/indian-express-tamil/media/media_files/2024/12/20/kLihorh5nyvngtu2qRYb.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Apr 19, 2025 22:31 IST
சின்னதுரை மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது
நெல்லையில் பட்டியலின மாணவர் சின்னதுரை மீது தாக்குதல் நடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் மேலும் இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதன்படி, கைது செய்யப்பட்ட சங்கர நாராயணன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
-
Apr 19, 2025 21:39 IST
நடிகர் தனுஷின் 'இட்லி கடை' படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் நடிகர் தனுஷின் 'இட்லி கடை' படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. முன்னதாக, படப்பிடிப்பை மற்றொரு இடத்திற்கு மாற்றியதால், இதற்காக போடப்பட்டிருந்த அரங்குகளை அகற்றாமல் வைத்திருந்தனர். இந்நிலையில், இந்த படப்பிடிப்பு தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
-
Apr 19, 2025 19:43 IST
கட்சியில் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் - துரை வைகோ
கட்சியில் தொண்டனாகவே இருக்க விருப்பப்படுவதாக துரை வைகோ தெரிவித்துள்ளார். அதன்படி, "என்னால் பிரச்சனை வேண்டாம் என்று நினைக்கிறேன். கட்சியில் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். நிர்பந்தத்தாலேயே அரசியலுக்கு வந்தேன்; தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பத்தின் பேரில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Apr 19, 2025 19:14 IST
நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமினில் விடுவிப்பு
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் விவகாரத்தில் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் இன்று காலை ஆஜராகி கைதான நடிகர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
-
Apr 19, 2025 19:12 IST
உட்கட்சி விவகாரம், வெளியில் விவாதிக்க முடியாது: துரை வைகோ
மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் பதவியை ராஜினாமா செய்த துரை வைகோ, பதவியில் இருப்பதால்தான் பிரச்சினை வருகிறது, தொண்டனாக தொடர்வேன். தேர்தல் அரசியல் எனக்கு வேண்டாம், விருப்பம் இல்லை. இது உட்கட்சி விவகாரம் வெளியில் விவாதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
-
Apr 19, 2025 18:22 IST
நடிகைகள் சமந்தா மற்றும் கயாடு லோஹர் திருப்பதியில் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகைகள் சமந்தா மற்றும் கயாடு லோஹர் சாமி தரிசனம் செய்தனர். நடிகைகள் சமந்தா, கயாடு லோஹர் உடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்
-
Apr 19, 2025 18:17 IST
புதுச்சேரி தொடர் வெடிகுண்டு மிரட்டல்: மர்மநபரை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார்
புதுச்சேரியில் கவர்னர் மாளிகை, முதலமைச்சர் வீடு என தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கிறது, டார்க் நெட்டை பயன்படுத்தி மிரட்டல் விடும் மர்ம நபரை நெருங்க முடியாமல் புதுச்சேரி போலீசார் திணறி வருகின்றனர். மத்திய சைபர் கிரைம் உதவி கோரி புதுச்சேரி போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்
-
Apr 19, 2025 17:17 IST
அ.தி.மு.க செய்வது வரலாற்றுப் பிழை - திருமாவளவன்
அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையேயான கூட்டணி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். குறிப்பாக, பா.ஜ.க-வின் வாக்கு வங்கியை வலுப்படுத்த அ.தி.மு.க துணை போவது வரலாற்றுப் பிழை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த முடிவை அ.தி.மு.க மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
-
Apr 19, 2025 17:06 IST
நுங்கம்பாக்கத்தில் சாலையில் கான்கிரீட் கலவை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் கான்கிரீட் கலவை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்ததால் கான்கிரீட் கலவை சாலையில் சிந்தி, சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
Apr 19, 2025 17:02 IST
'8 தோட்டாக்கள்' படத்தில் நடித்த வெற்றி நடிப்பில் புதிய படம்
'8 தோட்டாக்கள்' படத்தில் நடித்த வெற்றி, காவல்துறை அதிகாரியாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. ஹாரூன் இயக்கும் இப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார். கதாநாயகியாக அக்ஷிதா மற்றும் சிங்கம் புலி, சாந்தினி, கல்கி, கோடாங்கி வடிவேலு, ஜென்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
-
Apr 19, 2025 17:01 IST
வங்கி டார்ச்சரால் வியாபாரி தற்கொலை என புகார்
புதுச்சேரியில் தனியார் வங்கி கொடுத்த டார்ச்சரால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டதாக மனைவி புகார் அளித்துள்ளார்.இறப்பதற்கு முன் கணவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்துடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வெரிடாஸ் நிறுவனத்தில் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து தனது கணவர் ரூ.8 லட்சம் கடன் பெற்றாக மனுவில் கூறியுள்ளார். கடனை வசூலிக்க வெரிடாஸ் நிறுவன மேலாளர், ஊழியர்கள் தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு
தொடர் தொல்லையை தாங்க முடியாமல் விரக்தியில் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக பெண் புகார் அளித்துள்ளார். பெண்ணின் புகார் குறித்து திருக்கனூர் போலீசார் தீவிர விசாரணை
-
Apr 19, 2025 16:34 IST
காதல் பட நடிகர் சுகுமாரன் மீது வழக்கு பதிவு
காதல் திரைப்பட நடிகர் சுகுமாரன் மீது துணை நடிகை புகார் அளித்த நிலையில், நடிகர் சுகுமாரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணமானதை மறைத்து, தன்னை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்ததாகவும், மோசடி செய்த பணத்தை காசோலையாக வழங்கியதாகவும் அந்த துணை நடிகை புகார் தெரிவித்தார். இதையடுத்து, சுகுமாரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Apr 19, 2025 15:57 IST
மலையாள நடிகர் ஷைன் டாம் கைது
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி பட வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீசார் ஷைன் டாம் சாக்கோவை கைது செய்தனர்.
மலையாள நடிகையின் புகார் குறித்து நடிகர் ஷைன் டாம் சாக்கோவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குட் பேட் அக்லி பட வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ எர்ணாகுளம் வடக்கு காவல்நிலையத்தில் ஆஜர் ஆனார்.
போதைப்பொருள் தடுப்பு போலீசார் சோதனையின்போது தப்பியோடிய நிலையில் விசாரணைக்கு அவர் ஆஜர் ஆகியுள்ளார். தன்னுடைய வளர்ச்சி பிடிக்காதவர்கள் தாக்க வருவதாக நினைத்து விடுதியில் இருந்து தப்பி ஓடியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஷைன் டாம் சாக்கோவுக்கு மலையாள நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பித்தக்கது.
-
Apr 19, 2025 15:30 IST
எதிர்க் கட்சிகளின் பொய்களை முறியடித்து விண்வெளி தொழிலிலும் தமிழ்நாடு முன்னேறும் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி
எதிர்க்கட்சிகளின் பொய்களை முறியடித்து விண்வெளி தொழிலிலும் தமிழ்நாடு முன்னேறும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதிப்பட தெரிவித்துள்ளார். விண்வெளி தொழில் கொள்கை குறித்த எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இவ்வாறு கண்டனம் தெரிவித்தார். நம்பி நாராயணன் ஆலோசகராக இருக்கும் நிறுவனத்துடன் கோர்த்து பேசுவது அற்பமான செயல் என்றும் எந்த முதலீடும் செய்யாத அந்த நிறுவனத்துக்கும் இந்த கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
-
Apr 19, 2025 15:24 IST
சிவகிரி ஜமீன் வாரிசுகள் உள்பட 17 பேருக்கு அபராதம்
போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீன் வாரிசுகள் உள்பட 17 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜமீன் வாரிசுதாரர்கள் உள்பட 17 பேருக்கு தலா ரூ.30,000 அபராதம் விதித்தது எழும்பூர் நீதிமன்றம். நுங்கம்பாக்கத்தில் 45 கிரவுண்ட் நிலத்தை போலி ஆவணம் மூலம் மாற்றி பத்திரப்பதிவு செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
Apr 19, 2025 15:00 IST
தமிழ்நாட்டில் இரட்டை இலையின் மேல் தாமரை மலரும் - நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
தமிழ்நாட்டில் இரட்டை இலையின் மேல் தாமரை மலரும் என நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி உறுதியானது, இறுதியானது என்றும் அதிமுக கூட்டணி பற்றி பாஜக நிர்வாகிகள் பேசக்கூடாது என்றும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
-
Apr 19, 2025 14:57 IST
துரை வைகோவை சமாதானம் செய்யும் வைகோ
துரை வைகோவிடம் சமாதானம் பேசும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்தார். இந்நிலையில், துரை வைகோவின் ராஜினாமா கடிதத்தை தலைமை ஏற்கவில்லை எனவும், ராஜினாமா முடிவை திரும்ப பெற வலியுறுத்தி வைகோ பேசுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
-
Apr 19, 2025 14:02 IST
புதுச்சேரி முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி முதலமைச்சர் வீடு, ஹோட்டல், காரை உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நிறைவு என தகவல் வெளியாகியுள்ளது.
-
Apr 19, 2025 14:00 IST
வீடியோ காலில் வந்த விஜய்
தமிழக வெற்றிக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் காணொளி மூலம் பேசியுள்ளார்.
-
Apr 19, 2025 12:59 IST
வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு
சென்னை அண்ணா நகர் இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு. மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் தந்தை வைகோவுடன் அவரது மகன் துரை வைகோ சந்திப்பு நடந்துள்ளது.
-
Apr 19, 2025 12:48 IST
சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ஆம் இடம்: முதல்வர்
தமிழ்நாடு தொழில் துறை முன்னேற சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முக்கிய காரணம் சிறு குறு தொழில் துறையில் நாட்டில் தமிழ்நாடு 3ஆவது இடத்தில் உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Apr 19, 2025 12:32 IST
“குலத் தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டம்”
"விஸ்வகர்மா திட்டத்தின்மூலம் இளைஞர்களை| குலத் தொழிலில் தள்ளப் பார்க்கிறது பாஜக. குலக் கல்வியை ஊக்குவிக்கும் இத்திட்டத்தை| நாங்கள் ஒருபோதும் செயல்படுத்த மாட்டோம். சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாமல், கைவினைக் | கலைஞர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் கலைஞர் கைவினைத் திட்டம்” என்று குன்றத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது கூறியுள்ளார்.
-
Apr 19, 2025 12:08 IST
த.வெ.க நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சி
த.வெ.க செயல்பாடுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வது எப்படி? என்பது குறித்து சென்னை சோழிங்கநல்லூரில் கட்சி நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
-
Apr 19, 2025 12:05 IST
சித்திரை முழு நிலவு மாநாடு - அழைப்பிதழ் கொடுத்த பாமக தலைவர் அன்புமணி!
மாமல்லபுரம்: சித்திரை முழு நிலவு பெருவிழா மாநாட்டிற்காக கிருஷ்ணகாரணையில் உள்ள மக்களுக்கு வீடு வீடாகச் சென்று அழைப்பு விடுத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் மே 11ம் தேதி இந்த மாநாடு நடைபெறவுள்ளது
-
Apr 19, 2025 11:54 IST
மதிமுக பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு. நாளை மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் வைகோ மகன் துரை வைகோ இதை அறிவித்துள்ளார்.
-
Apr 19, 2025 11:36 IST
சென்னை: "ஜூன் மாதத்தில் 100 மின்சார பேருந்துகள்"
சென்னையில் ஜூன் மாதத்தில் 100 மின்சார பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு எனத் தகவல். வியாசர்பாடி, பெரும்பாக்கம், பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி ஆகிய 5 பணிமனைகளில் இருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடு; மின்சாரப் பேருந்துகளுக்கான சார்ஜர் வசதி உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்கும் பணி முழு வீச்சல் நடைபெற்று வருகிறது
-
Apr 19, 2025 11:24 IST
குடியரசு துணை தலைவர் உடன் தமிழக ஆளுநர் சந்திப்பு
குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் உடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
-
Apr 19, 2025 11:23 IST
நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் கைது
சென்னை ஆலந்தூர் அருகே நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதி விபத்து பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். கார் மோதியதில் 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது.
-
Apr 19, 2025 11:15 IST
உயிரை பணயம் வைத்த இளைஞர்... குவியும் பாராட்டு!
சென்னை: கனமழையால் தேங்கிய மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் கால் வைத்த மாணவர் ரேயன் என்பவரை, தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளார் கண்ணன் (23) என்ற இளைஞர் மாணவர் ரேயனுக்கு முதலுதவி கொடுத்து மருத்துவமனையில் அனுமதித்த இளைஞர் கண்ணனின் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன
-
Apr 19, 2025 11:12 IST
மக்களின் Out of Control ஸ்டாலின்: தமிழிசை
தமிழக மக்களின் Out of Control ஆக முதல்வர் ஸ்டாலின் உள்ளார்; அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் பதற்றத்துடன் இருந்து வருகிறார் மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்தபோது அவர்களுக்கு அடிபணிந்துதானே திமுக இருந்தது; ஊழலுக்கு ஒருமுறை, தேச விரோதத்திற்கு ஒருமுறை என இருமுறை கலைக்கப்பட்டது திமுக ஆட்சி என்று பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
-
Apr 19, 2025 10:42 IST
பால்கனியில் இருந்து கீழே குதிக்க முயன்ற பெண்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையின் பால்கனியில் இருந்து கீழே குதிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
-
Apr 19, 2025 10:28 IST
காஞ்சிபுரத்தில் கலைஞர் கைவினைத் திட்டம் தொடக்கம்
காஞ்சிபுரத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். குன்றத்தூரில் நடைபெறும் விழாவில் 8,951 கைவினைத் தொழில் முனைவோருக்கு ரூ.170 கோடி கடன், ரூ.34 கோடி மானியம் வழங்கப்படுகிறது.
-
Apr 19, 2025 10:04 IST
சென்னை: டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
சென்னை நுங்கம்பாக்கம் அருகே சிமெண்ட் கலவை செய்யும் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஒருமணி நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஜேசிபி இயந்திரம் மூலம் டேங்கர் லாரியை அப்புறப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
-
Apr 19, 2025 09:54 IST
இன்று முதல் மீண்டும் ”ட்ரெக்கிங் திட்டம்”
தமிழகத்தில் ”ட்ரெக்கிங் திட்டம்”இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது; தற்போது 40 வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளன. முதல் கட்டத்தில் 5,000 பேர் பங்கேற்று ரூ.63 லட்சம் வருவாய் கிடைத்தது; காட்டுத்தீ அபாயம் காரணமாக 2025 பிப்ரவரி, மார்சில் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. இத்திட்டம் மூலம் உள்ளூர் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது; புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
-
Apr 19, 2025 09:17 IST
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ. விலகல்
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி (இந்திய சமூக ஜனநாயக கட்சி) அறிவித்துள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று எஸ்.டி.பி.ஐ. பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் தெரிவித்து உள்ளார்.
-
Apr 19, 2025 09:14 IST
நடிகை குஷ்புவின் எக்ஸ் தளப் பக்கம் ஹேக்
நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் எக்ஸ் தளப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்."என்னுடைய எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. என்னால் கணக்கில் உள்நுழைய(login) முடியவில்லை. கடந்த 9 மணி நேரத்தில் எக்ஸ் பக்கத்தில் நான் எந்த பதிவும் பதிவிடவில்லை. இதைச் சரிசெய்ய முயற்சித்து வருகிறேன். எனது எக்ஸ் பக்கத்தில் ஏதேனும் பதிவுகள் வந்தால் தெரிவிக்கவும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
Apr 19, 2025 09:01 IST
எழும்பூர் ரயில் நிலையத்தில் 12 கி. கஞ்சா பறிமுதல்
சென்னை எழும்பூர் ரயில் நிலைய நடைமேடை 1ல் நேற்று கேட்பாரற்ற நிலையில் பை கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த ஆர்.பி.எப். போலீசார் அந்த பையை சோதனை செய்தனர். அப்போது, அந்த பையில் 12 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த ஆர்.பி.எப் போலீசார் அதை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 6 லட்ச ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Apr 19, 2025 08:53 IST
JEE-2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கான JEE-2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது. 24 மாணவர்கள் 100% மதிப்பெண், தமிழக அளவில் பிரதீஷ் காந்தி என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
-
Apr 19, 2025 08:20 IST
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஏப்.23-ல் விருந்து
அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 23 அன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்தளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் சிறப்பாக பங்காற்றியதற்காக இந்த விருந்து வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
-
Apr 19, 2025 08:02 IST
குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்
சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் குழாய் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை நீலாங்கரை, அடையாறு, திருவான்மியூர், சேப்பாக்கம், ராயபுரம், பாரிமுனை, தண்டயார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், 466 கி.மீ. நீளத்திற்கு குழாய் அமைக்கப்படும் நிலையில் 260 கி.மீ. ஆணைய பகுதிகளில் வருகிறது. ரூ.48 கோடி மதிப்பிலான குழாய் எரிவாயு திட்டத்தை டோரண்ட் கேஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
-
Apr 19, 2025 07:59 IST
ஏமன் துறைமுகம் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்
ஹவுதி பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா கடுமையாக தாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏமனில் உள்ள ராஸ் இசா துறைமுகம் மீது அமெரிக்கா கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில், 74 பேர் உயிரிழந்தனர். 171 பேர் காயமடைந்தனர். ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாதிகளுக்கு எரிபொருள் மற்றும் வருவாய் கொடுக்க கூடிய விசயங்களை அழிப்பது என்று அமெரிக்கா முடிவு செய்து, இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என அமெரிக்காவின் மத்திய படை தெரிவித்துள்ளது.
-
Apr 19, 2025 07:58 IST
டெல்லியில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து
டெல்லியில் அடுக்குமாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டடத்தின் உள்ளே ஏராளமானோர் சிக்கி தவித்தனர். இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை, உள்ளூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் மீட்பு பணிகளை தொடங்கி உள்ளனர்.
-
Apr 19, 2025 07:21 IST
மியான்மரில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்
மியான்மரில் நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.31 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக நள்ளிரவு 11.04 மணியளவில் ரிக்டர் 3.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
Apr 19, 2025 07:17 IST
சென்னையில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
சென்னையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை முதல் சைதாப்ட்டை வரையிலான ஜி.எஸ்.டி சாலையில் நான்கு வழி மேம்பால சாலை அமைத்தல் தொடர்பான பணிகள் நடைபெற உள்ளதால், நாளை முதல் 22-ம் தேதி வரை 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
-
Apr 19, 2025 07:15 IST
சென்னையில் ஏசி மின்சார ரயில் சேவை தொடக்கம்
தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. 12 பெட்டிகள் கொண்ட சென்னையின் முதல் குளிர்சாதன மின்சார புறநகர் ரயில் கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. தினமும் காலை 7 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ஏசி ரயில், காலை 8.35-க்கு செங்கல்பட்டு சென்றடையும். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் 29 கிமீ பயணத்திற்கு ரூ.95 ஆகவும், 9 கிமீக்கு ரூ.35 ஆகவும், 24 கிமீக்கு ரூ.70 ஆகவும், 34 கிமீக்கு ரூ.95 ஆகவும் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.