/indian-express-tamil/media/media_files/2025/05/16/WvAhW6BJijbPNgxCwr1B.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
May 16, 2025 00:15 IST
சினிமா நட்சத்திரத்துடன் வி.சி.க-விற்கு போட்டி இல்லை - திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சினிமா நட்சத்திரத்துடன் போட்டி இல்லை என்று அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், வி.சி.க-வின் களம் வேறு எனவும், தேர்தல் களத்தை தாண்டி ஒரு கோட்பாடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
May 15, 2025 22:07 IST
போலி வைரக் கல்லை போலீசார் ஒப்படைத்ததாக புகார்
சென்னை, வடபழனியில் கடந்த 4-ஆம் தேதி வைர வியாபாரி சந்திர சேகர் என்பவரை கட்டிப்போட்டு ரூ. 23 கோடி மதிப்புள்ள வைரக்கல்லை சிலர் திருடிச் சென்றனர். இதைத் தொட்ர்ந்து, 4-ஆம் தேதி இரவு 5 பேரை கைது செய்த போலீசார், 8-ஆம் தேதி நீதிமன்றத்தில் வைரக் கல்லை ஒப்படைத்தனர். ஆனால், நீதிமன்றத்தில் போலீசாரால் ஒப்படைக்கப்பட்ட ரூ. 23 கோடி மதிப்பிலான வைரக் கல் போலியானது என்று வைர வியாபாரி காவல் ஆணையரகத்தில் புகாரளித்துள்ளார். மேலும், வைரக் கல் குறித்து கேட்ட போது, போலீசார் மிரட்டியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
May 15, 2025 21:08 IST
த.வெ.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
சென்னை, பனையூரில் நாளை த.வெ.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்குகிறார். அடுத்த பூத் கமிட்டி கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
May 15, 2025 19:28 IST
ராணுவ வீரர்களுக்கான பேரணியை தேவையற்றது என்று செல்லூர் ராஜூ கூறியது தவறு - நத்தம் விஸ்வநாதன்
இந்திய ராணுவ வீரர்களுக்காக நடத்தப்பட்ட பேரணியை தேவையற்றது என்று செல்லூர் ராஜூ கூறியது தவறு என்று அ.தி.மு.க மூத்த நிர்வாகி நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார். மேலும், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க இடையேயான கூட்டணி வலுவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
May 15, 2025 18:45 IST
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – டி.ஆர்.டி.ஓ சாதனை
கடல் நீரை குடிநீராக்குவதற்கான உள்நாட்டு நானோபோரஸ் பல அடுக்கு உயர் அழுத்த பாலிமெரிக் சவ்வை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் உருவாக்கியுள்ளது. இந்த மேம்பாடு 8 மாதங்கள் என்னும் சாதனை நேரத்தில் நிறைவடைந்துள்ளது. கடலோர காவல் படையின் ரோந்து கப்பலின் தற்போதைய உப்பு நீக்கும் ஆலையில் ஆரம்ப தொழில்நுட்ப சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பாலிமெரிக் சவ்வுகளின் ஆரம்ப பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகள் முழுமையாக திருப்திகரமாக இருப்பது கண்டறியப்பட்டது. 500 மணி நேர செயல்பாட்டு சோதனைக்குப் பிறகு இறுதி செயல்பாட்டு அனுமதி வழங்கப்பட உள்ளது
-
May 15, 2025 18:29 IST
இந்தியா- பாக். இடையே அமெரிக்காவால் சண்டை நிறுத்தம் - டிரம்ப் மீண்டும் பேச்சு
கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமானப்படை தளத்தில் அமெரிக்க படை வீரர்கள் மத்தியில் உரையாற்றிய டொனால்டு டிரம்ப், வர்த்தகத்தை கருவியாக பயன்படுத்தி இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. வாருங்கள் வர்த்தகம் செய்வோம் என்று கூறினேன். இதனால் இந்தியாவும் மகிழ்ச்சி அடைந்தது பாகிஸ்தானும் மகிழ்ச்சி அடைந்தது என்று கூறினார். 4 நாட்களில் 4வது முறையாக இந்தியா - பாக். இடையிலான சண்டை நிறுத்தத்திற்கு அமெரிக்காவே காரணம் என டிரம்ப் பேசியுள்ளார்
-
May 15, 2025 18:18 IST
காவல் நிலைய கழிவறைகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா? ஐகோர்ட் கேள்வி
தமிழக காவல் நிலைய கழிவறைகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா? கழிவறைகளை பயன்படுத்தும் ஆய்வாளர்களுக்கு மட்டும் எதுவும் ஆவதில்லை ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கட்டு போடும் இதுபோன்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது
-
May 15, 2025 18:12 IST
பாக். உடன் பயங்கரவாதம் பற்றி மட்டுமே பேச்சு - ஜெய்சங்கர்
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது. பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை பயங்கரவாதம் தொடர்பாக மட்டுமே இருக்கும் என பிரதமர் ஏற்கனவே தெரிவித்துள்ளார் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்
-
May 15, 2025 16:33 IST
60 சவரன் கொள்ளை - ஊழியர் கைவரிசை
சென்னை சைதாப்பேட்டையில் நகைக்கடையில் 60 சவரன் நகை கொள்ளை. நகைகளுடன் தப்பி ஓடிய ஊழியர் ரோஹித்தை வலைவீசி தேடும் போலீசார்
-
May 15, 2025 15:47 IST
தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டுக்கான சேர்க்கையை உடனடியாக துவங்க கோரிய வழக்கு தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டுக்கான சேர்க்கையை உடனடியாக துவங்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
May 15, 2025 15:20 IST
இன்னும் தீண்டாமை உள்ளது - நீதிபதிகள் வேதனை
இன்னும் சில ஊர்களில் தீண்டாமை உள்ளது. இன்னும் சில ஊர்களில் சிலர் சட்டை அணிந்து போக முடியவில்லை, தெருக்களில் நடந்து செல்ல முடியவில்லை. பிரச்சினைகளை கண்டறிந்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வேதனை
-
May 15, 2025 14:35 IST
TNPSC குரூப் 2 முதன்மைத் முடிவுகள் வெளியீடு
-
May 15, 2025 14:01 IST
பணிநீக்க நடவடிக்கையில் மைக்ரோசாஃப்ட்!
நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையாக உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 7,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல். இது அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 3% ஆகும். 2023ம் ஆண்டில் இந்நிறுவனம் சுமார் 10,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்திருந்தது.
-
May 15, 2025 13:44 IST
இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன்: ரவி மோகன்
இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன்; இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன். தற்போது நான் எடுத்த முடிவால் முன்பு எப்போதும் இல்லாத அளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நடிகர் ரவி மோகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
May 15, 2025 13:23 IST
திமுக, பாஜகவுடன் தவெக கூட்டணி இல்லை: நிர்மல்குமார்
கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காது; இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார் கூட்டணி குறித்து பிற கட்சிகள் பேசுவதை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை; தேர்தல் கூட்டணி பற்றி உரிய நாளில் தவெக தலைவர் விஜய் அறிவிப்பார் என்று தவெக துணை பொதுச்செயலாளர் CTR நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
-
May 15, 2025 13:22 IST
சமூகநீதிக்காக குரல் எழுப்புவதை யாரும் தடுக்க முடியாது: ராகுல்
சமூகநீதி மற்றும் கல்விக்காக நாம் குரல் எழுப்புவதை யாரும் தடுக்க முடியாது. இந்தியா ஜனநாயக நாடு; இது அரசமைப்பால் நடத்தப்படுகிறது, சர்வாதிகாரத்தால் அல்ல என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
-
May 15, 2025 13:16 IST
மதச்சார்பின்மையை சிதைப்பது பாஜகவின் செயல்: திருமா
“மதச்சார்பின்மையை சிதைத்து அரசமைப்பை நீர்த்துபோகச் செய்யும் வகையில் பாஜக செயல்படுகிறது. வடகாடு சம்பவத்தில் சாதி வெறிக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம் செய்திருந்தால் அது அரசியல் நேர்மை; மே 31இல் 'மதசார்பின்மையை காப்போம்' என்ற பெயரில் விசிக எழுச்சி பேரணி நடத்துகிறது” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
May 15, 2025 13:11 IST
பாமக மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம்
பாமக மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு. நாளை காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
-
May 15, 2025 13:07 IST
மாநில சுயாட்சிக்கான தெளிவான அச்சுறுத்தல்: ஸ்டாலின்
குடியரசுத் தலைவரின் குறிப்பில் உள்ள கேள்விகள், அரசமைப்பின் அதிகாரப் பகிர்வை சிதைக்கும்; எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும். மாநில சட்டமன்றங்களை செயலிழக்கச் செய்யும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது; இது மாநில சுயாட்சிக்கு ஒரு தெளிவான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
May 15, 2025 12:49 IST
குடியரசுத் தலைவர் குறிப்புக்கு முதல்வர் கண்டனம்
“மத்திய அரசின் குடியரசுத் தலைவர் குறிப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன்; ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்த அரசமைப்பு நிலைப்பாட்டை தகர்க்கும் முயற்சி. பாஜக அல்லாத மாநில சட்டமன்றங்களை முடக்க மத்திய அரசு விரும்புகிறதா?” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வியை எழுப்பியுள்ளார்.
-
May 15, 2025 12:26 IST
வஃக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்க்கும் வழக்கு ஒத்திவைப்பு
வஃக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை மே 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு. ‘வழக்கு விசாரணைக்கு அதிக நேரம் தேவை' என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு தெரிவித்துள்ளது.
-
May 15, 2025 12:25 IST
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம்: ராஜ்நாத்
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது; ராணுவத்தினருக்கு நாடே கடமைப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி உயிர்த்தியாகம் புரிந்தவர்களுக்கு நாடே தலைவணங்குகிறது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
May 15, 2025 12:14 IST
DD Next Level படத்தில் கோவிந்தா பாடல் நீக்கம்
நடிகர் சந்தானம் நடித்த ‘DD Next Level' படத்தில் இருந்து கோவிந்தா பாடல் நீக்கப்பட்டுள்ளது. கோவிந்தா பாடல் பெருமாளை அவமதிக்கும் வகையில் உள்ளதாக எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
May 15, 2025 12:10 IST
குன்றத்தூர் - பல்லாவரம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
குன்றத்தூர் - பல்லாவரம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம். கரைமாநகரில் சாலையின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம். அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் நடத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
-
May 15, 2025 11:30 IST
இந்தியாவில் இ- பாஸ்போர்ட் அறிமுகம்
இந்தியாவில் பயோமெட்ரிக் விபரங்கள் அடங்கிய சிப் பொருத்தப்பட்ட இ- பாஸ்போர்ட் பயன்பாட்டை வெளியுறவுத்துறை அமலுக்கு கொண்டு வந்தது. இ பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் சிப் ஆண்டெனா பொருத்தப்பட்டு தனிப்பட்ட தரவுகள், கை ரேகை, முக தரவு ஆகியவை டிஜிட்டல் என்கிரிப்ஷன் முறையில் பதிவுசெய்யப்படும். இதனால் விபரங்களை திருடவோ, மாற்றவோ முடியாது.
-
May 15, 2025 10:32 IST
தமிழ்நாட்டில் குற்றங்கள் 52% அதிகரிப்பு: நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் குற்றங்கள் கடந்தாண்டை விட 52% அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தினமும் கொலை பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுகின்றன. குற்றங்கள் அதிகரிக்க மது பழக்க வழக்கமே காரணம் அரசு இதில் கவனம் செலுத்துவதில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
-
May 15, 2025 10:00 IST
தங்கம் விலை குறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ஒரு சவரன் 68,880க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் 8,610க்கு விற்பனையாகிறது.
-
May 15, 2025 09:58 IST
உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் கேள்வி
மசோதாக்கள் மீது தான் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என உச்சநீதிமன்றத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆலோசனை கோரியுள்ளார். தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதத்திலும் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஜனாதிபதி திரெளபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகள் எழுப்பி கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார். மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்பட பரபரப்பான 14 கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார். -
May 15, 2025 09:54 IST
1.80 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
சென்னையில் உள்ள ஒரு லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்களுக்கு மூன்று கோடி ரூபாய் செலவில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
-
May 15, 2025 09:29 IST
ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று காலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் ஆளுநரின் தனி செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர். பிரதமர் அலுவலகம் அழைத்ததின் பேரில் ஆளுநர் டெல்லிக்கு சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செல்லும் ஆள்நர் ஆர்.என்.ரவி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்ட நிபுணர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
May 15, 2025 08:41 IST
ரஷ்யா - உக்ரைன் இன்று பேச்சுவார்த்தை
துருக்கியின் அங்காராவில் உக்ரைன், ரஷ்யா இடையே இன்று போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்கிறார், இருநாட்டு முக்கிய அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
-
May 15, 2025 08:03 IST
சென்னை: மின்கசிவால் டிரான்ஸ்ஃபார்மரில் தீ- 2 பைக் சேதம்
சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் மின் கசிவு காரணமாக டிரான்ஸ்ஃபார்மர் தீப்பிடித்து எரிந்த நிலையில், அருகே நிருத்தப்பட்ட இரு பைக்குகள் தீயில் எரிந்து நாசமாகின. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி தீயணைப்புத் துறையினர், தீ பரவாமல் தடுத்தனர்.
-
May 15, 2025 08:03 IST
மே 18-ல் மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை
ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி-சி 61 ஏவப்பட உள்ள நிலையில் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவும் காலங்களில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
May 15, 2025 07:57 IST
பாக்., ரூ.8,670 கோடி விடுவித்த சர்வதேச நாணய நிதியம்
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துக்கும் (ஐ.எம்.எப்.), பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தானுக்கு முதல் தவணையாக 110 கோடி டாலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று சர்வதேச நாணய நிதியம் 2-வது தவணையாக 102 கோடி டாலர் (ரூ.8 ஆயிரத்து 670 கோடி) விடுவித்தது. இத்துடன், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட கடன், 212 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
-
May 15, 2025 07:27 IST
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று (15ம் தேதி) காலை 10 மணிக்கு துவங்கும் 127-வது மலர் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். கண்காட்சி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. கண்காட்சியை முன்னிட்டு, ஊட்டி தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் மேரிகோல்டு, பேன்சி, பிக்கோனியா, பால்சன், டேலியா, கிராந்தியம், லில்லி உள்பட பல்வேறு வகையான மலர்களும் பூத்து குலுங்குகின்றன. இவை பூங்காவில் உள்ள மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதில் பூக்கள் பூத்து குலுங்கி கொண்டிருக்கிறது
-
May 15, 2025 07:15 IST
வார இறுதி நாட்கள்: 1,739 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களையொட்டி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர்,, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 570 பேருந்துகளும், 17-ந் தேதி (சனிக்கிழமை) 605 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 16-ந் தேதி வெள்ளிக்கிழமை 100 பேருந்துகளும், 17-ந் தேதி சனிக்கிழமை 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து 16-ந் தேதி 24 பஸ்களும், 17-ந் தேதி 100 பஸ்களும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
May 15, 2025 07:13 IST
சென்டிரல்- சூலூர்பேட்டை இடையே 21 மின்சார ரயில்கள் ரத்து
சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (வியாழக்கிழமை) மற்றும் 17-ந் தேதி மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து இன்று மற்றும் 17-ந்தேதி காலை 10.30, 11.35 மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 3.45 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.