Chennai News Highlights: 'ஆபரேஷன் சிந்தூர்'- ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்த சுதர்ஷன் பட்நாயக்

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
operation sindhoor

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

பாக். மீது இந்தியா தாக்குதல்:  பஹல்காம் தாக்குதலுக்கு  பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ”ஆப்ரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குடல் நடத்தியது. நள்ளிரவு 1.44 மணியளவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்கின. இந்த தாக்குதலைத் தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "#பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Advertisment
Advertisements

 

எந்தெந்த இடங்களில் தாக்குதல்: ஏப்.22ம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், ஆயுதப்படைகள் இன்று (புதன்கிழமை) அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) முழுவதும் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. மிக முக்கியமான இலக்குகளில் ஒன்று பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தலைமையகம் ஆகும். மற்றொரு பெரிய தாக்குதல் சம்பாவுக்கு எதிரே உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள முரிட்கேவைத் தாக்கியது. சாக் அம்ரூ, முரிட்கே, கோட்லி, சியால்கோட், குல்பூர், பாக், முசாபெராபாத், பிம்பர், பஹவல்பூர் ஆகிய 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன.

  • May 07, 2025 21:06 IST

    சி.பி.ஐ இயக்குநர் பிரவின் சூட் பதவிக்காலம் நீட்டிப்பு

    சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக் காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வரும் 24-ஆம் தேதியுடன் அவர் ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில், அவரது பதவிக் காலத்தை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 



  • May 07, 2025 20:29 IST

    போர் ஒத்திகை எதிரொலி - டெல்லியில் மின் விநியோகம் துண்டிப்பு

    டெல்லியில் போர் ஒத்திகை நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாடாளுமன்ற வளாகம், இந்தியா கேட் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.



  • May 07, 2025 20:12 IST

    மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு புதுச்சேரி துணை நிற்கும் - துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன்

    நாட்டின் பாதுகாப்புக்காகவும், பயங்கரவாத செயல்களுக்கு எதிராகவும் மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் புதுச்சேரி அரசு துணை நிற்கும் என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் புதுச்சேரி மக்கள் சார்பாக அவர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.



  • May 07, 2025 19:38 IST

    சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை

    சென்னை துறைமுகத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையில் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் பங்கேற்றனர். போர் காலத்தின் போது மீட்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.



  • May 07, 2025 18:24 IST

    விசாகப்பட்டினத்தில் உள்துறை அமைச்சகம் சார்பில், மாதிரி குண்டு தாக்குதல் பயிற்சி

    உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், புதன்கிழமை விசாகப்பட்டினத்தில் குண்டுவெடிப்பை உருவகப்படுத்தும் ஒரு மாதிரி பயிற்சி நடத்தப்பட்டது. NDRF, SDRF, காவல்துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் பங்கேற்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த பயிற்சியில் ஸ்ட்ரெச்சர் வெளியேற்றங்கள், ரயில் பெட்டி ரோந்துகள் மற்றும் அவசர வாகனப் பணிகள் ஆகியவை அடங்கும். தன்னார்வலர்கள் மற்றும் NCC கேடட்களும் உதவினர். மாவட்ட ஆட்சியர் எம்.என். ஹரேந்திர பிரசாத் அறிவித்தபடி, பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் கோத்தா ஜலரிபேட்டா மற்றும் ஆக்ஸிஜன் கோபுரங்கள். 



  • May 07, 2025 18:23 IST

    புனே கவுன்சில் மண்டபத்தில் மாதிரிப் பயிற்சி

    இந்தியா - பாகிஸ்தாண் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், விரோதத் தாக்குதல் ஏற்பட்டால் தயார்நிலை வழிமுறைகளை சோதித்துப் பலப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, புதன்கிழமை புனே கவுன்சில் மண்டபத்தில் ஒரு மாதிரிப் பயிற்சியை நடத்தியது.



  • May 07, 2025 17:59 IST

    ஒடிசாவின் 12 மாவட்டங்களில் சிவில் பாதுகாப்பு மாதிரிப் பயிற்சிகள் 

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் போர் பதட்டங்களுக்கு மத்தியில் அவசரகால தயார்நிலையை மதிப்பிடுவதற்காக, ஒடிசாவின் புவனேஸ்வர், சம்பல்பூர் மற்றும் ரூர்கேலா உட்பட 12 மாவட்டங்களில் சிவில் பாதுகாப்பு மாதிரி பயிற்சிகள் நடத்தப்பட்டன. உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சிகளில், காவல்துறை, தீயணைப்பு சேவைகள், ராணுவம், NCC, பாரத் ஸ்கவுட்ஸ் மற்றும் கைட்ஸ் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீ விபத்துகள் மற்றும் உயரமான இடங்களிலிருந்து வெளியேற்றம் போன்ற சூழ்நிலைகளை உருவகப்படுத்தி, மீட்புப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து, போர் போன்ற சூழ்நிலைகளுக்கு பொதுமக்களைத் தயார்படுத்தி, பாதுகாப்புப் படைகளின் மன உறுதியை அதிகரித்தன.



  • May 07, 2025 17:53 IST

    போர்க்கால ஒத்திகை - நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடக்கம்

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நாட்டின் பல பகுதிகளில் இன்று போர்க்கால ஒத்திகை நடந்து வருகின்றன. 

    'ஆபரேஷன் அப்யாஸ்' என்ற குறியீட்டுப் பெயரில் நடைபெறும் இந்தப் பயிற்சிகள், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சண்டிகர் உள்ளிட்ட இந்தியா முழுவதும் 244 மாவட்டங்களில் கடைப்பிடிக்கப்படும் சிவில் பாதுகாப்பு நடவடிக்கைகளின் நீண்ட பட்டியலின் ஒரு பகுதியாக இருக்கும். அச்சுறுத்தல் உணர்வின் அடிப்படையில் இந்த மாவட்டங்கள் சிவில் பாதுகாப்பு மாவட்டங்களாக நியமிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற மாவட்டங்களில் அதிகபட்சமாக (32) மேற்கு வங்காளத்திலும், அதைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் (28), அசாம் (20), பஞ்சாப் (20) மற்றும் ஜம்மு-காஷ்மீரிலும் (20) உள்ளன.



  • May 07, 2025 17:33 IST

    சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் 26 நக்சல்கள் சுட்டுக்கொலை

    சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் பிஜாப்பூர் மலைப்பகுதியில் 26 நக்சல்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சத்தீஸ்கர் எல்லையில் தெலங்கானாவில் உள்ள உள்ள கரேகுட்டா மலை அருகே அமைந்திருக்கும் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் மாவட்ட ரிசர்வ் போலீசார், சி.ஆர்.பி.எப். வீரர்கள், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அவர்களோடு தெலுங்கானா காவல்துறையினரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தேடுதல் பணியின்போது நக்சல்களுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. அப்போது நடந்த என்கவுன்ட்டரில் இதுவரை 26 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சிஆர்பிஎப் இன் கோப்ரா, டிஆர்ஜி, எஸ்டிஎப் போன்ற சத்தீஸ்கர் காவல் பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் உள்பட 12-க்கும் மேற்பட்ட வீரர்கள் இதுவரை காயமடைந்துள்ளனர். கூட்டுப் படைகள் இதுவரை சுமார் 135 வெடிபொருள்களை மீட்டுச் செயலிழக்கச் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



  • May 07, 2025 16:22 IST

    தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • May 07, 2025 16:20 IST

    ஒரே நாளில் 26 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

    சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானாவில் ஒரே நாளில் 26 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் கரேகுட்டா மலைப்பகுதியில் பதுங்கி இருந்த 26 நக்சலைட்டுகளை சுட்டுக்கொன்றனர்



  • May 07, 2025 15:39 IST

    நீதிபதி சத்ய நாராயண பிரசாத் மறைவு: ஸ்டாலின் இரங்கல்

    சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயண பிரசாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், அண்ணாருக்குக் காவல்துறை அணிவகுப்புடன் இறுதி மரியாதை செலுத்தப்படும் என அறிவிப்பு



  • May 07, 2025 14:58 IST

    சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் RPF தீவிர சோதனை



  • May 07, 2025 14:33 IST

    ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு

    எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் விருதுநகர் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த 1000 இளைஞர்கள் யுத்த களத்தில் எனது தலைமையில் துப்பாக்கி ஏந்தி போராட தயாராக உள்ளனர்."
    - சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு



  • May 07, 2025 14:04 IST

    டெல்லியில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்

    டெல்லியில் நாளை (மே 08) காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு; ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். 



  • May 07, 2025 13:23 IST

    “வழக்கமான ஆட்சி அல்ல; வாழ்க்கையை உயர்த்தும் ஆட்சி" - முதல்வர் ஸ்டாலின்

    இது வழக்கமான ஆட்சி அல்ல; அனைவருடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அரசு; இன்னும் செய்ய வேண்டிய திட்டங்கள், கடமைகள் நிறைய இருக்கிறது மக்கள் ஆதரவுடன் அடுத்த சட்டமன்ற தேர்தலில் வென்று, திமுக ஆட்சிதான் தொடர போகிறது; இதனால்தான் “நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு” என்பதை முழக்கமாக வைத்திருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 



  • May 07, 2025 12:13 IST

    பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

    பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ள சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம். அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு என்று தகவல் வெளியாகியுள்ளது. 



  • May 07, 2025 12:12 IST

    இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! - விஜய்

    “இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்!” என்று பயங்கரவாதத்திற்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 



  • May 07, 2025 12:08 IST

    ஆபரேஷன் சிந்தூர் - பாரிவேந்தர் வரவேற்பு

    “தைரியமான நம் ஹீரோக்களுக்கு மனம்நிறைந்த வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன்; துன்பங்களை எதிர்கொள்ளும் உங்கள் தைரியம், மீள்தன்மை மற்றும் அசைக்க முடியாத மனப்பான்மை ஆகியவை இந்த நாட்டையே பெருமைப்படுத்துகின்றன. ஜெய் ஹிந்த்!” என்று ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவு தெரிவித்து ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 



  • May 07, 2025 11:21 IST

    இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா வேண்டுகோள்

    “இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். நிலைமையை மோசமாக்கும் வகையில் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம். இருவருமே எங்களின் அண்டை நாடுகள்தான் என்று சீனா கூறி உள்ளது. பயங்கரவாதத்தை சீனா எதிர்க்கிறது என்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து சீனா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



  • May 07, 2025 11:18 IST

    ” பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி கொடுக்க இந்தியா தயார்”

    தீவிரவாதிகளுக்கு பயிற்சி இடம், ஆள் சேர்ப்பு, தங்கும் இடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீவிரவாதிகளின் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத முகாம்களை அழிக்க நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 வரை தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகவே உள்ளது என விங் கமாண்டர் சோபியா குரேஷி எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • May 07, 2025 11:18 IST

    பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 10 இந்தியர்கள் பலி

    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூடு, பீரங்கி தாக்குதலில் 10 இந்தியர்கள் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலால் பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளது.



  • May 07, 2025 11:13 IST

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம் ஆபரேஷன் சிந்தூரில் அழிப்பு

    அஜ்மல் கசாப், டேவிட் ஹெட்லி பயிற்சி பெற்ற பாகிஸ்தான் பயங்கரவாத முகாம் ஆபரேஷன் சிந்தூரில் அழிக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதாக அரசாங்கம் மேலும் குறிப்பிட்டது, இதன் "எல்லை தாண்டிய இணைப்புகள்" இந்தியாவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்து கூறினர்.



  • May 07, 2025 11:12 IST

    12 நாள்கள் திட்டமிடப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்'

    ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை உருவாக்க 8 முதல் 9 நாள்கள் ஆனது, அதே நடவடிக்கையின் கீழ் புத்திசாலித்தனமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத பகுதிகள் மற்றும் முகாம்களை குறிவைத்து தாக்கும் உத்திக்காக கூடுதலாக 3 முதல் 4 நாள்கள் செலவிடப்பட்டுள்ளன. எதிரிகளையும் அதன் உளவுத்துறை வலையமைப்புகளையும் முழுமையான குழப்ப நிலையில் வைத்திருப்பதற்கான தனது உத்தியை இந்தியா தொடர்ந்து மாற்றியமைத்ததாகவும், இதனால் அவர்கள் இந்தியா தரப்பு பதிலுக்கான எதிர்பார்ப்பை தடுத்ததாகவும் கூறப்படுகிறது.



  • May 07, 2025 11:10 IST

    ஆபரேஷன் சிந்தூர்: வீடியோ ஆதாரம் வெளியீடு

    ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை இந்திய ராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டபோது, இந்திய விமானப் படையின் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட விடியோக்களை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடப்பட்டது.



  • May 07, 2025 11:05 IST

    பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்

    பாகிஸ்தானில் லாகூர், சியல்கோட் மற்றும் நம் அண்டை மாகாணமான பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இரவு 3:45 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்க துவங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ராணுவம் தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் ஷப்பாஸ் ஷெரீப் உறுதிபடுத்தியுள்ளார். இதையடுத்து லாகூர், சியல்கோட் விமான நிலையங்களை அடுத்த 48 மணி நேரத்திற்கு பாகிஸ்தான் மூடியது.



  • May 07, 2025 11:04 IST

    தேசிய அளவில் முதலிடம்: டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர்!

    பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் சமூகவலை தளங்களில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது. உலகளவில் 2ம் இடத்திலும், தேசிய அளவில் முதலிடத்திலும் டிரெண்டிங்கில் உள்ளது. மொத்தம் 9 நிலைகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட பயங்கரவாத முகாம்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. இந் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த ஹேஷ்டேக்குகளில் இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை பாராட்டி பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை தற்போது மிக அவசியம், பாராட்டுகள் என்று பலரும் பதிவிட்டு, இந்திய ராணுவத்தை புகழ்ந்து உள்ளனர்.



  • May 07, 2025 11:03 IST

    பாகிஸ்தானில் 25 நிமிடங்கள் தாக்குதல் - கர்னல் சோபியா

     "ஆபரேஷன் சிந்தூர் - நேற்று நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை மேற்கொள்ளப்பட்டது. 9 தீவிரவாத மூகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டது. நம்பகமான உளவுத்துறை தகவல்கள் அடிப்படையிலேயே இந்த முகாம்கள் கண்டறியப்பட்டன" என்று கர்னல் சோபியா குர்ஷி கூறினார்.



  • May 07, 2025 11:01 IST

    ”பயங்கரவாதத்தின் அடையாளமாக மாறிய பாகிஸ்தான்”

    ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்து வருகிறார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது. 2001-ம் ஆண்டு நடத்தப்பட நாடாளுமன்ற தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாத தாக்குதல்களில் இதுவரை 800க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்க நடத்தப்பட்ட சம்பவம் பஹல்காம் தாக்குதல் ஆகும். பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி உள்ளது. பயங்கரவாத தாக்குதலை நிறுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார். 



  • May 07, 2025 11:00 IST

    காஷ்மீர் மக்கள் அச்சப்பட வேண்டாம் -  உமர் அப்துல்லா

    தீவிரவாத முகாம்கள் மீது இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தி உள்ள நிலையில் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அம்மாநில முதல்-மந்திரி உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் யாரும் காஷ்மீரை விட்டு வெளியேறத் தேவையில்லை என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

     

     



  • May 07, 2025 11:00 IST

    “ஆபரேஷன் சிந்தூர்” -  உத்தரபிரதேசத்தில் “ரெட் அலர்ட்”

    பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் குறிவைத்து நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து உத்தரபிரதேசம் முழுவதும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச காவல்துறையின் எக்ஸ் வலைதள பதிவின்படி, அனைத்து களப் பிரிவுகளும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, முக்கிய நிறுவல்களைச் சுற்றி பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உறுதி செய்ய உ.பி. காவல்துறை விழிப்புடன், ஆயுதம் ஏந்தியதாகவும், முழுமையாகத் தயாராகவும் உள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 07, 2025 10:57 IST

    ”தீவிரவாத தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம்”

    இந்தியா தன்னை தற்காத்துக்கொள்ள இருக்கும் உரிமையை பயன்படுத்தியது. தீவிரவாதிகளின் இந்த தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என்று கருதினோம். தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பை அகற்றும் வகையில் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று விக்ரம் மிஸ்ரி கூறினார்.



  • May 07, 2025 10:56 IST

    ”தீவிரவாத முகாம்கள் குறிவைத்து துல்லியமாக தாக்கப்பட்டது”

    "பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா பதில் தாக்குதலை மேற்கொண்டு, நமது உரிமையை நிலைநாட்டியது. தீவிரவாத முகாம்கள் குறிவைத்து துல்லியமாக தாக்கப்பட்டது" - வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.



  • May 07, 2025 10:55 IST

    அனைத்து நடவடிக்கைகளும் தயார்: விக்ரம் மிஸ்ரி

    பயங்கரவாத நடவடிக்கைகளைக் எங்கள் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதனடிப்படையில், இந்தியாவில் மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அவற்றை தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறி உள்ளார்.



  • May 07, 2025 10:55 IST

    "பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்"

    "எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு நீண்டகாலமாக பாகிஸ்தான் உதவியாக இருந்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் இருந்துவருகிறது" . லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 26 அப்பாவி மக்களை சுட்டு கொன்றனர். குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தினர். தாக்குதல் நடத்தியதை பிரதமர் மோடியிடம் தெரிவிக்குமாறும் தீவிரவாதிகள் கூறியிருக்கிறார்கள். ஆபரேஷன் சிந்தூர்' ஏன்? என விளக்கும் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.



  • May 07, 2025 10:52 IST

    பாகிஸ்தானின் தொடர்புகள் தெளிவாக நிரூபணம் - விக்ரம் மிஸ்ரி

    பஹல்காம் தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இந்த குழு லஷ்கர்-இ தொய்பாவுடன் தொடர்புடையது. இதன்மூலம் பாகிஸ்தானின் தொடர்புகள் தெளிவாக நிரூபணம் ஆகி உள்ளது என்று விக்ரம் மிஸ்ரி கூறினார்.



  • May 07, 2025 10:46 IST

    ”இந்தியாவில் மதக் கலவரத்தை உருவாக்க பஹல்காம் தாக்குதல்”

    இந்தியாவில் மதக் கலவரத்தை உருவாக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்துகளை குறிவைத்து பஹல்காம் தாக்குதல் நடத்தியதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார். பாகிஸ்தானுக்கு லஷ்கர்-இ-தொய்பாவுக்கு உள்ள தொடர்பு உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் சரணாலயமாக பாகிஸ்தான் திகழ்கிறது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை அழிக்க இந்தியாவிற்கு முழு உரிமை உள்ளது என்றும் விக்ரம் மிஸ்கி கூறினார்.



  • May 07, 2025 10:41 IST

    ”பஹல்காமில் நடந்தது காட்டுமிராண்டி தாக்குதல்”

    ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குர்ஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்து வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.



  • May 07, 2025 10:40 IST

    உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தல்

    பாகிஸ்தானில் இந்திய ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். காஷ்மீர் துணை நிலை ஆளுநர், எல்லை பாதுகாப்பு படை தலைவர் ஆகியோருடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்யுமாறு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.



  • May 07, 2025 10:31 IST

    'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நடிகர் ரஜினி பதிவு!

    பாகிஸ்தான் மீதான இந்தியாவின் பதிலடி தாக்குதலான 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "போராளியின் போர் தொடங்கியுள்ளது. இலக்கை அடையும் வரை நிறுத்த வேண்டாம். ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடியுடன் உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.



  • May 07, 2025 10:30 IST

    உமர் அப்துல்லா தலைமையில் ஆலோசனை கூட்டம்

    ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை தொடர்ந்து எல்லையில் நிலவும் சூழல் குறித்து காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஆலோசனை நடத்துகிறார்.



  • May 07, 2025 10:29 IST

    9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்

    பாகிஸ்தான் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. அதன் பட்டியல்:

    1. மர்கஸ் சுபான் அல்லாஹ், பஹவல்பூர் ஜெய்ஷ்-இ-முகமது

    2. மார்கஸ் தைபா, முரிட்கே - லஷ்கர் இ தொய்பா

    3. சர்ஜல், தெஹ்ரா கலன் - ஜெய்ஷ் இ முகமது

    4. மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் - எச்.எம்.

    5. மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா – லஷ்கர் இ தொய்பா

    6. மர்கஸ் அப்பாஸ், கோட்லி - ஜெய்ஷ் இ முகமது

    7. மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி - எச்.எம்.

    8. ஷவாய் நல்லா முகாம், முசாபராபாத் - லஷ்கர்-இ-தொய்பா

    9. சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் ஜெ.எம்.



  • May 07, 2025 10:07 IST

    அவசர பாதுகாப்பு கூட்டத்திற்கு ரேவந்த் ரெட்டி அழைப்பு 

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மறுஆய்வு செய்ய ஒருங்கிணைந்த கட்டளை கட்டுப்பாட்டு மையத்தில் பாதுகாப்பு குறித்து அவசர கூட்டத்திற்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி புதன்கிழமை அழைப்பு விடுத்துள்ளார். 



  • May 07, 2025 10:06 IST

    இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' - இஸ்ரேல் ஆதரவு

    இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கையை இஸ்ரேல் ஆதரிக்கிறது. அப்பாவிகளுக்கு எதிராக கொடூரமான குற்றங்களை நிகழ்த்திவிட்டு தங்களால் தப்ப முடியாது என்பதை பயங்கரவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.



  • May 07, 2025 10:05 IST

    எந்தவொரு சூழலையும் சமாளிக்கத் தயார்: காஷ்மீர்

    காஷ்மீர் எல்லை மாவட்டங்களில் நிலவும் சூழ்நிலையைக் காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடர்ந்து கண்காணித்து வருகிறார். எல்லை மாவட்டங்களில் நிலவும் சூழலைத் துல்லியமாகக் கண்காணித்து வருவதாகவும் எந்தவொரு சூழலையும் சமாளிக்கத் தயாராக இருப்பதாகவும் காஷ்மீர் ஆளுநர் மாளிகை ட்வீட் செய்துள்ளது.



  • May 07, 2025 10:05 IST

    பாக். மீதான இந்திய ராணுவ நடவடிக்கை வருந்தத்தக்கது: சீனா

    இந்தியாவின் ராணுவ நடவடிக்கை வருத்தமளிப்பதாகச் சீனா கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாகச் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இந்தியாவின் ராணுவ நடவடிக்கை வருத்தமளிக்கிறது. தற்போது நடந்து வரும் விஷயங்கள் கவலை தருகிறது. சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது. அதேநேரம் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.



  • May 07, 2025 10:04 IST

    ”பயங்கரவாதத்தை வேர்களிலிருந்து அழிப்பதில் இந்தியா உறுதி”

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்வீட்டரில், "நமது ஆயுதப் படைகளை நினைத்துப் பெருமைப்படுகிறோம். பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்குப் பாரதத்தின் பதில் தான் ஆபரேஷன் சிந்தூர் ஆகும். இந்தியா மற்றும் அதன் மக்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. பயங்கரவாதத்தை அதன் வேர்களிலிருந்து அழிப்பதில் பாரதம் உறுதியாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.



  • May 07, 2025 09:51 IST

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயண பிரசாத் உயிரிழப்பு

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயண பிரசாத் நேற்று இரவு 11.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். 



  • May 07, 2025 09:36 IST

    பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து கிராமவாசிகள் வெளியேற்றம் - ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

    பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (போக்) பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூரை நடத்திய பின்னர், ஜம்மு-காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, "பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து கிராமவாசிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும், தங்குமிடம், உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் போக்குவரத்தை உறுதி செய்யவும் டி.சி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உறுதி செய்வோம். ஜெய் ஹிந்த்!"

    அவர் மேலும் கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் எல்லை மாவட்டங்களின் நிலைமையை அனைத்து மூத்த நிர்வாக, காவல்துறை மற்றும் அனைத்து எல்லை மாவட்டங்களின் டி.சி.க்கள் உட்பட மாவட்ட அதிகாரிகளுடன் எடுத்துரைத்தேன். நான் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறேன், எந்தவொரு நிகழ்வையும் சமாளிக்க அரசாங்கம் முழுமையாக தயாராக உள்ளது.



  • May 07, 2025 09:28 IST

    ஆபரேஷன் சிந்தூர் - இபிஎஸ் பாராட்டு

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத நிலைகளில் இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலுக்கு என் பாராட்டுகள்; பிரதமர் மோடி தலைமையின் கீழ் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என இபிஎஸ் பதிவிட்டுள்ளார்.



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: