Chennai News Highlights: திமுக ஆட்சியில் தான் பால்வளம் உயர்ந்துள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ்

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SA Ponnusamy president of Milk Agents Welfare Association questions TN minister mano thangaraj Tamil News

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • May 14, 2025 23:07 IST

    திமுக ஆட்சியில் தான் பால்வளம் உயர்ந்துள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ்

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் தான் பால்வளம் உச்சத்தைத் தொட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்வதால் இந்திய அளவில் ஆவின் முக்கியத்துவம் பெற்றுள்ளது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.



  • May 14, 2025 21:21 IST

    பொறியியல் கலந்தாய்வுக்கு, 1,39,262 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்

    இன்று மாலை 6 மணி நிலவரப்படி பொறியியல் கலந்தாய்வுக்கு, 1,39,262 பேர் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது, இதில் 74,971 மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியும், 39,844 மாணவர்கள், சான்றிதழை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளனர்.



  • Advertisment
  • May 14, 2025 21:18 IST

    சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் சோதனை

    சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு, மர்மநபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களு்க்கு முன்பும் இதேபோல் மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



  • May 14, 2025 20:05 IST

    சென்ட்ரல் டூ கும்மிடிப்பூண்டி இடையே 19 புறநகர் மின்சார ரயில்கள் 3 நாட்கள் ரத்து

    சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் இடையே  மே 15, 17 ஆகிய 2 தேதிகளில் 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கவரப்பேட்டை யார்டு பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே துறை இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது மதியம் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால் 19 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டள்ளதாகவும், பொன்னேரி மீஞ்சூர் வரை மட்டுமே புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • May 14, 2025 19:34 IST

    இறையன்புவின் தந்தை மறைவு - முதல்வர் இரங்கல்

    சேலத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புவின் தந்தை வெங்கடாசலம்(90), வயது மூப்பு காரணமாக காலமானார். முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புவின் தந்தை மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்



  • May 14, 2025 19:33 IST

    ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சந்தானத்திற்கு நோட்டீஸ்

    சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்திற்கு எதிர்ப்பு.  இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் படத்தில் பாடல் இருப்பதாக புகார். பாடலை  நீக்கத் தவறினால் ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மன்னிப்பு கேட்க தவறினால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் - தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி நோட்டீஸ்



  • May 14, 2025 18:35 IST

    சோபியா குரேஷி குறித்த கருத்து; ம.பி அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிய ஐகோர்ட் உத்தரவு

    அவரது கருத்துகள் "புற்றுநோய் போன்றது மற்றும் ஆபத்தானவை" என்று கூறிய மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், கர்னல் சோபியா குரேஷியை "பயங்கரவாதிகளின் சகோதரி" என்று குறிப்பிட்டதற்காக பா.ஜ.க தலைவரும் மாநில அமைச்சருமான குன்வர் விஜய் ஷா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டது.



  • May 14, 2025 18:32 IST

    ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சந்தானத்திற்கு நோட்டீஸ்

    சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்திற்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் படத்தில் பாடல் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். பாடலை நீக்கத் தவறினால் ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க தவறினால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்



  • May 14, 2025 18:08 IST

    ஆப்ரேஷன் சிந்தூர்; பா.ஜ.க சார்பில் பேரணி

    தேச ஒற்றுமையை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் தமிழக பா.ஜ.க சார்பில் பேரணி நடைபெறுகிறது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு, பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெறும் பேரணியில் தேசியக் கொடியை ஏந்தி திரளான பா.ஜ.க.,வினர் பங்கேற்று வருகின்றனர்.



  • May 14, 2025 18:07 IST

    இறையன்புவின் தந்தை மறைவு - ஸ்டாலின் இரங்கல்

    சேலத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புவின் தந்தை வெங்கடாசலம்(90), வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். இறையன்புவின் தந்தை மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்



  • May 14, 2025 17:37 IST

    துணைவேந்தர்கள் தேர்வு செய்யும் சட்டம்- அரசிதழில் வெளியீடு

    துணைவேந்தர்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசே மேற்கொள்வது தொடர்பான சட்டம் அரசிதழில் வெளியீடு
    "சென்னை அண்ணா பல்கலைக்கழக வேந்தர், கவர்னர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு அந்த இடத்தில் அரசு என்று சேர்க்கப்பட வேண்டும்"



  • May 14, 2025 17:20 IST

    துணைவேந்தர்கள் நியமனம்: அரசு பதிலளிக்க உத்தரவு

    தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து மனு. மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

    வழக்கின் விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைப்பு



  • May 14, 2025 17:17 IST

    செல்போனை பறித்துச் சென்ற 2 இளைஞர்கள் கைது

    சென்னை ராயபுரத்தில் பெனாசிர் என்பவரின் செல்போனை பறித்துச் சென்ற சேட்டு (21) மற்றும் சேர்ந்த மணி (23) ஆகியோரிடம் இருந்து வழிப்பறிக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல்.



  • May 14, 2025 16:32 IST

    மதபோதகர் ஜான் ஜெபராஜ்க்கு நிபந்தனை ஜாமின்

    போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட மதபோதகர் ஜான்  ஜெபராஜ்-க்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஜான் ஜெபராஜை ஜாமினில் விடுவித்தால் சாட்சிகளை கலைத்து விடுவார் – காவல்துறை



  • May 14, 2025 16:12 IST

    டாஸ்மாக் வழக்கு - மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

    ரூ.1000 கோடி டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற கோரி மனு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மத்திய - மாநில அரசுகள், சி.பி.ஐ, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க  உத்தரவிட்டுள்ளது. 



  • May 14, 2025 15:58 IST

    பொள்ளாச்சி வழக்கில் தி.மு.க அரசுக்கு என்ன பங்கு? - இ.பி.எஸ் கேள்வி 

    பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியதும் அதிமுக அரசு. வழக்கை விசாரித்தது சி.பி.ஐ, தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம், இதில் தி.மு.க அரசுக்கோ, முதல்வருக்கோ என்ன பங்கு இருக்கிறது?. 

    கொடநாடு வழக்கில் குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அ.தி.மு.க அரசு. மாநில திட்டங்களுக்கு நிதியை கேட்டுப் பெற முடியுமா என கேட்ட முதல்வர், நிதியை பெற்றுத் தந்தபின் ஏற்க மறுக்கிறார்" என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 



  • May 14, 2025 15:50 IST

    சிறுபான்மை மக்களுக்காக த.வெ.க என்றும் களத்தில் நிற்கும்" - த.வெ.க தலைவர் விஜய்

    "வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன?, தீர்மானம் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை?. 

    இஸ்லாமியர்களின் உரிமைகள் பறிபோவதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என பேசும் திமுக அரசு, எப்போது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்?. வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக தனியொரு சட்டப் போராட்டத்தை திமுக அரசு ஏன் தொடரவில்லை?. வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்பது அடையாளத்திற்குக் கடந்து போவதாக இருக்கக் கூடாது. சிறுபான்மை மக்களுக்காக த.வெ.க என்றும் களத்தில் நிற்கும்" என்று த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 



  • May 14, 2025 15:33 IST

    ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் 3வது ஏவுதளம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் 3வது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ரூ.3000 கோடியில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

     



  • May 14, 2025 15:16 IST

    மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

    ரயில்வே பட்ஜெட், பிங்க் புத்தகத்தை ஒழித்தார்கள்; தற்போது திட்ட விவரத்தையும் ஒழித்துவிட்டனர் என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டு பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் உள்ள 4 திட்டங்களை மீண்டும் சர்வே பட்டியலுக்கு மாற்றியுள்ளனர். திட்ட மதிப்பு, இதுவரை ஆன செலவு, இந்தாண்டு ஒதுக்கீடு விவரங்கள் யாருக்கும் தரப்படவில்லை. புள்ளிவிவரங்களை மறைப்பது என்பது குற்றம் மட்டுமல்ல; குற்றத்தை மறைக்கும் உச்சபட்ச அநீதி. ரயில்வே திட்ட ஒதுக்கீட்டு விவரங்களை தராமல் மக்களை அறியாமைக்குள் தள்ளும் ஒன்றிய அரசுக்கு அவர் கண்டனம்" என்று தெரிவித்துள்ளார்.



  • May 14, 2025 14:52 IST

    தாக்குதல் பகுதிகளில் பதுங்கு குழிக்கு ஏற்பாடு - ஜம்மு-காஷ்மீர் முதல்வர்

    "பாகிஸ்தானின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் பதுங்கு குழிகள் ஏற்படுத்தப்படும்" என்று  ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். 



  • May 14, 2025 14:43 IST

    கூட்டணி முடிவு- ஓ.பி.எஸ் நாளை அறிவிப்பு - வைத்திலிங்கம் தகவல் 

    "தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோமா என்பதை நாளை ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பார். கட்சி நிர்வாகிகளை இன்றும் நாளையும் சந்திக்கிறார். அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது" என்று  வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

     



  • May 14, 2025 13:54 IST

    தமிழகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று (மே 14) முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 



  • May 14, 2025 13:37 IST

    ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காணுங்கள் - தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஆகமக் கோயில்கள், ஆகமம் அல்லாத கோயில்களை கண்டறிய சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த குழுவுக்கு 3 மாதம் அவகாசம் கொடுத்துள்ளது 



  • May 14, 2025 13:06 IST

    சீன ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம்

    சீனாவைச் சேர்ந்த குளோபல் டைம்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் கணக்கை முடக்கியது மத்திய அரசு சீன அரசு ஆதரவு ஊடகமான XH News நிறுவனம், துருக்கியைச் சேர்ந்த TRT WORLD நிறுவனத்தின் எக்ஸ் தள கணக்கும் முடக்கம்; பாகிஸ்தான் உடனான மோதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



  • May 14, 2025 12:39 IST

    ரூ.100 கோடி கேட்டு சந்தானத்திற்கு வக்கீல் நோட்டீஸ்

    ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சந்தானத்திற்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் வக்கீல் நோட்டீஸ். சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் ஏழுமலையான் திருநாமங்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல் உள்ளதாக புகார்; படத்தை தயாரித்த நிகாரிகா என்டர்பிரைசஸ் நிறுவனம் 15 நாட்களில் மன்னிப்பு கேட்காவிடில் கிரிமினல் வழக்கு என்று தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். 



  • May 14, 2025 12:33 IST

    குழந்தை பிறக்க மாந்திரீக பூஜை - 5 சவரன் அபேஸ்

    மாந்திரீகம் செய்தால் குழந்தை பிறக்கும் என ஏமாற்றி சென்னையில் பெண்ணிடம் 5 சவரன் நகை திருட்டு நடந்துள்ளது. நகைகளை வைத்து தோஷம் கழிப்பதாக கூறி 5 சவரன் நகையை நூதன முறையில் கொள்ளையடித்து சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 



  • May 14, 2025 12:32 IST

    சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெருநாய்கள்

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1,80,157 தெருநாய்கள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டப்படுகின்றன; ரூ.3 கோடியில் ரேபிஸ் தடுப்பூசி, ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 



  • May 14, 2025 12:30 IST

    ஆபரேஷன் சிந்தூர் - குடியரசுத் தலைவருடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு

    ஜனாதிபதி திரௌபதி முர்மு புதன்கிழமை, முத்தரப்பு சேவைத் தலைவர்களைச் சந்தித்தார்-ஜெனரல் அனில் சவுகான், பாதுகாப்பு ஊழியர்களின் தலைவர், ஜெனரல் உபேந்திர திவேதி, இராணுவ ஊழியர்களின் தலைவரும், விமான ஊழியர்களின் தலைவரும் ஏ விமானத் தலைவர் மார்ஷல் ஏ பி சிங் மற்றும் கடற்படை ஊழியர்களின் தலைவரான அட்மிரல் தினேஷ் கிதாதி ஆகியோருடன் சந்தித்தார், மேலும் அவர் செயல்பாட்டைப் பற்றி விவரித்தார்.



  • May 14, 2025 12:12 IST

    இந்திய ராணுவ வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்

    எல்லை தாண்டி சென்றதாக பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய ராணுவ வீரர் ஒப்படைப்பு. இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா, 20 நாட்களுக்குப் பிறகு இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்; இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான அட்டாரி வழியாக வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்



  • May 14, 2025 12:09 IST

    பிரதமர் தலைமையில் கூடியது மத்திய அமைச்சரவை

    பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், இனி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க திட்டம்; பொருளாதார தடைகள், எதிர்கால ராணுவ நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



  • May 14, 2025 11:48 IST

    10ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியீடு

    தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும். மே 16 காலை 10 ஆம் வகுப்பு முடிவும் பிற்பகலில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். 



  • May 14, 2025 11:18 IST

    2K கிட்ஸ்-க்கு அறிவுரை சொன்னா பிடிக்காது - உதயநிதி

    "2K கிட்ஸ்-க்கு அறிவுரை சொன்னா பிடிக்காதுனு எனக்குத் தெரியும். ஆனா, பெரியார் சொன்ன இந்த வரிகளை அதிகமா பின்பற்றுவது நீங்கதான்.." SSC மற்றும் RRB தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். 



  • May 14, 2025 10:42 IST

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கவாய் பதவியேற்பு

    உச்ச நீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றுக் கொண்டார். டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.ஆர்.கவாய்க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா (மே 13, 2025) நேற்று ஓய்வு பெறுவதையடுத்து இன்று (மே 14, 2025) முதல் இவர் பொறுப்பேற்றுள்ளார். நவம்பர் 23, 2025 அன்று பூஷன் ராமகிருஷ்ண கவாய் 65 வயதை ஓய்வு பெற உள்ளதால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் ஆறு மாத காலம் மட்டுமே இந்தப் பதவியில் இருப்பார்.



  • May 14, 2025 10:05 IST

    மெத்தம்பெட்டமைன் கடத்தல்

     சென்னை பாரிமுனை மின்ட் தெரு அருகே மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மணிஷ்ராவல் (25) கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு பூக்கடை தனிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது பிடிபட்டார். எங்கிருந்து போதைப்பொருள் வாங்கினார்? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • May 14, 2025 10:04 IST

    தங்கம் விலை குறைவு

    சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.70,440-க்கு விற்பனையாகிறது. 



  • May 14, 2025 09:47 IST

    துருக்கி மார்பிள் இறக்குமதி நிறுத்தம்

    ஆபரேஷன் சிந்தூர் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததால் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்வதை ராஜஸ்தானின் மார்பிள் டிரேடர்ஸ் நிறுத்தி உள்ளனர். "நாங்கள் துருக்கிய மார்பிளின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும், மேலும் துருக்கியுடனான வர்த்தகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளோம்" என்று அவர்கள் கூறினர். "இந்தியா சுமார் 14 முதல் 16 லட்சம் டன் மார்பிள் இறக்குமதி செய்கிறது, இதில் 70 சதவீதம் துருக்கியிலிருந்து வருகிறது. 



  • May 14, 2025 09:35 IST

    பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு - ஓ.பி.எஸ். வரவேற்பு

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பு வரவேற்க்கத்தக்கது. இனி வருங்காலங்களில் பாலியல் தொடர்பான குற்றங்களில் எவரும் ஈடுபடாத வகையிலான ஓர் அச்சத்தை இந்தத் தீர்ப்பு நிச்சயம் ஏற்படுத்தும். அண்ணா பல்கலை. மாணவி மீதான பாலியல் வழக்கிலும் உரிய நியாயம் விரைந்து கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

     



  • May 14, 2025 09:35 IST

    +2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு

    பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணை தேர்விற்கு தாங்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாகவும், தனி தேர்வர்கள் அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களிலும் இன்று முதல் மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

     



  • May 14, 2025 09:15 IST

    கோடநாடு வழக்கிலும் தண்டனை நிச்சயம் - மு.க.ஸ்டாலின்

    பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கின் தீர்ப்பு குறித்து உதகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. பொள்ளாச்சி வழக்கில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என வாக்குறுதி அளித்தோம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்றார்.



  • May 14, 2025 08:55 IST

    200 போதை மாத்திரைகள் பறிமுதல் - 3 பேர் கைது

    சென்னை, ராமாபுரத்தில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • May 14, 2025 08:44 IST

    பல்லவன் அதிவிரைவு ரயில் பெண்ணாடத்தில் நின்று செல்லும்

    சென்னை எழும்பூா் - காரைக்குடி இடையே இயங்கும் பல்லவன் அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை (மே 15) முதல் பெண்ணாடத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.



  • May 14, 2025 07:34 IST

    சபரிமலை கோயில் இன்று நடை திறப்பு

    வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று(புதன்கிழமை) திறக்கப்படுகிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் பகுதியில் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) முதல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து வழக்கமான பூஜை, வழிபாடுகளுக்கு பின் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வரை 5 நாட்கள் வைகாசி மாத பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது.



  • May 14, 2025 07:19 IST

    9,000 இடங்களில் உரிமைத் தொகை திட்ட முகாம்கள்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுப்பட்ட பெண்கள் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம். இதற்காக தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் இடங்ளில் முகாகம்கள் நடத்தப்படுகிறது. இதற்காக இத்திட்டத்தில் பணியாற்றிய தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுடன் முதல்வர் முகாம் எங்கெங்கு நடத்த வேண்டும் என்ற விவரங்களும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • May 14, 2025 07:09 IST

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மிதமான மழை வரை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 14, 2025 07:07 IST

    மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை

    பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டமும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆபரேஷன் சிந்தூர், இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.



Tamilnadu News Update Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: