Chennai News Highlights: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்த நரேந்திர மோடி

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
JD Vance children

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Apr 21, 2025 21:34 IST

    மோடி - ஜே.டி. வான்ஸ் சந்திப்பு

    இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா மற்றும் அவர்களது குழந்தைகளும் உடனிருந்தனர். அப்போது, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் குழந்தைகளை, பிரதமர் மோடி கொஞ்சி மகிழந்தார்.



  • Apr 21, 2025 20:43 IST

    இந்தி திணிப்பில் இருந்து பின்வாங்கிய பட்னாவிஸ் - ஸ்டாலின்

    இந்தி திணிப்பில் இருந்து மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் பின் வாங்கியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியை மூன்றாவது மொழியாக திணிக்க முயன்றதனால் கிளம்பிய எதிர்ப்பின் காரணமாக, பட்னாவிஸ் பின் வாங்கியதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அவரது முடிவை மத்திய அரசு அங்கீகரிக்கிறதா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Advertisment
  • Apr 21, 2025 20:01 IST

    பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள் -  விஜய்

    பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அதன்படி, "மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே!" என தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.



  • Apr 21, 2025 19:15 IST

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வருவார்கள் - டி.டி.வி. தினகரன்

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வருவார்கள் என அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளர். குறிப்பாக, "நம்மிடையே உள்ள பங்காளி சண்டைகளை கடந்து, தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்பது தான் நம்முடைய குறிக்கோள். அ.தி.மு.க தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் என்று அமித்ஷாவே கூறி விட்டார். தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.



  • Advertisment
    Advertisements
  • Apr 21, 2025 18:54 IST

    சென்னையில் மின்சாரம் தாக்கிய சிறுவனை துணிச்சலாக மீட்ட இளைஞர்; மோதிரம் பரிசளித்த இ.பி.எஸ்

    சென்னை அரும்பாக்கத்தில் மின்சாரம் தாக்கிய சிறுவனை துணிச்சலாக மீட்ட இளைஞர் கண்ணனை, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தனது வீட்டிற்கு வரவழைத்து தங்க மோதிரம் பரிசளித்தார்.



  • Apr 21, 2025 18:22 IST

    இந்தியாவிலேயே தயார் செய்யப்படும் வந்தே பாரத் ரயில் பாதுகாப்பானது - தெற்கு ரயில்வே

    இந்தியாவிலேயே தயார் செய்யப்படும் வந்தே பாரத் ரயில் பாதுகாப்பானது என தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. மாடுகள் முட்டினால்கூட ரயில் சேதமடையும் வகையில் இருப்பதாக விமர்சனம் எழுந்த நிலையில், வந்தே பாரத் ரயில் பாதுகாப்பானது  என்று தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.



  • Apr 21, 2025 17:23 IST

    த.வெ.க-வில் இணைய சொன்னது ஏன்? - சீமான் விளக்கம்

    நாம் தமிழர் கட்சியில் இருக்க விருப்பம் இல்லாதவர்கள், விஜய்யின் த.வெ.க கட்சியில் சேர்ந்துகொள்ளலாம் என்று நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஆடியோ வெளியான நிலையில், இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சீமான், “எந்த கட்சிக்கோ செல்வதற்கு என் தம்பி விஜய் கட்சிக்கு போகலாம் என சொன்னேன். த.வெ.க தலைவர் விஜய் இணைத்து கொள்ளமாட்டார் என தெரிந்து தான் அப்படி செல்லமாக சொன்னேன். என்னோடு என் தலைமையை ஏற்று, எங்கள் கொள்கைகளை ஏற்று வருபவர்களை வரவேற்போம்.” என்று கூறினார்.



  • Apr 21, 2025 17:13 IST

    10-ம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாளில் வாக்கியங்கள் முரண்: ஒரு மதிப்பெண் தர ஆணை

    10-ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாவில் 4வது கேள்விக்கு விடை அளித்திருந்தாலே ஒரு மதிப்பெண் தரப்படும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. 

    கேள்வியில் இருந்த வாக்கியங்கள்முரணாக உள்ளதால் மதிப்பெண் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் நடைபெறும் நிலையில் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.



  • Apr 21, 2025 16:58 IST

    500 ரூபாய் கள்ள நோட்டுகள்- எச்சரிக்கையுடன் இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

    எந்தவித வித்தியாசமும் இல்லாமல் பார்ப்பதற்கு ஒரிஜினல் நோட்டுக்கள் போல் இருப்பதால், இதனை கண்டுபிடிப்பது சிரமம். உயர்தர கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதால் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது.

    கள்ள நோட்டில் உள்ள சிறிய பிழை மூலம் அவற்றை கண்டுபிடிக்கலாம்

    உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை



  • Apr 21, 2025 16:33 IST

    4 ஆண்டில் நிரப்பப்பட்ட 25,295 பணியிடங்கள்- மா. சுப்பிரமணியன்

    எம்ஆர்பி, டிஎன்பிஎஸ்சி , மாவட்ட சுகாதாரக் குழு, என்எச்எம் மூலம் கடந்த 4 ஆண்டில் 25,295 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன

    மா. சுப்பிரமணியன்



  • Apr 21, 2025 16:05 IST

    கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு 3 மாதம் சிறை

    அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க சென்ற அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ் குமார் உட்பட 3 பேருக்கு தலா 3 மாதம் சிறை,  100 ரூபாய் அபராதம் - நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு



  • Apr 21, 2025 15:52 IST

    போப் பிரான்சிஸ் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வாடிகன் நகரத்தின் இறையாண்மையாளருமான, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்த புனித போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

    அவரது மறைவு அமைதியை விரும்புவோருக்கு ஒரு பெரிய இழப்பாகும்.

    அவரைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும்.



  • Apr 21, 2025 15:29 IST

    நவாஸ்கனி தேர்தல் வழக்கு: நிராகரிக்க மறுப்பு

    தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனியின் வெற்றியை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு; வேட்பு மனுவில் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. 



  • Apr 21, 2025 15:24 IST

    போப் பிரான்சிஸ் மறைவால் வருத்தம்: முதல்வர்

    கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவால் ஆழ்ந்த வருத்தம் ஏழைகள் மீதான போப்பின் அரவணைப்பு, அர்ப்பணிப்பு உலகத்துக்கு எடுத்துக்காட்டு; மனித நேயத்தை இவ்வுலகிற்கு விட்டுச் சென்றுள்ளார் போப் பிரான்சிஸ் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 



  • Apr 21, 2025 15:00 IST

    போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். "இரக்கம், பணிவு மற்றும் ஆன்மீக தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார். இந்திய மக்கள் மீதான போப் பிரான்சிஸின் பாசம் எப்போதும் போற்றப்படும்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 



  • Apr 21, 2025 14:59 IST

    மாணிக்கம் தாகூர் தேர்தல் மனு - மீண்டும் விசாரிக்க உத்தரவு

    சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் விஜய பிரபாகரன் தாக்கல் செய்துள்ள தேர்தல் மனுக்களை மீண்டும் புதிதாக விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு. இந்த மனுக்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது. 



  • Apr 21, 2025 14:58 IST

    "அப்போது இனித்தது; இப்போது கசக்கிறதா?"

    "பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது திமுகவுக்கு இனித்தது; இப்போது கசக்கிறதா? முரசொலி மாறன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருந்தார்கள்; திமுகவிற்கு சாதகமாக இருந்தால் பாராட்டுவார்கள்; பாதகமாக இருந்தால் எங்கள் மீது பழி சுமத்துவார்கள் என்று  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் பேட்டியளித்துளளார். 



  • Apr 21, 2025 14:30 IST

    எங்கள் இசை என்பதால்தான் கேட்கிறோம் - கங்கை அமரன்

    எங்களுக்கு பணத்தாசை இல்லை; அனுமதி கேட்டால், அண்ணன் (இளையராஜா) உடனே கொடுத்துடுவார். அஜித் படம் என்றல்ல, எங்கள் இசை என்பதால்தான் கேட்கிறோம்; இசையில் எங்களுக்கு பங்கு உண்டுதானே? அதுக்கான கூலி எங்களுக்கு வரணும்தானே?” காப்புரிமை விவகாரத்தில் இயக்குநர் கங்கை அமரன் விளக்கமளித்துள்ளார். 



  • Apr 21, 2025 14:27 IST

    ஆற்காடு வீராசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமியின் பிறந்தநாளை ஒட்டி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.



  • Apr 21, 2025 14:13 IST

    போக்குவரத்துக்கழக வேலை: இன்று கடைசி நாள்

    அரசு போக்குவரத்துக் கழகத்தில் 3,274 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள். 3,274 நடத்துநருடன் கூடிய ஓட்டுநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு; போக்குவரத்துப் பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்; www.arasubus.tn.gov.in என்ற| இணையதளத்தில் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்; எழுத்து, செய்முறை தேர்வு, நேர்காணல் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும்



  • Apr 21, 2025 13:42 IST

    புது வகை ரூ.500 கள்ள நோட்டு - மத்திய அரசு எச்சரிக்கை

    புழக்கத்தில் உள்ள புது வகை ரூ.500 கள்ள நோட்டு குறித்து எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தரம், அச்சில் அசல் ரூ.500 நோட்டிற்கு கொஞ்சமும் குறையாமல் உள்ள கள்ள நோட்டில் ஒரு எழுத்து மாறி இருக்கும் என்றும், RESERVE BANK OF INDIA என்ற வார்த்தையில் E-க்கு பதில் A இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது. இந்த கள்ளநோட்டுகள் ஏற்கனவே சந்தையில் புழக்கத்திற்கு வந்து விட்டதாகவும், வங்கிகள், செபி, சிபிஐ, என்ஐஏ உள்ளிட்ட அமைப்புகள் விழிப்புடன் கண்காணிக்கவும் அறிவுறுத்தி உள்ளது.



  • Apr 21, 2025 13:38 IST

    கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் காலமானார்

    கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் காலமானார். அவருக்கு வயது 88. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக வாடிகன் அறிவித்துள்ளது.  போப் பிரான்சிஸ் மறைவு செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.



  • Apr 21, 2025 13:31 IST

    யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் - இ.பி.எஸ்

    நாங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் முதல்வர் ஸ்டாலின் ஏன் பதறுகிறார்? ஏன் பயப்படுகிறீர்கள்? நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், அ.தி.மு.க. எங்களுடைய கட்சி என்று ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.



  • Apr 21, 2025 13:12 IST

    "கழிவுநீர் கலந்த குடிநீரால் உயிரிழப்பு ஏற்படவில்லை"

    திருச்சி உறையூரில் ஏற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், கழிவுநீர் கலந்த குடிநீரால் நடைபெறவில்லை என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.  புகார் கிடைத்தவுடன் உடனடியாக அப்பகுதியில் 287 பேர் கொண்ட சுகாதார பணியாளர்கள் கொண்ட குழு அப்பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை சிகிச்சை வழங்கியதாக கூறினார். பத்து கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு தொற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறிய அவர், அங்கு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலக்கப்படவில்லை என்பது தெரியவந்திருப்பதாகவும் கூறினார்.



  • Apr 21, 2025 12:45 IST

    டாஸ்மாக் வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

    டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 6 முதல் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க கோரி தமிழக அரசு, டாஸ்மாக் வழக்கு தொடர்ந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு தள்ளி வைத்தது.



  • Apr 21, 2025 12:44 IST

    சென்னை: பெண்ணுக்கு தவறான அறுவை சிகிச்சை

    சென்னை காசிமேட்டில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தவறான அறுவை சிகிச்சை என புகார் எழுந்துள்ளது. கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு பதிலாக சிறுநீரகத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தனியார் மருத்துவமனை நிர்வாகத்துடன் பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



  • Apr 21, 2025 12:27 IST

    நீட் தேர்வு: ஸ்டாலின்- இபிஎஸ் காரசார வாதம்

    திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போதுதான் நீட் கொண்டுவரப்பட்டதாக சட்டப்பேரவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டதே திமுகதான் என்றும் பேசினார். நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என பாஜகவிடம் அதிமுக சொல்லத் தயாரா என கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். 



  • Apr 21, 2025 12:10 IST

    நீட் தேர்வு விவகாரம் - அ.தி.மு.க.வுக்கு ஸ்டாலின் சவால்

    நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று 2021 தேர்தல் வாக்குறுதி கொடுத்தது உண்மை. மத்தியில் எங்கள் கூட்டணியில் ஆட்சி அமைந்திருந்தால் நிச்சயம் ரத்து செய்திருப்போம். தற்போது நீங்கள் கூட்டணி அமைத்திருக்கிறீர்கள். நீட் தேர்வை ரத்து செய்தால் தான் கூட்டணியில் இருப்போம் என்று சொல்ல அதிமுகவுக்கு தகுதி உள்ளதா என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.



  • Apr 21, 2025 12:04 IST

    ”மதுரையில் ரயில்வே மேம்பாலத்திற்கு இணையாக, புதிய மேம்பாலம்”

    மதுரை மீனாட்சி அம்மன், கோயில் தெற்கு கோபுர சந்திப்பு, முதல் அவனியாபுரம் பெரியார் சிலை வரை, 4-வழி சாலையாக அகலப்படுத்த, தெற்கு வாசல் சந்திப்பு, அருகே உள்ள, ரயில்வே மேம்பாலத்திற்கு இணையாக, புதிய மேம்பாலம் கட்ட, விரிவாக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக, அமைச்சசர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார். 



  • Apr 21, 2025 12:03 IST

    சிவாஜி கணேசனின் வீடு ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து

    நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது. மேலும், சிவாஜியின் வீட்டில் தனக்கு உரிமையோ, பங்கோ இல்லை என்று அவரது மூத்த மகன் ராம்குமார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை ஏற்று, வீட்டின் முழு உரிமையாளர் பிரபுதான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Apr 21, 2025 12:03 IST

    அமலாக்கத்துறை வழக்கில் ஜாபர் சாதிக்கு ஜாமீன்

    போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வழக்கை முன்னுதாரணமாக வைத்து சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.



  • Apr 21, 2025 12:03 IST

    சட்டப்பேரவையில் அ.தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம்

    திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 4 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 50க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்கள் புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத் உள்ளார்.



  • Apr 21, 2025 11:59 IST

    4 ஆண்டுகளில், 3500 புதிய பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

    தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில், 3500 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக சட்டப்பேரவையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். மேலும் புதிய பேருந்துகள் வர வர, 15 ஆண்டுகள் பழமையான மாற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Apr 21, 2025 11:56 IST

    சிவாஜி கணேசனின், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவு ரத்து

    நடிகர் சிவாஜி கணேசனின், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் பிரபுதான் அன்னை இல்லத்தின், முழு உரிமையாளர் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • Apr 21, 2025 11:50 IST

    இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு

    இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. இதில், ரூ. 7 கோடி ஊதியம் கொண்ட A+ பிரிவில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு ஒப்பந்தத்தில் இடம் பெறாத ஷ்ரேயஸ் ஐயர், ரூ.3 கோடி ஊதியம் கொண்ட B பிரிவில் இடம்பெற்றுள்ளார்.



  • Apr 21, 2025 11:29 IST

    ‘எனது துறைக்கு குறைவான நிதி ஒதுக்கீடு’ - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்

    தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடலூர் தொகுதியில் டைடல் பார்க் அமைத்துத் தர கோரிக்கை வைத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ ஜெயசீலனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், எனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. நிதி, திறன் மற்றும் அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதைக் கேட்டால் கிடைக்கும்” என்று கூறினார்.



  • Apr 21, 2025 10:35 IST

    பணி நிரந்தரம் செய்யக்கோரி கிளாம்பாக்கத்தில் ஓட்டுநர், நடத்துனர்கள் போராட்டம்

    ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 150 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, கிளாம்பாக்க பேருந்து நிலைய நுழைவு வாயிலில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 



  • Apr 21, 2025 10:29 IST

    இந்தியா வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்: மத்திய அமைச்சர் வரவேற்பு

    4 நாள் பயணமாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மனைவி உஷா, குழந்தைகளுடன் இந்தியா வந்தார். அவருக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சிறப்பான வரவேற்பு அளித்தார்.



  • Apr 21, 2025 09:52 IST

    தங்கம் விலை உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.72,120க்கு விற்பனையாகிறது.



  • Apr 21, 2025 09:51 IST

    சட்டப்பேரவை கூட்டத்தொடர்

    3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும்  தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது. வினா விடைகள் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். 



  • Apr 21, 2025 09:20 IST

    ஹெல்மெட் அணியாத போலீசாரை சஸ்பெண்ட் செய்ய ஆணை

    ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். ஒழுங்கீனமாக காவலர்கள் மீது, துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.க்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.



  • Apr 21, 2025 09:18 IST

    ரசிகர்களுக்கு கையசைத்த விஜய்

    சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து ரசிகர்களை நோக்கி தவெக தலைவர் விஜய் கையசைத்தார். வீட்டிற்கு வெளியே காத்திருந்த ரசிகர்கள் உற்சாகமாக கையசைத்தனர். 



  • Apr 21, 2025 09:17 IST

    மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

    சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை ரயில் வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில்கள் இயக்கம் தாமதமானது. பச்சை வழித்தடத்தில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 



  • Apr 21, 2025 08:42 IST

    ஆளுநராக நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார் ஆளுநர் - ஜவாஹிருல்லா

    ஒரு நிமிடம் கூட ஆளுநராக நீடிப்பதற்கான தகுதியை முழுமையாக இழந்துவிட்டார் ஆளுநர். ஜவாஹிருல்லா பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான மாநாடு நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என ஆளுநர் ரவி அறிவிப்புக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். 



  • Apr 21, 2025 08:40 IST

    காவல்துறையின் ரோந்து வாகனத்தில் இருந்த கைப்பை திருட்டு

    சென்னை கேகே நகரில் காவல்துறையின் ரோந்து வாகனத்தில் இருந்த கைப்பை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அதில் காவலர் அடையாள அட்டை, ரூ. 4,000 பணம், பஸ்பாஸ், ஆதார் கார்டு உள்ளிட்டவை இருந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.



  • Apr 21, 2025 08:39 IST

    திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு.

    திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. ரூ. 34 கோடி செலவில், 4 தளங்களுடன் இந்த டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓராண்டில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.



  • Apr 21, 2025 08:11 IST

    மின் ஊழியர்கள் இன்று தர்ணா

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று மின்வாரிய ஊழியர்கள் மாலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலி பணியிடங்களை நிரப்புவது, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.



  • Apr 21, 2025 08:09 IST

    உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ரவி ஏற்பாடு

    உதகையில் ஏப்ரல் 25, 26 ஆம் தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஆர். என். ரவி ஏற்பாடு செய்துள்ளார். இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை வேந்தரகளை தமிழ்நாடு  அரசே நியமிக்கும் சட்டத்திற்கு அண்மையில் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து கடந்த வாரம் முதலமைச்சர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



  • Apr 21, 2025 08:01 IST

    Chat GPT-க்கு நன்றி சொல்பவரா நீங்கள்..?

    Chat GPT-ல் ஏஐ மாடல்களிடம் ப்ளீஸ் அல்லது நன்றி எனச் சொல்வதன் மூலம் மின்சாரத்திற்கு கோடிக்கணக்கான டாலர்கள் செலவாவதாக ஓபன் ஏஐ நிறுவனத்தின் சீஇஓ சாம் அல்ட்மேன் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். 



  • Apr 21, 2025 07:33 IST

    அஜித் அணி மாஸ் வெற்றி!

    பெல்ஜியத்தில் நடைபெற்ற ஜிடி4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் 2 வது இடத்தை நடிகர் அஜித்குமார் அணி பிடித்துள்ளது.



news updates Tamilnadu Live News Udpate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: