Chennai News Highlights: அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி!

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Modi Travel

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Feb 13, 2025 05:06 IST

    2026 தேர்தல் அறிக்கை: தமிழிசை தலைமையில் குழு அமைக்க திட்டம் - அண்ணாமலை

    “பா.ஜ.க ஆளக்கூடிய மற்ற மாநிலத்தில் செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து வந்து 2026 ஆண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்ய உள்ளோம்” என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



  • Feb 12, 2025 21:59 IST

    மகள் பவதாரணி பெயரில் புதிய இசைக்குழு உருவாக்க திட்டம் - இளையராஜா

    இசைஞானி இளையராஜா தனது மகள் பவதாரணி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசுகையில், “மகள் பவதாரணி பெயரில் புதிய இசைக்குழுவை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். பவதாரணி ஆசைப்படி இந்த இசைக்குழுவில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இருப்பார்கள். 15 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் இசைக்குழுவில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்” என்று கூறியுள்ளார்.



  • Advertisment
  • Feb 12, 2025 21:14 IST

    என்னை சோதிக்காதீர்கள் - அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

    ஈரோட்டில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு: “இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். என்னை சோதிக்காதீர்கள்.. என்னை வாழவைத்தவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவும்தான்.” என்று பேசினார்.



  • Feb 12, 2025 21:08 IST

    அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன் - அண்ணாமலை

    மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு: “பா.ஜ.க தலைவராக முடியாது என்று எனக்கு தெரியும். ஆனால், நான் இங்கு இருந்து செலும்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விடமாட்டேன்” என்று பேசினார்.



  • Advertisment
    Advertisements
  • Feb 12, 2025 19:35 IST

    சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில் பிப். 13-ம் தேதி 25 புறநகர் ரயில்கள் ரத்து

    பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப். 13) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.



  • Feb 12, 2025 18:37 IST

    இலவச அறிவிப்புகள் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி

    இலவச ரேஷன் பொருட்கள், பணம் கிடைப்பதால் வேலை செய்ய மக்கள் தயாராக இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தலின் போது கட்சிகள் வெளியிடும் இலவசங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.



  • Feb 12, 2025 18:08 IST

    ஹமாஸ் அமைப்புக்கு டிரம்ப் மிரட்டல்

    ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அதன்படி, பிப்ரவரி 15-ஆம் தேதி பகல் 12 மணிக்குள்  பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் அமைப்பு விடுவிக்காவிட்டால், போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தாகும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், பெரியளவிலான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.



  • Feb 12, 2025 17:37 IST

    "திருப்பரங்குன்றம் பிரச்சனை - சென்னையில் யாத்திரை ஏன்?"

    திருப்பரங்குன்றம் மலை பிரச்சனை தொடர்பாக சென்னை ஏகாம்பரேஷ்வரர் கோயிலில் இருந்து கந்தக்கோட்டம் வரை வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி, இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் யுவராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதற்கு, திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு சென்னையில் ஏன் யாத்திரை நடத்த வேண்டும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.



  • Feb 12, 2025 17:13 IST

    ரூ. 6.55 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிறுத்தம்

    தாம்பரம், ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க ரூ.6.55 கோடி செலவில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான இடத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆய்வு செய்தார். மேலும், பணியை டெண்டர் எடுக்கும் நிறுவனம் உரிய நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையை அதிகாரிகள் உறுதி செய்ய உத்தரவிட்டார்.



  • Feb 12, 2025 16:42 IST

    சீமான் எதையாவது உளறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார் – த.வெ.க

    சீமான் எதையாவது உளறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். திரள் நிதி வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ள சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று என த.வெ.க மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் ஆ.சம்பத்குமார் கூறியுள்ளார்



  • Feb 12, 2025 16:18 IST

    அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம்? – உச்ச நீதிமன்றம் கேள்வி

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமின் தீர்ப்பை திரும்ப பெற கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம்? போக்குவரத்துத் துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருக்கும்போது, அமைச்சராக தொடர்ந்தால் என்னவாகும்? அமைச்சராக தொடர்வதா, இல்லையா என்பதை செந்தில் பாலாஜி முடிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்



  • Feb 12, 2025 16:18 IST

    தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்துக்கு எதிரான வழக்கு 

    தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வரும் 19 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 18 ஆம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில், அதற்கு அடுத்த நாள் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது! 

     



  • Feb 12, 2025 15:57 IST

    ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை

     

    1,116 பேர் அமர்ந்தும் 3,798 பேர் நின்று செல்லும் வகையில் ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏ.சி. பெட்டியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை பெரம்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது.



  • Feb 12, 2025 15:55 IST

    அரசு பஸ் ஓட்டுநர் சஸ்பெண்ட் 

    சென்னை ஆத்தூர் பகுதியில் இன்று காலை நடந்த நகர பேருந்து விபத்துக்கு ஓட்டுனரே காரணம் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. பேருந்து ஓட்டுநரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து கழக சேலம் மண்டல நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார்.



  • Feb 12, 2025 15:46 IST

    பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல், அச்சுறுத்தல் - புகாரளிக்க உதவி மையம்

     

    பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தாலும் மாணவர்கள் 14417 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு மற்றும் உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தேவை என்றாலும் 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.



  • Feb 12, 2025 15:25 IST

    3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசிதழில் வெளியீடு 

    ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 3 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த உத்தேச முடிவு செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது. மக்களின் கருத்துகளை பரிசீலனை செய்து 3 பேரூராட்சிகளையும் நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.



  • Feb 12, 2025 14:56 IST

    நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: ஒபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை

    இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் வரும் 17-ந் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Feb 12, 2025 14:54 IST

    அ.தி.மு.க பின்னால் யாரும் செல்ல மாட்டார்கள்: சிபிஎம் பாலகிருஷ்ணன் கருத்து

    அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைமை அதிமுகவில் இல்லை. பல கூறுகளாக பிரிந்து இருக்கின்றனர். முரண்பாடுகள் காரணமாக மேலும் பலர் கட்சியில் இருந்து வெளியில் வரலாம். அரசியலில் நிலையற்ற தன்மை கொண்ட நிலைபாட்டை அதிமுகவினர் எடுத்துள்ளனர். எனவே அவர்களின் பின்னால் யாரும் செல்லமாட்டார்கள் என்று, சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.



  • Feb 12, 2025 14:49 IST

    அதிமுக விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பு பின்னணியில் பாஜக; செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில் பாஜக தான் உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளர்ர்.



  • Feb 12, 2025 14:47 IST

    தமிழகத்தில் வெப்ப நிலை உயரக்கூடும்:  வானிலை மையம் தகவல்

    தமிழகத்தில் வரும் நாட்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.



  • Feb 12, 2025 13:51 IST

    கிளாம்பாக்கத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடு 

    சென்னை கிளாம்பாக்கத்தில் ஆட்டோவில் பெண் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல் துறையில் பதிவு செய்த ஆட்டோக்களை மட்டுமே இயக்க முடியும் "வாகன பதிவு எண்கள் சரியான முறையில் ஆட்டோவில் தெரியும் படி இருக்க வேண்டும் என்று ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தாம்பரம் காவல்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



  • Feb 12, 2025 13:49 IST

    தேமுதிக சார்பில் யார் மாநிலங்களவை செல்வார் என விரைவில் முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

    அதிமுக உடன் கூட்டணி அமைத்தபோதே, ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டது. தேமுதிக சார்பில் யார் மாநிலங்களவை செல்வார் என்பதை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்போம் என சென்னையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.



  • Feb 12, 2025 13:44 IST

    தேர்தல் ஆணையம் குமாஸ்தா வேலை மட்டுமே பார்க்க வேண்டும்: சி.வி.சண்முகம்

    இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும் என்ற அதிமுக சி.வி.சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.



  • Feb 12, 2025 13:42 IST

    காட்டு யானையை துன்புறுத்திய நபருப்பு அபராதம்

    தமிழ்நாடு கர்நாடக இடையே, பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், நடாடிக்கொண்டிருந்த காட்டு யானையை துன்புறுத்திய நபருக்கு ரூ25000, அபராதம் விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. அமைதியான நின்ற யானையில் அருகில் சென்று புகைப்படம் வீடியோ எடுத்து அந்த பதிவுகளை இணையத்தில் வெளியிட்டதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



  • Feb 12, 2025 13:01 IST

    ஆலோசனை ஏதும் நடைபெறவில்லை: செங்கோட்டையன்

    ஆலோசனை ஏதும் நடைபெறவில்லை; அந்தியூர் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு அழைப்பிதழ் தர வந்துள்ளனர். தினமும் என்னை சந்திக்க வீட்டுக்கு 100, 200 பேர் வருவது வழக்கம்தான் என்று அதிமுகவில் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவரது இல்லத்துக்கு நிர்வாகிகள் வந்தது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். 



  • Feb 12, 2025 12:33 IST

    "தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன?" - அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்திற்கு 2 அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. பிரிவு 15இன் படி கட்சிக்குள் பிளவு ஏற்பட்டால் ஆவணங்கள் அடிப்படையில் விசாரிக்கலாம்; 29 ஏ சட்டப்பிரிவின் படி கட்சியை பதிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு; ஆனால், உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று  அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்துள்ளார். 



  • Feb 12, 2025 12:11 IST

    பெண்களுக்கு எதிரான குற்றம் - தலைமைச் செயலாளர் ஆலோசனை

    தமிழகத்தில் சமீபமாக  குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி ஜெயராம் மற்றும் பல்வேறு துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் இதை குறித்து முக்கிய ஆலோசனை செய்து வருகின்றனர். 



  • Feb 12, 2025 12:02 IST

    2026 தேர்தலிலும் மு.க. ஸ்டாலினின் அலைதான் - செந்தில்பாலாஜி

    “தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது. "PRO INCUMBENCY” தான் எங்கும் எதிரொலிக்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அலைதான் தமிழ்நாடு முழுக்க அடித்துக் கொண்டிருக்கிறது. இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்” என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். 



  • Feb 12, 2025 11:41 IST

    விஜய்யுடன் நாங்கள் கூட்டணி அமைப்போமா? - பிரேமலதா விஜயகாந்த்

    விஜய்யுடன் நாங்கள் கூட்டணி அமைப்போமா என்பதை விஜயிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் இருபது வருடக் கட்சி; இந்தக் கேள்வியை எங்களிடம் கேட்கக் கூடாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 



  • Feb 12, 2025 11:10 IST

    தீர்ப்பால் மிக்க மகிழ்ச்சி: புகழேந்தி

    உயர் நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இனி பிரச்னை இல்லை. இரட்டை இலை யாருக்கு என்பதை இனி தேர்தல் ஆணையம் விசாரிக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி கூறியுள்ளார். 



  • Feb 12, 2025 11:07 IST

    சீட்டு நடத்தி கோடிக் கணக்கில் மோசடி - 2பேர் கைது

    சென்னை: பள்ளிக்கரணை சுப்பிரமணி நகர்ப் பகுதியில் கடந்த 1 வருடத்திற்கு மேலாக மாதாந்திர சீட்டு நடத்தி ரூ. 1.5 கோடி மோசடி செய்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதாந்திர சீட்டு, குலுக்கல் சீட்டு, மகளிர் சுய உதவிக் குழு என பல்வேறு நிதி சார்ந்த திட்டங்களை ஒருங்கிணைத்து வந்த மகாலட்சுமி (33) மற்றும் அசோக் குமார் (33) சீட்டு முடிந்தும் 20க்கும் மேற்பட்டவர்களுக்குப் பணம் திருப்பி வழங்கவில்லை என்று புகார். 



  • Feb 12, 2025 11:04 IST

    இரட்டை இலை விவகாரம் - இபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரிய மனு மீது நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம், அருள்முருகன் அமர்வு முடிவெடுத்துள்ளனர். 



  • Feb 12, 2025 10:43 IST

    1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்

    தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சென்னை கொளத்தூர்,.நகர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 33 இடங்களில் மருந்தகங்களை 24 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.



  • Feb 12, 2025 09:56 IST

    "கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது" - தேவா நெகிழ்ச்சி

    "என் பாடல்களுக்கு Copy Rights கேட்க மாட்டேன்" "2K கிட்ஸ் ரசிப்பதை காட்டிலும் பணம் ஒரு பொருட்டல்ல" - இசையமைப்பாளர் தேவா கருத்து



  • Feb 12, 2025 09:51 IST

    ஆந்திராவில் பெண்களுக்கு WORK FROM HOME திட்டம்..

    பெண்களின் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தவும் வேலை - வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும் WORK FROM HOME திட்டத்தை ஆந்திர பிரதேசத்தின் புதிய ஐடி கொள்கையில் செயல்படுத்த உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.



  • Feb 12, 2025 09:05 IST

    இங்கிலாந்தில் சட்டவிரோத குடியேற்றம்- 600 பேர் கைது

    இங்கிலாந்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இந்தியர்கள் உட்பட 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியர்களின் உணவகங்கள், மதுக்கூடங்கள், தேநீர் கடைகளில் குடியேற்ற அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். அமெரிக்காவை அடுத்து இங்கிலாந்திலும் சட்ட விரோத குடியேற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • Feb 12, 2025 09:02 IST

    கமல் - சேகர்பாபு சந்திப்பு

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உடன் அமைச்சர் சேகர்பாபு சந்தித்தார்.



  • Feb 12, 2025 09:02 IST

    புதுச்சேரி சட்டப்பேரவை

    புதுச்சேரியில் இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது.



  • Feb 12, 2025 08:18 IST

    திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட விவகாரம்

    சென்னை திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது கற்களை வைத்தது 15 வயது சிறுவன் என்பது கண்டுபிடிப்பு. விசாரணைக்குப் பிறகு நீதிபதியின் உத்தரவுப்படி சிறுவனை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.



  • Feb 12, 2025 08:17 IST

    சீறும் காளைகள்.. அடக்க திணறும் காளையர்கள்..!

    மதுரை கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது



  • Feb 12, 2025 08:16 IST

    விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து அண்ணாமலை கருத்து

    அவர்கள் எத்தனை முறை சந்தித்தாலும்... நாங்கள் மக்களை சந்திக்கிறோம்.விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். 



  • Feb 12, 2025 07:37 IST

    மாசி மாத பூஜை - சபரிமலை கோயில் நடை திறப்பு

    தமிழின் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. இன்று முதல் பிப்ரவரி 17 ஆம் தேதி வரை 5 நாட்கள் சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறந்து நெய் அபிஷேகம், பூஜைகள் நடைபெறும். 



  • Feb 12, 2025 07:34 IST

    அதிமுக விவகாரம் - இன்று விசாரணை

    அதிமுக விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க விதித்த தடையை எதிர்த்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், அருள் முருகன் அமர்வு இன்று தீர்ப்பு அளிக்க உள்ளன.



  • Feb 12, 2025 07:33 IST

    சென்னையில் எஸ்.பி.பி சாலை

    “இது எங்களோட குடும்பத்துக்கு மட்டும் பெருமை இல்லை. ஒட்டுமொத்த எஸ்.பி.பி. ரசிகர்களுக்கு கிடைச்ச அங்கீகாரம்” மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வசித்த சாலைக்கு அவரது பெயர் சூட்டியது குறித்து அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.சரண் நெகிழ்ச்சி.



  • Feb 12, 2025 07:32 IST

    எந்த உலகத்தில் வாழ்கிறார் நிர்மலா?

    விலைவாசி உயரவில்லை, பணவீக்கம் அதிகரிக்கவில்லை, வேலையின்மை பிரச்சனையே இல்லை எனக் கூறும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த உலகத்தில் வாழ்கிறார் எனத் தெரியவில்லை என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.



  • Feb 12, 2025 07:28 IST

    பாரிஸ் உச்சி மாநாட்டில் உரையாற்றிய மோடி

    ஏஐ தொழில்நுட்பத்தின் பலனை உலகெங்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என பாரிஸில் நடைபெறும் உச்சிமாநாட்டில் பிரதமர் உரையாற்றினார். இந்தியாவில் முதலீடு செய்வதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் பேசியுள்ளார். 



Tamil News Live Update news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: