/indian-express-tamil/media/media_files/2025/04/18/ss3I0QSKVlOgkdxN91do.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
துணைவேந்தர்கள் கூட்டம்: கல்வி நிலையங்களில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்து, கட்டுக்கதையை கற்பிக்கக்கூடாது. மாணவர்களிடம் சமத்துவத்தையும் சமூக நீதியையும் கற்றுத்தர துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
-
Apr 17, 2025 22:26 IST
உலக பாரம்பரிய தினம்: மாமல்லபுரம் புராதன சின்னங்களை ஏப்.18-ல் கட்டணமின்றி பார்க்கலாம் - தொல்லியல்துறை
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை நாளை (ஏப்ரல் 18) கட்டணமின்றி சுற்றிப் பார்க்கலாம் என்று தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
-
Apr 17, 2025 20:39 IST
கருணாநிதி நினைவிடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் போன்று அலங்காரம் அமைத்ததில் எந்த தவறும் இல்லை - சேகர்பாபு
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு: “முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் போன்று அலங்காரம் அமைத்ததில் எந்த தவறும் இல்லை. 2021, 2022, 2023-ம் ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின்போதும், இதுபோன்ரும் கோபுர சின்னத்தை வடிவமைத்து இருந்தோம்” என்று கூறினார்.
-
Apr 17, 2025 19:49 IST
பா.ம.க சித்திரை முழுநிலவு மாநாட்டுக்குழு தலைவராக அன்புமணி நியமனம் - டாக்டர் ராமதாஸ்
“சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான பணிகளை மேற்கொள்ளும் மாநாட்டுக்குழு தலைவராக மருத்துவர் அன்புமணியை நியமித்திருக்கிறேன். மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு நாள் மாநாடு இதுவரை நடந்தவற்றை விட 100 மடங்கு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்” என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Apr 17, 2025 19:45 IST
‘விண்வெளிக் கொள்கை 2025க்கு ஒப்புதல்; 10,000 பேருக்கு வேலை கிடைக்கும்’ - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
“முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளி கொள்கை 2025க்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு ஈர்ப்பது முக்கிய இலக்கு ஆகும். இதன் மூலம் 10,000 பேருக்கு வேலை கிடைக்கும். குலசேகரப்பட்டினம் போன்ற தென் தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கு இது வரப்பிரசாதம்”
என்று அமைச்சரவை கூட்டத்திற்கு பின் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்தார். -
Apr 17, 2025 19:25 IST
பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம்: கட்சி நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க தலைமை வேண்டுகோள்
கட்சியின் நிலைப்பாடு மற்றும் செயல்பாட் குறித்து பொதுவெளியில் கட்சியின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடு குறித்து பொது வெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் அ.தி.மு.க தலைமையின் அனுமதியின்றி கட்சியினர் யாரும் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க வேண்டாம் என்றும் அ.தி.மு.க தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
Apr 17, 2025 18:58 IST
ஈரோடு, ராணிப்பேட்டையில் பிரமாண்ட முருகன் சிலைகள்
ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுத சுவாமி திருக்கோயிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக 180 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும். ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.6.83 கோடி மதிப்பீட்டில் புதியதாக 114 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்
-
Apr 17, 2025 18:46 IST
மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் - அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகைதரும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் மலைக்கோயிலை எளிதில் சென்றடைய கட்டணமின்றி இழுவை இரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதேபோல் பழனி தண்டாயுதபாணிசுவாமி கோயில், சோளிங்கர் லட்சுமிநரசிம்ம சுவாமி கோயில், கரூர் அய்யர்மலை இரத்தின கிரீசுவரர் கோயில்களில் மாற்றுத்திறனாளி பக்தர்கள் எளிதில் சென்றடைய கட்டணமின்றி கம்பிவட ஊர்தியில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
-
Apr 17, 2025 18:41 IST
தமிழக அமைச்சரவை கூட்டம் தொடக்கம்
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. புதிய தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.
-
Apr 17, 2025 18:35 IST
அ.தி.மு.க உட்கட்சி விவகாரம்; தேர்தல் ஆணையம் விசாரணை
அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பாக, சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக அ.தி.மு.க தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சூர்யமூர்த்தி என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
-
Apr 17, 2025 18:26 IST
யானை சின்னம் வழக்கு; விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
த.வெ.க கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் என். ஆனந்த் ஏப்ரல் 29க்குள் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Apr 17, 2025 18:24 IST
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். மசோதாக்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, டெல்லி செல்வதால் ஆளுநரின் பயணம் கவனம் பெறுகிறது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, மசோதாக்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் ஆளுநர் சொந்த காரணங்களுக்காகவே டெல்லி செல்வதாகவும் கூறப்படுகிறது
-
Apr 17, 2025 17:57 IST
பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும் - ஐகோர்ட்
அமைச்சர் பொன்முடி மீது புகார் இல்லாமல் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும் என பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார். அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என்று கூறிய நீதிபதிகள் ஏப்ரல் 23ம் தேதி வழக்கு மீதான நடவடிக்கை குறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்
-
Apr 17, 2025 17:55 IST
வடை, பாயாசத்துடன் அன்னதானம் – சேகர் பாபு
நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறும் 13 திருக்கோயில்கள் மற்றும் இவ்வாண்டு அன்னதானத் திட்டம் விரிவு படுத்தப்படவுள்ள 2 திருக்கோயில்களிலும், வழக்கமாக வழங்கும் அன்னதான உணவுடன் வடை மற்றும் பாயாசம் சேர்த்து வழங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்
-
Apr 17, 2025 17:50 IST
கோயிலில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் – சேகர் பாபு
சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு 10 திருக்கோயில்களில் தினசரி காய்ச்சிய பால் வழங்கப்படும். இத்திட்டம் 10 திருக்கோயில்களில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் செலவினத்தில் செயல்படுத்தப்படும்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், பண்ணாரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில் ஆகிய கோயில்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்
-
Apr 17, 2025 17:46 IST
சூர்யாவின் 'ரெட்ரோ' படம் - கெட்ட வார்த்தைகளை மியூட் செய்ய உத்தரவு
நடிகர் சூர்யாவின் 'ரெட்ரோ' படத்தில் உள்ள கெட்ட வார்த்தைகளை மியூட் செய்ய தணிக்கை குழு உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' திரைப்படத்தில் மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற காட்சிகளுக்கு டிஸ்க்ளைமர் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற படங்களில் உள்ள பாடல்களை பயன்படுத்திக் கொள்ள என்ஓசி வழங்கியதால் படத்தில் வைத்துக் கொள்ள தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளது. சூர்யாவின் "ரெட்ரோ" படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது
-
Apr 17, 2025 17:44 IST
ஒருகால பூஜைக்கு ரூ.25 கோடி நிதி – சேகர் பாபு
ஒருகால பூஜைத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 18,000 திருக்கோயில்கள் பயனடைந்து வருகின்றன. இவ்வாண்டு 1000 நிதி வசதியற்ற கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ.25 கோடி அரசு நிதியாக வழங்கப்படும் என பேரவையில் அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்
-
Apr 17, 2025 17:43 IST
1000 ஜோடிகளுக்கு திருமணம் - அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு
திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட சீர்வரிசைகள் வழங்கி கடந்த மூன்றுஆண்டுகளில் 1800 இணைகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இவ்வாண்டும் 1000 இணைகளுக்கு 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.70,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்திவைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்
-
Apr 17, 2025 17:40 IST
சட்டப்பிரிவு 142 ஒரு அணு ஆயுதமாக மாறியுள்ளது; உச்ச நீதிமன்றம் குறித்து ஜெகதீப் தன்கர் கடும் விமர்சனம்
குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் உச்சநீதிமன்றம் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அரசியல் ஜனநாயகத்திற்கு எதிராக சட்டப்பிரிவு 142 ஒரு அணு ஆயுதமாக மாறியுள்ளது. 30க்கும் மேற்பட்ட நீதிபதிகள் உள்ள நிலையில், 5 நீதிபதிகள் மட்டுமே தீர்மானிக்கிறார்கள் என்பது சரியான நடைமுறை அல்ல. ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஆயுதமாக சட்டப்பிரிவு 142 உள்ளது. அதை சீரமைக்க வேண்டியது அவசியம் என ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்
-
Apr 17, 2025 17:37 IST
பணி நியமனத்தில் முன்னுரிமை
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் உள்ள ஓதுவார் காலிப் பணியிடங்களில் திருக்கோயில்கள் சார்பில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயின்று சான்றிதழ் பெற்ற ஓதுவார்களுக்கும், பெண் ஓதுவார்களுக்கும் பணிநியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்
-
Apr 17, 2025 17:36 IST
அர்ச்சர்கள் ஊக்கத் தொகை உயர்வு
ஒருகால பூசைத்திட்ட திருக்கோயில்களில் பூசைசெய்யும் அர்ச்சர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மாத ஊக்கத் தொகை ரூ.1,000 லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்
-
Apr 17, 2025 17:35 IST
திருவிழா காலங்களில் நாள் முழுவதும் அன்னதானம் – சேகர் பாபு
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமைகள் மற்றும் விழா நாட்களிலும், இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோயிலில் திருவிழா மற்றும் சிறப்பு நாட்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்
-
Apr 17, 2025 17:08 IST
'வக்ஃப்' என்ற பெயரில் நடந்து வந்த கொள்ளை நிறுத்தம்: பாஜக எம்பி அனுராக் தாக்கூர்
"இரண்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஒரு சிலர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. சில தலைவர்கள், ஒத்துழைப்புடன், மால்கள் கட்ட கல்லறை நிலங்களை கூட விற்றனர். மற்றவர்கள் வெறும் ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு 5 நட்சத்திர ஹோட்டல் கட்ட அனுமதித்தனர். 'வக்ஃப்' என்ற பெயரில் நடந்து வந்த இந்த வெளிப்படையான கொள்ளை இப்போது நிறுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த நிலங்களின் நன்மைகள் இப்போது முஸ்லிம் பெண்கள், விதவைகள், பெண்கள், குழந்தைகள், கல்வி மையங்கள், சுகாதார மையங்கள் மற்றும் அவர்களின் உதவி வடிவில் செல்லும். இது எங்கள் உறுதிமொழி, அதை நாங்கள் நிறைவேற்றுவோம், ”என்று வக்ஃப் (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தபோது பாஜக எம்பி அனுராக் தாக்கூர் கூறினார்.
-
Apr 17, 2025 15:53 IST
இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்பேன்: த.வெ.க விஜய்
வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
— TVK Vijay (@TVKVijayHQ) April 17, 2025
இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம்…இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய திரு. அபிஷேக் சிங்வி அவர்களுக்கும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Apr 17, 2025 14:50 IST
நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மனு முடித்துவைப்பு
நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. மராட்டிய துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நடிகர் குணால் கம்ரா மனு தாக்கல் செய்திருந்தார். விழுப்புரத்தில் வசித்து வருவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணையில் மும்பை உயர் நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியதால் குணால் கம்ரா மனு முடித்து வைத்து ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
-
Apr 17, 2025 14:33 IST
தெய்வங்களின் வாக்கு தி.மு.க-க்கு தான் - சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பேச்சு
"தெய்வங்களுக்கு வாக்குரிமை இருந்தால் அந்த வாக்கும் எங்கள் முதலமைச்சருக்கு தான் கிடைக்கும். சமய அறநிலையத்துறை மூலம் 1800 திருமணங்கள் நடந்துள்ளன என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தி.மு.க ஆட்சியில் 2820 குடமுழுக்குகள் நடந்துள்ளன; அதில் 820 அம்மன் கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. கோயில் திருப்பணிகளுக்கு ரூ.1,320 கோடி நிதி.
தமிழகத்தில் கோயில் திருப்பணிகளுக்காக உபயதாரர். நிதியாக மட்டும் ரூ.1,320 கோடி வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2,820 குடமுழுக்கு நடைப்பெற்றுள்ளது 10 ஆயிரம் கிராமப்புற கோயில்களின் திருப்பணிகளுக்காக ரூ.212 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது." என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
-
Apr 17, 2025 14:21 IST
சாதி அடையாளம் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவுக்கு தி.வி.க. வரவேற்பு
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் சாதி அடையாளத்தை குறிக்கும் கயிறு, டீ சட்டை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை உத்தரவுக்கு திராவிடர் விடுதலை கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் வரவேற்பு தெரிவித்தார்.
-
Apr 17, 2025 13:40 IST
தீரன் சின்னமலை வீரம், புகழை போற்றுவோம் - ராமதாஸ்
தீரன் சின்னமலையின் வீரத்தையும், புகழையும் அவரது பிறந்தநாளில் போற்றுவோம். மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
Apr 17, 2025 13:34 IST
அடுத்த 7 நாட்களுக்கு கோடை மழை பெய்யும் என கணிப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். மாநிலத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழையும், சென்னையில் லேசான மழையும் பெய்யும் எனவும் கணிப்பு
-
Apr 17, 2025 13:19 IST
நினைவிடத்தில் கோபுர அலங்காரம் - நயினார் கண்டனம்
"சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா? இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்; பிரச்சினைக்குரிய அலங்காரத்தை உடனடியாக நீக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட வலியறுத்தல் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோவில் கோபுரம் போல அலங்கரிக்கப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Apr 17, 2025 13:00 IST
தட்கல் டிக்கெட்டுக்கு எதிரான வழக்கு - சுப்ரீம் கோர்ட் விசாரிக்க மறுப்பு
தட்கல் ரயில் டிக்கெட் பதிவு முறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது. "பொதுவாக பொருளாதாரம் சார்ந்த அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது" என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
-
Apr 17, 2025 12:27 IST
தலை துண்டித்து இளைஞர் கொலை - 4 பேர் கைது
தென்காசியில் மனைவி முன்பு கணவர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரை கைது செய்துள்ளனர் காவல் துறையினர். கீழப்புலியூரில் ரேஷன் கடையில் நின்றிருந்த குத்தாலிங்கத்தை தலையை துண்டித்து கொன்ற கும்பல்; ரமேஷ், ஹரிஹரன், செண்பகம் உள்ளிட்ட 4 பேரை கைதுசெய்தது காவல் துறையினர்; காசிமேஜர்புரத்தில் 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமண விழாவில் ஏற்பட்ட மோதல் என்பது அம்பலமாகியுள்ளது. டிஜிட்டல் பேனர் வைப்பது தொடர்பான மோதலில் பட்டு ராஜ் கொல்லப்பட்டதற்கு பழிக்குப்பழி வாங்கிய கும்பல்
-
Apr 17, 2025 12:23 IST
கடும் வாகன நெரிசல் - வாகன ஓட்டிகள் அவதி
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருவதால் சென்னை கிண்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் அணிவகுத்து வாகனங்கள் அப்படியே நின்றுள்ளன.
-
Apr 17, 2025 12:17 IST
சாதியவாதிகளிடம் தமிழ்நாடு அரசு தோற்பது ஏன்? - விசிக எம்.பி. ரவிக்குமார்
சனாதனவாதிகளிடம் வெற்றி காணும் தமிழ்நாடு அரசு சாதியவாதிகளிடம் தோற்பது ஏன்? என்று நெல்லை மாணவன் சின்னத்துரை மீண்டும் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் விசிக எம்.பி. ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்.
-
Apr 17, 2025 11:56 IST
அ.தி.மு.க கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை - பா.ஜ.க
அ.தி.மு.க உடனான கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்று பா.ஜ.க தேசிய தலைமை விளக்கமளித்துள்ளது. சில பேச்சுகள் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறதே தவிர, கூட்டணி பலமாகவே உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகம் வகுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறோம் என்று தேசிய தலைமை தெரிவித்துள்ளது.
-
Apr 17, 2025 11:25 IST
விசைத்தறியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றுக: இ.பி.எஸ்
பேச்சுவார்த்தை நடத்தி விசைத்தறியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் வலியுறுத்தி உள்ளார். வேலை நிறுத்தம் காரணமாக லட்சக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு என பேரவையில் பேசினார். 2 ஆயிரம் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூலி குறைத்து வழங்கப்படுவதாக கூறினார். கூலி உயர்வு குறித்து ஜவுளி உற்பத்தியாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பழனிசாமி வலியுறுத்தினார்.
-
Apr 17, 2025 11:21 IST
"கருணாநிதி நினைவிடத்தில் கோபுரம் போல் பூ அலங்காரம்"
இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கையையொட்டி அமைச்சர் சேகர்பாபு கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, கருணாநிதியின் நினைவிடம் கோவில் கோபுரம் போல் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது இந்து சமயத்தினரின் மனங்களை புண்படுத்துவதாக அமைந்திருப்பதாக சர்ச்சையும் எழுந்துள்ளது.
-
Apr 17, 2025 10:51 IST
நீட் முதுநிலை தேர்வு -விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்
நீட் முதுநிலை தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு 2025 ஏப்ரல் 17ஆம் தேதியான இன்று தொடங்குறது. இன்று முதல் 2025 மே 7ஆம் தேதி இரவு 11.55 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்படுகிறது. நீட் முதுநிலை தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ளது.
-
Apr 17, 2025 10:38 IST
2025-26ம் ஆண்டில் 30 புதிய பூங்காக்கள்: கே.என்.நேரு
சென்னையில் 908 பூங்காக்களும், 724 விளையாட்டு அரங்கங்களும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. தற்போது 32 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணி ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் 2025 - 2026ம் ஆண்டில் 30 புதிய பூங்காக்கள் 60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. 273 பூங்காக்கள் 30 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்
-
Apr 17, 2025 10:14 IST
தீரன் சின்னமலை சிலைக்கு இ.பி.எஸ். மலர்தூவி மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
Apr 17, 2025 09:57 IST
நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை!
இன்று ஒரே நாளில் சவானுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71, 360க்கு விற்பனையாகிறது.
-
Apr 17, 2025 09:56 IST
தீரன் சின்னமலை சிலைக்கு ஸ்டாலின் மரியாதை
தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை, கொங்கு ஈஸ்வரம் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
-
Apr 17, 2025 09:22 IST
தங்கம் வென்ற சுருச்சி
பெரு நாட்டில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. 243.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர் சிங் வென்றார்.
-
Apr 17, 2025 09:20 IST
தமிழக மீனவர்கள் 4 பேர் மீது தாக்குதல்
நாகை கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 4 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மயிலாடுதுறை, புதுப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் மீது அரிவாள், கல், கட்டை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழக மீனவர்களை தாக்கி ஜிபிஎஸ் கருவி, செல்போன் மற்றும் மீன்களை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர். காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Apr 17, 2025 09:17 IST
செல்வப்பெருந்தகை உட்பட 214 பேர் மீது வழக்கு
சென்னை சாஸ்திரி பவன் முற்றுகையில் ஈடுபட்ட செல்வபெருந்தகை உட்பட 214 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கையை கண்டித்து நேற்று முற்றுகை நடைபெற்றது. நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முற்றுகையில் ஈடுபட முயன்ற ரூபி மனோகரன், தங்கபாலு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 214 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Apr 17, 2025 09:01 IST
கர்நாடகாவில் இன்று சிறப்பு அமைச்சரவை கூட்டம்
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக கர்நாடகாவில் இன்று சிறப்பு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. கர்நாடகாவில் சமூக, பொருளாதார, கல்வி, சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை ஏப்ரல் 11இல் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கை தொடர்பான விரிவான விவாதத்திற்காக சிறப்பு அமைச்சரவை இன்று கூடுகிறது.
-
Apr 17, 2025 08:53 IST
தவெக தலைவர் விஜயை இஸ்லாமியர்கள் எல்லோரும் நேசிக்கிறார்கள்
விஜயை எந்த நிகழ்ச்சிக்கும் இஸ்லாமியர்கள் அழைக்க வேண்டாம்' என அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ராஸ்வி தெரிவித்திருந்த நிலையில், அவரது பேச்சுக்கு தமிழ்நாடு முஸ்லீம் லீக் முஸ்தபா பதில் அளித்துள்ளார்.
-
Apr 17, 2025 08:27 IST
மாநில சுயாட்சியின் தேவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாநில அரசுகளை அதிகாரமற்றவைகளாக மாற்றி அதனை சட்டமியற்றும் தகுதியற்றவைகளாக தகுதியை குறைத்து சொன்னதை செய்யும் கிளிப் பிள்ளையாக ஒன்றிய பாஜக அரசு மாற்ற நினைகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஒத்திசைவு பட்டியல் அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றிய அதிகாரங்களாக மாற்றி விட்டது. மாநில அமைப்பை காப்பதே மக்களை காக்கும் என்பதால் மாநில சுயாட்சி முழக்கத்தை திமுக ஓங்கி ஒலிக்கிறது என்றும் மாநில சுயாட்சி ஏன் தேவை என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
Apr 17, 2025 08:16 IST
பல்கலை.யை கட்சி அலுவலகமாக மாற்றாதீர் - தமிழிசை சௌந்தரராஜன்
பல்கலைக்கழகங்களை கட்சி தலைமை அலுவலகங்களாக மாற்றிவிடாதீர்கள். அறிவு அரங்கமாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகங்களை அறிவாலயங்களாக மாற்றிவிடாதீர். உங்கள் விருப்பு வெறுப்பிற்கு ஏற்ப தமிழக மாணவர்களின் எதிர்காலைத்தை சிதைக்கிறீர்கள். நம் இந்திய குழந்தைகளை அரங்கிற்கு உயர்த்துவது தான் புதிய கல்விக் கொள்கை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
-
Apr 17, 2025 08:12 IST
இன்று கூடுகிறது அமைச்சரவை
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூடுகிறது.
-
Apr 17, 2025 07:47 IST
3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.