/indian-express-tamil/media/media_files/2025/05/12/Zqp3INaRrz6a6OBi9cyp.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
May 12, 2025 22:13 IST
ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் கொடுத்த வாக்கு நிறைவேற்றப்பட்டது - ஜெய்ஷங்கர்
ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் கொடுத்த வாக்கு நிறைவேற்றப்பட்டது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். முன்னதாக, ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
-
May 12, 2025 20:30 IST
ஆப்ரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் அல்ல; அது மக்களுடைய உணர்வுகளின் பிரதிபலிப்பு - மோடி
ஆப்ரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் அல்ல; அது மக்களுடைய உணர்வுகளின் பிரதிபலிப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு தான் ஆப்ரேஷன் சிந்தூர் என்று அவர் கூறியுள்ளார்.
-
May 12, 2025 20:16 IST
ஆப்ரேஷன் சிந்தூரை அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் - மோடி
ஆப்ரேஷன் சிந்தூரை அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு பின்னர், முதன்முறையாக பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அப்போது, இந்திய ராணுவத்தினருக்கு தாம் மரியாதை செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
May 12, 2025 19:52 IST
ஆறுபடைவீடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஜனசேனா கட்சியினருக்கு பவன் கல்யாண் உத்தரவு
நாட்டிற்காக போராடும் ராணுவத்தினருக்கு தெய்வீக பலன் கிடைக்க வேண்டி தமிழகத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் வழிபாடு நடத்த வேண்டும் என ஜனசேனா கட்சியினருக்கு, அக்கட்சி தலைவர் பவன் கல்யாண் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆந்திராவில் இருந்து வருகை தரும் ஜனசேனா கட்சியினர் இங்கு இருக்கும் முருகன் கோயில்களில் பூஜை செய்கின்றனர்.
-
May 12, 2025 19:17 IST
இந்தியா - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை இயக்குநர்கள் பேச்சுவார்த்தை நிறைவு
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, இரு தரப்பு ராணுவ நடவடிக்கை இயக்குநர்கள் இடையே இன்று (மே 12) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், ராணுவ நடவடிக்கைகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நிறுத்த உடன்பாட்டின் பல்வேறு அம்சங்கள் குறித்து இரு இராணுவ அதிகாரிகளும் விவாதித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. எனினும், பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை தற்போது நிறைவு பெற்றது.
-
May 12, 2025 18:50 IST
குப்பைகளை அகற்றிய அன்புமணி ராமதாஸ்
மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் நடைபெற்ற பா.ம.க மாநாட்டு திடலில் குவிந்த குப்பைகளை அகற்றி அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
-
May 12, 2025 18:17 IST
வளசரவாக்கம் தீ விபத்து - மின் கசிவே காரணம்
சென்னை வளசரவாக்கத்தில் பங்களா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வயதான தம்பதி உயிரிழந்த விவகாரத்தில், மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருப்பதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. மின் கசிவு ஏற்பட்டு சோலார் பேனல், ஏ.சி மூலமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது
-
May 12, 2025 18:13 IST
ஜெய்ப்பூரில் உள்ள மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டல் இ-மெயிலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
-
May 12, 2025 18:12 IST
ஸ்ரீபெரும்புதூரில் காற்றுடன் திடீர் கனமழை
ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது. காலையில் வெயில் வாட்டிய சூழலில் மாலை நேரத்தில் திடீர் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.
-
May 12, 2025 17:22 IST
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2,360 குறைவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,360 குறைந்தது. இன்று 2வது முறையாக தங்கம் விலை சவரனுக்கு ரூ1,040 குறைந்து
70,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து, ரூ.71, 040-க்கு விற்பனையானது -
May 12, 2025 17:17 IST
தாக்குதல் நிறுத்தம்: மக்கள் வீடுகளுக்கு திரும்பலாம் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் அறிவிப்பு
பாகிஸ்தான் தாக்குதல்களால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது திரும்பி வரலாம். பாகிஸ்தான் அத்துமீறியதால் எல்லைப் பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர் பூஞ்ச் நகரம் 80% முதல் 90% சதவீதம் வரை காலியாக உள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறல் போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கியது. இந்தியா - பாக். இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு இருக்கும் சூழலில், உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
-
May 12, 2025 16:25 IST
எல்லை பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மரணம்
இந்தியா-பாக். தாக்குதலில் பீகாரை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மரணமடைந்த நிலையில், அவரது உடலுக்கு அவரது சொந்த கிராமத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.
-
May 12, 2025 16:24 IST
இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
பரபரப்பான சூழலில் நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற
உள்ளார் பிரதமர் மோடி -
May 12, 2025 16:05 IST
'சீனாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை அதன் இலக்கைத் தவறவிட்டது' - ஏர் மார்ஷல்
“சீனாவைச் சேர்ந்த PL-15 ஏவுகணை அதன் இலக்கைத் தவறவிட்டது, மேலும் எங்களிடம் கிடைக்கும் அதன் துண்டுகளை நீங்கள் காணலாம். கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு ஆயுதம் நீண்ட தூர ராக்கெட்டுகள். லோய்ட்டர் வெடிமருந்துகள் மற்றும் ஆளில்லா வான்வழி அமைப்புகள் பற்றி நாங்கள் பேசியுள்ளோம். இவை அனைத்தும் எங்கள் பயிற்சி பெற்ற குழுவினர் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பால் வீழ்த்தப்பட்டுள்ளன, ”என்று டிஜி ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி கூறினார்.
-
May 12, 2025 15:38 IST
‘பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் தலையீடு' - ஏர் மார்ஷல் ஏ.கே பாரதி
ஆபரேஷன் சிந்தூர் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, "பாகிஸ்தான் ராணுவம் தலையிடத் தேர்ந்தெடுத்தது வருத்தமளிக்கிறது, அதுவும் பயங்கரவாதிகளுக்காக, அதனால்தான் நாங்கள் பதிலடி கொடுக்கத் தேர்ந்தெடுத்தோம்." என்று அவர் கூறினார்.
கடந்த வாரம் புதன்கிழமை தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட ஆயுத அமைப்புகளில் ஆகாஷ் ஏவுகணைகளும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
May 12, 2025 15:21 IST
அண்ணா பல்கலை. அரியர் பாடத் தேர்வுகளை எழுத சிறப்பு அனுமதி
அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பொறியியல் கல்லூரிகளில் அரியர் பாடத் தேர்வுகளை எழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால உச்சவரம்பை கடந்து அரியர் பாடங்களை வைத்திருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்.- மே, ஜூன் – ஜூலை பருவ தேர்வுகளின்போது அரியர் மாணவர்கள் தேர்வெழுதலாம் என பதிவாளர் தெரிவித்துள்ளார்.
-
May 12, 2025 14:43 IST
சண்டை நிறுத்தம் தவறு - சுப்பிரமணியன் சுவாமி கருத்து
தனியார் செய்தி ஊடகத்துக்கு பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அளித்துள்ள பேட்டியில், "அமெரிக்காவுக்கு இந்தியாவில் என்ன வேலை? பஹல்காம் தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோது அமெரிக்கா வந்திருக்க வேண்டும். போர் தொடங்கிய 2 நாட்களில் அமெரிக்கா சமாதானம் செய்ததை ஏற்று இருக்கக் கூடாது. அமெரிக்காவின் சமாதானத்தை பிரதமர் மோடி ஏற்றது தவறு" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
May 12, 2025 14:38 IST
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
May 12, 2025 13:53 IST
எடப்பாடி பழனிசாமிக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நலத்திட்டங்களை மேற்கோள்காட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
May 12, 2025 13:49 IST
சண்டை நிறுத்தம் தவறு: சுப்பிரமணியன் சுவாமி
“அமெரிக்காவுக்கு இந்தியாவில் என்ன வேலை?; பஹல்காமில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டபோது அமெரிக்கா வந்திருக்க வேண்டும். போர் தொடங்கிய 2 நாட்களில் அமெரிக்கா சமாதானம் செய்ததை ஏற்றிருக்கக் கூடாது; அமெரிக்காவின் சமாதானத்தை பிரதமர் மோடி ஏற்றது தவறு” என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
-
May 12, 2025 13:29 IST
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு. இன்று, வரும் 14, 15, 16 ஆகிய நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
May 12, 2025 13:19 IST
இந்தியா- பாக்., ராணுவ அதிகாரிகள் பேச்சு ஒத்திவைப்பு
இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு. நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் மாலை 5.30 மணிக்கு ஒத்திவைப்பு. இந்தியா தரப்பில் ராணுவ தலைமை இயக்குநர் ராஜீவ் காய், பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர் காஷிஃப் அப்துல்லா பேச உள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தப்பட்ட நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
May 12, 2025 13:17 IST
விக்ரம் மிஸ்ரி மீது இணையத்தில் அவதூறு - அதிகாரிகள் கண்டனம்
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் தொடர்பாக கடந்த 10 ஆம் தேதி உடன்பாடு. சண்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி மீது வலதுசாரி ஆதரவாளர்கள் இணையத்தில் ஆவேசமாக தங்கதளது கருத்தை தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சண்டை நிறுத்த அறிவிப்பை எப்படி வெளியிடலாம்? என்று வலதுசாரிகள் விக்ரம் மிஸ்ரியின் மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வசைபாடி பதிவிட்டதால் சர்ச்சையாகியுள்ளது. தனது எக்ஸ் வலைதள பக்கத்தையே ‘லாக்' செய்துள்ளார் விக்ரம் மிஸ்ரி. அவர் மீதான அவதூறு கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐஏஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் சங்கமும் விக்ரம் மிஸ்ரிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.
-
May 12, 2025 13:00 IST
மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் திறப்பு
இந்தியா-பாக். போர் பதற்றத்தால் மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. ஸ்ரீநகர், அமிர்தசரஸ் உள்பட 32 விமான நிலையங்கள் கடந்த 9ஆம் தேதி முதல் மூடப்பட்டன மே 15 வரை மூடப்படுமென அறிவிக்கப்பட்ட நிலையில், தாக்குதல் நிறுத்தத்தால் உடனே திறக்கப்பட்டது
-
May 12, 2025 12:34 IST
இந்தியா, பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் பேச்சுவார்த்தை
இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் பேச்சுவார்த்தை தொடக்கம். இந்திய டிஜிஎம்ஓ ராஜிவ் காய் உடன் பாக். டிஜிஎம்ஓ காஷிஃப் அப்துல்லா பேச்சுவார்த்தை நடத்துகிறார்; இந்தியா-பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம் அமலான நிலையில், இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
-
May 12, 2025 12:18 IST
விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க உத்தரவு
இந்தியாவில் தற்காலிகமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பயணிகள் விமான இயக்கத்திற்காக விமான நிலையங்கள் உடனடியாக திறக்கப்படுவதாக விமான நிலையங்கள் ஆணையம் அறிவித்துள்ளது. பயணிகள் தங்களது விமானத்தின் நிலை குறித்து விமான நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
-
May 12, 2025 12:12 IST
டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவிப்பு. "14 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை நிறைய கற்றுக் கொடுத்தது; எனது டெஸ்ட் கரியரை நான் புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்” என்று விராட் கோலி கூறியுள்ளார்.
-
May 12, 2025 12:08 IST
சென்னை: ரயில் மோதி 2 மாணவர்கள் உயிரிழப்பு
சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் ரயில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவர்கள் முகமது நஃபூல், சபீர் அகமது ஆகியோர் ரயில் மோதி உயிரிழந்தனர்
-
May 12, 2025 11:45 IST
துணிக்கடையில் தீ விபத்து
சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகம் என்ற துணிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
-
May 12, 2025 11:39 IST
சட்டப்படிப்பு சேர்க்கை - விண்ணப்பம் தொடக்கம்
தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது. tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் சட்டக் கல்லூரிகளில் 3024 இடங்கள் உள்ளன.
-
May 12, 2025 11:06 IST
தூய உள்ளங்களான செவிலியர்களுக்கு வாழ்த்துகள்: முதல்வர்
அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்களுக்கு வாழ்த்துக்கள். பாலினம், சமூக தகுதி என சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோல கருதுபவர்கள் செவிலியர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
May 12, 2025 10:43 IST
எல்லை பகுதிகளில் அமைதி - இந்திய ராணுவம் தகவல்
இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர் மற்றும் எல்லைப் பகுதிகளில் எந்தவிதமான மோதல்களும் பதிவாகவில்லை என்றும், அமைதியான இரவு நிலவியதாகவும் தெரிவித்துள்ளது.
-
May 12, 2025 10:35 IST
இபிஎஸ்-க்கு சீமான் வாழ்த்து
எடப்பாடி பழனிசாமிக்கு சீமான் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு சீமான் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
May 12, 2025 10:06 IST
தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை சவரன் ரூ.1,320க்கு சரிந்து ஒரு சவரன் ரூ.71,040க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் 8,880க்கு விற்பனையாகிறது.
-
May 12, 2025 10:05 IST
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் - சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி உயர்வு
பங்குச் சந்தையில் இன்று ஏற்றம். இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவிப்பால் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் உயர்ந்தது. நிஃப்டி 24,561ஐ தாண்டியது.
-
May 12, 2025 09:22 IST
இந்தியா-பாக்., இடையே மதியம் 12 மணிக்கு பேச்சுவார்த்தை
இந்தியா- பாகிஸ்தான் இடையே இன்று (மே.12) பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. பின்னர் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இன்று நண்பகல் 12 மணிக்கு இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் தலைமை இயக்குநர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
-
May 12, 2025 08:31 IST
சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று சில பகுதிகளில் மழை பொழியும் என்றும் சில பகுதிகளில் 102 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
May 12, 2025 08:28 IST
சத்தீஸ்கர்: லாரி மீது டிரெய்லர் லாரி மோதி 13 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் லாரி மீது டிரெய்லர் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். லாரி மீது டிரெய்லர் மோதியதில் 9 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
-
May 12, 2025 08:28 IST
மீனவர்கள் வலைகள் உலர வைக்கும் செட்டில் தீ விபத்து
குமரி மாவட்டம் மணக்குடி மீனவ கிராமப் பகுதியில் நாட்டுப் படகு மீனவர்கள் கடற்கரையோரம் வலைகள் உலர வைக்கும் செட்டில் நள்ளிரவுக்கு மேல் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் பலருடைய மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து கருகின. அப்பகுதி மக்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள். விபத்து குறித்து சுசீந்திரம் காவல் நிலைய போலீஸார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.
-
May 12, 2025 08:04 IST
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் 525 காசுகளுக்கு கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. அதனால் நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளில் இன்று (திங்கட்கிழமை) 530 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
-
May 12, 2025 07:59 IST
இந்தியா -பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை
இந்தியா ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. முன்னதாக இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற தாக்குதல் நேற்று முன் தினம் மாலை, வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி முடிவுக்கு வந்தது. தாக்குதல் நிறுத்தம் வந்தாலும் எல்லையில் நிலமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
-
May 12, 2025 07:58 IST
திருப்பதி: அரப்பேருந்து தடுப்புச் சுவரில் மோதி 30 பேர் காயம்
தமிழகத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
-
May 12, 2025 07:16 IST
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் ஸ்டாலின்
மலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டிக்கு செல்கிறார். அவர், சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் கோவை சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் ஊட்டிக்கு செல்கிறார். மேலும் பழங்குடியின மக்களை சந்தித்து பேச உள்ளார். முதலமைச்சர் வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
-
May 12, 2025 07:13 IST
பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று (மே 12) காலை 6 மணியளவில் நடைபெற்றது. இதில், தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினால், நாடு செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.