Chennai News Updates: பா.ஜ.க கூட்டணி குறித்து வெளிப்புறத்தில் விமர்சிக்க வேண்டாம்: செயற்குழு கூட்டத்தில் இ.பி.எஸ் பேச்சு

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
EPS

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

வாட்ஸ்அப் பயணர்: மாதம் 3 பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருவதாக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் தகவல் தெரிவித்துள்ளார். 2009யில் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் 2020 ஆம் ஆண்டில் மாதம் 2 பில்லியன் பயனர்களை ஈர்த்து அசத்திய நிலையில் தற்போது 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

  • May 03, 2025 00:04 IST

    பாஜக. கூட்டணி குறித்து வெளிப்புறத்தில் விமர்சிக்க வேண்டாம்: செயற்குழு கூட்டத்தில் இ.பி.எஸ் பேச்சு

    பாஜக. கூட்டணி குறித்து வெளிப்புறத்தில் எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்க வேண்டாம். பா.ஜ.க கூட்டணி எப்படி உருவானதோ அதேபோல் மேலும் சில கட்சிகள் நமது கூட்டணிக்குள் வரும். 234 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடுவதாக நினைத்து நீங்கள் வேலை பார்க்க வேண்டும் என்று, செயற்குழு கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.



  • May 03, 2025 00:01 IST

    3 ஆண்டுகளில் ரூ.21 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய இந்திய யூடியூபர்கள்

    கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய யூடியூபர்கள் 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக யூடியூப் CEO நீல் மோகன் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் யூடியூப் சேனல் தொடங்குவதை பலரும் குடிசை தொழில் போல ஆரம்பித்து வருவதாக கருத்து



  • Advertisment
    Advertisements
  • May 02, 2025 23:52 IST

    குப்பை எரிக்கும் ஆலையில் ஆய்வு செய்ய உத்தரவு

    மணலி சின்னமாத்தூரில் குப்பை எரிக்கும் ஆலை அனுமதி இல்லாமல் செயல்படுகிறதா? நேரில் ஆய்வு செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு



  • May 02, 2025 23:51 IST

    ஜெயிலர் 2-க்கு பிறகும் ரஜினி தொடர்ந்து நடிப்பார்: லதா ரஜினிகாந்த்

    ஜெயிலர்-2 படத்திற்கு பிறகும், நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து நடிப்பார் என அவரது மனைவி லதா பேட்டியில் கூறியுள்ளார். ஜெயிலர்-2 படத்திற்கு பின் ரஜினி ஓய்வெடுக்க உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.



  • May 02, 2025 20:52 IST

    புதிய வக்ஃப் சட்டத்திற்கு எதிராக போராட்டம்: சென்னையில் மாணவர் இந்தியா அமைப்பினர் கைது

    புதிய வக்ஃப் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாணவர் அமைப்பான மாணவர் இந்தியா அமைப்பினர் காவல் தடுப்புகளை மீறி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காவல்துறையினருடன் ஏற்பபட்ட தள்ளு முள்ளுக்குப் பின் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.



  • May 02, 2025 20:50 IST

    மாநகராட்சி மற்றும் நகராட்சியில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்த உத்தரவு

    அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சியில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்தவும்,  நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாய்களால் ஏற்படும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டப்படுத்த முதலவர் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



  • May 02, 2025 19:56 IST

    பாஜகவுடனான கூட்டணியை வரவேற்று அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

    அதிமுக செயற்குழுவில், ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகளை இணைத்து மெகா கூட்டணி அமைக்க வியூகம் வகுத்த எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு. திமுகவின் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி, கேள்விகளுடன் தீர்மானம் நிறைவேற்றம். மேலும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாகவும், அரணாகவும் அதிமுக திகழும் என தீர்மானம்



  • May 02, 2025 18:46 IST

    சகாயம் புகார் குறித்து உள்துறை முடிவு செய்யும் – அரசு தரப்பு தகவல்

    உயிருக்கு அச்சுறுத்தல் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் தெரிவித்த புகார் குறித்து உள்துறை முடிவு செய்யும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. யாருக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதை காவல் துறை, உளவுப்பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உள்துறை முடிவு செய்கிறது என அரசு தெரிவித்துள்ளது



  • May 02, 2025 18:23 IST

    ஜி.எஸ்.டி வரி மோடி அரசின் தன்னிச்சையான முடிவு இல்லை - நிர்மலா சீதாராமன்

    ஜி.எஸ்.டி வரி மத்திய அரசின் தன்னிச்சையான முடிவு இல்லை. மோடி தனியாக மக்களுக்கு வரி விதிப்பது போல் பேசப்படுகிறது. ஒவ்வொரு மாநில நிதி அமைச்சர்களும் ஜி.எஸ்.டி கவுன்சிலில் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். அனைவருடைய கருத்துக்கள் அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்



  • May 02, 2025 18:19 IST

    ஓடும் பேருந்தில் பட்டியலின பெண் மீது தாக்குதல்

    உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கீரி பகுதியில் ஓடும் பேருந்தில், பட்டியலின பெண்ணை அறைந்தும், முடியை பிடித்து இழுத்தும் சரமாரியாக இளைஞர்கள் தாக்கியுள்ளனர். எதிர்ப்பு தெரிவித்த பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீதும் இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர். பட்டியலின பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது



  • May 02, 2025 17:54 IST

    வடமாநிலங்களில் கூட வேங்கைவயல் போன்ற சம்பவம் நடைபெறவில்லை - நிர்மலா சீதாராமன் 

    வடமாநிலங்களில் கூட வேங்கைவயல் போன்ற சம்பவம் நடைபெறவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, தமிழ்நாடு முன்னேறி வருகிறது என்று கூறுகிறார்கள் எனவும், ஆனால் அதே தமிழ்நாட்டில் தான் வேங்கைவயல் சம்பவம் நடந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு என்பது தி.மு.க-வின் வெற்றி என்று கூறுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.



  • May 02, 2025 17:20 IST

    அ.தி.மு.க செயற்குழு கூட்டம்

    சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி அமைந்த பிறகு நடைபெறும் அக்கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் இது என்பது  குறிப்பிடத்தக்கது.



  • May 02, 2025 17:13 IST

    சீமானுக்கு எதிரான விசாரணையின் இடைக்கால தடை நீட்டிப்பு

    நடிகை அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான விசாரணையின் இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது. மேலும், சீமானின் மேல்முறையீட்டு மனுவிற்கு பதில் அளிக்க சம்பந்தப்பட்ட நடிகைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இதன் விசாரணையை ஜூலை 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.



  • May 02, 2025 16:42 IST

    தமிழ்நாட்டில் இருந்து திறமையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உருவாகின்றனர் - நிர்மலா சீதாராமன்

    தமிழ்நாட்டில் இருந்து திறமையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உருவாகின்றனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.



  • May 02, 2025 16:36 IST

    சகாயத்திற்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் - தமிழ்நாடு அரசு

    ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், "யாருக்கு பாதுகாப்பு அளிப்பது என்பதை காவல்துறை மற்றும் உளவுப் பிரிவுடன் ஆலோசித்து உள்துறை முடிவு செய்யும் என்றும், பாதுகாப்பு கோரி அளிக்கப்படும் கடிதத்தில் இருக்கும் விவரங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 02, 2025 16:17 IST

    கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்

    கோயம்பேடு மற்றும் பட்டாபிராம் இடையேயான 21.76 கி.மீ மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 19 உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்களுடன் அமையவுள்ள இந்த வழித்தடத்தின் திட்ட மதிப்பீடு, ரூ. 9,928.33 கோடி என்று நிர்ணயம் செய்யப்பட்டுளது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதிக்காக இது தொடர்பான கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 



  • May 02, 2025 14:53 IST

    தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த ஆலோசனை

    தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது மற்றும் நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை



  • May 02, 2025 14:53 IST

    தமிழ்நாட்டில் வரும் 6 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் வரும் 6 ஆம் தேதி ஒரு சில இடங்களில் லேசானது முதம் மிதமான மழை பெய்யும். நீலகிரி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, கோவை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம்



  • May 02, 2025 14:50 IST

    தகவல் தொழில்நுட்பத்தில் காவல்துறை பின்தங்கியுள்ளது

    தமிழ்நாடு காவல்துறை, தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் பின்தங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள விசாரணை அமைப்புகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான  காலம் வந்துவிட்டது

    காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



  • May 02, 2025 14:48 IST

    போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது நடவடிக்கை

    போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் - அமைச்சர் கீதா ஜீவன்



  • May 02, 2025 14:35 IST

    விளம்பரம்: வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் எச்சரிக்கை

    வழக்கறிஞர்கள் தங்களது தொழில் தொடர்பாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த விளம்பரமும் செய்ய கூடாது. போஸ்டர், பேனர் என விளம்பரம் வெளியிட்டால் வழக்கறிஞர்களுடைய பதிவு நிறுத்தி வைக்கப்படும்.

    சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் வெளியிட்டாலும்  வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை பாயும். சட்டம் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் வழக்கறிஞர் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம், விளம்பரம் செய்வது சட்ட விரோதமானது.

    வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு  மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் எச்சரிக்கை



  • May 02, 2025 14:34 IST

    விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்து பார்வையிட்ட பிரதமர் மோடி



  • May 02, 2025 13:54 IST

    3 ஆண்டுகளில் ரூ.21,000கோடி அள்ளிய இந்திய யூடியூபர்கள்

    “3 ஆண்டுகளில் இந்திய யூடியூபர்களுக்கு ரூ.21,000 கோடி வரை வழங்கிய யூடியூப் நிறுவனம்; Content Creator-களின் நாடாக மாறிய இந்தியா" கிரியேட்டர்களை ஊக்கவிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் யூடியூப்; இந்திய யூடியூபர்களின் வீடியோக்களை வெளிநாட்டினர் 4,500 கோடி மணி நேரம் பார்த்துள்ளனர்; 11,000ல் இருந்து 15,000 ஆக உயர்ந்துள்ள ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் சேனல்கள் என்று யூடியூப் சிஇஓ மோகன் நீல் தெரிவித்துள்ளார். 



  • May 02, 2025 13:28 IST

    தமிழக காவல் துறை செயலிழந்து விட்டதா?: அண்ணாமலை

    தமிழக காவல்துறை செயலிழந்து விட்டதா?: அண்ணாமலை கொலை சம்பவங்களில் கைது இல்லை; தமிழக காவல்துறை செயலிழந்து போய்விட்டதா? ஒரு சில குற்றங்கள் நடப்பதாக சட்டமன்றத்தில் சாதாரணமாகக் கூறுகிறார் முதல்வர். ஒரே பாணியில் தொடர் கொலைகள் நடப்பதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமா? என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்விகை எழுப்பியுள்ளார். 



  • May 02, 2025 12:57 IST

    விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் திறப்பு

    ரூ.8,867 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. அதிக சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகம் உலகளாவிய கடல்சார் வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது  



  • May 02, 2025 12:28 IST

    புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகும்: மோடி

    “விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும் பெரிய சரக்குக் கப்பல்களை நிறுத்த இடமளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைப்பு" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 



  • May 02, 2025 12:13 IST

    நம்மாழ்வார் விருதுகளை முதல்வர் வழங்கினார்

    வேளாண்மை-உழவர் நலத் துறை சார்பில் “நம்மாழ்வார்” விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு 2025க்கான நம்மாழ்வார் விருதுகள்



  • May 02, 2025 11:47 IST

    தெரு நாய்க்கடி தொல்லை: ஸ்டாலின் ஆலோசனை

    தெரு நாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது, கருத்தடை செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.



  • May 02, 2025 11:45 IST

    ”இதுதான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா?”

    காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, "சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" என்று பெருமை பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடன் இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். கொலை- கொள்ளையில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.



  • May 02, 2025 11:32 IST

    சட்டவிரோதமாக தங்கியிருந்த 8 வங்கதேசத்தினர் கைது

    சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். அகரமேல் பகுதியில் ரவுடிகள், தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது, ஆவணங்கள் இன்றி வங்கதேசத்தினர் தங்கியிருந்த‌து கண்டுபிடிக்கப்பட்டது. வாடகை வீட்டில் தங்கியிருந்து, சாலையோரங்களில் பழைய பொருட்களை சேகரிக்கும் வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வாரம் குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் வங்கதேசத்தினர் 33 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.



  • May 02, 2025 10:54 IST

    எம் சாண்டு, ஜல்லி விலை குறையவில்லை -ராமதாஸ்

    தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்ட ஜல்லி, எம்.சாண்டு உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலைகள் குறைக்கப்படும் எனறு தமிழ்நாடு அரசு அறிவித்து, ஒரு வாரமாகியும் அவற்றின் விலைகள் குறைக்கப்படவில்லை. கட்டுமான தொழில் பாதிப்புக்கும், கட்டுமானச் செலவு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கக்கூடிய இந்த விலை உயர்வு திரும்ப பெறப்படாதது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 



  • May 02, 2025 10:50 IST

    ”சென்னை பல்கலை.க்கு உயிரூட்ட துணைவேந்தரை நியமியுங்கள்”

    பல்கலைக்கழகச் சட்டங்கள் தொடர்பான வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என அறிவித்துள்ளது. அதை பின்பற்றி சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தில் காலியாக உள்ள 9 பல்கலைக்கழகங்களுக்கும் உடனடியாக துணை வேந்தர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.



  • May 02, 2025 10:42 IST

    குறைந்த மதிப்பெண் பெற்றால் பெயில் - அன்பில் மகேஸ் எதிர்ப்பு

    சிபிஎஸ்இ 5,8ம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றால் பெயில் என்பதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 5,8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்குவது பெற்றோர்களுக்கு பெரும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தும்; மாணவர்கள் கல்வி கற்பதை விட்டே செல்லும் நிலை உருவாகும். தேசிய கல்விக் கொள்கையை சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படுத்தும்போது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். 5,8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கும் முடிவை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.



  • May 02, 2025 10:41 IST

    கேதர்நாத் கோவில் நடை திறப்பு - பக்தர்கள் தரிசனம்

    இந்த ஆண்டு அக்ஷயதிரிதியை தினத்தை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 30-ந்தேதி 'சார் தாம்' யாத்திரை தொடங்கியது. அன்றைய தினம் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களின் நடைகள் திறக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று அதிகாலை 7 மணிக்கு கேதர்நாத் கோவில் நடை திறக்கப்பட்டது. கேதர்நாத் கோவில் முழுவதும் மலர் அலங்காரங்கள் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்தது. கோவில் நடை திறப்பை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. 



  • May 02, 2025 10:37 IST

    தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை

    தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.



  • May 02, 2025 10:04 IST

    சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை

    மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. முடிவு தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  



  • May 02, 2025 09:43 IST

    ஏப்ரல் ஜிஎஸ்டி வசூல் நிலவரம்

    ஏப்ரல் மொத்த ஜி.எஸ்.டி வசூல் ரூ.2.36 லட்சம் கோடிஎன நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார். 



  • May 02, 2025 09:41 IST

    டெல்லியில் கனமழை - விமான சேவை பாதிப்பு

    டெல்லியில் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. துவாரகா, மின்டோ சாலை, கீதா காலனி உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் வெள்ளம் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது.



  • May 02, 2025 09:40 IST

    8வது நாளாக அத்துமீறல்!

    ஜம்மு காஷ்மீர் எல்லையில் 8 ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறியுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ச்சியாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். பூஞ்ச், குப்வாரா, பாரமுல்லா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர்.



  • May 02, 2025 09:38 IST

    டிரம்ப் எச்சரிக்கை

    ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன். ஈரானுடன் வர்த்தக உறவு வைத்திருக்கும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • May 02, 2025 09:36 IST

    பஹல்காம் தாக்குதல்

    காஷ்மீரிகள், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பரப்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அமைதியை மட்டுமே விரும்புகிறோம் என பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை வீரரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார். 



  • May 02, 2025 08:58 IST

    சி.பி.எஸ்.இ பள்ளிகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஃபெயில்

    சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ‘ஃபெயில்' என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. தங்களின் குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் ஃபெயில் ஆக்க சம்மதிப்பதாக பெற்றோர்களிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருகின்றன!. 



  • May 02, 2025 08:57 IST

    உலகின் வயதான நபர் உயிரிழந்தார்!

    உலகின் வயதான நபராக திகழ்ந்த பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ் தனது 116 வயதில் காலமானார். 1908 ஆம் ஆண்டில் பிறந்த இவர் தீவிர கால்பந்து ரசிகை என்பதால் ஒவ்வொரு ஆண்டும் கால்பந்து மைதானம் போல் வடிவமைக்கப்பட்ட கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவர் என குடும்பத்தினர் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.



  • May 02, 2025 08:54 IST

    சீமானுக்கு கொலை மிரட்டல் - இளைஞர் கைது

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, இன்ஸ்டாகிராம் வழியே கொலை மிரட்டல் விடுத்த புகாரில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தோஷ் என்பவரை விசாரணைக்கு உட்படுத்தி, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



  • May 02, 2025 08:53 IST

    சென்னை புறநகர் AC ரயில் சேவை அதிகரிப்பு

    சென்னை புறநகர் குளிர்சாதன ரயில் சேவைகளின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஏசி ரயில் எண்ணிக்கை 3 லிருந்து 8 ஆக அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



  • May 02, 2025 08:27 IST

    சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகள் நியமனம்

    கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி ஹேம்ந்த் சந்தன்கவுடர் மற்றும் தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிடப்பட்டுள்ளது. 



  • May 02, 2025 08:19 IST

    டெல்லியில் வெளுத்து வாங்கிய கனமழை

    டெல்லியில் அதிகாலையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழையால் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.



  • May 02, 2025 08:17 IST

    சென்னையில் அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது

    பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் அதிமுக செயற்குழு இன்று (மே.2) கூடுகிறது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு செயற்குழு கூடுகிறது. கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கான காரணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • May 02, 2025 08:10 IST

    தெருநாய்கள் தொல்லை - இன்று ஆலோசனை கூட்டம்

    சென்னை மட்டும் இன்றி மாநிலம் முழுவதும் தெரு நாய்கள் தொல்லை மீண்டும் அதிகரித்து வருவதால், 
    அவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.



  • May 02, 2025 08:10 IST

    சிறந்த நடிகர் விருது பெறும் நடிகர் அர்ஜுன் தாஸ்!

    தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் ரசவாதி படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை அர்ஜூன் தாஸ் பெறுகிறார். இது இப்படத்திற்காக இவர் பெறும் 3 ஆவது விருதாகும்.



Tamilnadu News Update news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: