Chennai News Highlights: CA தேர்வுகள் ஒத்திவைப்பு - திருத்தப்பட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும்

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Exam

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

அனைத்து கட்சிக் கூட்டம்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் தொடர்பாக டெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சந்தீப் பந்தோபாத்யாய, திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, சமாஜ்வாதி கட்சி எம்.பி., ராம் கோபால் யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், சிவ சேனா(யுபிடி) எம்பி சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ்(எஸ்பி) எம்.பி. சுப்ரியா சுலே, பிஜு ஜனதா தள எம்பி சஸ்மித் பத்ரா, சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ், ஐக்கிய ஜனதா தள எம்.பி சஞ்சய் ஜா, ஏ.ஐ.எம்.ஐ.எம். எம்.பி. அசாதுதின் ஒவைசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • May 08, 2025 20:44 IST

    சாந்தோம் மற்றும் லூப் சாலைகளில் நாளை முதல் போக்குவரத்து அனுமதி

    சாந்தோம் நெடுஞ்சாலையில் மெட்ரோ பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து நாளை முதல் சாந்தோம் மற்றும் லூப் சாலைகளில் இரு வழிகளிலும் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நெரிசல் மிகுந்த நேரங்களான (காலை 7.30 மணி முதல் 11 மணி மற்றும் மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை) மட்டும் ஒரு வழிகளில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவிப்பு



  • May 08, 2025 19:40 IST

    பிரதமர் மோடியுடன் ராணுவ தளபதி சந்திப்பு

    பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ  தளபதி உபேந்திர திவேதி  சந்தித்துள்ளார். அ 30 நிமிடத்திற்கும் மேலாக சந்திப்பு நீடித்தது. எல்லையில் உள்ள சூழல், பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குல் மற்றும் இந்தியாவின் பதிலடி குறித்து விளக்கமளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • May 08, 2025 19:39 IST

    அன்னை இல்லம் - தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு

    நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீடு ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதி  உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுவுக்கு ஜூன் 3ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார் உள்ளிட்டோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, சட்ட விதிகளை கருத்தில் கொள்ளாமல் ஜப்தி உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பு வழக்கின் விசாரணை ஜூன் 3ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு



  • May 08, 2025 19:36 IST

    உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான்: வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி

    உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் என்ற பெயரைத் தான்
    பாகிஸ்தான் பெற்றிருக்கிறது. உலகில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் பாகிஸ்தானின் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது என வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்



  • May 08, 2025 19:03 IST

    கரூர் பரமத்தியை வெப்ப மண்டல பகுதியாக அறிவிக்க கோரிக்கை

    தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாலைவனமாக உருவெடுத்து வரும் கரூர் மாவட்டத்தில் அடர்ந்த வனங்களை பெருக்க மரங்களை நடவும், கரூர் பரமத்தி பகுதியை வெப்ப மண்டல பகுதியாக அறிவிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. 



  • May 08, 2025 18:46 IST

    600-க்கு 599 மதிப்பெண்கள் - அசத்திய மாணவன்

    12 ஆம் பொதுத் தேர்வில் மளிகைக்கடை உரிமையாளர் மகன் 600-க்கு 599 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். ஆங்கிலத்தை தவிர்த்து அனைத்து பாடங்களிலும் 100/100, மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

     



  • May 08, 2025 18:29 IST

    குடியரசுத் தலைவர், பிரதமருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் 

    நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவர், பிரதமருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் அனுப்பியுள்ளார். விசாரணை அறிக்கையின் நகலை இணைத்து குடியரசுத் தலைவர், பிரதமருக்கு தலைமை நீதிபதி கடிதம் அனுப்பியுள்ளார். டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக யஷ்வந்த் வர்மா இருந்தபோது அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தின்போது யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது



  • May 08, 2025 18:15 IST

    சென்னையில் 2-வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை

    மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில்   2-வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது.. விமான நிலையம், மணலி சிபிசிஎல், எண்ணூர் துறைமுகத்தில் ஒத்திகை நடத்தப்பட்டது. ஆபத்து காலத்தில் எப்படி செயல்பட வேண்டுமென விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சைரன் ஒலிப்புகளை எழுப்பியும், பாதுகாப்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் இணைந்தும் ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. 



  • May 08, 2025 16:44 IST

    கேளிக்கை வரி மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்

    கட்டணத்துடன் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா டிசம்பர் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்து இருந்தார். இந்த மசோதா கடந்த டிசம்பர் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார்.



  • May 08, 2025 16:07 IST

    லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

    லாகூர் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்துவதையடுத்து, அங்கிருந்து அமெரிக்கர்கள் வெளியேற பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் இந்திய - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேறவும் அமெரிக்கர்கள் யாரும் அங்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



  • May 08, 2025 16:06 IST

    பாக். வான் பாதுகாப்பு சிஸ்டத்தை தகர்த்தது இந்தியா

    இந்தியப் படைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டன. “இன்று காலை இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானில் உள்ள பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளைக் குறிவைத்தன. பாகிஸ்தானின் அதே தீவிரத்துடன் அதே களத்தில் இந்தியாவின் பதில் நடவடிக்கை இருந்தது. லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது என்பது நம்பத்தகுந்த வகையில் அறியப்பட்டுள்ளது,” என்று அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.



  • May 08, 2025 15:58 IST

    புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி கொலை

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, புல்வாமா உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு மூளையாக இருந்த பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகத்தின் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலின்போது, தேடப்பட்டு வந்த அப்துல் ரவூப் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் பலியானதாக தெரிவித்த நிலையில், காயமடைந்திருந்த அப்துல் ரவூப் அசாரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



  • May 08, 2025 15:57 IST

    பாகிஸ்தானின் முயற்சி முறியடிப்பு - இந்தியா

    இந்தியாவில் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டு உள்ளது என பாதுகாப்பு துறை அறிவித்து உள்ளது. காஷ்மீர், பஞ்சாப், ஜம்மு, ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், சண்டிகார் உள்ளிட்ட 15 நகரங்களை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது.



  • May 08, 2025 15:57 IST

    சவாய் மான்சிங் ஸ்டேடியத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

    ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என இ-மெயிலில் மிரட்டல் விடப்பட்டது. இதனை தொடர்ந்து மக்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

     



  • May 08, 2025 15:28 IST

    பாகிஸ்தான் வான் பாதுகாப்பு சிஸ்டத்தை தகர்த்த இந்தியா?

    பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு சிஸ்டம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அவைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • May 08, 2025 15:20 IST

    பஞ்சாப் காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை ரத்து

    நிர்வாக காரணங்களுக்காக பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கான அனைத்து விடுமுறைகளும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக பஞ்சாப் காவல்துறை அறிவித்துள்ளது. எந்த ஒரு மருத்துவ அவசர நிலையையும் கையாள 24 மணிநேரமும் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதான்கோட், அமிர்தசரஸ், குருதாஸ்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, அனைத்து பொது நிகழ்ச்சியையும் பஞ்சாப் அரசு ரத்து செய்துள்ளது.



  • May 08, 2025 15:18 IST

    உயர்மட்ட கூட்டம் - பிரதமர் மோடி அறிவுறுத்தல்

    அணு உலை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய உட்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களுடன் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.



  • May 08, 2025 15:01 IST

    சித்திரை முழுநிலவு மாநாடுக்கு தடை கோரிய மனு- ஐகோர்ட்டு

    மாமல்லபுரம் அருகே 11ம் தேதி பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து சித்திரை முழு நிலவு பெருவிழாவை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிக்கு தடைகேட்டு வடநெமிலி பஞ்சாயத்து தலைவர் பொன்னுரங்கம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், சித்திரை முழு நிலவு கூட்டத்தால் வடநெமிலி பஞ்சாயத்து பகுதியில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகும் சூழல் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும். அனுமதி வழங்க கூடாது என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எல்.விக்டோரிய கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முகிலன், ''கடந்த 5-ந்தேதி நிகழ்ச்சிக்கு 42 நிபந்தனைகள் விதித்து, போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல'' என்று கூறினார். இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, "ஏற்கனவே நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்'' என்று உத்தரவிட்டார்.



  • May 08, 2025 15:00 IST

    எல்லையில் சந்தேக நபர்களை கண்டதும் சுட உத்தரவு

    ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • May 08, 2025 14:54 IST

    மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை

    எல்லை பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலை அதிகரித்து உள்ள சூழலில்,எல்லையில் பதற்றம் அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டால், மீண்டும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரித்துள்ளார். 



  • May 08, 2025 14:36 IST

    அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

    சளி பிரச்னை காரணமாக அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதி, பரிசோதனைக்கு பிறகு இன்று அமைச்சர் துரைமுருகன் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.



  • May 08, 2025 14:24 IST

    அரசுக்கு துணை நிற்பதாக அனைத்துக் கட்சிகளும் கூறின - டி.ஆர்.பாலு

    நாட்டின் பாதுகாப்பு கருதி அரசுக்கு துணை நிற்பதாக அனைத்துக் கட்சிகளும் கூறின; அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் ஏன் வரவில்லை என கேள்வி கேட்டோம் என தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்



  • May 08, 2025 13:58 IST

    "ஆபரேஷன் சிந்தூர்" தொடர்கிறது - ராஜ்நாத் சிங்

    நாங்கள் நிலைமையை தீவிரமாக்க விரும்பவில்லை. ஆனால், பிரச்சினை என்றால் பின்வாங்க மாட்டோம் பாகிஸ்தான் ஏதேனும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால் பதிலடி கொடுக்க இந்தியா ஒருபோதும் தயங்காது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது



  • May 08, 2025 13:29 IST

    100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்

    பாகிஸ்தானில் இந்தியப் படைகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாக தகவல்; நேற்று அதிகாலை 1.05 மணி முதல் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியப் படைகள் தாக்குதல்; பஹல்காமில் 26 பேரைக் கொன்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. 



  • May 08, 2025 13:03 IST

    சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து

    இந்தியா - பாக். எல்லையில் போர் பதற்றம் காரணமாக வான் மண்டல கட்டுப்பாடு விதிக்கப்பட்டதன் எதிரொலி, சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு. இந்திய வான் மண்டலங்களில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, விமான சேவைகளை ஒழுங்குபடுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது



  • May 08, 2025 12:51 IST

    தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்

    தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு; அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 



  • May 08, 2025 12:50 IST

    கேளிக்கை வரி மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

    தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு 10% கேளிக்கை வரி விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்; கடந்த டிசம்பரில் நடைபெற்ற பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது



  • May 08, 2025 12:36 IST

    “அதிமுக கோரிக்கையால் நிதி விடுவிப்பு” - எடப்பாடி பழனிசாமி

    மக்களையும், மக்களின் பிரச்னைகளையும் ஸ்டாலின் அரசு கவனிப்பதில்லை. தமிழ்நாட்டிற்கான நிதியை விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்தோம்; அதிமுக கோரிக்கை அடிப்படையில் 100 நாள் வேலை திட்டம், மெட்ரோவிற்கு நிதி ஒதுக்கப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 



  • May 08, 2025 12:26 IST

    “தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” - எடப்பாடி

    தமிழ்நாட்டில் எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்கிறது; சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; நாட்டில் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் முதல்வர் இருக்கிறார்.  காவலர் ஒருவர் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக வெளியான வீடியோவை காண்பித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 



  • May 08, 2025 12:09 IST

    பாகிஸ்தான் எல்லையில் சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட ஆணை

    ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ஆணை எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்ட நிலையில் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றம். தீவிரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்ததற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



  • May 08, 2025 11:45 IST

    லாகூரில் ட்ரோன் தாக்குதல்?

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூரில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல். லாகூர் விமான நிலையத்திற்கு அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் மக்கள் பீதி; பாகிஸ்தான் ராணுவ கன்டோன்மென்ட் அருகே வெடிகுண்டு வெடித்ததாக தகவல் வெளியானது. 



  • May 08, 2025 11:34 IST

    கொல்லப்பட்ட +2 மாணவன் தேர்வில் வெற்றி

    கரூர், குளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் குத்தி கொலை  செய்யப்பட்ட மாணவர் ஷியாம் சுந்தர் 351 மதிப்பெண்கள் பெற்று +2 தேர்வில் வெற்றி



  • May 08, 2025 11:18 IST

    அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

    "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை தொடர்பான  அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. 
    மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்



  • May 08, 2025 11:17 IST

    பாமக மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி

    பாமக சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட முடியாது

    - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



  • May 08, 2025 10:56 IST

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரிப்பு

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து 73,040 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9,130 ரூபாய்க்கும் விற்பனை



  • May 08, 2025 10:32 IST

    உத்தரகாசி அருகே ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

    உத்தரகாண்ட்: உத்தரகாசி மாவட்டம் கங்கநானி அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம் 
    மீட்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் 



  • May 08, 2025 08:08 IST

    மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!

    பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லையோர மாநில முதலமைச்சர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தயார் நிலை குறித்து அறிவுறுத்துகிறார்.



  • May 08, 2025 08:05 IST

    கல்லூரி மாணவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர்!

    ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் கல்லூரி மாணவிக்கு அவரது கணவர் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மனைவியை மருத்துவமனையில் அனுமதித்தார். மாணவி ஓராண்டுக்கு முன்பு வீட்டிற்கு தெரியாமல் சுப்ரீத் என்பவரை காதலித்து திருமணம் செய்து அவருடன் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி இருப்பதாக நினைத்திருந்த மாணவியின் பெற்றோருக்கு இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



  • May 08, 2025 07:43 IST

    27 விமானநிலையங்கள் மூடல்

    எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக இன்று 27 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. ஸ்ரீநகர், ஜம்மு, லே, சண்டிகர், அமிர்தரஸ், லூதியானா, பாட்டியாலா உள்ளிட்ட 27 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.



  • May 08, 2025 07:42 IST

    2 ஆவது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை

    சென்னையில் 2ஆவது நாளாக இன்றும் (மே.8) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



  • May 08, 2025 07:40 IST

    இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 



news updates Tamilnadu Live News Udpate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: