/indian-express-tamil/media/media_files/2025/05/16/nCdvOmGK9opBQh0hYn0K.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
May 16, 2025 21:59 IST
கடலூரில் சாயத் தொழிற்சாலைக்கு நோட்டீஸ்
கடலூரில், சாயத் தொழிற்சாலை உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சிப்காட்டில் உள்ள சாய தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து கழிவுநீர் குடியிருப்புக்குள் புகுந்ததால், பலர் உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தொழிற்சாலை மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆய்வு நடத்தப்படுகிறது.
-
May 16, 2025 21:30 IST
அரசுப் பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய மேயர் பிரியா
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பாராட்டு தெரிவித்தார். மேலும், பள்ளி வளர்ச்சி நிதியாக தலா ரூ. 1 லட்சத்தை பள்ளிகளுக்கு வழங்கினார்.
-
May 16, 2025 21:07 IST
அமலாக்கத்துறை விசாரணை நிறைவு
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடி முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய நிலையில், மணப்பாக்கத்தில் உள்ள விசாகனின் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
May 16, 2025 20:49 IST
நாம் போரை விரும்பவில்லை என்றாலும், போருக்கு தயாராக இருக்கிறோம் - அண்ணாமலை
நாம் போரை விரும்பவில்லை என்றாலும், போருக்கு தயாராக இருக்கிறோம் என்று முன்னாள் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், "பாகிஸ்தானுக்கான தண்ணீரை நிறுத்திவிட்டோம்; எங்கு இரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது. பாகிஸ்தானை அந்த நாட்டு மக்களுக்காக இந்த முறை மோடி மன்னித்திருக்கிறார். அமைதியா? அல்லது போரா? என்பது பாகிஸ்தான் கையில் தான் இருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.
-
May 16, 2025 20:20 IST
மது போதையில் இருந்த மருத்துவர் பணியிடை நீக்கம்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதுபோதையில் பணியில் இருந்த கண்ணன் என்ற மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை சென்னை மருத்துவ கல்வியக இயக்குநர் பிறப்பித்தார்.
-
May 16, 2025 19:54 IST
புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்
சென்னை, கொளத்தூரில் தி.மு.க சார்பில் 4 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்கம் என்று தலைப்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
-
May 16, 2025 19:30 IST
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் - தலைமைச் செயலாளரை சந்தித்த பெ. சண்முகம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயாளர் பெ. சண்முகம் இன்று நேரில் சந்தித்தார். அப்போது, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பான மனுவையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.
-
May 16, 2025 19:03 IST
பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து எடுத்து வந்த நபர்
சேலம் மத்திய சிறையில் கஞ்சா விநியோகம் செய்ய முயன்ற நபர், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். குறிப்பாக, 80 கிராம் கஞ்சாவை பிஸ்கெட் பாக்கெட்டில் மறைத்து கொண்டு வந்த முகமது சுகில் என்பவரை, சிறை காவலர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
-
May 16, 2025 18:58 IST
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த மார்ச் மாதம் கேப்டன் பதவியில் இருந்து பிராத்வெயிட் விலகியது குறிப்பிடத்தக்கது.
-
May 16, 2025 18:22 IST
அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னையில், மே 29, 30 ஆகிய தேதிகளில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
May 16, 2025 17:47 IST
நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்படவில்லை: தண்ணீர் குடித்து நிரூபித்த கவுன்சிலர்
திருப்பூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், இளைஞர்கள் மது போதையில் மனித கழிவுகளை கலந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து,மனிதக்கழிவு கலக்கப்படவில்லை என தண்ணீரை குடித்து நிரூபித்த மண்டல தலைவர், கவுன்சிலர்
-
May 16, 2025 17:45 IST
எஸ்ஐ மீது தாக்குதல் - கீபோர்டு பிளேயர் கைது
சென்னை விருகம்பாக்கத்தில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய கீபோர்டு பிளேயர் கவியரசன் கைது செய்யப்பட்டுள்ளார். விருகம்பாக்கத்தில் அதி வேகமாக சென்ற காரை நிறுத்தி சோதனை நடத்திய எஸ்ஐ ரியாஸ் அகமது உடன், மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கீபோர்டு பிளேயர், எஸ்ஐ ரியாஸ் அகமதுவை கீழே தள்ளி விட்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.
-
May 16, 2025 17:40 IST
ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில், ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து, உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டு்ளளது, அனைத்து பால் பொருட்கள் உற்பத்திக்கான உரிமத்தை நிறுத்தி வைத்தால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று மனுதாரர் கூறியதை தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
May 16, 2025 17:37 IST
மின் தடை சரிசெய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சிவசங்கர் தகவல்
நெல்லையில் பெய்த எதிர்பாராத கனமழை காரணமாக மின் தடை ஏற்பட்டது.. தற்போது மின் தடை சரிசெய்யப்பட்டுள்ளது. சிந்துபூந்துறை மின் மயானத்தில் ஏற்பட்ட மின்தடையால் சடலங்களைத் தகனம் செய்ய முடியாமல் தாமதமானதாகத் தகவல் வெளியான நிலையில், ஆய்வுக்கு பின் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
-
May 16, 2025 17:36 IST
ஆப்ரேஷன் சித்தூர் பற்றி கிஸ்தானுக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டோம்: அமைச்சர் ஜெய்சங்கர்
பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடியின் போது, தீவிரவாதிகளின் கூடாரங்களை மட்டுமே நாங்கள் குறிவைத்து தாக்குவோம். ராணுவத்தை அல்ல, இதில் நீங்கள் தலையிடாமல் இருக்கலாம் என்று பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டோம் என ஆப்ரேஷன் சித்தூர் நடவடிக்கை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
-
May 16, 2025 16:43 IST
சொத்து தகராறில் கொலை முயற்சி: உறவினர்கள் மீது வழக்கு பதிவு
தேனி : பெரியகுளம் அருகே கதிர்வேல், அழகர்சாமி இருவர் இடையே சொத்து பிரச்சனையில், உறவினர்கள் அரிவாளுடன் ஓடி வந்ததால் அழகிரிசாமி தனது சகோதரி வீட்டில் தஞ்சமடைந்துள்ளார். ஆனால், வீட்டின் கதவை அரிவாளால் தாக்கி உள்ளே சென்று வெட்ட முயற்சி சம்பவம் தொடர்பாக கதிர்வேல், அழகர்சாமி, உறவினர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு
-
May 16, 2025 16:42 IST
4 நாய்கள் விஷம் வைத்து கொலை - தோட்ட பணியாளர் கைது
ஈரோடு மாவட்டம் சொக்கநாதபாளையத்தில் விஷம் வைத்து 4 வளர்ப்பு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், தோட்ட உரிமையாளரும் பா.ஜ.க நிர்வாகியுமான கலைவாணி சென்னிமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நாய்களுக்கும் விஷம் வைத்தது தொடர்பாக தோட்ட பணியாளர் பழனிசாமியிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தோட்டத்து வீட்டில் பராமரிக்கப்படும் கோழிகளை கடித்ததால் நாய்களை குருணை மருந்து வைத்து கொன்றதாகவும் வாக்குமூலம்
-
May 16, 2025 16:36 IST
ஊழல் மற்றும் முறைகேடு விவகாரம்: டெல்லி மருத்துவ கவுன்சில் தற்காலிகமாக கலைப்பு
டெல்லி, ஊழல் மற்றும் முறைகேடு விவகாரத்தில் மாநில மருத்துவ
கவுன்சிலை தற்காலிகமாக கலைத்து சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதால், விசாரணை முடிவுக்கு வரும் வரை கவுன்சிலை தற்காலிகமாக கலைத்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. -
May 16, 2025 15:55 IST
செஞ்சி தேர்வு மையத்தில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை - அன்பில் மகேஸ்
செஞ்சியில் ஒரே மையத்தில் +2 தேர்வு எழுதிய 167 பேர் வேதியியலில் சென்டம் எடுத்த விவகாரம் குறித்த கேள்விக்கு, தேர்வு மையத்தில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை. குற்றச்சாட்டு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்
-
May 16, 2025 15:36 IST
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை விசாரணைக்கு அழைத்துச் சென்றது இ.டி
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளது. விசாகன் வீட்டில் காலை முதல் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது
-
May 16, 2025 14:16 IST
9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
May 16, 2025 13:37 IST
அண்ணாமலை பேட்டி
Watch | ”குடும்பம், ஆடு, மாடுகள் என நிம்மதியாக இருக்கிறேன்.. இதிலேயே பயணிக்க விரும்புகிறேன்..”
— Sun News (@sunnewstamil) May 16, 2025
- திருவண்ணாமலையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி#SunNews | #BJP | #Annamalai pic.twitter.com/Jo2uPVW6he -
May 16, 2025 13:04 IST
என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ், இபிஎஸ்: நயினார் நாகேந்திரன்
ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கின்றனர்.
மதுரை செய்தியாளர் சந்திப்பில் அறிவித்த நயினார் நாகேந்திரன்
-
May 16, 2025 12:59 IST
நிம்மதியாக இருக்கிறேன்- அண்ணாமலை
புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன்
தேசிய அளவில் தனக்கு புதிய பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு அண்ணாமலை பதில்
-
May 16, 2025 12:52 IST
இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
2026 சட்டமன்ற தேர்தலுக்கு அங்கீகரிக்கப்படாத கட்சிகள், வரும் நவம்பர் 11ம் தேதி முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
-
May 16, 2025 11:37 IST
"சிங்கத்தின் கால்கள் பழுதானாலும் சீற்றம் குறையாது": ராமதாஸ்
“சிங்கத்தின் கால்கள் பழுதாகாதபோது சீற்றம் இன்னும் அதிகமாகத் தானே இருக்கும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற
அந்த சீற்றம், எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். -
May 16, 2025 11:20 IST
ஜெயிக்கும் வித்தைகளை கற்றுக் கொடுத்தேன்: ராமதாஸ்
“50 தொகுதிகளில் படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கான வித்தைகளை சொல்லிக்கொடுத்தேன் 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக்கொள்வதற்கான கூட்டம் இது செயல்பட முடியவில்லை என யாரும் விருப்பம் தெரிவித்தால், விரும்பியபடி மாற்றப்படுவார்கள்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
May 16, 2025 11:16 IST
ஆலோசனை கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி இதுவரை பங்கேற்கவில்லை
பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்த ஆலோசனை கூட்டத்திற்கு 7 மாவட்டத் தலைவர்கள், 8 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே வருகை; தலைவர் அன்புமணியும் இதுவரை பங்கேற்கவில்லை தலா 108 மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் உள்ள நிலையில் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை
-
May 16, 2025 10:54 IST
தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டான் பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை; அமரன், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் ஆகாஷ் பாஸ்கரன்; 2 வாகனங்களில் வந்த 5 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழு சோதனையில் ஈடுபட்டனர்
-
May 16, 2025 08:41 IST
2026யிலும் திமுக தான் - ஸ்டாலின்
2026 மட்டுமல்ல 2031, 36 என எல்லாமே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் உதகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
-
May 16, 2025 08:41 IST
உதகையில் 5 நாள் பயணம் மிக எழுச்சியாக இருந்தது.
திராவிட மாடல் அரசு மீது மக்கள் காட்டும் ஆதரவை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது. நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.
-
May 16, 2025 08:15 IST
இந்தியா கூட்டணி பலவீனமாக உள்ளது
இந்தியா கூட்டணி பலவீனமாக உள்ளது, பலப்படுத்த வேண்டியது அவசியம் என காங். மூத்த தலைவர் ப சிதம்பரம் பேசியுள்ளார்.
-
May 16, 2025 07:27 IST
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கொலை மிரட்டல்
சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் நேற்று இரவு நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இதுவரை மொத்தம் 17 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
May 16, 2025 07:26 IST
பாமக கூட்டத்தில் பங்கேற்காத ராமதாஸ்
தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இக்கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்து கூட்டப்பட்டுள்ளதால் அன்புமணி அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
-
May 16, 2025 07:25 IST
டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் ED சோதனை
சென்னை தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, தி.நகர், சூளைமேடு, மணப்பாக்கம் ஆகிய இடங்களில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை. டாஸ்மாக் மாது விற்பனை விவகாரத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்தததாக எழுந்த புகாரில் நடவடிக்கை மேற்கொண்டனர்.
-
May 16, 2025 07:22 IST
தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் இன்று காலை 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் மதியம் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகிறது.
-
May 16, 2025 07:21 IST
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.