/indian-express-tamil/media/media_files/2025/02/03/Bq0VtppEDC0SWYlfAvue.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.23 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.81 காசுக்கும் விற்பனையாகிறது.
தமிழகத்தில் இன்று அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் செயல்படும்.பொதுமக்களின் நலன் கருதி விடுமுறை நாளான இன்று ஆவணப்பதிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இன்று பணியாற்றும் பத்திரப்பதிவு அலுவர்களுக்கு வேறொரு நாளில் மாற்று விடுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
Feb 03, 2025 01:02 IST
100-வது ராக்கெட் ஏவியபின், செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை உயர்த்தும் கிலிட்ச்களில் கோளாறு - இஸ்ரோ
இஸ்ரோவின் 100வது ராக்கெட் ஏவுதலுக்குப் பிறகு, செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை உயர்த்தும் கிலிட்ச்களில் கோளாறு ஏற்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஜனவரி 29 அன்று GSLV-F15 இல் ஏவப்பட்ட அதன் NVS-02 வழிசெலுத்தல் செயற்கைக்கோளில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இது அதன் 100வது வெற்றிகரமான ஏவுதலாகும்.
செயற்கைக்கோளின் தொழில்நுட்பக் கோளாறு சுற்றுப்பாதை உயர்த்தும் சூழ்ச்சிகளில் ஸ்தம்பிதத்தை ஏற்படுத்தியதாக இஸ்ரோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“செயற்கைக்கோள் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, செயற்கைக்கோளில் உள்ள சூரிய பேனல்கள் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன. மேலும், மின் உற்பத்தி பெயரளவிற்கு மட்டுமே. தரை நிலையத்துடன் தொடர்பு நிறுவப்பட்டுள்ளது. ஆனால் செயற்கைக்கோளை நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதை இடத்திற்கு நிலைநிறுத்துவதற்கான சுற்றுப்பாதை உயர்த்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை, ஏனெனில் சுற்றுப்பாதை உயர்த்தலுக்கான உந்துதல்களில் எரியும் ஆக்சிஜனேற்றியை அனுமதிக்கும் வால்வுகள் திறக்கப்படவில்லை” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு "எரியத் தவறிவிட்டது" என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.
“செயற்கைக்கோள் அமைப்புகள் சரியாக உள்ளன, மேலும் செயற்கைக்கோள் தற்போது நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ளது. நீள்வட்ட சுற்றுப்பாதையில் வழிசெலுத்தலுக்கு செயற்கைக்கோளைப் பயன்படுத்துவதற்கான மாற்று பணி உத்திகள் உருவாக்கப்பட்டு வருகின்றன” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள் திட்டத்துடன் தொடர்புடைய ஒரு இஸ்ரோ அதிகாரி, செயற்கைக்கோளுடன் நிலைமையை “மாஸ்டர் கண்ட்ரோல் வசதி கவனித்துக் கொள்ளும்” என்று கூறினார். மற்றொரு அதிகாரி, “செயற்கைக்கோளின் நோக்கம் கொண்ட செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம்” என்றார்.
நான்கு நாட்களுக்கு முன்பு ஏவப்பட்ட NVS-02 செயற்கைக்கோளில் எந்த சுற்றுப்பாதை சூழ்ச்சிகளையும் ISRO தெரிவிக்காததால், தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்த ஊகங்கள் எழுந்தன.
“NVS-02 இலிருந்தும் புதிதாக எதுவும் தெரியவில்லை. இங்கே, 2025-02-02, 01:55:44 UTC அன்று தென் அமெரிக்காவில் ~31200 கிமீ உயரத்தில் பதிவு செய்யப்பட்டது,” என்று S2A சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ப்ளூஸ்கை செயலி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. -
Feb 02, 2025 21:53 IST
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரூ.5 கோடி பரிசு - பி.சி.சி.ஐ அறிவிப்பு
ஜுனியர் டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரூ.5 கோடி பரிசு பி.சி.சி.ஐ அறிவித்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
-
Feb 02, 2025 21:07 IST
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் - இ.பி.எஸ் வலியுறுத்தல்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்; யார் அந்த சார் என்றா கேள்விக்கு பதில் கிடைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், மாநில அரசின் தலையீடற்ற முறையான சி.பி.ஐ விசாரணையே நீதியை வெளிக்கொணரும்” என்று கூறியுள்ளார்.
-
Feb 02, 2025 19:27 IST
இல்லம் தேடி கல்வி திட்டத்தால் 10, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு - மு.க. ஸ்டாலின்
திருச்சியில் பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இல்லம் தேடி கல்வி திட்டத்தை சிறப்பாக நடத்திக் காட்டியவர் அமைச்சர் அன்பில் மகேஷ். இவர் தலைமையில் பள்ளி கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவரை பாராட்ட இந்த ஒரு நிகழ்ச்சி போதாது. இல்லம் தேடி கல்வி திட்டத்தால் 10, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. நாட்டுப் பற்று என்பது நிலத்தின் மீது வரும் பற்றல்ல. மக்கள் மீது வரும் பற்றுதான் உண்மையான நாட்டுப்பற்று.” என்று கூறினார்.
-
Feb 02, 2025 19:21 IST
நாட்டுப்பற்று என்பது மக்கள் மீதான பற்றாக வளர வேண்டும் - மு.க.ஸ்டாலின்
திருச்சியில் சாரண சாரணியர் வைர விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நாட்டுப்பற்று என்பது நிலத்தைக் கடந்து மக்கள் மீதான பற்றாக வளர வேண்டும்; மானிட தத்துவத்தால் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற பரந்த உள்ளம் இருக்க வேண்டும்.” என்று கூறினார்.
-
Feb 02, 2025 18:39 IST
நெல் கொள்முதல் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை மத்திய அரசிடம் தாரை வார்க்கக்கூடாது - ராமதாஸ்
பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “நெல் கொள்முதல் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை மத்திய அரசிடம் தாரை வார்க்கக்கூடாது. காவிரி பாசன மாவட்டங்கள் தவிர மீதமுள்ள மாவட்டங்களின் நெல் கொள்முதல் செய்யும் அதிகாரம் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
-
Feb 02, 2025 17:46 IST
பெரியார் குறித்த பேச்சு - திருமாவளவன் எச்சரிக்கை
பெரியாரை விமர்சிப்பவர்களை கண்டு வேடிக்கை பார்க்க மாட்டோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பெரியாரை கொச்சையாக பேசக் கூடியவர்கள் முளைத்து இருக்கிறார்கள் எனக் கூறிய அவர், அவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெரியும் என்றும் கூறியுள்ளார்.
-
Feb 02, 2025 17:09 IST
"ஈ.சி.ஆர் சம்பவம் - மன்னிப்பு கேட்பாரா இ.பி.எஸ்?": ரகுபதி கேள்வி
ஈ.சி.ஆரில் பெண்களின் காரை வழிமறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு என்பவர் அ.தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவர் என அவரே ஒப்புக் கொண்டதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க கொடியைக் காண்பித்து பொய்யான பழி சுமத்திய எடப்பாடி பழனிசாமி, மன்னிப்பு கேட்பாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Feb 02, 2025 16:39 IST
'தோழி மகளிர் விடுதிகள்' - டெண்டர் கோரிய தமிழக அரசு
தமிழ்நாடு முழுவதும் 1,200 பெண்கள் தங்கும் வகையில் மேலும் 6 இடங்களில் 'தோழி மகளிர் விடுதிகள்' அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 70 கோடி செலவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அரசு டெண்டர் கோரியுள்ளது. அதன்படி, சென்னையில் 2 இடங்களில் 950 பேர் தங்கும் வகையில் விடுதிகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், ராமநாதபுரம், திண்டுக்கல், கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா ஒரு விடுதி அமைக்கப்படவுள்ளது.
-
Feb 02, 2025 15:50 IST
ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி - போக்குவரத்து மாற்றம்
சென்னையில், நாளை (பிப் 3) அண்ணா நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 02, 2025 15:15 IST
"தி.மு.க-விற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்": எல். முருகன்
தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "திருப்பரங்குன்றத்தில் அசைவ உணவு சாப்பிட்டவர்கள், சமணர் வாழ்ந்த படுகைகளில் பெயிண்ட் அடித்தவர்களை கைது செய்யாத காவல்துறை, மலையைக் காக்க விழிப்புணர்வு பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது. மிரட்டல்கள் மூலம் மக்களின் உரிமை போராட்டத்தை நசுக்கி விடலாம் என காவல்துறையினர் செயல்படுகின்றனர். தமிழக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
Feb 02, 2025 14:53 IST
'SwaRail' ஆப் அறிமுகம்
ரயிலில் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகள், உணவு ஆர்டர், PNR விவரம் உள்ளிட்டவற்றை எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் 'SwaRail' என்ற ஆப்பை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது
-
Feb 02, 2025 14:48 IST
மகளிர் ஜுனியர் டி20 உலகக்கோப்பை - இந்தியா சாம்பியன்
மகளிர் ஜுனியர் டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வென்றது. 83 ரன்கள் என்ற இலக்கை 11.2 ஓவர்களில் எட்டி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது
-
Feb 02, 2025 14:00 IST
பிப்ரவரி 8 வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் – வானிலை ஆய்வு மையம்
இன்று முதல் பிப்ரவரி 8 வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Feb 02, 2025 13:57 IST
மகளிர் U19 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 83 ரன்கள் இலக்கு
மகளிர் U19 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, ரன் குவிக்க முடியாமல் திணறியது. 20 ஓவர்கள் முடிவில் ஆல் அவுட் ஆகி 82 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய வீராங்கனை கொங்காடி த்ரிஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
-
Feb 02, 2025 13:23 IST
பாபா ராம்தேவ்க்கு எதிராக பிடிவாரண்ட்
பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணாவுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து பாலக்காடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில், ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அலோபதி உள்ளிட்ட நவீன மருத்துவத்தை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், பதஞ்சலி ஆயுர்வேதத்தின் துணை நிறுவனமான திவ்யா பார்மசியால் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. நோய்களை குணப்படுத்தும் என ஆதாரமற்ற கருத்துகளை வெளியிட்டதாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
-
Feb 02, 2025 13:20 IST
திருத்தணி முருகன் கோவிலில் ஒரே நேரத்தில் 60 ஜோடிகளுக்கு திருமணம்
திருத்தணி முருகன் கோவிலில் ஒரே நேரத்தில் 60 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்
-
Feb 02, 2025 12:10 IST
பாலியல் வன்கொடுமை வழக்கு; நடிகரும், எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நடிகரும், எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது
-
Feb 02, 2025 11:33 IST
வழிப்பறிக்கு திட்டம் போட்டு கொடுத்த சிறப்பு உதவி ஆய்வாளர்
சென்னை, வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு வீட்டில் சோதனை நடைபெற்றது. சொத்து ஆவணங்கள் பறிமுதல் சென்னை வேளச்சேரி, ஆவடி, அச்சிரப்பாக்கம், மதுராந்தகம் ஆகிய இடங்களில் நிலங்கள் வாங்கி குவிப்பு.
-
Feb 02, 2025 11:32 IST
திருச்சி சென்ற ஸ்டாலின்
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடந்துவரும் பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.
-
Feb 02, 2025 11:31 IST
தவெக கொள்கைத் தலைவர்களுக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை
தவெக கொள்கைத் தலைவர்களுக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை வேலுநாச்சியார்,அஞ்சலை அம்மாள்,பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரின் சிலைகள் திறப்பு.
-
Feb 02, 2025 11:05 IST
ஓராண்டை நிறைவு செய்த தவெக
"நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகிய நிலையில், அவர் 'Invisible' ஆக இருந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. Visible ஆக வந்து எவ்வளவு காலம் ஆகிறது என தெரியவில்லை. அவர் களத்துக்கு இறங்கி வந்து மக்களுக்காக பணியாற்றினால் மகிழ்ச்சி. ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உண்டு அது போல விஜய்க்கு தொலைநோக்கில் தான் அரசியல் செய்ய வேண்டும், Work From Home மற்றும் இணையதளத்தில் தான் பணி செய்ய வேண்டும் களத்தில் இறங்க வேண்டாம் என நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது" -செங்கல்பட்டில் பாஜக மூத்த தமிழிசை செளந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
-
Feb 02, 2025 10:36 IST
"எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய்கள் மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை" - மு.க.ஸ்டாலின்
திராவிட மாடல் அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையும் ஆதரவையும் சிதைக்க எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய்கள் மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை. தி.மு.க வேட்பாளரை எதிர்கொள்ள முடியாமலும் மக்களை சந்திக்க வலிமையில்லாமலும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் அவதூறான குற்றச்சாட்டுகளை கூறி புறக்கணிக்கின்றன என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
-
Feb 02, 2025 10:30 IST
த.வெ.க நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை - ஆதவ் அர்ஜுனா
உத்தரகாண்டில் நடக்கும் தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக அணியின் ஒருங்கிணைப்பாளராக பங்கேற்றிருப்பதால் தவெகவின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் நேரடியாக பங்கேற்க முடியவில்லை என தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துள்ளார்.
-
Feb 02, 2025 10:28 IST
பிப்.7இல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பிப்ரவரி 7இல் சென்னையில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 12இல் தேமுதிக கொடிநாள் விழா நடக்க இருப்பது குறித்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
Feb 02, 2025 10:19 IST
ஈரோடு இடைத்தேர்தல்- முதல்வர் ஸ்டாலின் கடிதம்
மனதில் பெரும் சுமையுடன் எதிர்கொள்ள வேண்டிய களமாக ரோடு இடைத்தேர்தல் அமைந்துவிட்டது. நானே நேரில் வந்து வாக்கு சேகரித்ததாக கருதி தி.மு.க வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். அரசு மீது உள்ள நம்பிக்கை ஆதரவை சிதைக்க நாளொரு அவதூறு, பொழுதொரு பொய் பரப்பப்படுகிறது.
-
Feb 02, 2025 09:27 IST
பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி கைது
மெரினா நொச்சி நகரில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிமுக பகுதி துணைச் செயலாளர் காசிநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மயிலாப்பூர் மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
Feb 02, 2025 08:56 IST
த.வெ.க 2-ம் ஆண்டு துவக்கவிழா.. 5 கொள்கை தலைவர்கள் சிலை திறப்பு
பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில் 5 கொள்கை தலைவர்களின் மூன்று அடி பீடத்தில் 1.5 அடி உயரத்தில் மார்பளவு சிலையை விஜய் திறக்க உள்ளார்.
-
Feb 02, 2025 08:52 IST
அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி எதிரொலியாக கனடா, மெக்சிகோ வரி அறிவிப்பு
அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி எதிரொலியாக கனடா, மெக்சிகோ வரி அறிவித்துள்ளது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் விதித்த 25% வரியை அடுத்து கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரி அறிவித்துள்ளது.
-
Feb 02, 2025 08:49 IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 479 கன அடியில் இருந்து 491 கன அடியாக உயர்ந்தது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
-
Feb 02, 2025 08:26 IST
13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
சென்னை மயிலாப்பூர் பகுதியில் போலீஸ் பூத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக புகார். போலீஸ் பூத்தில் வைத்து காவலர், காதலனும்(வயது 16), பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு, உண்மையை மறைத்து சிறுவனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக சிறுவனின் தாய் ஆகிய மூவரும் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
-
Feb 02, 2025 08:23 IST
வழிப்பறிக்கு திட்டம் வகுத்து கொடுத்த போலீஸ்
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கௌஸ் என்பவரிடம் ₹20 லட்சம் வழிப்பறி செய்த சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு 4 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பதுங்கி இருந்த சன்னி லாய்டை கடந்த மாதம் திருவல்லிக்கேணி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
-
Feb 02, 2025 08:22 IST
ரயில் பயணிகளுக்காக ஒரு சூப்பர் செயலி - விரைவில் அறிமுகம்
இந்திய ரயில்வேயின் முக்கிய சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் swarail என்ற செயலியை ரயில்வே அமைச்சகம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவில்லா டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகள், உணவு ஆர்டர், பி.என்.ஆர் விவரம், ஓடுதல் நிலை, ரயில் தேடல், பெட்டிகள் அமைப்பு உள்ளிட்ட பல சேவைகளை இச்செயலி மூலம் பெறலாம். தற்போது சோதனை கட்டத்தில் உள்ள இச்செயலி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 02, 2025 07:30 IST
கார் சேஸிங் வழக்கில் கைதான சந்துருவுக்கு 15 நாட்கள் சிறை
ஈ.சி.ஆரில் கார் சேஸிங்கில் கைதான சந்துரு 15 நாட்கள் சிறையில் அடைப்பு. சோழிங்கநல்லூர் குற்றவியல் நீதிமன்றம் முன்பு நேற்று நள்ளிரவு சந்துரு ஆஜர் செய்யப்பட்டார். கைதான சந்துரு மீது கடத்தல், பண மோசடி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை சார்பில் தகவல்.
-
Feb 02, 2025 07:27 IST
2ஆம் ஆண்டில் தவெக; தலைவர்கள் சிலை திறக்கும் விஜய்
விஜய்யின் த.வெ.க முதல் ஆண்டை நிறைவு செய்து 2 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தவெக 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பனையூரில் கொடியேற்றுகிறார் அக்கட்சி தலைவர் விஜய். தவெகவின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாளின் சிலைகளையும் விஜய் இன்று திறந்து வைக்கிறார்.
-
Feb 02, 2025 07:24 IST
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் போராட்டம்
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவைக் கண்டித்து போராட்டம் அண்ணா பல்கலை விவகாரத்தில் பத்திரிக்கையாளர்கள் விசாரணையில் செல்போனை பறிமுதல் செய்ததை கண்டித்து போராட்டம் நடைப்பெற்றது.
-
Feb 02, 2025 07:22 IST
இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்
தமிழகத்தில் இன்று அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் செயல்படும்.பொதுமக்களின் நலன் கருதி விடுமுறை நாளான இன்று ஆவணப்பதிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இன்று பணியாற்றும் பத்திரப்பதிவு அலுவர்களுக்கு வேறொரு நாளில் மாற்று விடுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.