/indian-express-tamil/media/media_files/0afHNgXcUix9T5i9p40F.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நாளை சிறப்பு முகாம்: சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் வரும் 10ம் தேதி (சனிக்கிழமை) குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கு பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
-
May 09, 2025 20:34 IST
வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்ஆர்த்தி ரவி
18 ஆண்டுகளாக காதல், விசுவாசம், பற்றுதலுடன் நான் யாருக்கு துணைநின்றேனோ அவர், என்னைப் பிரிந்து சென்றது மட்டுமல்லாமல், ஒரு காலத்தில் உறுதியளித்த பொறுப்புகளையும் முற்றிலுமாகத் துறந்துவிட்டார். இப்போது வங்கியின் அறிவிப்பால், எங்களை எங்கள் இல்லத்திலிருந்து வெளியேற்றும் அபாயகரமான நிலை உருவாகியுள்ளது. இதுவும், ஒரு காலத்தில் என்னுடன் இணைந்து அந்த இல்லத்தை கட்டியவரின் உத்தரவின் பேரிலேயே நிகழ்கிறது என்று, நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தியின் பரபரப்பு இன்ஸ்டா பதிவு
-
May 09, 2025 20:32 IST
சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வு இருக்கை: மு.க.ஸ்டாலின் தகவல்
நெல்லையில் மாபெரும் நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும். சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வு இருக்கை அமைக்க நடவடிக்கை. இஸ்லாமிய மக்களுக்காக தொடர்ந்து திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக மட்டுமல்ல, சலுகையையும் வழங்குவதில் திமுக முதன்மையாக அரசாக திகழ்கிறது என இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் முதல்வர் உரையாற்றியுள்ளார்.
-
May 09, 2025 17:53 IST
பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு - காவல் ஆணையர் அருண்
சென்னையில், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். போர் பதற்ற சூழல் நிலவி வரும் நிலையில், வாகன சோதனைகளையும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
May 09, 2025 17:26 IST
நெல்லையில் போர் பாதுகாப்பு ஒத்திகை
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு தலைவரான ஆட்சியர் சுகுமார் தலைமையில் இந்த ஒத்திகை நடைபெறுகிறது. அணுமின் நிலைய பாதுகாப்பு, அவசர கால செயல்முறைகள் குறித்து இதில் விளக்கப்பட இருக்கிறது.
-
May 09, 2025 16:57 IST
புதிய மினி பேருந்து திட்டம்: அமலுக்கு வரும் தேதி அறிவிப்பு
புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் வரும் ஜூன் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக 1,842 மினி பேருந்துகளின் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
May 09, 2025 16:55 IST
'உங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்' - வீடியோ வெளியிட்ட அன்புமணி
திருவிடந்தையில் நாளை மறுநாள் பா.ம.க-வின் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், "உங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். அமைதியான முறையில், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், கட்டுப்பாடோடு இங்கே நீங்கள் வரவேண்டும்." என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
-
May 09, 2025 16:42 IST
தோனி தொடர்ந்த வழக்கில் உத்தரவு
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்து கூறியதாக கிரிக்கெட் வீரர் தோனி வழக்கு தொடர்ந்தார் தோனி தரப்பு கேள்விகளுக்கு பதிலளிக்க பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தி செய்தி தொலைக்காட்சியான நியூஸ் நேஷன் நெட்வொர்க் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
May 09, 2025 14:44 IST
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
May 09, 2025 13:40 IST
"எல்லா ஊரையும் மிஞ்சப்போகும் மிஞ்சப்பூர்" - முதல்வர் ஸ்டாலின்
“இது பஞ்சப்பூர் அல்ல.. எல்லா ஊரையும் மிஞ்சப்போகும் மிஞ்சப்பூர்; தமிழ்நாட்டின் இதய பகுதியாக விளங்கும் திருச்சிக்கு, இப்படியொரு பேருந்து முனையம் நிச்சயம் தேவைதான்” * திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்துவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
May 09, 2025 13:00 IST
நமது ஆட்சியின் சாதனைகளை நாமே முறியடிப்போம் - முதல்வர் ஸ்டாலின்
திமுக ஆட்சியில் இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றியதை நினைத்து வியப்பாக உள்ளது; அடுத்து வரும் திமுக ஆட்சியில் இதைவிட அதிக சாதனைகள் படைப்போம். அடுத்து வரும் ஆண்டுகளில் நமது ஆட்சியின் சாதனைகளை நாமே முறியடிப்போம் என்று திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
May 09, 2025 12:44 IST
NEP - தமிழ்நாட்டில் அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி
தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மாநில அரசு புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
-
May 09, 2025 12:15 IST
தமிழக மாணவர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு
காஷ்மீரில் பயின்று வரும் தமிழக மாணவர்களுக்கான உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. 75503 31902, 80690 09901, 80690 ௦௯௯௦௦ ஆகிய உதவி எண்களை அயலகத் தமிழர் நல வாரியம் வெளியிட்டுள்ளது
-
May 09, 2025 12:14 IST
ஏசி பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார் முதல்வர்
தமிழகத்தின் மிகப்பெரிய ஏசி பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 115.68 ஏக்கரில் ஏசி வசதியுடன் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது; ரூ.408 கோடியில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை முதல்வர் திறந்து வைத்தார்
-
May 09, 2025 11:57 IST
திருச்சி: ரூ.2344 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல்
திருச்சி மாவட்டத்தில் ரூ.2344 கோடியில் புதிய பணிகளுக்கு நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் திருச்சியில் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ரூ.236 கோடியில் அமைக்கப்பட உள்ள காய்கறி ங்கடிக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.276.95 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.830.35 கொடியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
May 09, 2025 11:15 IST
”காஷ்மீரில் தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்”
ஜம்மு காஷ்மீரில் பதற்றம் நிலவி வரும் சூழலில், கல்வி பயில காஷ்மீருக்கு சென்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டை சேர்ந்த 41 மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்றும், மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 09, 2025 11:14 IST
வரலாற்று நினைவுச்சின்னங்களில் பலத்த பாதுகாப்பு
போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், டெல்லியின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியா கேட், ஜமா மசூதி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
May 09, 2025 11:12 IST
ராயப்பேட்டையில் நாய் கடித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி காயம்
சென்னை ராயப்பேட்டையில் நாய் கடித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி காயமடைந்துள்ளார். பாலாஜி நகர் முதல் தெருவில் கணவருடன் நடைபயிற்சி சென்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா மகேஸ்வரியை 2 முறை நாய் கடித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார். நாயின் உரிமையாளரான சுரேஷ் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
-
May 09, 2025 11:05 IST
திருச்சி: பெரியார் சிலையை திறந்துவைத்த ஸ்டாலின்
திருச்சி பஞ்சப்பூரில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் திறந்து வைத்த பெரியார் சிலைக்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
-
May 09, 2025 10:42 IST
வாழப்பாடி: தனியார் பேருந்து -லாரி மோதி 5 பேர் காயம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து 5 பேர் காயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளாளகுண்டம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. பேருந்து லாரி மோதி கொண்ட விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
May 09, 2025 09:58 IST
தங்கம் சவரனுக்கு ரூ.920 குறைவு!
தங்கம் சவரனுக்கு 72,120 க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்றுக்கு 115 குறைந்து 9,015க்கு விற்பனையாகிறது.
-
May 09, 2025 09:24 IST
திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் கண்காணிக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் பயணிகளின் உடைமைகள், ஆவணங்கள் சோதனை செய்யப்படுகிறது.
-
May 09, 2025 09:12 IST
சேலம்-அரக்கோணம் ரயில் தற்காலிகமாக ரத்து
சேலம்-அரக்கோணம் ரயில் மற்றும் அரக்கோணம்-சேலம் பயணிகள் ரயில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் 5 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் அரக்கோணத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு காலை 10.50 மணிக்கு சேலம் வந்தடையும். சேலம்- அரக்கோணம் ரயில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். இந்த ரயில் இருமார்க்கத்திலும் நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 09, 2025 09:11 IST
இந்திய ராணுவத்திற்கு ஆதரவு - நாளை பேரணி
பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை சென்னையில் பேரணி நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 5 மணிக்கு சென்னையில் காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கும். வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம். முன்னாள் படை வீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 09, 2025 09:10 IST
சாந்தோம் நெடுஞ்சாலையில் இருவழி போக்குவரத்து
மெட்ரோ பணிகளுக்காக கடந்த ஆண்டு ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்ட சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் லூப் சாலை இன்று முதல் இருவழிப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகள் முடிவடைந்த காரணத்தால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் (7.30 am - 11.00am மற்றும் 5.00pm - 8.30pm) மட்டும் ஒரு வழி பாதையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 09, 2025 09:07 IST
சி.ஏ. தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைப்பு
இன்று முதல் 14-ம் தேதி வரை நடைபெற இருந்த சி.ஏ. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.