/indian-express-tamil/media/media_files/ac1sX4PDUrUzaT7DpB6j.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று (மே 4) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 92.39-க்கும் விற்பனை ஆகிறது. இதேபோல், சி.என்.ஜி ஒரு கிலோ ரூ. 91.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் பாக். : காஷ்மீரின் பகல்ஹாமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து, எல்லையில் 11வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
-
May 05, 2025 21:41 IST
மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். மீனவர்கள் மீதான தாக்குதல் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை உடைத்து வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
-
May 05, 2025 21:16 IST
பொதுமக்களை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது; செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் - ஐ.நா. தலைவர்
பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கிட்டத்தட்ட 12 நாட்களுக்குப் பிறகு, ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் தாக்குதலைக் கண்டித்து, பொதுமக்களை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், பொறுப்பானவர்கள் நம்பகமான, சட்டபூர்வமான வழிகளில் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் பதற்றமடைந்து வருவது குறித்து கருத்து தெரிவித்த குட்டெரெஸ், அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், விளிம்பிலிருந்து பின்வாங்குமாறும் வலியுறுத்தினார்.
-
May 05, 2025 20:56 IST
வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை ரூ.5 லட்சமாக உயர்வு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வணிகர் கோரிக்கை பிரகடன மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: “வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து நிரந்தர உறுப்பினர்களாக இருப்போருக்கான உதவித்தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்படும். உணவுப் பொருட்கள் விற்பனை தவிர்த்து 500 சதுர அடிக்கு கீழ் உள்ள நிறுவனங்களுக்கு சுய சான்றிதழ் அடிப்படையில் தொழில் உரிமம் வழங்கப்படும். சென்னை மாநகராட்சி நீங்கலாக பிற மாநகராட்சிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் உள்ள பிரச்னைகளை தீர்க்க அமைக்கப்பட்ட வழிகாட்டுக்குழுவைப் போல, சென்னையிலும் பிற நகராட்சிகளிலும் அமைக்கப்படும். வர்த்தகர்கள், சிறு வியாபாரிகளுக்கான புதிய இணையதளம் உருவாக்கப்படும். 22 சேவைகளை இதன் மூலம் வணிகர்கள் பெற்றுக்கொள்ளலாம். அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் வணிக நிறுவனங்களை திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்” என்று அறிவித்தார்.
-
May 05, 2025 20:53 IST
24 மணி நேரம் வணிக நிறுவனங்களை திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை; 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு - ஸ்டாலின்
வணிகர் கோரிக்கை பிரகடன மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: “அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் வணிக நிறுவனங்களை திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்” என்று கூறினார்.
-
May 05, 2025 20:27 IST
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: ‘குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்’ - புதின்
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆதரவு தெரிவித்தார். மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய புடின், "பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்தார்" மற்றும் அப்பாவி உயிர்கள் இழப்புக்கு இரங்கல் தெரிவித்தார் என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சமூக ஊடக பதிவில் தெரிவித்தார்.
ரஷ்ய தூதரகத்தின் அறிக்கையில், புடின் இந்த பயங்கரவாத தாக்குதலை "காட்டுமிராண்டித்தனமானது" என்று விவரித்தார். மேலும், இரு தலைவர்களும் பயங்கரவாதத்திற்கு எதிரான "சமரசம் செய்யாத போராட்டம்" அனைத்து வடிவங்களிலும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள வருடாந்திர இந்தியா-ரஷ்ய உச்சி மாநாட்டிற்கு பிரதமரின் அழைப்பை அதிபர் ஏற்றுக்கொண்டதாகவும் அந்த அறிக்கை கூறியது.
அப்பாவி உயிர்கள் இழப்புக்கு ரஷ்ய அதிபர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு "முழு ஆதரவை" தெரிவித்தார் என்று ஜெய்ஸ்வால் கூறினார். "இந்த கொடூரமான தாக்குதலின் குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்" என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
-
May 05, 2025 20:13 IST
மே 5-ம் தேதியை ‘வணிகர் நாளாக’ அறிவிப்பதற்கு அரசாணை விரைவில் வெளியிடப்படும் - மு.க.ஸ்டாலின்
மதுராந்தகத்தில் நடைபெற்ற வணிகர் கோரிக்கை பிரகடன மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மே 5-ம் தேதியை ‘வணிகர் நாளாக’ அறிவிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் ” என்று உறுதியளித்தார்.
-
May 05, 2025 20:11 IST
நடிகர் கவுண்டமணியின் மனைவி மறைவு- விஜய் நேரில் அஞ்சலி
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி மறைவுக்கு நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, கவுண்டமணிக்கு ஆறுதல் கூறினார்.
-
May 05, 2025 19:22 IST
‘எதிரி நாடு தாக்குதல்’ நடத்தினால்... மே 7-ம் தேதி போர் முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை; மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
மாதிரி ஒத்திகைகளில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை ஒலிப்பான்களை இயக்குவது, 'எதிரி நாட்டு தாக்குதல்' ஏற்பட்டால் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பயிற்சி அளிப்பது ஆகியவை அடங்கும் என்று பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு வட்டாரங்கள் தெரிவித்தன.
'எதிரி நாட்டு தாக்குதல்' ஏற்பட்டால் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மே 7ஆம் தேதி மாதிரி ஒத்திகைகளை நடத்த பல மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு வட்டாரங்கள் தெரிவித்தன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 25 சுற்றுலாப் பயணிகளும் ஒரு உள்ளூர் நபரும் கொடூரமாக கொல்லப்பட்டதை அடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலைகள் நிலவும் நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது.
-
May 05, 2025 18:49 IST
பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் மோடி அவசர ஆலோசனை
பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். ஏற்கனவே, இன்று காலை பாதுகாப்பு துறை செயலருடன் ஆலோசனை நடத்தியதால், இந்தக் கூட்டமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
-
May 05, 2025 18:17 IST
குரூப் 2 ஏ முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி
குரூப் 2 ஏ முதன்மை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிந்து 56 நாட்கள் கடந்த நிலையில், இதன் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. மேலும், தொடர்ந்து 12-வது முறையாக தேர்வாணையத்தின் தெரிவு அட்டவணையில் குறிப்பிட்ட மாதத்தில், தவறாமல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
-
May 05, 2025 18:03 IST
நீட் தேர்வு சோதனைகளுக்கு சி.பி.ஐ கண்டனம்
நீட் தேர்வு மையங்களில் மாணவர்களிடம் நடத்தப்படும் சோதனைகளுக்கு சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி, "நீட் தேர்வு மையங்களில் மாணவர்கள் நடத்தப்பட்ட முறை, நாகரிக சமூகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அடக்குமுறையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.
-
May 05, 2025 17:45 IST
நாட்டின் வளர்ச்சிக்காக சமஸ்கிருதம் மேம்படுத்தப்படுகிறது - அமித்ஷா
நாட்டின் வளர்ச்சிக்காக சமஸ்கிருதம் மேம்படுத்தப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும், "கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளின் தாயாக சமஸ்கிருதம் இருக்கிறது. இதில் இணையற்ற இலக்கன அமைப்பு இருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
May 05, 2025 17:35 IST
எச்சில் இலையில் உருளும் சம்பிரதாயத்திற்கு தடை நீட்டிப்பு
கரூர் மாவட்டம், நெரூரில் எச்சில் இலையில் உருளும் சம்பிரதாயத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சதாசிவ பிரம்மேந்திரரின் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் எச்சில் இலையில் உருளும் சம்பிரதாயத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதனை எதிர்த்து நெரூர் மடம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு மீது உத்தரவிடப்பட்டுள்ளது.
-
May 05, 2025 17:17 IST
அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
கோடை காலத்தில் சீரான மின்சாரம் வழங்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (மே 5) நடைபெற்றது. இதில், மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-
May 05, 2025 16:48 IST
பஹல்காம் தாக்குதலுக்கு புதின் கண்டனம்
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு.. கொடூரமான தாக்குதலுக்குக் காரணமானவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்
பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து உரையாடிய ரஷ்ய அதிபர் புதின்
-
May 05, 2025 15:56 IST
கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பு
ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதியில், விநாடிக்கு 500 கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பு
திறக்கப்படும் நீரானது, அடுத்த 3 நாட்களில் தமிழ்நாட்டின் எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்தடையும். இந்த நீர், பூண்டி அணையில் தேக்கப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும்
-
May 05, 2025 15:55 IST
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு: வேறு அமர்வுக்கு மாற்றம்
வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த அனைத்து மனுக்கள் மீதான விசாரணை புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ள பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வுக்கு மாற்றம்.
13ம் தேதியுடன் தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வு பெறுவதால் மனுக்களை பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு விசாரிக்கும்.
மே மாதம் 14ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் பதவியேற்க உள்ளார்.
-
May 05, 2025 15:55 IST
டிடிஎப் வாசன் மனுத்தாக்கல்
யூடியூபர் டிடிஎப் வாசன் மீது காவல்துறை பதிவு செய்யப்பட்ட வழக்கின் விபரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
மருத்துவ சிகிச்சைக்காகவும், படப்பிடிப்பு காட்சிகளுக்காக வெளிநாடு செல்ல இருப்பதால் தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிஎப் வாசன் மனுத்தாக்கல்
-
May 05, 2025 15:47 IST
தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த பவன்
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக இந்தியாவும், இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வங்கக்கடலில் 5 வெவ்வேறு சம்பவங்களில் தமிழக மீனவர்கள் 24 பேர் தாக்கப்பட்ட சம்பவம் வருத்தமளிக்கிறது
காயமடைந்த நாகை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.
- ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
-
May 05, 2025 15:24 IST
நீதிபதி வீட்டில் பணக்கட்டுகள்: அறிக்கையை சமர்ப்பித்த விசாரணைக்குழு
உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து பணக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணைக்குழு தனது அறிக்கையை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிப்பு
-
May 05, 2025 14:40 IST
வக்ஃபு சட்டத்திற்கு எதிரான வழக்குகள் வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
வக்ஃபு சட்டத்திற்கு எதிரான வழக்குகள் வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், புதிதாக தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு, இவ்வழக்குகளை இனி விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 05, 2025 13:50 IST
பிரதமரை சந்திக்கும் பாதுகாப்புத்துறை செயலாளர்
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நாட்டின்
பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுளளது. நேற்று காஷ்மீரில் தீவிரவாதிகளின் மறைவிடத்தை கண்டறிந்த நிலையில் பிரதமரை சந்திக்கும் பாதுகாப்புத் துறை செயலாளர் -
May 05, 2025 13:14 IST
போதை பொருள் கடத்தல் - முக்கிய டீலர் கைது
போதை பொருள் கடத்தல் தொடர்பாக, ஆப்பிரிக்காவை சேர்ந்த மொத்த டீலர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 15 கிராம் கொக்கைன், 5 கிராம் மெத், 7 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர் தமிழக போலீசார்
-
May 05, 2025 13:13 IST
வைர வியாபாரியிடம் கொள்ளை - திடுக்கிடும் தகவல்
சென்னை வடபழனியில் புராதான வைரங்களை விற்றுத் தருவதாக வைர வியாபாரி சந்திரசேகர் என்பரை கட்டிப் போட்டு ஒரே கல்லால் ஆன புராதான வைரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஒரு மாதமாக தரகர்கள் மூலம் விற்க முயன்ற போது திட்டமிட்டு வைரத்தை கொள்ளையடித்துள்ளனர்
-
May 05, 2025 13:00 IST
தடையை மீறி BS4 வாகனங்கள் விற்பனை - வழக்கு பதிய உத்தரவு
2020க்குப் பிறகு தமிழ்நாட்டில் தடையை மீறி BS4 வாகனங்களை பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்காக வழக்கு ஜூன் 6க்கு ஒத்திவைக்கப்பட்டுளளது.
-
May 05, 2025 12:32 IST
“வடமாநிலத்தில் புத்தகம் வைத்து நீட் எழுதுகிறார்கள்”: சீமான்
“வட மாநிலங்களில் புத்தகம் வைத்து நீட் தேர்வு எழுதுகிறார்கள்; என்னிடம் ஆதாரம் உள்ளது மூக்குத்தி, தோடு ஆகியவற்றில் பிட் எடுத்துச் சென்று நீட் தேர்வெழுத முடியுமா என்ன மூக்குத்தியில் பிட் வைக்கலாம் எனில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாதா?” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
-
May 05, 2025 12:10 IST
சென்னையில் தமிழ் வார விழா- முதல்வர் பங்கேற்பு
தமிழ் வார விழா தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்
-
May 05, 2025 12:09 IST
5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை
மறைந்த எழுத்தாளர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட 5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை; நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட 5 எழுத்தாளர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மறைந்த அப்துல் ரகுமான், மெர்வின், பழனி ஆகியோரின் குடும்பத்தினரிடம் பரிசுத் தொகை ஒப்படைப்பு; கொ.மா.கோதண்டம், புலவர் இலமா.தமிழ்நாவன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன
-
May 05, 2025 11:28 IST
பூச்சாண்டிகளுக்கு பயப்பட மாட்டோம்: இபிஎஸ்
அரக்கோணம் எம். ஆர்.எப் தொழிற்சாலையில் கூட்டம் நடத்த சென்ற அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக நிர்வாகிகளை கைது செய்த திராவிட மாடல் அரசின் அராஜகத்தை கண்டிக்கிறேன். ஸ்டாலின் அரசு ஏவும் அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் வல்லமை அதிமுகவுக்கு உண்டு. இதுபோன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுகவினர் பயப்பட மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
May 05, 2025 11:26 IST
அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு: தேவகவுடா
பயங்கரவாதத்தை அழிக்க பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்துள்ள பிரதமரை வாழ்த்துகிறேன். பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரதமர் உறுதியான முடிவை எடுத்துள்ளார் என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
-
May 05, 2025 11:03 IST
மின்சார ரயில் மோதி இளம்பெண் உயிரிழப்பு
சென்னை மாம்பலம் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி விழுப்புரம் மாவட்டம் சாத்தம்பாடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஜானகி உயிரிழந்தார். கோடம்பாக்கம் இடையே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டது.
-
May 05, 2025 11:02 IST
ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் படுகாயம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் படுகாயமடைந்தார். தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞர். ரயிலை உடனடியாக நிறுத்தி படுகாயம் அடைந்த இளைஞர் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
-
May 05, 2025 11:00 IST
ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகளாக சி.குமரப்பன், கே.ராஜசேகர் பதவியேற்பு
சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகள் சி.குமரப்பன், கே.ராஜசேகர் நிரந்தர நீதிபதிகளாக பெறுப்பேற்றுக் கொண்டனர். புதிய நீதிபதிகளுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
-
May 05, 2025 10:35 IST
பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை கசியவிட்டதாக பஞ்சாபில் 2 பேர் கைது!
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட குற்றச்சாட்டின் பேரில் பஞ்சாபில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய ராணுவத்தின் கண்டோன்மெண்ட் பகுதிகள் அமிர்தசரஸில் உள்ள ஏர்பேஸ் உள்ளிட்ட தகவல்களை பாலக் ஷெர் மாஸி, சூரஜ் மாஸி ஆகிய இருவர் பாக். - க்கு வழங்கியுள்ளதாக பஞ்சாப் மாநில டிஜிபி கவுரவ் யாதவ் தகவல் தெரிவித்துள்ளார்.
-
May 05, 2025 10:08 IST
தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு 160 உயர்ந்து ஒரு பவுன் 70,200க்கு விற்பனையாகிறது.
-
May 05, 2025 10:07 IST
‘நீட் விலக்கு பெற இபிஎஸ், தமிழிசை உதவ வேண்டும்’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் விலக்கு பெற இபிஎஸ், தமிழிசை ஆகியோர் அரசுக்கு உதவ வேண்டும். அதைவிட்டு வேறு பேசுவது அவர்களின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது. நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
-
May 05, 2025 09:49 IST
தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
-
May 05, 2025 09:37 IST
பிரபல நடிகர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அளித்த புகாரின் பேரில் பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மஹாராஷ்டிராவின் வடக்கு மும்பை பகுதியான கன்டிவலியில் உள்ள சார்கோப் காவல்நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில், சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி, பிரபல நடிகர் அஜாஸ் கான் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
-
May 05, 2025 09:17 IST
ரேபிஸ் நோய் பாதித்த சிறுமி உயிரிழப்பு
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவமனையில் ரேபிஸ் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்தார். நாய் கடித்த பிறகு தடுப்பூசி போட்டும் சிறுமி உயிரிழந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
May 05, 2025 08:23 IST
சென்னையில் வைரம் திருட்டு - 4 பேர் கைது
சென்னை வடபழனியில் ரூ.20 கோடி மதிப்புள்ள வைரத்தை திருடிய 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர். சிவகாசி அருகே சுங்கச்சாவடியை கடக்க முயன்றபோது சென்னை போலீசார் உஷார்படுத்திய நிலையில், தனிப்படை போலீசார் 4 பேரை கைது செய்து தூத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
-
May 05, 2025 08:21 IST
எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்
காஷ்மீரின் பகல்ஹாமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து, எல்லையில் 11வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
-
May 05, 2025 07:30 IST
பஹல்காம் தாக்குதலை கண்டித்து பாஜக இன்று ஆா்ப்பாட்டம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பா.ஜ.க. சாா்பில் கவன ஈா்ப்பு போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்படும் என அக்கட்சியின் தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சோ்ந்த சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் தமிழக அரசு தீவிரமாக செயல்படவும், ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியும் மாவட்டத் தலைநகரங்களில் திங்கள்கிழமை (மே 5) கவன ஈா்ப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
-
May 05, 2025 07:27 IST
ஐ.பி.எல்: ஐதராபாத் - டெல்லி அணிகள் இன்று மோதல்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் இன்று நடக்கும் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. கடைசி இரு ஆட்டங்களில் (பெங்களூரு, கொல்கத்தாவுக்கு எதிராக) தோல்வியை தழுவிய டெல்லி அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் காத்திருக்கிறது. இரு அணிகளும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
-
May 05, 2025 07:26 IST
மாம்பலம் அருகே மின்சார ரயில் மோதி பெண் பலி
மாம்பலம் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற இளம்பெண் ரயில் மோதி உயிரிழந்தார். தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் மோதி ஜானகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
May 05, 2025 07:17 IST
மணல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
மே 23-ம் தேதி முதல் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தியும், எம்.சாண்ட் விலையை குறைக்க கோரியும் போராட்டம் நடைபெற உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.