Chennai News Highlights: ஆபரேஷன் சிந்தூர் - பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து ராணுவம் தாக்குதல்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pak attack

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று (மே 4) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 92.39-க்கும் விற்பனை ஆகிறது. இதேபோல், சி.என்.ஜி ஒரு கிலோ ரூ. 91.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • May 06, 2025 21:38 IST

    தமிழ்நாட்டில் 2 இடங்களில் போர்க்கால ஒத்திகை - பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு 

    தமிழ்நாட்டில் கல்பாக்கம், சென்னை துறைமுகத்தில்  நாளை போர்க்கால ஒத்திகை நடைபெற உள்ளது. மாலை 4 முதல் 4.30 வரை ஒத்திகை நடைபெறுகிறது என்று  மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. 



  • May 06, 2025 21:33 IST

    'மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும்' - ஸ்டாலின் பேச்சு

    "2026 தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும்"  என்று மாற்றுக்கட்சியினர் தி.மு.கவி-ல் இணையும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • May 06, 2025 20:35 IST

    இந்தியா - பிரிட்டன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் -  பிரதமர் அலுவலகம் அறிக்கை

    கடந்த மாத இறுதியில் லண்டனில் தொடங்கிய சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தைகளின் போது, ​​தற்காலிக நிபுணர்களின் இயக்கம் மற்றும் கார்பன் வரி போன்ற பெரிய வேறுபாடுகளைத் தீர்த்து வைத்த பிறகு, இந்தியாவும் இங்கிலாந்தும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) எட்டியுள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

     



  • May 06, 2025 20:04 IST

    கூலி பட டீசர் வெளியீடு

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சுருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர் கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் பூஜா ஹெக்டே சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.

    இந்நிலையில் 'கூலி' படத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, கூலி படம் வெளியாக இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில் அதற்கான முன்னோட்டமாக இந்த டீசரை வெளியிடப்பட்டுள்ளது.



  • May 06, 2025 19:33 IST

    போர்க்கால ஒத்திகை - தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை

    போர்க்கால ஒத்திகை தொடர்பாக சென்னையில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனையில் உள்துறை செயலாளர், பொதுத் துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.



  • May 06, 2025 18:36 IST

    போர் பாதுகாப்பு ஒத்திகை - சென்னை நோக்கி விரையும் ராணுவ டாங்கிகள்

    நாடு முழுவதும் நாளை (மே 7) போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக கும்மிடிப்பூண்டி வழியாக சென்னைக்கு ராணுவ டாங்கிகள் கொண்டு வரப்படுகின்றன.



  • May 06, 2025 18:03 IST

    போர்க்கால ஒத்திகை - தலைமைச் செயலாளர் ஆலோசனை கூட்டம்

    நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை நடைபெறவுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் தலைமையில் தற்போது ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், டி.ஜி.பி, உள்துறை செயலாளர், பொதுத் துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.



  • May 06, 2025 17:50 IST

    சாலை விபத்துகளில் காயம் அடைந்தால் இலவச சிகிச்சை - மத்திய அரசு அறிவிப்பு

    சாலை விபத்துகளில் காயம் அடைந்தால் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், விபத்து நடந்த முதல் 7 நாட்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ. 1.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும். 2030-ஆம் ஆண்டுக்குள் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை 50 சதவீதம் அளவிற்கு குறைக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 06, 2025 17:23 IST

    பா.ஜ.க எம்.எல்.ஏ ஜனார்தன ரெட்டிக்கு சிறை தண்டனை விதிப்பு

    சுரங்க முறைகேடு வழக்கில் கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ ஜனார்தன ரெட்டிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவரது எம்.எல்.ஏ பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், ஜனார்தன ரெட்டி உள்ளிட்ட 4 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



  • May 06, 2025 16:30 IST

    முல்லை பெரியாறு அணை பராமரிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

    முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வைக் குழு வழங்கிய பரிந்துரைகளை 2 வாரங்களில் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அணை பாதுகாப்பிற்கு அனுமதி மற்றும் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு எதிராக கேரள அரசு மற்றும் கேரளாவைச் சேர்ந்த தனி நபர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். 



  • May 06, 2025 16:29 IST

    ரவுடி நாகேந்திரனின் 2வது மகன் கைது

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனின் 2வது மகன் அஜித்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். நாகேந்திரனுக்கு தொடர்புடைய வீடுகளில் மேற்கொண்ட சோதனையில்  56 பட்டாக்கத்திகள், சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 



  • May 06, 2025 16:10 IST

    சவரன்: ஒரே நாளில் ரூ.1,600 உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று (மே 6) ஒரே நாளில் 2 முறை உயர்வு. இன்று காலை தங்கம் கிராமிற்கு ரூ.125 உயர்ந்து ரூ.9,025-க்கு விற்பனை; மாலையில் கிராமிற்கு மேலும் ரூ.75 உயர்ந்து, 9,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.72,௮௦௦ க்கு விற்பனை செய்யப்படுகிறது. 



  • May 06, 2025 15:51 IST

    குழந்தையை காப்பாற்ற முயன்ற தாய், சித்தி நீரில் மூழ்கி பலி

    ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற முயன்ற தாயும், சித்தியும் நீரில் மூழ்கி பலியான சோகம். கால்வாயில் விழுந்த குழந்தை மீட்கப்பட்ட நிலையில், சுகுணாவும், அஞ்சனாவும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்



  • May 06, 2025 15:49 IST

    தொடர் கொலைகள் - ஜாதிய மோதல்கள்! - ஈபிஎஸ் விமர்சனம்

    நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி - சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி. ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சராசரி நாள் எப்படி இருக்கிறது என்பதற்கு இன்றைய ஒரு நாளின் செய்திகளே சாட்சி. ஒவ்வொரு நாளும் இப்படி கொலைகளுக்கும், கலவரங்களுக்கும், சமூக அவலங்களுக்கும் இடையில் தான் நாம் வாழ்கிறோம். முதலமைச்சர் ஸ்டாலின் இதையெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளாகக் கருதவே இல்லை என்றே தோன்றுகிறது என்று ஈபிஎஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 



  • May 06, 2025 15:21 IST

    பஹல்காம் தாக்குதல் - மல்லிகார்ஜூன கார்கே பகீர் குற்றச்சாட்டு

    பஹல்காம் தாக்குதல் நடக்கப்போவதாக பிரதமர் மோடிக்கு 3 நாட்களுக்கு முன், புலனாய்வு தகவல் கொடுக்கப்பட்டது. முன்னரே அறிந்ததால்தான் காஷ்மீர் பயணத்தை பிரதமர் ரத்து செய்தார். பிரதமர் தனது உயிருக்கு கொடுக்கும் மதிப்பை சுற்றுலா பயணிகளின் உயிருக்கு ஏன் கொடுக்கவில்லை, காஷ்மீரில் பாதுகாப்பை ஏன் பலப்படுத்தவில்லை? என்று காங்கரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். 



  • May 06, 2025 15:03 IST

    30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் - உணவு பாதுகாப்பு துறை 

    குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே மறுசுழற்சி மூலம் குடிநீர் நிரப்பி பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. கேன்களின் நிறம் மாறினால் மீண்டும் மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பதை தவிர்க்க வேண்டும். தரமின்றி, முறையான அனுமதி இன்றி அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.



  • May 06, 2025 14:53 IST

    தி.மு.க-வை வீழ்த்திவிட முடியாதா? எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் சிலர் தவிக்கிறார்கள்: ஸ்டலின் பேச்சு 

    சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் – ஊடகத்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பேசுகையில், "2021-ல், தமிழ்நாட்டில் மக்களுடைய நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்று, ஆறாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்தது. மே 7-ஆம் நாள் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன். நாளைக்கு மே 7. திராவிட மாடல் அரசு ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறது.

    தேர்தல் அறிக்கையில் சொன்ன பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களையும் தொலைநோக்குப் பார்வையோடு அதையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும், புதிய புதிய திட்டங்களை அறிவிக்கிறோம் – நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டத்தின் தொடக்கத்திற்கான நாளாக இருந்து கொண்டிருக்கிறது என்பதை உங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்!

    தமிழ்நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு போகவேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் இருந்தது. சரியான இலக்கை நிர்ணயித்து, அதனை நோக்கி உறுதியாக பயணித்து, நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த நான்காண்டு கால திராவிட மாடல் அரசே சாட்சியாக அமைந்திருக்கிறது!

    இந்த நான்காண்டுகளில் எப்படிப்பட்ட நெருக்கடிகள் எல்லாம் வந்தது. எவ்வளவு அவதூறுகள் பரப்பப்பட்டது என்பது வேறு யாரையும் விட உங்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும், எந்த இடத்திலும், நாங்கள் கொள்கையில் தடம் மாறவில்லை! எந்தச் சூழ்நிலையிலும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் நாங்கள் சோர்ந்து போகவில்லை!

    அதனுடைய வெளிப்பாடுதான் நம்முடைய அரசின் முத்திரைத் திட்டங்கள்…

    * கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்

    * விடியல் பயணம் திட்டம்

    * முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

    * புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள்

    * நான் முதல்வன் திட்டம் என்று ஏராளமான திட்டங்களை வரிசைப்படுத்தி சொல்லிக் கொண்டே இருக்க முடியும்!

    இந்தத் திட்டங்களை பற்றியெல்லாம், இங்கு வந்திருக்கும் முக்கியமான துறை அமைச்சர்கள் விளக்குவார்கள். அதேபோல், அதிகாரிகளும் அதைப்பற்றி விளக்கி கூறுவார்கள்.

    உங்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள் என்ன என்றால்...

    இந்தியாவிற்கே முன்மாதிரியாக பல திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். நம்முடைய திட்டங்களை பார்த்து, பல்வேறு மாநில அரசுகள் அந்த திட்டங்களை அவர்கள் மாநிலங்களிலும் செயல்படுத்துகிறார்கள்.

    அப்படிப்பட்ட திட்டங்களை, நீங்கள் மனப்பூர்வமாக பாராட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். விமர்சிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. என்னுடைய அறுபதாண்டுகால அரசியல் வாழ்க்கையே விமர்சனங்களால் செதுக்கப்பட்டிருப்பது

    உங்களுக்கு தெரியும். எனவே, நம்முடைய அரசின் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்துவதற்கான கருத்துகள் – ஆலோசனைகள் இருந்தால் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்… அந்த திட்டங்களை இன்னும் சிறப்பாக செயல்படுத்துவோம்!

    உங்களோடு இணைந்து, தமிழ்நாட்டின் பொற்காலத்தை தொடர்வோம்! தொடர்வோம்! தொடர்வோம்!" என்று அவர் கூறியுள்ளார். 



  • May 06, 2025 14:29 IST

    சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம் - மத்திய அரசு அறிவிப்பு

    நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம்: சாலை விபத்து தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்பை அடுத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. முதல் 7நாட்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இலவச சிகிச்சை திட்ட செயல்பாட்டை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.



  • May 06, 2025 14:19 IST

    விடுதி உரிமையாளர் மீது தாக்குதல்

    சென்னை சோழிங்கநல்லூரில் விடுதி உரிமையாளர்  மீது நேற்று முன்தினம் 3 நபர்கள்  திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வீடியோ பதிவுடன் விடுதி உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

     



  • May 06, 2025 14:16 IST

    டாய்லெட் வெடித்து இளைஞர் படுகாயம்

    டெல்லி, நொய்டாவை அடுத்த பிஷ்ராக் பகுதியில் வெஸ்டர்ன் டாய்லெட் துண்டு துண்டாக வெடித்து சிதறியதில் இளைஞருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. காலை கடனை முடித்துவிட்டு, டாய்லெட்டில் உள்ள ஃப்ளஷ்யை அழுத்திய போது வெஸ்டர்ன் டாய்லெட் திடீரென வெடித்து சிதறியுள்ளது. 

     



  • May 06, 2025 13:45 IST

    மே 13-ல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை மையம்

    மே 13-ல் அந்தமான் கடற்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் நிகோபார் தீவுகளில் பருவமழை துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. தென்மேற்கு பருவமழை நடப்பாண்டில் இயல்பை காட்டிலும் கூடுதலாக பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இயல்பை விட 104 சதவீதம் வரை கூடுதல் மழைப்பொழிவு இருக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • May 06, 2025 13:17 IST

    உத்தரபிரதேசத்தில் இன்று போர் ஒத்திகை

    நாளை (மே.7) நடைபெறும் போர் ஒத்திகைக்கு உத்தரபிரதேசத்தில் இன்று (மே.6) ஒத்திகை நடைபெற்றது



  • May 06, 2025 12:35 IST

    6 வயது சிறுவனை தெருநாய் கடித்தது

    சென்னை வளசரவாக்கம் பகுதியில் 6 வயது சிறுவனை, தெருநாய் கடித்ததில் கை, காது மற்றும் முகத்தில் காயம்

    எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுவன் அனுமதி. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை



  • May 06, 2025 12:28 IST

    சந்தர்ப்பவாதக் கூட்டணி: முதலமைச்சர் விமர்சனம்

    சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ளவர்கள் திமுகவை வீழ்த்திவிட முடியாதா என தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள்.

    சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ளவர்களின் மணக்கணக்கு தப்புக் கணக்காகவே முடியும். அரசியல் எதிரிகளால் நமது ஆட்சியைக் குறை சொல்ல முடியாத காரணத்தால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள். அதிகார அமைப்புகளை ஏவி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று முழங்கிடுவோம்.

    - முதலமைச்சர் ஸ்டாலின்



  • May 06, 2025 12:27 IST

    கேன் வாட்டர் விற்பனை அதிகரிப்பு

    வாட்டர் கேன் நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு துறையின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றுவது அவசியம். தரமின்றி, முறையான அனுமதியின்றி அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடி நடவடிக்கை

    - உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை



  • May 06, 2025 12:27 IST

    டெல்லியில் போர் ஒத்திகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

    ஒன்றிய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், Civil Defense இயக்குரக தலைவர்கள், தேசிய பேரிடர் மீட்பு ஆணைய அதிகாரிகள், 244 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் காணொளி வாயிலாக பங்கேற்பு.



  • May 06, 2025 11:52 IST

    போர்க்கால ஒத்திகை; உள்துறை செயலாளர் ஆலோசனை

    போர்க்கால ஒத்திகை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை

    ஆலோசனை கூட்டத்தில், உள்துறை செயலாளர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்பு

    தமிழகத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாடம், மணலி பெட்ரோலிய நிறுவனம் ஆகிய இடங்களில் ஒத்திகை



  • May 06, 2025 11:52 IST

    கல்லூரியில் டிரைவர் வெட்டிக்கொலை

    வண்டலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக தகவல்

    சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து கிளாம்பாக்கம் போலீசார் விசாரணை



  • May 06, 2025 11:26 IST

    வடகாடு பகுதியில் இரு சமூகத்தினர் இடையே பிரச்சினை: அமைச்சர் ரகுபதி ஆறுதல்

    வடகாடு பகுதியில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்கள்

    இருதரப்பு மக்களையும் நேரில் சந்தித்து அமைச்சர் ரகுபதி ஆறுதல்



  • May 06, 2025 11:24 IST

    மதிமுகவின் 32ம் ஆண்டு தொடக்க விழா

    மதிமுகவின் 32ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை எழும்பூரில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மலர் தூவி வைகோ மரியாதை.

    நேற்று கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.



  • May 06, 2025 11:24 IST

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றன் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு நேரில் ஆஜர்!

    முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் பூங்குன்றனை விசாரணை நடத்தியது  குறிப்பிடத்தக்கது.



  • May 06, 2025 11:16 IST

    பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடாடு: காவல்துறை நிபந்தனைகள் வெளியீடு

    மாமல்லபுரத்தில் மே 11-ந் தேதி நடைபெறும் பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள், மரக்காணம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்ல தடை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. கடலூர் புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள், தின்டிவனம், செங்கல்பட்டு வழியான மாநாட்டு திடலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் வாகனங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது,



  • May 06, 2025 11:12 IST

    12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் மே 8ந் தேதி வெளியாகும் என அறிவிப்பு

    12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் மே 8ந் தேதி வெளியாகும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது, ஏற்கனவே மே 9-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் முன்னதாக தற்போது 8-ந் தேதியே வெளியாக உள்ளது.



  • May 06, 2025 11:11 IST

    சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் தலைமையில் போர் ஒத்திகை

    சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் தலைமையில் போர் ஒத்திகை நடைபெற உள்ளது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாடம், மணலி பெட்ரோலிய நிறுவனம் ஆகிய நான்கு இடங்களில் போர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,குறிப்பாக போர் பதற்ற சூழலின் போது மக்களை எப்படி பாதுகாப்பது மற்றும் வெளியேற்றுவது உள்ளிட்ட ஒத்திகைகள் நடத்த திட்டம்



  • May 06, 2025 10:21 IST

    நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை 

    நாடு முழுவதும் நாளை அனைத்து மாநில அரசுகளும்  போர்கால ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவு. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில் பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ஆலோசனை நடத்திய சூழலில் உத்தரவு பிறப்பிப்பு



  • May 06, 2025 10:20 IST

    மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர் வைகோ

    கையில் ஏற்பட்ட காயம்  காரணமாக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்



  • May 06, 2025 10:20 IST

    கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

    திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் ஹரிஹரன்(17), வெங்கட்ரமணன்(19), வீரராகவன்(24)  ஆகிய மூன்று பேர் குளத்தில் மூழ்கி மரணமடைந்தனர். கோவில் குளத்தில் மூழ்கி தரிசனம் செய்ய முயன்ற நபர் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்ற முயன்ற 2 பேர் உட்பட 3பேர் பலியாகினர்



  • May 06, 2025 10:18 IST

    இன்று சிவில் பாதுகாப்பு கூட்டம்

    மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் சிவில்  பாதுகாப்பு கூட்டம், நாடு முழுவதும் போர்க்கால  ஒத்திகை நடத்தக்கூடிய நிலையில் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது.மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் இன்று காலை 10.45 மணி அளவில் கூட்டம் நடைபெறுகிறது. நாட்டின் 244 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள், அவசரநிலை முகமைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • May 06, 2025 10:16 IST

    மத்திய உள்துறை செயலர் தலைமையில் அவசர கூட்டம்

    மே 7ம் தேதி நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்தக்கூடிய நிலையில் மத்திய உள்துறை செயலர் கோவிந்த் தலைமையில் அவசர கூட்டம் நடைபெறுகிறது. இந்த அவசர கூட்டத்தில், நாட்டின் 244 மாவட்டங்களில் சிவில் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு  உறுதி செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • May 06, 2025 09:12 IST

    மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர் வைகோ

    கையில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.



  • May 06, 2025 09:10 IST

    நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை 

    நாடு முழுவதும் நாளை அனைத்து மாநில அரசுகளும் போர்கால ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத் துறை செயலாளர் ஆலோசனை நடத்திய சூழலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • May 06, 2025 09:09 IST

    12-வது நாளாக அத்துமீறி பாக். ராணுவம் துப்பாக்கிச் சூடு

    பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 12-வது நாளாக அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். ஜம்மு-காஷ்மீா் எல்லையில் பல்வேறு இடங்களில் தொடா்ந்து 12-வது நாளாக திங்கள்கிழமை அன்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.



  • May 06, 2025 08:26 IST

    திருவள்ளூர்: கோயில் குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

    திருவள்ளூர் மாவட்டம் வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் சந்தியாவந்தனம் செய்தபோது படிக்கெட்டில் இருந்து தவறி விழுந்த 3 ஆண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • May 06, 2025 07:47 IST

    4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில், வரும், 11ம் தேதி வரை மிதமான மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், 9ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.



  • May 06, 2025 07:42 IST

    தொட்டபெட்டாவில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு தடை

    தொட்டபெட்டா காட்சி முனைக்கு வந்த காட்டுயானை, விரட்டும் பணி நடைபெறவுள்ளதால் பயணிகள் பாதுகாப்பு கருதி இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, உதகை தொட்டபெட்டா காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • May 06, 2025 07:41 IST

    சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு

    சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பில்ரோத் மருத்துவமனை உரிமையாளர்கள் வீட்டிலும், சென்னை சாலிகிராமத்தில் பாண்டியன் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோன்று விருகம்பாக்கத்தில் முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு அதிகாரி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் சோதனை நடைபெறுவதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அதன் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகவும் முதல்கட்டத் தகவல் வெளியாகி உள்ளன.



  • May 06, 2025 07:30 IST

    காரைக்குடி: சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

    காரைக்குடி மாவட்டம் தேனாற்று பாலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பால் ஏற்றிவந்த லாரி, சாலையில் கவிழ்ந்து எதிர்திசையில் வந்த அரசுப் பேருந்து மீது மோதிய விபத்தில் லாரியில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநர் உட்பட 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • May 06, 2025 07:21 IST

    இரு பிரிவினரிடையே மோதல் - காவல்துறை விளக்கம்

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு, வாகனங்கள் உடைப்பு, குடிசைக்கு தீவைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக போலீசார் விளக்கமளித்துள்ளனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் எஸ்.பி. தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



  • May 06, 2025 07:17 IST

    வைகோ மருத்துவமனையில் அனுமதி

    சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதிக்கப்பட்டு உள்ளார். வீட்டில் தவறி விழுந்ததில் கை விரலில் காயம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அனுமதி எனத் தகவல் வெளியாகி உள்ளது.



  • May 06, 2025 07:16 IST

    ஐ.பி.எல்: மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதல்

    மும்பையில் இன்று நடைபெறும் 56வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியனான மும்பை அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகள் எடுத்து இருப்பதுடன், ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் 3-வது இடம் வகிக்கிறது.



Chennai Tamilnadu News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: