/indian-express-tamil/media/media_files/VKRet7bs4LVyTPTAg0FW.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் - மோடி கண்டனம்
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அவர்களது தீய எண்ணம் அரங்கேறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Pahalgam Terror Attack LIVE Updates: ‘Evil agenda will never succeed,’ says PM Modi, adds all assistance being provided
-
Apr 22, 2025 21:47 IST
ஸ்ரீநகர் விரைந்த அமித்ஷா
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஸ்ரீநகர் சென்றடைந்தார். முன்னதாக, இந்த தாக்குதல் குறித்த தகவல்களை, அமித்ஷாவிடமிடமிருந்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
-
Apr 22, 2025 21:05 IST
ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ள அவர், இது மனசாட்சியை உலுக்கும் காட்டுமிராண்டித்தனமான செயல் என்று விமர்சித்துள்ளார்.
-
Apr 22, 2025 20:08 IST
அமைச்சர் பி.டி.ஆர்-க்கு ஸ்டாலின் அறிவுரை
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் செயலாற்றல் அனைத்தும் அவருக்கு பலமானதாக இருக்க வேண்டுமே தவிர பலவீனமாக மாறிவிடக் கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், தனது அறிவுரையின் அர்த்தம் மற்றும் ஆழத்தை பழனிவேல் தியாகராஜன் புரிந்து கொள்வார் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Apr 22, 2025 19:25 IST
ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் - மோடி
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அவர்களது தீய எண்ணம் அரங்கேறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Pahalgam Terror Attack LIVE Updates: ‘Evil agenda will never succeed,’ says PM Modi, adds all assistance being provided
-
Apr 22, 2025 19:10 IST
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேரணி
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பாக பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை, புதுப்பேட்டையில் நடத்தப்பட்ட பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-
Apr 22, 2025 18:24 IST
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஒருவர் மரணமடைந்தார். 10-க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா சவுதி அரேபியாவில் இருந்தபடி, தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Apr 22, 2025 18:21 IST
தமிழகத்திற்கு, 2.5 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அடுத்த மாதம், தமிழகத்திற்கு, 2.5 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
Apr 22, 2025 18:15 IST
வாகன பிரச்சாரம் மூலம் கொள்கை பரப்புரை செய்ய த.வெ.க விஜய் திட்டம்
தவெக தலைவர் விஜய் விரரைவில் கொள்கை பரப்புரை வாகன பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, விஜய் வாகன பிரச்சாரத்திற்கு முன்னதாக, கொள்கை குறித்து நிர்வாகிகள் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள தலைமை உத்தரவிட்டுள்ளது, கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், வாகன பிரச்சாரம் மூலம் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
Apr 22, 2025 18:11 IST
வக்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம்
வக்பு சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மண்ணடியில் இருந்து பேரணி சென்னை ரிசர்வ்
வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. -
Apr 22, 2025 17:25 IST
சென்னை வண்ணாரப்பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் மின்தடை
சென்னை வண்ணாரப்பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் கடும் அவதிக்குள்ளான நிலையில், ஜெனரேட்டர் இருந்தும் டீசல் இல்லாததால் இயக்க முடியாத அவல நிலை உள்ளது. ஆம்புலன்ஸும் இல்லாததால் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணியின் கணவர் மருத்துவர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
-
Apr 22, 2025 17:17 IST
நான் முதல்வன் திட்டம் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தியுள்ளது: மு.க.ஸ்டாலின்
நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற தேர்வர் UPSC தேர்வில் தமிழக தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் முதல்வன் திட்டம், பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தியுள்ளது. நான் முதல்வன் திட்டம் வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின்
வாழ்வில் ஒளியேற்றிடும் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். -
Apr 22, 2025 17:16 IST
அடுக்குமாடி குடியிருப்பில் கைவரிசை - 5 பெண்கள் கைது
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் கைவரிசை காட்டிய 5 பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஓஎம்ஆரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து
30 சவரன் நகைகள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சுமதி, மீனா, ரம்யா, கஸ்தூரி, கலைவாணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். -
Apr 22, 2025 17:15 IST
ஆசிரியையை செருப்பால் அடித்த பொறியியல் கல்லூரி மாணவி
பேசி கொண்டிருந்த போது செல்போனை பிடுங்கியதால் ஆத்திரமடைந்த மாணவி காலணியை கழற்றி ஆசிரியரை அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவியை தடுத்து நிறுத்தினர்
-
Apr 22, 2025 16:46 IST
ஜெயக்குமார் மீதான வழக்கு - தமிழக அரசின் மனு தள்ளுபடி
8 கிரவுண்ட் நிலத்தை தனது செல்வாக்கை பயன்படுத்தி அபகரித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தமிழக அரசு தொடுத்த நில அபகரிப்பு வழக்கு ரத்து.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது
-
Apr 22, 2025 16:37 IST
"பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் நான் முதல்வன் திட்டம்” - ஸ்டாலின் பெருமிதம்
எது மகிழ்ச்சி?
— M.K.Stalin (@mkstalin) April 22, 2025
நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த #நான்_முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் #UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின்… https://t.co/zw3iSTDc8c -
Apr 22, 2025 15:59 IST
2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதா மற்றும் பொது கட்டிட உரிம திருத்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
Apr 22, 2025 15:43 IST
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
Apr 22, 2025 15:28 IST
‘நான் முதல்வன்' திட்டத்தில் படித்த 50 பேர் தேர்ச்சி
தமிழ்நாட்டில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற 134 பேர் யுபிஎஸ்சி நேர்முக தேர்வுக்கு சென்றதில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 50 பேரில் 18 பேர் 'நான் முதல்வன்' திட்டத்தில் முழு நேர உறைவிட பயிற்சி மேற்கொண்டவர்கள்.
-
Apr 22, 2025 15:27 IST
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்; தமிழ்நாடு பொது கட்டிட உரிமை திருத்த சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
-
Apr 22, 2025 15:24 IST
‘நான் முதல்வன்’ திட்டத்தில் படித்த மாணவர் முதலிடம்
‘நான் முதல்வன்' திட்டம் மூலம் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த சிவச்சந்திரன், UPSC தேர்வு தரவரிசையில் (தமிழ்நாட்டில்) முதலிடம் அகில இந்திய அளவில் தரவரிசையில் 23ம் இடம் பெற்றுள்ளார்.
-
Apr 22, 2025 15:20 IST
UPSC தேர்வு முடிவுகள் வெளியானது
UPSC CSE 2024 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது; 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; தேர்ச்சி பெற்ற 1,009 பேரில் 335 பேர் பொதுப்பிரிவினர்; 109 பேர் EWS பிரிவினர் அகில இந்திய அளவில் உ.பி.யை சேர்ந்த சக்தி துபே முதலிடம் பெற்றுள்ளதாக அறிவிப்பு; விண்ணப்பதாரர்கள் upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்
-
Apr 22, 2025 14:38 IST
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு என்று பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இம்மாதம் 1ம் தேதியில் இருந்து இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிப்பு. 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள் இதனால் பயன்பெற உள்ளனர்.
-
Apr 22, 2025 14:24 IST
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மனு தள்ளுபடி
பெண்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரத்தில் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி. சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது - பொன்முடியின் வழக்கறிஞர்; வாதத்தை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
Apr 22, 2025 14:18 IST
போப் இறுதி அஞ்சலி-தமிழக பிரதிநிதிகள் பங்கேற்பு
ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் தமிழக பிரதிநிதிகள் பங்கேற்பு. தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையினர் நலன் அமைச்சர் நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது.
-
Apr 22, 2025 14:05 IST
சென்னையில் ரயில் தடம் புரண்டதில் யாருக்கும், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை ராயபுரம் - பீச் ஸ்டேஷன் இடையே மின்சார ரயில் தடம் புரண்டதில், யாருக்கும், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை; 15 கி.மீட்டர் வேகத்தில் சென்றபோது ரயிலின் 4வது பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து பிரிந்தது; விரைவு ரயில் செல்லும் மெயின் லைன் இருப்புப் பாதை சீராக உள்ளது; ரயில் தடம் புரண்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது; மதியத்துக்குள் மணிக்குள் இருப்புப் பாதை சீரமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
-
Apr 22, 2025 13:59 IST
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் 2 அமைச்சர்கள் பங்கேற்பார்கள் - தமிழக அரசு அறிவிப்பு
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்பார்கள்ஏன தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. போப் மறைவுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
Apr 22, 2025 13:55 IST
உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி
சட்டப்பேரவையில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்: “தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 27 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன; உரிய ஆவணங்களுடன் விண்ணப்போருக்கு 3 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று கூறினார்.
-
Apr 22, 2025 13:22 IST
ஏப். 25, 26-ல் துணைவேந்தர்கள் மாநாடு: துணை ஜனாதிபதி பங்கேற்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உதகையில் ஏப்ரல் 25, 26 தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார். உயர்கல்வியில் புதுமையான அணுகுமுறைகளைப் புகுத்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும்; கல்வித் திறனை மேம்படுத்துவதில் AI தொழில்நுட்பத்தை புகுத்துவது குறித்தும் மாநாட்டில் பேசப்பட உள்ளது என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
Apr 22, 2025 12:39 IST
கள்ளக்குறிச்ச்சி விஷச் சாராய வழக்கு: 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் - ஐகோர்ட் உத்தரவு
கள்ளக்குறிச்ச்சி விஷச் சாராய வழக்கில், சாராய வியாபாரி கன்னுக்குடி உட்பட 2 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் தாமோதரனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Apr 22, 2025 12:35 IST
சென்னை ராயபுரம் - பீச் ஸ்டேஷன் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து
சென்னை ராயபுரம் - பீச் ஸ்டேஷன் இடையே ஆவடியில் இருந்து வந்த மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆவடியில் இருந்து வண்த மின்சார ரயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின மின்சார ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Apr 22, 2025 12:31 IST
மாஞ்சோலையில் இருந்த குடும்பங்களுக்கு இழப்பீடு; தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மாஞ்சோலையில் இருந்த குடும்பங்களுக்கு இழப்பீடு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட மறுவாழ்வு திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை - அகஸ்தியர் மலைப்பகுதியில் மத்திய குழு ஆய்வு நடத்தி எஞ்சியுள்ள குடும்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக அரசு வாதிட்டுள்ளது.
-
Apr 22, 2025 12:28 IST
அ.தி.மு.க வெளிநடப்பு: மக்கள் பிரச்சினையை பேச பிரதான எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது - இ.பி.எஸ்
அ.தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மக்கள் பிரச்சினையை பேச சமீப காலமாக பிரதான எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது; டாஸ்மாக்கில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை குறித்து பேச அரசு மறுக்கிறது. பேரவையில் பேச அனுமதி கிடையாது என உறுதியாக கூறுகின்றனர். மக்கள் பிரச்சினையை பேசுவதற்கு தான் சட்டப்பேரவை” என்று கூறினார்.
-
Apr 22, 2025 12:21 IST
கோடநாடு வழக்கு: அ.ம.மு.க பிரமுகர் கர்சன் செல்வத்திடம் விசாரணை!
கோடநாடு கொலை வழக்கில் காவலர் பயிற்சி வளாகத்தில் ஆஜரான அ.ம.மு.க பிரமுகர் கர்சன் செல்வத்திடம் சி.பி.சி.டி போலீசார் விசாரணை நடத்தினர். கணினி ஆபரேட்டர் தினேஷ் கொலையில் தொடர்பிருப்பதாக வந்த புகாரை அடுத்து இவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
-
Apr 22, 2025 12:17 IST
சாதி சான்றிதழ்களில் எழுத்துப்பிழை இருக்கக்கூடாது - ஐகோர்ட் உத்தரவு
"சாதி சான்றிதழ்களில் எழுத்துப்பிழைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; சாதி சான்றிதழ்களில் சாதிப் பெயர்கள், தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்; இசை வேளாளர் சாதி சான்றிதழ் வழங்கும்போது இசை வெள்ளாளர் என குறிப்பிடப்படுவதாக குகேசஷ என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Apr 22, 2025 11:37 IST
செவிலியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Apr 22, 2025 11:16 IST
ஆரம்ப சுகாதார நிலையம் டூ அரசு மருத்துவமனை
ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. பணி முடிந்து நிற்கும் கட்டடங்களை உடனே திறக்க வேண்டும். நாள்தோறும் சிகிச்சைக்கு வரும் நூற்றுக்கணக்கான மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் அவதி அடைகின்றன.மருத்துவமனையை சுற்றியுள்ள கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
-
Apr 22, 2025 10:40 IST
புறநகர் ஏசி ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு இல்லை
சென்னை புறநகர் ஏசி ரயிலுக்கான கட்டணம் குறைய வாய்ப்பு இல்லை. பயணிகள் உடனான கருத்து கேட்பு கூட்டத்தில் தெற்கு ரயில்வே நிர்வாகம் உறுதியாக தெரிவித்துள்ளது. புறநகர் ஏசி ரயில்கள் இயக்கப்பட வேண்டிய நேரம் குறித்து பயணிகள் வாட்ஸ்அப் மூலம் கருத்து தெரிவிக்கலாம். பயணிகள் தங்கள் கருத்துகளை 6374713251 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. பீக் அவர்ஸ் நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Apr 22, 2025 10:39 IST
சாந்தா அருங்காட்சியகம் திறப்பு
டாக்டர் சாந்தாவின் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சாந்தாவின் நினைவு அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்து அருங்காட்சியகத்தை ஸ்டாலின் பார்வையிட்டார்.
-
Apr 22, 2025 10:07 IST
கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் - அமைச்சர் கீதா ஜீவன்
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு பரிசீலிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் அரசாக திமுக அரசு உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் அதிக மாற்றுத்திறனாளிகளை தமிழ்நாடு தான் சேர்த்தது.
-
Apr 22, 2025 09:52 IST
போப் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முற்போக்கு கொள்கையோடு பெரும் மாற்றங்களை முன்னெடுத்தவர் போப் பிரான்சிஸ் என்றும், மனிதநேயத்துடன் திருச்சபையை வழிநடத்தியவர் போப் பிரான்சிஸ் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். பின்னர் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதை அடுத்து உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
-
Apr 22, 2025 09:42 IST
புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 275 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 290 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை
-
Apr 22, 2025 09:05 IST
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
உதவித்தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கலைந்து செல்ல மறுத்து தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக காவல்துறையினர் கைது செய்தனர். கோட்டையை நோக்கி செல்ல முயன்ற மாற்றுத் திறனாளிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
-
Apr 22, 2025 08:40 IST
சென்னையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னையில் நேற்று (ஏப்.21) 32 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
Apr 22, 2025 08:36 IST
நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
ஐதராபாத் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் செய்த பணமோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, நடிகர் மகேஷ் பாபுவை ஏப்ரல் 28 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் (ED) சம்மன் அனுப்பி உள்ளது
-
Apr 22, 2025 08:31 IST
பிரதமர் மோடி இன்று சவுதி அரேபியா பயணம்
2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று சவுதி அரேபியா செல்கிறார். அவர் சவுதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மானை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பொருளாதாரம், மூதலீடு , மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
-
Apr 22, 2025 07:46 IST
ஓசூர் புதிய விமான நிலையம் - ஆய்வறிக்கை தாக்கல்
ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசிடம் விமான போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்தது. அரசு தேர்வு செய்த 2 இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
Apr 22, 2025 07:44 IST
பைக் மீது அரசு பேருந்து மோதியதில் மெக்கானிக் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், மெக்கானிக் பழனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
-
Apr 22, 2025 07:38 IST
வந்தே பாரத் ரயில் பாதுகாப்பானது- தெற்கு ரயில்வே
வந்தே பாரத் ரயில் கவச் பாதுகாப்பு அம்சத்துடன் பாதுகாப்பான முறையில் இயக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ‘வந்தே பாரத்’ ரயிலின் முன்பகுதி மாடு மோதினால்கூட மோசமான விபத்தில் சிக்குவதாக மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
-
Apr 22, 2025 07:37 IST
சுட்டெரிக்கும் வெயில் - வானிலை மையம் அறிவுறுத்தல்
தமிழகத்தில் வரும் 5 நாட்களில் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் முதியவர்கள், குழந்தைகள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை சாதாரண நிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். இதனால், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
-
Apr 22, 2025 07:22 IST
மே 4 முதல் கத்திரி வெயில் தொடக்கம்!
ஏப்ரல் 22 முதல் 27 வரை தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், வெப்பநிலை இயல்பை விட 2°–3°C அதிகரிக்கும். மே 4 முதல் கத்திரி வெயில் தொடங்கி, வெப்பம் மேலும் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.