/indian-express-tamil/media/media_files/2024/12/18/8yPF6oyunCQES4E0AoQv.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பஹல்காம் தாக்குதல் - சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, சென்னையின் மேற்கு மண்டலம் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி அரசு அலுவலகங்கள், புழல் சிறை, ஐ.சி.எப். போன்ற இடங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், உணவகங்கள் மற்றும் தங்குமிடங்களிலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
May 01, 2025 20:38 IST
திருப்பதி - பெண்களிடம் நூதன முறையில் நகை திருட்டு
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பெண்களை, தேவஸ்தான ஊழியர் எனக்கூறி ஏமாற்றி நகை பறித்து வந்த மதுரையை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழுமலையான் கோவில் முன் மாங்கல்ய பூஜை செய்தால், தீர்க்க சுமங்கலியாக இருக்கலாம் என ஏமாற்றி ரூ.13 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்துள்ளார். ஒரு டஜன் கண்ணாடி வளையல்களை வாங்கி கொடுத்து, 40 கிராம் நகையுடன் தப்பியோடிய நபர் வசமாக சிக்கினார். சிசிடிவி காட்சிகள், குற்றப் பதிவேடுகளின் அடிப்படையில், மதுரையை சேர்ந்த சங்கர் ராவ் என்பவரை அதிரடியாக கைது செய்த போலீசார் சங்கர் ராவிடம் இருந்து பல்வேறு பக்தர்கள் பறிகொடுத்த 132 கிராம் தங்க நகைகளும் பறிமுதல்
-
May 01, 2025 19:44 IST
சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு பெரியார் மண்ணுக்கும் கிடைத்த வெற்றி: கி.வீரமணி
சாதிவாரி கணக்கெடுப்புகள் நடத்த வேண்டும் என்று கடந்த 2ஆண்டுகளாக இந்தியா கூட்டணி கட்சிகள், நாடாளுமன்றம் மற்றும் மக்கள் மன்றத்தில், தொடர்ந்து முழங்கி வந்தனர். ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு பெரியார் மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
-
May 01, 2025 19:38 IST
இந்திய ராணுவத்தில் மீண்டும் இணையும் 'துருவ்' ஹெலிகாப்டர்கள்
இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் துருவ் ஹெலிகாப்டர் இந்திய ராணுவத்தில் மீண்டும் இணைகிறது.பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டதால், துருவ் ஹெலிகாப்டர்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது பாதுகாப்புத்துறையின் Defect Investigation Committee-ன் ஆய்வுக்கு பிறகு மீண்டும் இந்திய ராணுவத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்திய ராணுவத்தில் துருவ் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது,
-
May 01, 2025 18:53 IST
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி; சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக சென்னையில் பாதுகாப்பை அதிகரிக்க காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் சோதனை செய்ய காவல் ஆய்வாளர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிடப்பட்டுள்ளது. உளவுத்துறையை முடுக்கி விட்டு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
-
May 01, 2025 18:23 IST
தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் - அமித்ஷா
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு: “தீவிரவாதிகள் கட்டாயம் வேட்டையாடப்படுவார்கள்; தீவிரவாதிகள் அனைவரையும் ஒழிக்கும் வரையில் எங்களது நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம். பயங்கரவாதிகளை மோடி அரசு தப்ப விடாது. பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும்” தெரிவித்துள்ளார்.
-
May 01, 2025 18:14 IST
ஜி.எஸ்.டி வருவாய் வசூலில் புதிய உச்சம்; ஏப்ரலில் ரூ.2.37 லட்சம் ஜி.எஸ்.டி வருவாய் - மத்திய அரசு
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.2.37 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வருவாய் வசூல் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2017-ல் ஜி.எஸ்.டி அமல்படுத்தியதில் இருந்து இதுவே அதிகபட்சமாகும். இது கடந்த ஆண்டு ஏப்ரலை விட 12.6% (ரூ.2.1 லட்சம் கோடி) அதிகம்.
-
May 01, 2025 17:58 IST
கர்நாடகாவில் தொழுகைக்காக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் சஸ்பெண்ட்
கர்நாடகாவில் தொழுகை நடத்துவதற்காக, பேருந்தை பாதி வழியில் நிறுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஹுப்ளி -ஹாவேரி சாலையில், ஜவேரி அருகே நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தர விட்டிருந்தார். விசாரணைக்கு பிறகு சம்மந்தப்பட்ட ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
-
May 01, 2025 17:51 IST
மோடி ஒரு போராளி; காஷ்மீரில் அமைதியை மீண்டும் நிலைநாட்டுவார் - ரஜினி பேச்சு
பிரதமர் மோடி ஒரு போராளி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சர்வதேச ஒலி, ஒளி கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த்; “பிரதமர் நரேந்திர மோடி, ஒரு ஃபைட்டர், அவர் எந்த ஒரு சவாலை எதிர்கொள்வார். 10 ஆண்டுகளாக இந்தியா மற்றும் உலக அளவில் அவர் அதனை நிரூபித்துள்ளார். பஹல்காமில் காட்டுமிராண்டித்தனமான இரக்கமற்ற தாக்குதல் நடந்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி சரியான பதிலடி கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது . காஷ்மீர் நிலைமையை பிரதமர் தைரியமாகவும், அழகாகவும் கையாள்வார். அவர் காஷ்மீரில் அமைதியையும், நம் நாட்டிற்குப் பெருமையையும் கொண்டு வருவார். வாழ்வில் பல்வேறு சவால்களை தொலைநோக்கோடு எதிர்கொண்டு வெற்றி பெற்றவர் மோடி. பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி என்று கூறினார்.
-
May 01, 2025 17:34 IST
மேக்ஸ்வெல் விலகல்
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல் விலகியுள்ளார். நடப்பு தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 48 ரன்களை மட்டுமே எடுத்துள்ள இவர், கை விரலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவால் விலகியுள்ளார். மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக சூர்யன்ஷ் ஷெட்ஜ் களமிறங்குவார் என பஞ்சாப் அணி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
-
May 01, 2025 16:29 IST
மோடி ஒரு போராளி, காஷ்மீரில் அமைதியை மீண்டும் நிலைநாட்டுவார் - ரஜினிகாந்த்
பிரதமர் மோடி ஒரு போராளி, காஷ்மீரில் அவர் அமைதியை மீண்டும் நிலைநாட்டுவார் என மும்பையில் நடைபெற்று வரும் வேவ்ஸ் மாநாட்டின் தொடக்க விழாவில் ரஜினிகாந்த் உரையாற்றினார்
-
May 01, 2025 15:53 IST
சென்னையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை - ஒருவர் கைது
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த ராம்மோகன் என்பவரிடமிருந்து ரூ.15,450 மதிப்புள்ள 6 டிக்கெட்டுகள் பறிமுதல்.
-
May 01, 2025 14:58 IST
சென்னை விமான நிலையத்தில் விஜய் பேட்டி
மதுரை மக்கள் அன்பிற்கு நன்றி. படப்பிடிப்பிற்காக செல்கிறேன். என்னை யாரும் பின்தொடர்ந்து வர வேண்டாம்
மதுரை செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த விஜய்
-
May 01, 2025 14:49 IST
அன்புமணி பேட்டி
Video courtesy
#Watch | "சாதிவாரி கணக்கெடுப்பு.. பாமகவின் வெற்றி!"
— Sun News (@sunnewstamil) May 1, 2025
ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் #SunNews | #CasteCensus | #PMK | @draramadoss pic.twitter.com/32ejFO3Xxe -
May 01, 2025 14:26 IST
புதிய சட்டத்தின்படி தனியார் வங்கி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி
கடன் தவணையை செலுத்தாதற்காக திட்டியதால்
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 1, 2025
உழவர் தற்கொலை: புதிய சட்டத்தின்படி தனியார்
வங்கி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி வடிவேல், தனியார் வங்கியில் பெற்ற கடனுக்கான தவணையை திரும்பச் செலுத்த 20… -
May 01, 2025 14:24 IST
நடிகர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது: ஆர்.கே.செல்வமணி காட்டம்
சூட்டிங்கிற்கு வந்தோம், மேக்கப் போட்டோம், சென்றோம் என நடிகர்கள் இருக்கக்கூடாது. திரைப்பட தொழிலாளர்களுக்கு படத்தின் பட்ஜெட்டில் 5% மட்டுமே சம்பளம் தரப்படுகிறது. படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. அதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.
விஷால் முன்பு நடிகர்கள் குறித்து காட்டமாக பேசிய இயக்குனர் ஆர்.கே.செல்வமணி
-
May 01, 2025 13:51 IST
தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்: செங்கோட்டையன்
நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். தொண்டனாக இருந்தால் மட்டுமே கட்சி பணியை சிறப்பாக செய்து அனைவரையும் சந்திக்க முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
May 01, 2025 13:32 IST
மே 5 வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரியில் வரும் 5ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
May 01, 2025 13:09 IST
ஓரிரு நாட்களில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்
10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளதாக தகவல். நடப்பாண்டில் சுமார் 42 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதியுள்ளனர்; cbse.gov.in, cbseresults.nic.in, results.cbse.nic.in என்ற இணையதளங்கள், டிஜிலாக்கர், உமங் செயலிகளிலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்
-
May 01, 2025 12:52 IST
"அண்ணா பல்கலை. வழக்கு - சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது"
ஞானசேகரன் மீது சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஞானசேகரன் மீது சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது. ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், காவல்துறை விசாரணையில் எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி தரப்பில் அறிக்கையிட்டுள்ளது.
-
May 01, 2025 12:32 IST
3 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள்
பஹல்காமில் தாக்குதல் நடத்தும் முன்பாக காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள். அரு பள்ளத்தாக்கு, பொழுதுபோக்கு பூங்கா, பெடப் பள்ளத்தாக்கு பகுதிகளில் தாக்குதலுக்கு திட்டமிட்டனர்; 3 பகுதிகளிலும் போதுமான பாதுகாப்புப் படையினர் இருந்ததால் தாக்குதலை தவிர்த்தது விசாரணையில் அம்பலம்; பஹல்காமில் தாக்குதல் நடத்திய ஏப். 22ஆம் தேதிக்கு இரு நாட்களுக்கு முன்பே அங்கு வந்த தீவிரவாதிகள்
-
May 01, 2025 12:29 IST
பத்திரப் பதிவில் ஒரே நாளில் ரூ.272 கோடி வருவாய்
இதுவரை இல்லாத அளவாக நேற்று (மே.1) ஒரே நாளில் ரூ.272.87 கோடி வருவாய் ஈட்டிய பதிவுத்துறை. அட்சய திருதியை நாளான நேற்று மட்டும் 27,440 ஆவணங்கள். பதிவு செய்யப்பட்டுள்ளன; பிப்ரவரி 10இல் ரூ.237 கோடி கிடைத்ததே ஒரே நாளில் கிடைத்த அதிகபட்ச வருவாயாக இருந்து வந்தது.
-
May 01, 2025 11:59 IST
பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் ரத்து
ரஷ்யா, மாஸ்கோவில் நடைபெறும் மே தின வெற்றி விழா அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார். பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்தியாவில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் பிரதமர் ரஷ்யா செல்லமாட்டார். பிரதமர் மோடிக்கு பதிலாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
May 01, 2025 11:55 IST
ஏ.சி. மின்சார ரயிலின் கால அட்டவணை மாற்றம்
பயணிகளின் கோரிக்கைகள் அடிப்படையில், சென்னையில் ஏசி மின்சார ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்யப்பட உள்ளது. இது, நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: முதல் ஏசி மின்சார ரயில் சேவை தாம்பரத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டுக்கு காலை 7.35 மணிக்கு சென்றடையும். 2வது ஏசி மின்சார ரயில் சேவை செங்கல்பட்டில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரையை காலை 9.25 மணிக்கு வந்தடையும். 3வது சேவை, சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.41 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்தை காலை 10.36 மணிக்கு அடையும். 4வது ரயில் சேவை, தாம்பரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரையை மதியம் 1.55 மணிக்கு அடையும். 5வது ரயில் சேவை, சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டுக்கு மாலை 4 மணிக்கு சென்று அடையும். 6வது ரயில் சேவை செங்கல்பட்டில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு மாலை 6 மணிக்கு வந்தடையும்.
-
May 01, 2025 11:54 IST
சென்னையில் மே 7-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
சோழிங்கநல்லூர் தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து மே 7 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது. சோழிங்கநல்லூர் தொகுதிக்குள்பட்ட இடங்களில் மக்களின் அடிப்படை, அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும், அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்காமலும் இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
May 01, 2025 11:31 IST
புழுங்கல் அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி
புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரியை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டு உள்ளது. உள்நாட்டில் அரிசி விலையை நிலைப்படுத்தவும், தேவைக்கேற்ப இருப்பு மற்றும் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் வரி விதிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 01, 2025 11:10 IST
பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் வருமா? - அன்பில் மகேஸ் பதில்
கோடை விடுமுறை முடிந்து வெயிலைப் பொருத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். மேலும் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
May 01, 2025 11:09 IST
1.80 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டம்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 1.80 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி, அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மேயர் பிரியா கூறினார்.
-
May 01, 2025 10:55 IST
இந்திய எல்லையில் படைகள் குவிப்பு - பாக். பதற்றம்
பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், இந்திய எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என பாகிஸ்தான் பதற்றமடைந்துள்ளது. ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவை தயார் நிலையில் உள்ளன. இதனால், இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து உள்ளது.
-
May 01, 2025 10:04 IST
பஹல்காம் தாக்குதல் - சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, சென்னையின் மேற்கு மண்டலம் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன்படி அரசு அலுவலகங்கள், புழல் சிறை, ஐ.சி.எப். போன்ற இடங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், உணவகங்கள் மற்றும் தங்குமிடங்களிலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
May 01, 2025 09:40 IST
மே 1 விடுமுறையை சட்டமாக்கியவர் கலைஞர்: முதல்வர்
மே 1 விடுமுறை என்று கொண்டுவந்தவர் அறிஞர் அண்ணா; அதை சட்டமாக்கியவர் கலைஞர் என ஸ்டாலின் கூறியுள்ளார். மே தின பூங்காவை அமைத்து அங்கு நினைவுச் சின்னத்தை உருவாக்கியவர் கலைஞர் தான் என்றும் தெரிவித்தார்.
-
May 01, 2025 08:55 IST
சென்னையில் மே தின பூங்காவில் ஸ்டாலின் மரியாதை
உழைப்பாளர் தினத்தையொட்டி சென்னை மே தின பூங்காவில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
-
May 01, 2025 08:49 IST
ஐஎஸ்பிஆர் யூடியூப் சேனல் இந்தியாவில் தடை
பாகிஸ்தான் ராணுவத்தின் ஐஎஸ்பிஆரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலை இந்தியா தடை செய்தது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் பிரச்சார பிரிவு இந்தியாவில் மூடப்பட்டுள்ளது.
-
May 01, 2025 08:24 IST
மனதளவில் இந்துக்களாக இருக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
மனதளவில் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும், இந்துத்துவா பண்பாட்டை நாம் காப்பாற்ற வேண்டும். ஒருவர் வாழ்வு, உடை, பேசும் விதம் ஆகியவற்றை வைத்து கணக்கிடகூடாது என லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
-
May 01, 2025 08:23 IST
பாக்., நடிகர்களின் இன்ஸ்டா கணக்குகள் முடக்கம்
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
May 01, 2025 08:22 IST
நியோமேக்ஸ் வழக்கு: விசாரணை அதிகாரி மாற்றம்
நியோமேக்ஸ் வழக்கின் விசாரணை அதிகாரியான பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி மனிஷா மாற்றப்பட்டுள்ளார். திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி இம்மானுவேல் ராஜ்குமாரிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நியோமேக்ஸ் வழக்கு ஆவணங்களை டிஎஸ்பி இம்மானுவேல் ராஜ்குமாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.
-
May 01, 2025 08:18 IST
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
May 01, 2025 08:16 IST
விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்கள்
தவெக தலைவரும் நடிகருமான விஜயை காண மதுரை விமான நிலையத்தில் ரசிகர்கள் குவிந்தனர். காலை 7 மணிக்கு நடிகர் விஜய் வர உள்ளதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் இன்று மாலை 4 மணிக்கு நடிகர் விஜய் விமான நிலையம் வருகிறார்.
-
May 01, 2025 07:49 IST
அட்சய திருதியை - ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை
அட்சய திருதியை நாளில், ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கம் விலையில் மாற்றம் இல்லை என்பதால் நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.
-
May 01, 2025 07:48 IST
100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதி விடுவிப்பு
100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான ரூ.2,999 கோடியை மத்திய அரசு விடுவித்தது. 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியில் நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
-
May 01, 2025 07:27 IST
"குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியே வராதீங்க"
தமிழகத்தில், நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை வழங்கியுள்ளார்.
-
May 01, 2025 07:26 IST
ஏடிஎம் கட்டண உயர்வு இன்று முதல் அமல்
பெருநகரங்களில் 1 மாதத்தில் 3 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளும் மற்ற நகரங்களில் 5 இலவச பரிவர்த்தனைகளும் செய்யலாம். பரிந்துரையை விட அதிகமாக பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 வரி செலுத்த வேண்டும்.
-
May 01, 2025 07:25 IST
வணிக கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைப்பு
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் ரூ.1906-க்கு விற்பனையாகிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
-
May 01, 2025 07:15 IST
ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு எனது உழைப்பாளர் நாள் வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
May 01, 2025 07:13 IST
பாக்.விமானங்கள் பறக்க தடை !
பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் இந்தியா தனது வான் பரப்பில் பறக்க தடை செய்துள்ளது. இந்த தடை மே 23 ஆம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
May 01, 2025 07:12 IST
ரயில் பயணிகள் கவனத்திற்கு!
உழைப்பாளர் தினம் தேசிய விடுமுறை என்பதால் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.