/indian-express-tamil/media/media_files/2025/04/18/547DwmCYIyP0aa2mlonI.png)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ91.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Apr 18, 2025 22:21 IST
திருமாவளவனுக்கு வன்னியர் சங்க மாநாட்டு அழைப்பிதழ் வழங்கிய பா.ம.க நிர்வாகி
வி.சி.க தலைவர் திருமாவளவனின் கார் அரக்கோணம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, கும்பினிப்பேட்டை பகுதியில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பா.ம.க செயலாளர் சரவணன், வன்னியர் சங்கம் நடத்தும் முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார். பா.ம.க, பா.ஜ.க இருக்கும் கூட்டணியில் வி.சி.க இருக்காது என்று திருமாவளவன் கூறிவரும் நிலையில், பா.ம.க நிர்வாகி திருமாவளவனுக்கு வன்னியர் சங்க அழைப்பிதழ் வழங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
-
Apr 18, 2025 21:18 IST
சென்னையில் ஏப். 19 முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவை தொடக்கம்
ன்னை புறநகர் ரயில் சேவையில் நாளை (19.04.2025)_ முதல் குளிர்சாதன மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை - கடற்கரை செங்கல்பட்டு மார்க்கத்தில் காலை 7 மணிக்கு குளிர்சாதன மின்சார ரயில் சேவை தொடங்குகிறது.
-
Apr 18, 2025 19:51 IST
கூட்டணி விவகாரத்தை யார்ம் வெளியே பேசாதீர்கள் - பா.ஜ.க இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அறிவுறுத்தல்
பா.ஜ.க தமிழ்நாடு இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அறிக்கை: “கூட்டணி விவகாரங்கள் குறித்து யாரும் பொதுவெளியில் கருத்து கூற வேண்டாம் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதே போல, பா.ஜ.க-விற்கும் தேசியத் தலைமையிடம் இருந்தும் வழிகாட்டுதல் வரும்; கொள்கை விஷயங்களை யாரும் வெளியே பேச வேண்டாம்; உள் கூட்டங்களின்போது அதைப் பற்றி விவாதிக்கலாம்” என்று கூறினார்.
-
Apr 18, 2025 18:15 IST
கஞ்சா செடி வளர்த்த மத்திய அரசு அதிகாரி கைது
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாடகை வீட்டில் கஞ்சா செடி வளர்த்த ராஜஸ்தானைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரியை போலீசார் கைது செய்தனர்
-
Apr 18, 2025 17:41 IST
விசாரணை கைதிகளுக்கான விதிமுறை
சிறையில் உள்ள விசாரணை கைதிகளின் நெருங்கிய உறவினர் இறுதிச் சடங்கில் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில், சுற்றறிக்கை வெளியிட தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கும் நிலையில், விசாரணை கைதிகள் நீதிமன்றங்களை நாட வேண்டிய நிலை உள்ளது.
-
Apr 18, 2025 17:21 IST
வக்பு மசோதாவை கண்டித்து போராட்டம்
வக்பு மசோதாவை கண்டித்து சென்னை பாரிமுனை பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
-
Apr 18, 2025 16:32 IST
ஸ்டாலின் என்ன வேண்டுமானாலும் பேசலாம் - நயினார் நாகேந்திரன்
முதலமைச்சர் ஸ்டாலின் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மத்திய அரசுக்கு தமிழ்நாடு எப்போதுமே out of control என்று ஸ்டாலின் கூறியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, நயினார் நாகேந்திரன் இவ்வாறு பதில் அளித்தார்.
-
Apr 18, 2025 16:19 IST
9 மாவட்டங்களில் குழாய் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் குழாய் எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு கடற்கரை ஒருங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 466 கி.மீ நீளத்திற்கு இதற்கான குழாய் அமைக்கப்படும் நிலையில், 260 கி.மீ ஆணைய பகுதிகளில் வருகிறது. ரூ. 48 கோடி மதிப்பிலான குழாய் எரிவாயு திட்டத்தை டோரன்ட் கேஸ் நிறுவனம் செயல்படுத்த இருக்கிறது.
-
Apr 18, 2025 16:11 IST
"அனைவருக்கும் புனித வெள்ளி வாழ்த்து" - ஓ.பி.எஸ்
ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் இருந்து வீடு திரும்பிய ஓ.பி.எஸ், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்த கேள்விக்கு இன்று விடுமுறை என அவர் பதில் அளித்துள்ளார்.
-
Apr 18, 2025 16:08 IST
விமான நிலைய முனையத்தில் பேருந்து சேவை
சென்னை விமான நிலையம் உள்ளே இருந்து விரைவில் மாநகர போக்குவரத்து பேருந்து சேவை தொடங்கப்பட்ட உள்ளது. தற்போது ஜிஎஸ்டி சாலையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விரைவில் விமான நிலைய முனையத்திற்கு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
Apr 18, 2025 14:24 IST
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Apr 18, 2025 14:22 IST
17 வயது சிறுவன் கடத்தி சித்திரவதை - சென்னையில் கொடூரம்
சென்னை மண்ணடியில் 17 வயது சிறுவனை கடத்தி, பணம், நகைகளை தரவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Apr 18, 2025 13:34 IST
“அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பெற்றுத் தருவோம்” -மு.க.ஸ்டாலின்
ஆகஸ்ட் 15 விடுதலை நாளன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை எப்படி கலைஞர் பெற்றுத் தந்தாரோ.. அதே போல, மாநில சுயாட்சி தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் மூலமாக, அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பெற்றுத் தருவோம். மாநிலங்கள் சுயாட்சி பெற்றவையாக இருந்தால்தான், இங்குள்ள மக்களுக்கு தேவையானதை செய்ய முடியும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
Apr 18, 2025 13:12 IST
எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது-முதல்வர்
“அமித் ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது; இது தமிழ்நாடு 2026 தேர்தலிலும் திராவிட மாடல் ஆட்சி; உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்; டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றுமே அடிபணியாது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளர்.
-
Apr 18, 2025 13:10 IST
தமிழ்நாடு Out of Controlதான்: முதல்வர்
“மத்திய அரசுக்கு தமிழ்நாடு எப்போதுமே Out of Control தான்; உங்கள் பரிவாரங்கள் அனைத்தையும் அழைத்து வாருங்கள்; ஒரு கை பார்த்துவிடலாம் மற்ற மாநிலங்களில் செய்வதுபோல் தமிழ்நாட்டில் உங்கள் வேலையை காட்ட முடியாது; டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றும் அடிபணியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
Apr 18, 2025 12:54 IST
மாநில உரிமைகளின் அகில இந்திய முகம் திமுக: முதல்வர்
“மாநில உரிமைகளுக்கான அகில இந்திய முகமாக திமுக உள்ளது; இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்துதான் போராடுகிறது. அமித்ஷா நமது கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் திசைதிருப்புவதற்காக ஏதோ பேசிவிட்டு சென்றிருக்கிறார்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது கூறியுள்ளார்.
-
Apr 18, 2025 12:45 IST
ஆட்சிக்கு எதிராக அவதூறு பரப்புகின்றனர்: முதல்வர்
"ஆட்சி மீது எந்த குறையும் சொல்ல முடியாததால் அவதூறு பரப்பி வருகின்றனர் எதிர்க்கட்சிகள் பொறுப்பாக செயல்படாமல் எதிரி கட்சிகள் போல் செயல்படுகின்றன தமிழ்நாட்டை அடகு வைக்க வேண்டும் என்பதே சந்தர்ப்பவாதிகளின் ஒரே நோக்கம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
Apr 18, 2025 12:40 IST
தொழில்வளாகங்களை உருவாக்கியவர் கலைஞர்: முதல்வர்
"சென்னை சுற்றுவட்டாரங்களில் தொழில்வளாகங்களை உருவாக்கியது கலைஞர் கருணாநிதி. கண்ணாடி முதல் கார் வரை அனைத்து தொழில்களும் அவரது ஆட்சியில் தொடங்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
Apr 18, 2025 12:38 IST
இ.பி.எஸ் தலைமையில் மீண்டும் சிறப்பான ஆட்சி அமையும் - செங்கோட்டையன் பேச்சு
"ஈபிஎஸ் தலைமையில் சிறப்பான ஆட்சி அமையும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பான ஆட்சியை வழங்கினார். 2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் சிறப்பான ஆட்சி அமையும்" என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
Apr 18, 2025 12:25 IST
அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிய ஆலோசனை
அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய சட்ட நிபுணர்களுடன் சென்னை மாநகர காவல்துறை ஆலோசனை. என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியும் என சைபர் கிரைம் போலீசார் ஆலோசனை செய்து வருகின்றனர்.
-
Apr 18, 2025 12:19 IST
கூட்டணி பற்றி தொண்டர்கள் பேசக் கூடாது: நயினார்
அதிமுக கூட்டணி குறித்து தொண்டர்கள் எந்த கருத்தும் சொல்லக் கூடாது தயவு செய்து எந்த கருத்தும் சொல்லாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன். கூட்டணி விவகாரங்களை எல்லாம் தலைமை பார்த்துக் கொள்ளும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
-
Apr 18, 2025 11:14 IST
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் 2-ம் கட்ட சோதனை ஓட்டம்
சென்னையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் 2-ம் கட்ட சோதனை ஓட்டம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. பூந்தமல்லி பனிமனை முதல், போரூர் வரை மொத்தம் 6 கி.மீ சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
-
Apr 18, 2025 11:05 IST
அதிமுக – பாஜக கூட்டணி துப்பாக்கி முணையில் நடந்த கட்டாய திருமணம்: கார்த்தி சிதம்பரம்
அதிமுக – பாஜக கூட்டணி துப்பாக்கி முணையில் நடந்த கட்டாய திருமணம் போன்றது. இந்த கூட்டணி விரும்பி வந்தது போல் இல்லை. அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடம் பேசியபோது, அவர்கள் இக்கூட்டணியை விரும்பவில்லை என்பதை உணர முடிந்தது என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
-
Apr 18, 2025 11:02 IST
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.
ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
ரூ.357.43 கோடி மதிப்பில் 2,02,531 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
-
Apr 18, 2025 10:17 IST
புதுச்சேரியில் சிலுவைப் பாதை ஊர்வலம்
புனித வெள்ளிபண்டிகயை முன்னிட்டு, புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள புனித ஜென்மராக்கினி பேராலயம் சார்பில் சிலுவைப் பாதை ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
-
Apr 18, 2025 09:44 IST
நாங்கள் இந்துக்கள் தான்; மகாராஷ்டிரா பள்ளிகளில் கட்டாய இந்தி மொழி - ராஜ் தாக்கரே எதிர்ப்பு
புதிய கல்வியைக் கொள்கையை மகாராஷ்டிரா அமல்படுத்தும் நிலையில், அங்கு 2025-26 கல்வியாண்டிலிருந்து மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி கட்டாய மூன்றாம் மொழியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இதை மிகக் கடுமையாக எதிர்த்துள்ள மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, தாங்கள் இந்துக்கள் தானே தவிர இந்தி இல்லை என்றும் இந்தி மயமாக்கலுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
-
Apr 18, 2025 09:06 IST
அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்பட்க்கூடாது என முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த அறிவுரை வழங்கினார். அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோரின் பேச்சு சர்ச்சையான நிலையில் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
-
Apr 18, 2025 08:36 IST
இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு
இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுப்பேட்டை மீனவர்கள் 4 பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கையைச் சேர்ந்த 3 நபர்கள் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
-
Apr 18, 2025 08:17 IST
பால் எடுக்கும் இயந்திரம் வாங்கப்படும்
20,000 பால் எடுக்கும் இயந்திரம் வாங்கப்படும் பென்னாகரத்தில் பால் உற்பத்தி அதிகமாக உள்ளதால் அங்கு ஐயாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் குளிரூட்டு நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
-
Apr 18, 2025 08:14 IST
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் போலீசார் நடத்திய சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
-
Apr 18, 2025 07:50 IST
`புலே' ரிலீஸ் விவகாரம் - கொந்தளித்த அனுராக் காஷ்யப்
சமூகச் சீர்திருத்தவாதி ஜோதி ராவ் புலேவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகிய ‘புலே' திரைப்படத்திற்கு எதிர்ப்பு எழுந்ததால் ரிலீஸ் தள்ளிப்போனது. புலே திரைப்படம் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போனதை தொடர்ந்து, தணிக்கை குழுவை இயக்குநர் அனுராக் காஷ்யப் கடுமையாக விமர்சித்திருக்கிறார். "நாட்டில் சாதிகளே இல்லையென்றால், ஜோதிபாவும் சாவித்ரி புலேவும் அதை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் என்ன? தணிக்கைக்குச் செல்லும் ஒரு படத்தை, சென்சார் அதிகாரிகள் நால்வரை தாண்டியும் சில குழுக்கள் பார்ப்பதும், பின் அதை எதிர்ப்பதும் எப்படி? இங்கு மொத்த சிஸ்டமே தவறாக உள்ளது" என்று அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.
-
Apr 18, 2025 07:47 IST
| திருப்பதியில் தக தகவெனப் பற்றி எரிந்த கார்
ஆந்திராவில் இருந்து திருப்பதி வந்த கார் பார்க்கிங்கில் நின்றபோது திடீரென தீப்பிடித்டு எரிந்தது. தொடர்ச்சியாக 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரை இயக்கியதே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
-
Apr 18, 2025 07:45 IST
பாலியல் புகாரில் JNU பேராசிரியர் பணி நீக்கம்!
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜப்பான் தூதரக பெண் அதிகாரியை பாலியல் துன்புறுத்தல் செய்த மூத்த பேராசிரியர் ஸ்வரன் சிங் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-
Apr 18, 2025 07:28 IST
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Apr 18, 2025 07:27 IST
மாமல்லபுரத்திற்கு அனுமதி இலவசம்.
மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுரசிக்க இன்று அனுமதி இலவசம். உலக பாரம்பரிய தினம் கடைப்பிடிக்கப்படுவதால் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
-
Apr 18, 2025 07:26 IST
கார்த்திக், ஜெயம்ரவி சபரிமலையில் தரிசனம்
சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி சுவாமி தரிசனம் செய்தனர். வரிசையில் சென்று ஐயப்பனை பார்த்து கையெடுத்து கும்பிட்டு தரிசனம் செய்தனர்.
-
Apr 18, 2025 07:24 IST
புனித வெள்ளி-சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
புனித வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி கும்பகோணம் கோட்டம் சார்பில் சிற்ப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஏப்ரல் 18 முதல் 20 வரை 625 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்க கும்பகோணம் கோட்டம் அறிவித்துள்ளது.
-
Apr 18, 2025 07:22 IST
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ91.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.