Chennai News Highlights: ஸ்டாலின் வெற்றி பெறுவதே ஆச்சர்யம்தான் - தமிழிசை சௌந்தரராஜன்

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilisai and Stalin

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Apr 30, 2025 20:54 IST

    சாதிவாரி கணக்கெடுப்பு - அண்ணாமலை பெருமிதம்

    இந்திய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள  அனைத்துக் கட்சிகளும் எப்போதும் சாதியைப் பிளவுபடுத்தவே பயன்படுத்தியுள்ளன. பிரதமர் மோடி அவர்களின் இன்றைய முடிவு நாட்டின் சமூக பொருளாதார அடித்தளங்களை வலுப்படுத்தும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



  • Apr 30, 2025 20:54 IST

    அஜித்துக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்

    பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை விமானநிலையம் வந்த ரஜினிகாந்த்,  நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து



  • Advertisment
  • Apr 30, 2025 20:51 IST

    சமூகநீதிப் பயணத்தில் மற்றொரு வெற்றி: முதல்வர் ஸ்டாலின்

    திராவிட கொள்கைகளால், இயக்கப்படும் சமூகநீதி பயணத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு மற்றொரு வெற்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிகவும் அவசியமான சாதிவாரி கணக்கெடுப்பை மறுத்து தாமதப்படுத்தியதற்கான, அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தபின், மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.



  • Apr 30, 2025 20:09 IST

    சாதிவாரி கணக்கெடுப்பு எங்களுடைய இலக்கு: ராகுல்காந்தி

    . இதை அரசு ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 4 சாதி மட்டுமே இருக்கிறது என்று கூறி வந்த பிரதமர் மோடி, 11 ஆண்டுகளுக்கு பிறகு இதை அறிவித்துள்ளார் என எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Apr 30, 2025 20:04 IST

    சாதிவாரி கணக்கெடுப்பு - அன்புமணி வரவேற்பு 

    சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது 
    வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என பா.ம.க அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • Apr 30, 2025 19:59 IST

    ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! 

    உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சானுக்கு  சுவிட்சர்லாந்தில் நடைபெறும்
     Locarno Film Festival-ல் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது 



  • Apr 30, 2025 19:32 IST

    ஷாஹித் அப்ரிடியின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கம்

    பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்  ஷாஹித் அப்ரிடியின் யூடியூப் சேனல்
    இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக தவறான தகவலை பரப்பி வரும்  பாக். யூடியூப் சேனல்கள் முடக்கம்



  • Apr 30, 2025 18:43 IST

    சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு: ராகுல்காந்தி முயற்சிக்கு கிடைத்த வெற்றி - செல்வப்பெருந்தகை

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் தொடர் அழுத்தத்தின் விளைவாக ஒன்றிய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவு ராகுல் காந்தி முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.



  • Apr 30, 2025 18:35 IST

    அஜித் உடன் சி.எஸ்.கே மேட்ச் பார்த்தது மகிழ்ச்சியான அனுபவம் - சிவகார்த்திகேயன்

    “நடிகர் அஜித்குமாருடன் சி.எஸ்.கே மேட்ச் பார்த்தது மகிழ்ச்சியான அனுபவம். நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கியிருப்பது சந்தோஷம்” என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 



  • Apr 30, 2025 17:58 IST

    சாதிவாரி கணக்கெடுப்பு: பா.ம.க முயற்சிக்கு கிடைத்த பலன்; மோடிக்கு நன்றி - டாக்டர் ராமதாஸ் 

    க்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; இந்தியாவில் சமூகநீதியை நிலைநிறுத்த வகை செய்யும் இந்த முடிவு மிகவும் சிறப்பானது; சாதிவாரி கணக்கெடுப்பு பா.ம.க-வின் 30 ஆண்டுகளுக்கும் மேலான முயற்சிக்கு கிடைத்த பலன் ஆகும்; பிரதமர் மோடிக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்க்கொள்கிறேன் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.



  • Apr 30, 2025 17:23 IST

    நாட்டின் கலாச்சாரம், பெருமைகள் குறித்து தெரியாமல் இருக்கிறார்கள் இளைஞர்கள் - ரஜினிகாந்த் பேச்சு

    சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் வீடியோ மூலம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “இன்றைய இளைஞர்கள் நாட்டின் கலாச்சாரம் பெருமைகள் குறித்து தெரியாமல் உள்ளனர், நாட்டின் உன்னதமான கலாச்சாரம் இளைஞர்களிடம் சேர்க்கப்பட வேண்டும்” என்று கூறினார்.



  • Apr 30, 2025 17:19 IST

    சாதிவாரி கணக்கெடுப்பு அறிவித்த மோடிக்கு இ.பி.எஸ் வாழ்த்து

    சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் அறிவித்த இந்தியப் பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

    ஏற்கனவே அம்மாவின் (ஜெயலலிதா) அரசு இருக்கும்பொழுது, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு வந்த தி.மு.க அரசு அதை கைவிட்டுவிட்டது.

    தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

    சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன்.

    ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் அறிவித்த இந்தியப் பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.



  • Apr 30, 2025 16:55 IST

    சென்னை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல்

    சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்



  • Apr 30, 2025 16:52 IST

    சாதிவாரி கணக்கெடுப்பு வெளிப்படையாக நடத்தப்படும்- அஸ்வினி வைஷ்ணவ்

    அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதியும் சேர்க்கப்படும் என மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

    இதற்கு முன்பு கடந்த 2011ம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

    சாதிவாரி கணக்கெடுப்பு வெளிப்படையாக நடத்தப்படும்

    - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்



  • Apr 30, 2025 16:30 IST

    மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    வடகிழக்கில் ஷில்லாங் முதல் சில்சார் வரை புதிய தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

    மேகாலயா மற்றும் அசாமை இணைக்கும் வகையில் சுமார் 22,000 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு ஒப்புதல்

    கரும்புக்கான குறைந்தப்பட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.355 ஆக நிர்ணயித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்



  • Apr 30, 2025 16:28 IST

    சாதிவாரி கணக்கெடுப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பல்வேறு கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வந்த நிலையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல்



  • Apr 30, 2025 16:25 IST

    திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை

    தமிழகத்தில் திமுக ஆட்சியினை அகற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் இன்று வரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

    - நயினார் நாகேந்திரன்



  • Apr 30, 2025 16:13 IST

    நீட் நுழைவுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

    நாடு முழுவதும் நடைபெற உள்ள நீட் நுழைவுத்  தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு. வரும் மே 4ம் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவுத்  தேர்வு நடைபெற உள்ளது

    http://nta.neet.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.



  • Apr 30, 2025 15:59 IST

    பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் ரத்து

    ரஷ்யா, மாஸ்கோவில் நடைபெறும் மே தின வெற்றி விழா அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார். பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்தியாவில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் பிரதமர் ரஷ்யா செல்லமாட்டார்.

    பிரதமர் மோடிக்கு பதிலாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்



  • Apr 30, 2025 15:54 IST

    கார் பந்தயத்தில் பங்கேற்க நாளை துபாய் புறப்படும் அஜித்

    கார் பந்தயத்தில் பங்கேற்க நாளை துபாய் புறப்படும் நிலையில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளவே நடிகர் அஜித் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக அஜித் தரப்பில் தகவல்

    பரிசோதனை முடிந்து மாலையில் வீடு திரும்புகிறார்.



  • Apr 30, 2025 15:10 IST

    சென்னையில் போலி பெண் மருத்துவர் கைது

    சென்னை அடுத்த நசரத்பேட்டையில் 10-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, மருத்துவ சிகிச்சை அளித்து வந்த பெண் கைது செய்யப்பட்டார். இவரது கணவரும் இதேபோல போலி மருத்துவம் வழக்கில் கைதானது விசாரணையில் தெரிவந்தது.



  • Apr 30, 2025 15:01 IST

    இந்தியாவை விட்டு வெளியேறிய பாக். தூதரக அதிகாரிகள்

    காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. காலக்கெடு இன்றுடன் நிறைவடைந்த நிலையில் இந்தியாவை விட்டு பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேறினர்.



  • Apr 30, 2025 14:18 IST

    விரைவில் தமிழ்ப் பெயர்களுக்கென தனி இணையதளம் உருவாக்கப்படும் - ஸ்டாலின் 

    குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் அதற்கான பொருளும் அடங்கிய இணையதளம் அரசு சார்பில் உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்க நினைத்தாலும் பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை அறிய முடியவில்லை என சமூக வலைத்தளத்தில் வந்த கோரிக்கைக்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கப்படும்.



  • Apr 30, 2025 14:15 IST

    அடுத்த 7 நாட்களுக்கான மழை அப்டேட்!

    தமிழ்நாட்டின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Apr 30, 2025 14:03 IST

    பாதுகாப்பு ஆலோசனைக்குழு மாற்றியமைப்பு

    பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து மாற்றியமைக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசனைக்குழு தலைவராக அலோக் ஜோஷி நியமனம். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் 3 பேர் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்; முன்னாள் விமானப்படைத் தளபதி பி.எம்.சின்ஹா, Ex.ராணுவ தளபதி ஏ.கே.சிங் உள்ளிட்டோர் நியமனம்; தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்தது மத்திய அரசு



  • Apr 30, 2025 13:58 IST

    நடிகர் அஜித்குமாருக்கு மருத்துவமனையில் பரிசோதனை

    நடிகர் அஜித்குமாருக்கு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனை. நேற்று விமான நிலையத்தில் கூட்டத்திற்கு இடையே வந்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக காலில் சிறிய அளவில் அடிபட்ட நிலையில், அதற்கான பிசியோ சிகிச்சை எனத் தகவல் வெளியாகியுள்ளது. 



  • Apr 30, 2025 13:43 IST

    கார் வாங்குவோருக்கு Parking certificate கட்டாயம்?

    இடநெருக்கடி எதிரொலி - சென்னையில் புதிதாக கார் வாங்குவோருக்கு Parking Certificate கட்டாயம்? சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பணிக்குழு, நிலைக்குழு தலைவர் சிற்றரசு வலியுறுத்தல்



  • Apr 30, 2025 13:20 IST

    மே தினம்- எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

    உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் அனைவருக்கும் வாழ்த்துகள்; உழைப்பும் அர்ப்பணிப்புமே நம் நாட்டைக் கட்டமைக்கிறது; உழைப்பே உயர்வு தரும்; தளர்வறியா உழைப்பால் நம் நாட்டின் பெருமையை உயர்த்தும் தொழிலாளர்களுக்கு வாழ்த்துகள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 



  • Apr 30, 2025 12:54 IST

    "சென்னை 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயர் சூட்டுக"

    “சென்னை அசோக் நகர் - கோயம்பேடு 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்” விஜயகாந்துக்கு பத்ம விருதை மத்திய அரசு வழங்க வலியுறுத்தியும் தீர்மானம்; வக்ஃபு சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வராது என்பதை மத்திய உரசு உறுதிசெய்ய வேண்டும் - தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்



  • Apr 30, 2025 12:27 IST

    "மின்னணு உற்பத்தியில் தமிழ்நாட்டில் மிகப்பெரும் வளர்ச்சி"

    மின்னணு உற்பத்தியில் மிகப்பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது தமிழ்நாடு; இந்தியாவிலேயே முதல் முறையாகமின்னணு உதிரிபாக சிறப்பு திட்டத்தை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் ரூ.30,000 கோடி முதலீடுகளை ஈர்த்து 60,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இயலும் என்று தலைமைச் செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டியளித்துள்ளார். 



  • Apr 30, 2025 12:25 IST

    பார்க்கிங் தகராறு - தர்ஷனுக்கு எதிரான வழக்கு ரத்து

    கார் பார்க்கிங் தகராறு தொடர்பாக நடிகர் தர்ஷனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கார் பார்க்கிங் தொடர்பாக, தர்ஷனுக்கும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியின் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது



  • Apr 30, 2025 12:19 IST

    அண்ணா அறிவாலயத்தில் வானதி சீனிவாசன்

    மயிலாப்பூர் எம்.எல்.ஏ வேலுவின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க அண்ணா அறிவாலயம் சென்றார் வானதி சீனிவாசன். திமுக எம்.பி கனிமொழியும், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் பரஸ்பரம் நலம் விசாரிப்பு



  • Apr 30, 2025 12:09 IST

    சென்னையில் கட்டுமானப் பணிகளுக்கு வழிகாட்டுதல்கள்

    சென்னை மாநகருக்குள் கட்டுமானப் பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு; வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் வசூலிக்க முடிவு. 20 ஆயிரம் சதுர மீட்டர் வரையான தளங்களில் விதிமீறலுக்கு ரூ.25,000 வரை அபராதம்; 500 சதுர மீட்டர் பரப்பளவு வரையான கட்டிடங்களுக்கு ரூ.10,000 வரை அபராதம்; நடுத்தர, குறைந்த மதிப்பு கொண்ட கட்டிடங்களை விதிமீறல்களை சரிசெய்ய 10 நாட்கள் அவகாசம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 



  • Apr 30, 2025 12:07 IST

    தீ விபத்தில் தமிழர்கள் பலி- முதல்வர் இரங்கல்

    கொல்கத்தாவில் ஏற்பட்ட தீ விபத்தில் கரூரை சேர்ந்தவர்கள் உயிரிழந்ததை அறிந்து வருந்தினேன் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல், ஆறுதலை தெரிவிக்கிறேன்; இத்துயர்மிகு நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு நமது அரசு துணை நிற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  



  • Apr 30, 2025 11:57 IST

    கூட்டணி தொடர்பான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியாகும் - பிரேமலதா

    கூட்டணி தொடர்பான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியாகும் என்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் தே.மு.தி.க மாநாடு நடத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.



  • Apr 30, 2025 11:42 IST

    மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்

    காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்கி பிரதமர் மோடி நேற்று உத்தரவிட்டார்.



  • Apr 30, 2025 11:22 IST

    தே.மு.தி.க இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் அறிவிப்பு

    தே.மு.தி.க இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதாவின் சகோதரர் எல்.கே. சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரியில் நடைபெறும் தே.மு.தி.க பொதுக்குழு, செயற்குழு நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



  • Apr 30, 2025 10:51 IST

    எதிர்க்கட்சி கூட்டணியை ஒரு கை பார்ப்போம் என்ற முடிவில் இருக்கிறோம் - ஸ்டாலின்

    எதிர்க்கட்சி கூட்டணியை ஒரு கை பார்ப்போம் என்ற முடிவில் இருக்கிறோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், 234 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வென்றாலும் ஆச்சரியமில்லை எனவும், 2026-ஆம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சி தான் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Apr 30, 2025 10:29 IST

    9 பேர் உயிரிழப்பு - ரூ. 25 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு

    ஆந்திர மாநிலம், விசாகபட்டினம் அருகே கோயில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று அம்மாநில முதலைமைச்சர் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.



  • Apr 30, 2025 09:46 IST

    "பாஜக-தவெக கூட்டணி பேச்சா?- எனக்குத் தெரியாது” - நயினார் நாகேந்திரன்

    "பாஜக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேச்சு நடப்பதாக எனக்குத் தெரியாது என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நேற்று மோடியை சந்தித்தேன், இன்று உங்களை சந்திக்கிறேன், நாளை கோட்டையில் சந்திப்போம் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.



  • Apr 30, 2025 09:41 IST

    பயணிகளின் கனிவான கவனத்திற்கு!

    சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் செல்லும் MAA 1, சென்னை விமான நிலையம் - அக்கரை செல்லும் MAA 2 ஆகிய பேருந்துகளின் புறப்படும் நேர அட்டவணையை சென்னை மாநகர போக்குவரத்து கழகம்  வெளியிட்டது.



  • Apr 30, 2025 09:04 IST

    எந்நேரமும் தாக்கப்படலாம்

    இந்திய ராணுவத்தால்  தங்கள் நாடு தாக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் பேசியுள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த ஆதாரங்களும் தங்கள் வசம் உள்ளதாக் வீடியோ வெளியிடப்பட்டது.



  • Apr 30, 2025 09:02 IST

    பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

    ஜம்மு காச்மீர் யூனியன் பிரதேசம் அக்னூர் எல்லைக் கட்டுப்பட்டு கோட்டின் அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தி உள்ளது.



  • Apr 30, 2025 08:39 IST

    அட்சய திருதியை - தங்கம் விலையில் மாற்றமில்லை

    22 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 71 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் நகை கடைகள் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. அட்சய திருதியை நாளில் தங்க நகை வாங்க முன்பதிவு நடைபெற்று வருகிறது. 20% வரை கூடுதல் விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • Apr 30, 2025 08:37 IST

    நியூசிலாந்தில் நிலநடுக்கம்

    நியூசிலாந்தில் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.2 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  இன்வெர்கார் நகரில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வீட்டை விட்டு வெளியேறினார்.



  • Apr 30, 2025 08:36 IST

    மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு. அரசாணை வெளியீடு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் படி மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு. அரசாணை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை விலையின்றி வழங்க ரூ.59.55 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு தயார் நிலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ரூ.11.54 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டிற்கு பயனாளிகள் தொகையான சுமார் ரூ.3 லட்சத்தை அரசே செலுத்த நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



  • Apr 30, 2025 08:35 IST

    கொல்கத்தா ஓட்டலில் தீ விபத்து - தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

    கொல்கத்தாவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை சேர்ந்த முதியவர், அவரது பேரன், பேத்த் என மூவர் உயிரந்துள்ளனர். 



  • Apr 30, 2025 08:32 IST

    மதுரையில் சிறுமி உயிரிழந்த விவகாரம்

    மதுரை கே.கே.நகரில் மழலையர் பள்ளியின் குடிநீர் தொட்டியில் 4 வயது சிறுமி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், பள்ளியின் தாளாளர், உதவியாளர் ஆகியோர் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார், RTO, மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தி, விசாரணையில் விதிமீறல் கண்டறியப்பட்டு பள்ளிக்கு சீல் வைத்தனர். பள்ளியின் தாளாளர் திவ்யா ராஜேஷ் மற்றும் உதவியாளர் வைரமணி ஆகிய இருவரையும் அண்ணா நகர் போலீசார் கைது செய்து 15 நாள் நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.



  • Apr 30, 2025 08:20 IST

    பள்ளி விடுமுறை -அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கோடைகால திருவிழா

    அண்ணா நூற்றாண்டு நூலக குழந்தைகள் பிரிவில்  மே 1 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோடைக்கால திருவிழா நடைபெறுகிறது. 



  • Apr 30, 2025 08:16 IST

    பால் விலை ரூ.2 உயர்வு

    மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதர் டெய்ரி நிறுவனத்தின் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. கொள்முதல் கெலவு அதிகரித்ததால் விலை உயர்வு என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.



news updates Tamilnadu Live News Udpate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: