Chennai News Updates: இந்தியன் ரயில்வே சார்பில் காஷ்மீருக்கு சுற்றுலா: முன்பதிவு எண் அறிவிப்பு

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
railways x

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Feb 07, 2025 23:51 IST

    ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி: தெற்கு ரயில்வே

    கோவை - திருப்பதி விரைவு ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது. கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்; சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



  • Feb 07, 2025 23:49 IST

    இன்ஃபோஸிஸ் நிறுவனம் கொத்து கொத்தாக தொடரும் பணிநீக்கம்

    மைசூரில் உள்ள இன்ஃபோஸிஸ் நிறுவனம் கேம்பஸ் இண்டர்வியூவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட FRESHER-கள் 400 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.கடந்தாண்டு அக்டோபரில் பணியமர்த்தப்பட்ட இவர்கள், குறுகிய காலத்திலேயே நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மதிப்பீட்டு தேர்வுகளில் இவர்கள் தேர்ச்சி பெறவில்லை என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் 2022ல் பொறியியல் படிப்பை முடித்து, சுமார் 2.5 ஆண்டுகள் வேலைக்காக காத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது,



  • Advertisment
  • Feb 07, 2025 23:47 IST

    இந்தியன் ரயில்வே சார்பில் காஷ்மீருக்கு சுற்றுலா: முன்பதிவு எண் அறிவிப்பு

    கோடை காலத்தில், இந்தியன் ரயில்வே சார்பில் காஷ்மீருக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் சிறப்பு ரயில் பேக்கேஜ் சுற்றுப்பயணம் ஏப். 2ம் தேதி தொடங்குகிறது 650 பயணிகளுடன், 15 நாட்கள் காஷ்மீர், ஆக்ரா, டெல்லி, அமிர்தசரஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ₹49,900 முதல் ₹65,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்பதிவுக்கு 7305858585 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Feb 07, 2025 20:50 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிறைத் துறைக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனின் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்லீரல் பாதிப்பால் தன்னிடைய உடல் மிகவும் மோசமடைந்துள்ளது, தன்னுடைய உயிர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக நாகேந்திரன் தரப்பு விளக்கம் அளித்துள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள் அடங்கிய 27 சிடிக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து வழக்கின் விசாரணை பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Feb 07, 2025 20:47 IST

    வாள்வீச்சு போட்டியில் பங்கேற்க உள்ள வீரர் வீராங்கனைகளுககு நிதிவுதவி

     ஜூனியர் உலக கோப்பை வாள்வீச்சு போட்டியில் பங்கேற்க உள்ள தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி! 



  • Feb 07, 2025 20:07 IST

    பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

    தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. ரயிலில் 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களைச் சீரழிக்கும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.



  • Feb 07, 2025 20:03 IST

    மே 4ந் தேதி யுஜி நீட் தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

    மருத்துவ படிப்புக்கான யுஜி நீட் தேர்வு வரும் மே 4ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மார்ச் 7-ந் தேதி இரவு 11.50 மணிவரை ஆன்லைனில் தேர்வுக்காக விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது,



  • Feb 07, 2025 19:59 IST

    தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: தமிழகத்திற்கு ரூ528 கோடி ஒதுக்கீடு

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ528.80 கோடி நிதியை விடுவித்துள்ளது மத்திய அரசு அதிகபட்சமாக சிக்கிம் மாநிலத்திற்கு ரூ1,708 கோடி, பீகாருக்கு ரூ1570 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ1392 கோடி, உத்தரப் பிரதேசத்துக்கு ரூ1174 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.



  • Feb 07, 2025 19:58 IST

    புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் 3 நாட்கள் மலர் கண்காட்சி

    புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் 3 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. பார்வையாளர்களை கவரும் விதமாக மலர்களால் பல்வேறு விலங்குகள், பறவைகளை தத்ரூபமாக உருவாக்கி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன!



  • Feb 07, 2025 19:24 IST

    மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த உள்ளதாக அமெரிக்க அரசு தகவல்

    அமெரிக்காவில் இருந்து மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த உள்ளதாக அந்நாட்டு அரசிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. நாடு கடத்தப்படும்போது இ்நதியர்கள் கன்னியமாக நடந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம் என்று வெளியியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.



  • Feb 07, 2025 19:01 IST

    'அலட்சியமாக அல்வா சாப்பிடும் முதல்வர்' - ஸ்டாலினுக்கு சீமான் கண்டனம் 

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்! பாதிக்கப்படும் பெண்குழந்தைகள்!  வேதனையில் பெற்றோர்கள்! வேடிக்கை பார்க்கும் திமுக அரசு! அலட்சியமாக அல்வா சாப்பிடும் முதல்வர்!

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நால்வர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், ஆத்திரத்தையும் ஏற்படுத்திய நிலையில்,  அந்த வேதனை செய்தி மறைவதற்குள்  மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி சிறுமிக்கு தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல் எனும் செய்தி இதயத்தை நொறுங்கச் செய்கிறது. நாள்தோறும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத்தவறி, சட்டம் ஒழுங்கை முற்றுமுழுதாக சீரழித்துள்ள திமுக அரசின் நிர்வாகத்திறனற்ற அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

    திமுக ஆட்சியில் பள்ளிக்குழந்தைகள் முதல் பல்கலைக்கழக மாணவி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் கொடுமைகள் வார்த்தைகளால் சொல்லிமாளக்கூடியதல்ல. அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி கலைஞர் பேருந்து நிலையம் வரையில் பெண்கள் எங்குமே பாதுகாப்பாகச் செல்ல முடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் கொடுஞ்சூழல் நிலவுகிறது.

    கடந்த 23.12.24 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி   பாலியல் வன்கொடுமை, 01.02.25 அன்று சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உதவி கேட்டு வந்த 13 வயது சிறுமிக்கு மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் பாலியல் தொல்லை,  14.01.25 அன்று மதுரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, 18.01.25 அன்று கரூரில் பள்ளி மாணவிக்கு காவலர் பாலியல் தொல்லை, 21.01.25 அன்று திருப்பூரில் அரசுப்பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை, 24.01.25 அன்று திண்டுக்கல் நத்தம் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை,  18.01.25 அன்று  தென்காசி வீராணத்தில் காவலர்களால் இளம்பெண் பாலியல் துன்புறுத்தல், 25.01.25 அன்று கிழக்கு கடற்கரைச் சாலையில் மகிழுந்தில் பயணித்த பெண்களை வீடுவரை விரட்டி சென்ற கொடுமை, 03.02.25 சேலம் தலைவாசலில் பள்ளி மாணவிக்கு முதியவர் பாலியல் தொல்லை, 05.02.25 கிருஷ்ணகிரி பர்கூர் அருகே பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை, 05.02.25 அன்று கள்ளக்குறிச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் தூண்டுதலில் பெண் கிராம நிர்வாக அலுவலர் முகத்தில் மீது சாணியை வீசி கீழே தள்ளி கொடுந்தாக்குதல், 05.02.25 அன்று கலைஞர் பேருந்து நிலையத்தில் நின்ற 19 வயது பெண் பாலியல் துன்புறுத்தல், 05.02.25 அன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 8 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, 06.02.25 அன்று வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை, 06.02.25 அன்று மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி 4 ஆம்  வகுப்பு சிறுமிக்கு ஆசிரியர், தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் தொல்லை, 06.02.25 அன்று சேலம் அரசு பள்ளி மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை, 18.11.24 அன்று திருவள்ளூர் பள்ளிப்பட்டு அருகே 3 ஆம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர்  பாலியல் தொல்லை, 21.11.24 அன்று நாகர்கோயிலில் பள்ளி மாணவிக்கு அரசு பேருந்தில் நடத்துநர் பாலியல் தொல்லை, 07.12.24 அன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை, 21.12.24 அன்று சங்கரன்கோயிலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, 26.12.24 அன்று ராஜபாளையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை என திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பெருங்கொடுமையாகும்.   

    கடந்த 31.12.22 அன்று சென்னை, விருகம்பாக்கத்தில் அம்மையார் கனிமொழி பங்கேற்ற திமுக நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இருந்த பெண் காவலர் ஒருவருக்கு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்தது முதல் நேற்று முன்தினம் (05.02.25) தமிழ்நாடு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் கல்பனா நாயக் அவர்களே தம்மை கொல்ல சதி நடப்பதாக புகார் கூறியது வரை பெண் காவலர்களுக்கே பாதுகாப்பற்ற மிக மோசமான சூழல் தமிழ்நாட்டில் உள்ள நிலையில் திமுக ஆட்சியில்  சாதாரண பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? 

    வீட்டை விட்டு வெளியில் சென்ற பெண் குழந்தைகள் மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா? என்று பெற்றோர் ஒவ்வொரு நாளும் பரிதவிக்கும் கொடுமையான நிலைக்கு தமிழ்நாட்டு மக்களைத் தள்ளிவிட்டுள்ளது திமுக அரசு. பெண்களுக்கு எதிரான இத்தனை கொடுமைகளையும் தடுக்கத் தவறி கைகட்டி வேடிக்கை பார்க்கும் திமுக அரசு, பெண் சுதந்திரம், பெண்கள் பாதுகாப்பில் முதலிடம் என்றெல்லாம் பேசுவதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும். 

    தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்றே இல்லாமலாக்கி, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலமாக மாற்றி இருப்பதுதான் திமுக அரசின் நான்கு ஆண்டு காலச் சாதனையா? இதுதான்  உலகம் வியக்கும் திராவிட மாடல் ஆட்சியா? பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் வேளையில் காவல்துறையை தனது நேரடிக்கட்டுபாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள்,  பாதிக்கப்படும் பள்ளிக் குழந்தைகள் பற்றி துளியும் கவலையின்றி, திருநெல்வேலியில் அல்வாவை ரசித்து ருசித்து சாப்பிட்டுகொண்டிருக்கிறார் என்பதுதான் வேதனையின் உச்சம். இனியும் இத்தகைய மெத்தனப்போக்கு தொடர்ந்தால் பெண்களும், குழந்தைகளும், பெற்றோரும் அல்லற்பட்டு ஆற்றாது சிந்தும் வேதனைக் கண்ணீரின் வெப்பத்தில் திமுக ஆட்சி அழிவது உறுதி! 

    ஆகவே, போச்சம்பள்ளி, மணப்பாரப்பட்டி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெற்ற மகள்போல போற்றிப் பாதுகாக்க வேண்டிய பிஞ்சு குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிச் சிதைக்கும் கொடூரர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மிகக்கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற கொடுமைகள் இனியும் தொடராவண்ணம் பெண்கள், குழந்தைகளைப் பாதுகாத்திட சட்டத்தை கடுமையாக்கிவிட வேண்டுமெனவும், தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்." என்று அவர் தெரிவித்துள்ளார். 



  • Feb 07, 2025 18:55 IST

    பள்ளிகளில் பாலியல் அத்துமீறல்: ஆசிரியர்களின் கல்விச்சான்று ரத்து செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

    பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசியர்களின் கல்வி தகுதி ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டிருக்கிறது. அப்படியான சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதற்காக தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தார்.

    இந்த சம்பவத்தில் உண்மை தன்மை நிரூபிக்கப்படும் பட்சத்தில், யாராக இருந்தாலும், நிச்சயம் தண்டனையுடன் மட்டும் நிறுத்தப்படாது. அவர்களின் கல்வித்தகுதி சான்றுகளை முழுமையாக ரத்து செய்வதற்காக நடவடிக்கைகளை எடுப்போம். ஒவ்வொரு தலைமையாசிரியர்களும் அந்தந்த பள்ளிகளில் ஆசிரியர்களை அழைத்து கவுன்சிலிங் மற்றும் அறிவுரை அளிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக் கூடிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் உடனடியாக இதுபோன்ற பிரச்னைகளில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 



  • Feb 07, 2025 18:49 IST

    திண்டுக்கல் டி.ஐ.ஜி வந்திதா பாண்டே பணியிட மாற்றம் 

    திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசின் இளைஞர் விவகாரத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வந்திதா பாண்டேவை மத்திய அரசு பணிக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உடனடியாக மாநில அரசின் பதவியில் இருந்து விடுவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதவி ஏற்கும் நாளிலிருந்து 5 ஆண்டுகள் மத்திய பணியில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     



  • Feb 07, 2025 18:46 IST

    "ரயில் சேவைகள் ரத்து'' - தென்னக ரயில்வே

    "சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு 10, 12, 14 ஆகிய தேதிகளில் செல்ல இருந்த மெமு ரயில் ரத்து. திருவண்ணாமலையில் இருந்து தாம்பரத்திற்கு 11, 13, 15 ஆகிய
    தேதிகளில் இயக்கபட இருந்த ரயில்களும் ரத்து

    காட்பாடி - ஜோலார்பேட்டை இடையேயான ரயில்கள் வரும் 10, 12, 14 ஆகிய தேதிகளில்
    இரு மார்கத்திலும் ரத்து. காட்பாடி - திருப்பதி இடையேயான ரயில்கள் வரும் 10, 12, 14 ஆகிய தேதிகளில் இரு மார்க்கத்திலும் ரத்து" என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 



  • Feb 07, 2025 18:38 IST

    கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பா?

    கொரோனா தடுப்பூசியால் திடீர் மாரடைப்பு மரணங்கள் ஏற்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய கர்நாடக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது. 



  • Feb 07, 2025 18:17 IST

    “பாலியல் தொல்லை - கடும் நடவடிக்கை வேண்டும்'': செல்வப்பெருந்தகை

    "ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. பாலியல் தொல்லை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெண்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகளுக்கு தூப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்த வேண்டும்" என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 



  • Feb 07, 2025 17:54 IST

    மேலும் 487 இந்தியர்கள் வெளியேற்றம் - வெளியுறவுத்துறை செயலாளர் தகவல் 

    "அமெரிக்காவில் இருந்து மொத்தமாக எவ்வளவு பேர் வெளியேற்றப்பட உள்ளனர் என்று தற்போது கூற இயலாது. அமெரிக்க அரசுடன் தொடர்பில் உள்ளோம். மேலும் 487 இந்தியர்கள் வெளியேற்ற உத்தரவுடன் உள்ளனர். அமெரிக்காவில் இருந்து இதற்கு முன்னரும் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் இந்த முறை நடவடிக்கைகள்  சற்று வேறுவிதமாக உள்ளன." என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.  



  • Feb 07, 2025 17:44 IST

    மேற்குவங்க அரசு மேல்முறையீடு தள்ளுபடி 

    கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் மேற்குவங்க அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு மனுவை கொல்கத்தா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் சிபிஐ மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய கொல்கத்தா ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. 

    பயிற்சி மருத்துவ மாணவியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தது. சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த சியால்டா நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேற்குவங்க அரசு மேல்முறையீடு செய்தது.



  • Feb 07, 2025 17:27 IST

    நாடு கடத்தப்படும் இந்தியர்கள் - அமெரிக்கா செல்லும் மோடி

    பிரதமர் மோடி வரும் 12, 13 ஆகிய தேதிகளில் அமெரிக்கா செல்ல உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்பை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து ஏரளமான இந்தியர்கள் நாடு  கடத்தப்பட்டு வரும் சூழலில் மோடி அந்நாட்டிற்கு செல்லவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

     



  • Feb 07, 2025 16:54 IST

    ஆமைகள் இனப்பெருக்க காலம்: தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு

    தமிழகத்தில் ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் அதிவேக விசைப்படகுகளை குறிப்பிட்ட பகுதியில் இயக்க தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அரியவகை கடல் ஆமைகள் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதால், தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.



  • Feb 07, 2025 16:22 IST

    பாலியல் குற்றங்கள் குறித்து பெண்கள் புகார் அளிக்க முன்வர வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன்

    சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்: “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுகின்றன; பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக்கியுள்ளார். பாலியல் குற்றங்கள் குறித்து பெண்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும்; அரசு நடவடிக்கை எடுக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.



  • Feb 07, 2025 16:16 IST

    ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: “தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை, மணப்பாறையில் மாணவிக்கு பாலியல் சீண்டல் அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும்” என்று வலியுறுதியுள்ளார்.



  • Feb 07, 2025 15:25 IST

    அ.தி.மு.க உள்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு: பிப். 12-ல் ஐகோர்ட் தீர்ப்பு

    அ.தி.மு.க உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்கக் கோரிய மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 12-ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.



  • Feb 07, 2025 15:20 IST

    அ.தி.மு.க-வில் எந்த பிளவும் இல்லை - ஐகோர்ட்டில் இ.பி.எஸ் தரப்பு வாதம்

    அ.தி.மு.க உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்கக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்ட இ.பி.எஸ் தரப்பு, “கட்சியில் எந்த பிளவும் இல்லை; எனக்கான ஆதரவு நீடிப்படில் எந்த மாற்றமும் இல்லை; தேர்தல் நெருங்கும் நிலையில் சின்னத்தை முடக்கினால், கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும்” என்று வாதிடப்பட்டது.



  • Feb 07, 2025 14:53 IST

    ரூ. 4.20 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

    திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினர் ரூ. 4.20 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திருவண்ணாமலையை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின் பேரில், கர்நாடகாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 185 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.



  • Feb 07, 2025 14:27 IST

    பாலியல் வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு

    கிளாம்பாக்கத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு திடீரென உடல் நலக்குறை ஏற்பட்டது. இதனால், அந்நபரை செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.



  • Feb 07, 2025 14:09 IST

    சிறுமிக்கு பாலியல் தொல்லை - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

    மணப்பாறையில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி, "மணப்பாறையில் மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. பெண்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரிப்பது வேதனை அளிக்கிறது. 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.



  • Feb 07, 2025 13:46 IST

    மசோதா ஒப்புதல் குறித்து ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

    ஆளுநர் ஆர்.என். ரவி மீதான தமிழக அரசின் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, "மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வாய்ப்பை தவிர ஆளுநருக்கு வேறு வாய்ப்பை சட்டம் வழங்கவில்லை?" என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.



  • Feb 07, 2025 13:17 IST

    கல்வித் தகுதி ரத்து - அன்பில் மகேஷ் எச்சரிக்கை

    "பாலியல் விவகாரம் தொடர்பாக இனி அரசு பள்ளிகளில் புகார்கள் எழுந்தால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் கல்வித் தகுதி ரத்து செய்யப்படும்" என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



  • Feb 07, 2025 12:49 IST

    தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஆதரவாக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

    இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்தியா கூட்டணியினர் முழக்கம்.



  • Feb 07, 2025 12:29 IST

    உ.பி. மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து

    உத்தரப்பிரதேசம்: பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் மீண்டும் தீ விபத்து நேரிட்டுள்ளது. செக்டார் 18-ல் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்



  • Feb 07, 2025 12:13 IST

    பெண் எஸ்ஐ மீது தாக்குதல்: ஈபிஎஸ் கண்டனம்

    “சிவகங்கை மாவட்டத்தில் பெண் எஸ்.ஐ. மீது காவல் நிலையத்தின் உள்ளேயே புகுந்து தாக்குதல் நடந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது” பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 



  • Feb 07, 2025 12:04 IST

    "ஆளுநர் முடிவெடுக்க கால நிர்ணயம் இல்லை"

    ஆளுநரிடம் அல்லது குடியரசுத் தலைவரிடம் மசோதா நிலுவையில் உள்ளபோது அது சட்டப்பேரவையில் காலாவதியாகாது. அதனால் தான் மசோதா மீது முடிவெடுக்க ஆளுநருக்கு எந்தக் கால நிர்ணயமும் அரசியல் சாசனத்தில் செய்யப்படவில்லை. ஆளுநர் தரப்பில் அட்டர்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் வாதம்.



  • Feb 07, 2025 11:34 IST

    உச்ச நீதிமன்றத்தில் ஜெ தீபா முறையீடு

    சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருட்களை தன்னிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஜெ தீபா முறையீடு செய்துள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றம் தீபாவின் கோரிக்கையை நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.



  • Feb 07, 2025 11:18 IST

    சிக்னல் கோளாறு: மெதுவாக இயக்கப்படும் ரயில்கள்

    தாம்பரம் மற்றும் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில்கள், சிக்னல் கோளாறு 
    காரணமாக தாமதமாக இயங்கியுள்ளது. 40 நிமிடங்களுக்கு ஒரு ரயில் மட்டும் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதினர். 



  • Feb 07, 2025 10:37 IST

    ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம்!

    வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. கடந்த 11 முறை வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாத நிலையில் தற்போது 6.5% இருந்து 6.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 



  • Feb 07, 2025 10:06 IST

    கிளாம்பாக்கம் ஆட்டோவில் பெண்ணை கடத்திய சம்பவம்

    கிளாம்பாக்கத்தில் ஆட்டோவில் பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. கைது செய்ய சென்றபோது மாடியில் இருந்து குதித்ததால் ஒருவருக்கு கையிலும் மற்றவருக்கு கை, காலிலும் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. 



  • Feb 07, 2025 09:45 IST

    "அதிமுகவை அழிக்க முடியாது"

    திமுக ஆட்சி எப்போது ஒழியும் என்பதுதான் மக்கள் எண்ணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். வழக்குகள் போட்டு அதிமுகவை அழித்து விடலாம் என மனப்பால் குடிக்க வேண்டாம் எனவும் கூறினார்.



  • Feb 07, 2025 09:28 IST

    மோசமான வானிலையால் விமானங்களை தரையிறக்குவதில் சிக்கல்!

    182 பயணிகளுடன் மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் மோசமான வானிலை காரணமாக 30 நிமிடம் வானில் வட்டமடித்த பின் தரையிறக்கப்பட்டது.  



  • Feb 07, 2025 08:58 IST

    புதிய சுங்கக் கட்டண திட்டம் - மத்திய அரசு முடிவு

    ஆண்டுக்கு ஒருமுறை ரூ. 3 ஆயிரம் சுங்கக் கட்டணம் அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தி ஆண்டு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் இன்றி பயணிக்கும் புதிய திட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது தற்போது ரூ.340 செலுத்தி மாதம் முழுவதும் பயணிப்பவர்களுக்கும் ரூ.4080 செலுத்தி ஆண்டு முழுவதும் பயணிப்பவர்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் ரூ.1080 மிச்சமாகும். இத்திட்டத்தில் கட்டணம் செலுத்தி பெறப்படும் அட்டைகள், பாஸ்டேக் அட்டையுடன் இணைக்கப்படும். 



  • Feb 07, 2025 08:52 IST

    அண்ணாமலைக்கு அமைச்சர் பதிலடி

    தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ததாக அண்ணாமலைக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதிலடி கொடுத்துள்ளார். மத்டிய அரசிடம் இருந்து பேரிடர், வெள்ள நிவாரண நிதியை பெற்றுத் தராமல் சிறுபிள்ளைத்தனமாக அரைவேக்காடு அறிக்கை வெளியிடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளது. 



  • Feb 07, 2025 08:48 IST

    ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை- ஒருவர் கைது

    வேலூர் அருகே ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை திருப்பதி பயணிகள் விரைவு ரயிலில் கழிப்பறைக்கு சென்றபோது பாலியல் சீண்டல் என தகவல் வெளியாகி உள்ளது. 



  • Feb 07, 2025 08:28 IST

    பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட்

    ரூ.10 லட்சம் மோசடி வழக்கில் பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட். பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் கைது நடவடிக்கை எடுக்க பஞ்சாப் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Feb 07, 2025 08:27 IST

    ஈரோடு இடைத்தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை

    ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் பெருந்துறை அரசு பொறியியல் கல்லூரியில் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. மொத்தம் 14 மேசைகளில் வாக்கு எண்ணும் பணியில் 51 பேர் ஈடுபட உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 24 மணி நேரமும் காவல் துறை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



  • Feb 07, 2025 08:22 IST

    மாஞ்சோலை மக்களை இன்று சந்திக்கிறார் முதல்வர்

    நெல்லையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாஞ்சோலை மக்களையும் சுற்றுலா மாளிகையில் மீனவர்களையும் சந்திக்க உள்ளார். ரூ.167 ஓடியில் 75,151 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, ரூ.309 கோடி மதிப்பில் 20 புதிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். 



  • Feb 07, 2025 07:42 IST

    கைவிலங்கு விவகாரம் - காங்., இன்று ஆர்ப்பாட்டம்

    இந்தியர்கள் கைவிலங்கிட்டு நாடு கடத்தப்பட்ட விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து மாநில, மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 



  • Feb 07, 2025 07:38 IST

    செங்கல்பட்டில் பனிமூட்டம்

    செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், சோத்துப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூடியுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்தன.



  • Feb 07, 2025 07:37 IST

    12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடக்கம்

    12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று முதல் தொடங்கின. வரும் 14 ஆம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 



  • Feb 07, 2025 07:35 IST

    நெல்லையில் இன்றும் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர்

    நெல்லை மாவட்டத்தில் இன்று 2 ஆவது நாளாக கள ஆய்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட உள்ளார்.



  • Feb 07, 2025 07:33 IST

    பள்ளி தாளாளரின் கணவர் கைது

    திருச்சி மாவட்டம் மணப்பாறைப்பட்டியில் 4 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி தாளாளரின் கணவர் வசந்த குமார் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் நடைபெற்ற ஓவிய  போட்டியின் போது சிறுமியிடம் பாலியல் சீண்டல் என தகவல் வெளியாகி உள்ளது. பள்ளி தாளாளர் சுதா, கணவர் வசந்தகுமார் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tamil News Update news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: