ட கல்வி விருது விழா இன்று நடைபெற்று வரும் நிலையில், தன்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம் என்று தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். "உங்களது நிலைக்கு உதவிய ஆசிரியர்கள் பள்ளியை குறித்து பேசுங்கள், மற்றவற்றை குறித்து பேச வேண்டாம். பெற்றோர்கள், மாணவர்கள் 2026 தேர்தல் பற்றி மேடையில் பேச வேண்டாம்" என்று விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
Jun 13, 2025 10:34 IST
விழுப்புரத்தில் ஏ.டி.எம்-ல் நூதன முறையில் கொள்ளை
விழுப்புரத்தில் ஏடிஎம்-ல் அலுமினிய தகடு மூலம் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். எஸ்.பி.ஐ. ஏடிஎம்-ல் பணம் வெளியே வரும் பகுதியில் அலுமினிய தகடை மர்மகும்பல் வைத்து சென்றுள்ளது. வாடிக்கையாளர் ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுத்தபோது வங்கிக் கணக்கில் இருந்து பணம் டெபிட் ஆகியுள்ளது. வாடிக்கையாளர்களின் பணம் டெபிட் ஆனபோதும் ஏடிஎம்-ல் இருந்து பணம் வரவில்லை. நள்ளிரவில் ஏடிஎம்-ஐ கள்ளச்சாவி மூலம் திறந்து மர்மகும்பல் வாடிக்கையாளர்களின் பணத்தை எடுத்துள்ளது.
-
Jun 13, 2025 09:34 IST
ராமாபுர விபத்து - போக்குவரத்து சீரானது
சென்னை ராமாபுரத்தில் நேற்றிரவு மெட்ரோ கான்கிரீட் விழுந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் தார் சாலை அமைக்கப்பட்டது. கான்கிரீட் அகற்றப்பட்டதால் போக்குவரத்து சீரானது.
-
Jun 13, 2025 08:46 IST
ராமாவரத்தில் மெட்ரோ ரயில் கட்டுமான விபத்து
சென்னை ராமாவரத்தில் மெட்ரோ ரயில் கட்டுமான விபத்து ஏற்பட்ட இடத்தில் தூண்கள் அகற்றப்பட்டு, புதிய சாலை போடப்பட்டது. போக்குவரத்தை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Jun 13, 2025 08:46 IST
படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்
கன்னியாகுமரி மாவட்டம் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலம் ஆகியவற்றிற்கான படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
Jun 13, 2025 08:00 IST
உணவு ஒவ்வாமை - பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு
தென்காசி முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை - சிகிச்சை பெற்று வந்த மற்றொரு மூதாட்டி உயிரிழந்தார். உயிரிழந்த மூதாட்டி தனலட்சுமி மதுரையைச் சேர்ந்தவர் என தகவல். முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 11 பேரில் 4 பேர் உயிரிழந்த நிலையில் எஞ்சிய 7 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.
-
Jun 13, 2025 07:39 IST
விமான விபத்தில் 241 பேர் பலி" - ஏர் இந்தியா அறிவிப்பு
அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் பலி" ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், உயிர்த்தப்பிய ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை உயிரிழந்ததில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன், 7 பேர் போர்ச்சுல், ஒருவர் கனடாவை சேர்ந்தவர்.
-
Jun 13, 2025 07:39 IST
5 மணி நேரம் போராடி சடலம் மீட்பு
சென்னையில் மெட்ரோ பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த நபரின் சடலம் 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார், மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Jun 13, 2025 07:38 IST
இன்று மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்..
கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலைரி, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நெல்லை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Jun 13, 2025 07:34 IST
விமான விபத்து- உயர்மட்டக் குழு அமைப்பு
அகமதாபாத் விமான விபத்து குறித்து விசாரிக்க மத்திய அரசு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. சர்வதேச நெறிமுறைகளின்படி விமான விபத்து விசாரணைப் பணியகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. விமானப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் விபத்துகளைத் தடுக்கவும் இந்தக் குழு செயல்படும்.
-
Jun 13, 2025 07:33 IST
மெட்ரோ விபத்து - விசாரணை நடத்தப்படும்: நிர்வாகம்
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ கட்டுமானப் பணிகள் இடிந்து விழுந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். இந்த விபத்து இரண்டு தூண்கள் மற்றும் இணைப்புப் பாலம் சரிந்து விழுந்ததால் ஏற்பட்டதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் (42) என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஒரு வாரத்திற்குள் ஒரு குழு அமைக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
Jun 13, 2025 07:30 IST
அகமதாபாத் விமான விபத்து
நாட்டையே உலுக்கிய குஜராத் அகமதாபாத் விமான விபத்தில் பயணிகள் 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் ஒருவர் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பனார். தரையில் விழுந்தபோது விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.