/tamil-ie/media/media_files/uploads/2023/08/fe-coronavirus-4914028_1280.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
May 17, 2025 21:32 IST
ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சை பேச்சு - மன்னிப்பு கோரிய செல்லூர் ராஜூ
ராணுவ வீரர்கள் குறித்து தான் கூறிய கருத்துக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மன்னிப்பு கோரினார். அதன்படி, "ராணுவ வீரர்கள் குறித்த எனது கருத்து திரித்து போடப்பட்டது. எனினும், ராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
May 17, 2025 20:47 IST
கல்விக்கு தடை போட நினைக்கும் பா.ஜ.க; போர் வாள் சுழற்றும் தமிழக அரசு - ஸ்டாலின்
கல்விக்கு தடை போட நினைக்கும் பா.ஜ.க-விற்கு எதிராக தமிழக அரசு போர் வாள் சுழற்றுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இடஒதுக்கீட்டை தேசியக் கல்விக் கொள்கை சிதைத்து விடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
May 17, 2025 20:39 IST
18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் 40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 17, 2025 20:08 IST
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவில்லை என்றால், அது எட்டாக் கனியாக மாறிவிடும் - ஸ்டாலின்
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவில்லை என்றால், அது எட்டாக் கனியாக மாறிவிடும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 'தேசியக் கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை' நூல் வெளியீட்டு விழாவின் போது அவர் இவ்வாறு உரையாற்றியுள்ளார்.
-
May 17, 2025 19:19 IST
2 நாட்களாக தொடரும் இ.டி சோதனை; ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன்? - அ.தி.மு.க கேள்வி
கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அது குறித்து மவுனமாக இருப்பது ஏன் என அ.தி.மு.க கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், "முதல்வராலும், அவரது மகனாலும் 'தம்பி' என்று அன்போடு அழைக்கப்படும் ரத்தீஷின் "Job Description" என்ன?" என்றும் அ.தி.மு.க கேள்வி எழுப்பியுள்ளது.
-
May 17, 2025 18:34 IST
கல்வியை காவிமயமாக்க முயற்சி செய்கின்றனர் - உதயநிதி ஸ்டாலின்
கல்வியை காவிமயமாக்க முயற்சி நடைபெற்று வருகிறது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷின் 'தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை' என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது, "மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருதம் மற்றும் இந்தி திணிப்பை இந்த புத்தகம் அம்பலப்படுத்தி இருக்கிறது" என அவர் கூறினார்.
-
May 17, 2025 17:50 IST
அன்பில் மகேஷ் எழுதிய நூலை வெளியிட்ட ஸ்டாலின்
அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மத யானை நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
May 17, 2025 17:46 IST
கொளத்தூர் மணியின் பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர உத்தரவு!
குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க மறுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தன்னுடைய பாஸ்போர்ட் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் காலாவதியாகிவிட்டது எனவும், அதனை புதுப்பிக்க விண்ணப்பித்தும் அதனை பரிசீலக்கவில்லை எனவும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் உள்ள நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பின்னரே மனுதரார் வெளிநாடுகளுக்கு செல்லவேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
May 17, 2025 17:29 IST
பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது நடவடிக்கை தேவை - ராமதாஸ் வலியுறுத்தல்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்காக பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்வதா? துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் நாளை மறுநாள் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், பல்கலைக்கழகத்தில் தமக்கு பிடிக்காதவர்களையும், கடந்த காலங்களில் தமது தவறுகளை விமர்சித்தவர்களையும் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். துணை வேந்தரின் இந்த பழிவாங்கும் செயலும், அதை திமுக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை.
பெரியார் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் முனைவர் வைத்தியநாதன். பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். பெரியார் பல்கலைக்கழகத்திற்கு புதிய பதிவாளரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானபோது, துணைவேந்தராக இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுக்கும் குறைவான பதவிக்காலமே இருக்கும் போது, புதிய நியமனங்களை மேற்கொள்ளக் கூடாது என்று உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த சுனில் பாலிவால் அனுப்பியிருந்த சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி பதிவாளர் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதம் ஊடகங்களில் வெளியான நிலையில் அதைக் காரணம் காட்டி வைத்தியநாதனை பதிவாளர் மூலம் பணியிடை நீக்கம் செய்து துணைவேந்தர் ஆணையிட்டுள்ளார். இது தவறானது. துணைவேந்தருக்கு எதிரான இரு வழக்குகளின் விசாரணையில் வைத்தியநாதன் முதன்மை சாட்சியாக இருப்பதால் அவரை பழிவாங்கும் நோக்குடனும், மிரட்டும் நோக்குடனும் இந்த நடவடிக்கையை துணைவேந்தர் மேற்கொண்டுள்ளார். இது துணைவேந்தருக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு எதிரானது.
துணைவேந்தர் நாளை மறுநாள் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், இத்தகைய பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை அரசு அனுமதிக்கக்கூடாது; இதை அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கவும் கூடாது. இதற்கெல்லாம் மேலாக, துணைவேந்தர் பொறுப்பிலிருந்து தாம் ஓய்வு பெற்றாலும் பல்கலைக்கழக நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமக்கு ஆதரவாக உள்ள சில பேராசிரியர்களை நிர்வாகக் குழுவில் நியமிக்கவும் துணைவேந்தர் திட்டமிடுவதாக தெரிகிறது.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஊழல் செய்தவர் என்று தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் புதிய சட்டத்தின் மூலம் அரசுக்கு வழங்கப்பட்டிருக்கும் போதிலும் அதைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பது ஐயங்களை ஏற்படுத்துகிறது. இந்த சிக்கலில் தமிழக அரசு இனியும் அமைதியாக இருக்காமல், உதவி பேராசிரியர் வைத்தியநாதனின் பணியிடை நீக்கத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்; அத்துடன் துணைவேந்தர் ஜெகநாதன் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
-
May 17, 2025 17:25 IST
பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரயில்வே அமைச்சகம்
ஆட்டோ அப்கிரடேஷன் முறையில் ரயில் பயணிகளுக்கு கூடுதல் சலுகையை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 2-ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இருக்கை காலியாக இருந்தால் கூடுதல் கட்டணமின்றி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், படுக்கை வசதியில்லாத பகல் நேர உட்கார்ந்து பயணம் செய்யும் முன்பதிவு ரயில்களிலும் ஆட்டோ அப்கிரடேஷன் சலுகை அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
-
May 17, 2025 17:18 IST
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வந்தவாசி, விழுப்புரம், வேலூர், வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
May 17, 2025 16:57 IST
புதுச்சேரியில் இடி மின்னலுடன் கனமழை
புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழை பெய்தது அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து13 நாட்கள் ஆகிறது புதுச்சேரியில் வெயில் தாக்கம் நாளைக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் வெயில் தாக்கம் குறைந்து திடீரென குளிர்ந்த காற்று வீசப்படும் எது இந்த நிலையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்ய துவங்கி உள்ளது. வானிலை ஆய்வு மையம் 14 மாவட்டங்களில் இன்று நாளை மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவு நிலையில் புதுச்சேரியில் இடி மின்னனுடன் கோடை மழை பெய்து வருகிறது ஏதாவது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
இதேபோன்று பண்ருட்டி வட்டம் மேலிருப்பு கிராமம் தெற்கு தெரு செல்லப்பெருமாள் மனைவி கிருஷ்ணவேணி அவர்களின் வீடு நேற்று இரவு ஆறு முப்பது மணி அளவில் இடி விழுந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது முந்திரிக்கொட்டை நெல் மூட்டை சாமான்கள் பணம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பல் ஆனது 5 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் சேதம் ஆகி உள்ளது தீயணை பண்ருட்டி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
-
May 17, 2025 16:43 IST
தமிழில் 93 மதிப்பெண்கள் எடுத்த பீகார் மாணவி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில்
93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா குமாரி சாதனை. 2019ம் ஆண்டு ஜியா குமாரியின் குடும்பம், சென்னை வந்த நிலையில், பல்லாவரத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து மாணவி சாதனை -
May 17, 2025 16:42 IST
ஆட்டோ அப்கிரடேஷன் முறை: ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி
ஆட்டோ அப்கிரடேஷன் முறையில் ரயில் பயணிகளுக்கு கூடுதல் சலுகையை அறிவித்தது ரயில்வே அமைச்சகம். அதன்படி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 2-ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இருக்கை காலியாக இருந்தால் கூடுதல் கட்டணமின்றி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படுக்கை வசதியில்லாத பகல் நேர உட்கார்ந்து பயணம் செய்யும் முன்பதிவு ரயில்களிலும் ஆட்டோ அப்கிரடேஷன் சலுகை அமலுக்கு வருகிறது.
-
May 17, 2025 16:20 IST
ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் அராஜகம் செய்யும் மத்திய ஆட்சியாளர்களை காப்பாற்ற திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசியிருக்கிறார் பழனிசாமி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
-
May 17, 2025 15:55 IST
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை
மின்தடை காரணமாக முழுமையாக நீட் தேர்வை எழுத முடியவில்லை என்று 13 மாணவர்கள் தொடுத்த வழக்கில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம்
நீட் மறுதேர்வு கோரி மனு - மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
-
May 17, 2025 15:45 IST
அமைச்சர் சிவசங்கர் பேட்டி
கடந்த வருடத்தை விட இந்த வருடம் கோடைகால மின் தேவை வெகுவாக குறைந்துள்ளது. சென்னையில் செயல்படும் மின்னகத்தை ஆய்வு செய்தபின் மின்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி
-
May 17, 2025 15:23 IST
ஹோட்டல் அதிபரிடம் அமலாக்கத்துறை விசாரணை
சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் நேற்று நடத்திய சோதனையின் அடிப்படையில் ஹோட்டல் உரிமையாளருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து ஹோட்டல் உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை
-
May 17, 2025 14:35 IST
சென்னையில் மழை
கோயேம்பேடு, அரும்பாக்கம், மதுரவாயல், தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
-
May 17, 2025 14:28 IST
ஸ்டாலின் எப்போது மவுனம் கலைக்கப் போகிறார்? இபிஎஸ் கேள்வி
ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் திரு. சேவூர் S. ராமச்சந்திரன் அவர்களையும், முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. நீதிபதி அவர்களையும் குறிவைத்து ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 17, 2025 -
May 17, 2025 14:24 IST
நடிகர் ஆர்.கே.சுரேஷ் மனு தள்ளுபடி
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு, பொருளாதார குற்றப்பிரிவுக்கு எதிராக நடிகர் ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
May 17, 2025 14:22 IST
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.
-
May 17, 2025 14:01 IST
பிரக்ஞானந்தாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து
"எங்கள் சென்னையின் பெருமைக்குரிய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள், ருமேனியாவில் நடந்த மதிப்புமிக்க சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 ஐ வென்றதற்கு, அவரது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டம். கிளாசிக்கல் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் அவரது திறமை அசாதாரண அமைதி மற்றும் தந்திரோபாய ஆழத்தை வெளிப்படுத்தியது. இந்திய சதுரங்கத்தில் இந்த வரையறுக்கப்பட்ட தருணத்தை தமிழ்நாடு கொண்டாடுகிறது" என்று அவர் கூறியுள்ளார்.
Congratulations to our Chennai pride, Grandmaster @rpraggnachess, on winning the prestigious Superbet Chess Classic 2025 in Romania—his maiden Grand Chess Tour title!
— M.K.Stalin (@mkstalin) May 17, 2025
His brilliance across classical and blitz rounds showcased extraordinary composure and tactical depth. Tamil… https://t.co/wJg02B2j15 -
May 17, 2025 13:44 IST
ரூ.1,000 கோடி மதுபான கொள்கை முறைகேடு - ஆந்திராவில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது!
ஆந்திராவில் ரூ.1,000 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் புதிய மதுபானக் கொள்கை கொண்டுவரப்பட்டது. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் ஒரு பெரிய மதுபான ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசியல் மற்றும் நிதி ஆதாயத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுபான பிராண்டுகளுக்கு சாதகமாக செயல்பட தானியங்கி ஆர்டர் செய்யும் முறையை முடக்கியதாகவும் குற்றச்சாட்டப்பட்டது.
அதன்பின் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி வந்த பிறகு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவானது 3 நாள் நடந்த விசாரணைக்கு பின் 2 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கைது செய்தது. அவர்கள் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் இருந்தபோது அவரது செயலாளராக இருந்தவர் தனுஞ்செய ரெட்டி, மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிருஷ்ண மோகன் ரெட்டி, சிறப்புப் பணி அதிகாரியாக இருந்தவர். ரூ.1,000 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தனுஞ்சய ரெட்டி, கிருஷ்ண மோகன் ரெட்டி ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
May 17, 2025 13:41 IST
சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
சென்னை, பாடியில் இருசக்கர வாகனத்தின் மீது மணல் லாரி மோதிய விபத்தில் தாய், குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவர் படுகாயம் அடைந்தார்.
-
May 17, 2025 13:31 IST
'டாஸ்மாக் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றுக' - அன்புமணி
"டாஸ்மாக் முறைகேடு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
May 17, 2025 13:21 IST
ரூ.1,000 கோடி ஊழல் என கற்பனை செய்தியை இ.டி பரப்புகிறது - அமைச்சர் முத்துசாமி கண்டனம்
உள்நோக்கத்தோடு சோதனை நடத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்களை அமலாக்கத் துறை துன்புறுத்துவதாக அமைச்சர் முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் நிறுவன செயல்பாடுகளில் முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் அமலாக்கத் துறை சோதனை செய்தது. முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் கிடைக்காத நிலையில் ரூ.1000 கோடி ஊழல் நடந்ததாக கற்பனை செய்தியை அமலாக்கத் துறை வெளியிட்டது.
-
May 17, 2025 12:34 IST
பா.ம.க-வில் சலசலப்பு - 'விரைவில் சரியாகும்': ஜி.கே.மணி பேட்டி
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் 2வது நாளாக அன்புமணி புறக்கணித்துள்ளார். தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அணிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதில், பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில மகளிரணி தலைவர் சுஜாதா மற்றும் பாமக மகளிர் சங்க கடலூர் மாவட்ட தலைவர் கௌரி, செயலாளர் வீரா ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். இருந்தபோதும் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த நிலையில் இளைஞரணி கூட்டத்திலும் அன்புமணி பங்கேற்கவில்லை.
-
May 17, 2025 12:19 IST
ஆபரேஷன் சிந்தூர் - மத்திய அரசு 7 குழுக்கள் அமைப்பு
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இந்தியாவின் நடவடிக்கையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க மத்திய அரசு 7 குழுக்கள் அமைத்துள்ளது. கனிமொழி - தி.மு.க, சசி தரூர் - காங்கிரஸ், ரவிசங்கர் பிரசாத் - பா.ஜ.க உள்ளிட்டோர் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தலைமை வகிப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
May 17, 2025 12:01 IST
மாணவர்களின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்த நடவடிக்கை
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன்களை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை. திறன்கள் என்ற திட்டத்தின் கீழ், ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த நடவடிக்கை. மாணவர்களின் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகியவற்றின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
May 17, 2025 11:56 IST
விரைவில் சுமூக முடிவு எட்டப்படும் - ஜி.கே.மணி
"பாமக உட்கட்சி பூசலால் நெருக்கடி நிலை உள்ளது என்பது உண்மை தான்; விரைவில் சுமூக முடிவு எட்டப்படும்" மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்புள்ளது. அதன்பின்னர் சமூக உடன்பாடு எட்டப்படும் என நம்புகிறேன் என்று தைலாபுரத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டியளித்துள்ளார்.
-
May 17, 2025 11:54 IST
மின்சாரம் பாய்ச்சி இரண்டு மான்கள் வேட்டை
கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே விளைநிலத்தில் மின்சாரம் பாய்ச்சி 2 புள்ளி மான்கள் வேட்டை. சூலாமலையில் ராஜா என்பவர் தனது நிலத்தில் மின் வேலி அமைத்து மான்களை வேட்டையாடியதாக புகார்; | மான்களின் இறைச்சியை விற்பனை செய்ய முயன்றபோது ராஜா, முருகேசன் ஆகியோர் கைது
-
May 17, 2025 11:42 IST
தீவிரவாதம் பற்றிய இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்க 7 குழு
தீவிரவாத ஒழிப்பு விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை கொண்ட 7 குழுக்களை அமைத்த மத்திய அரசு. கனிமொழி, சசி தரூர், ரவி சங்கர் பிரசாத், சஞ்சய் குமார் ஷா, சுப்ரியா சுலே உள்ளிட்டோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
-
May 17, 2025 11:37 IST
வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
வைரமுத்துவின் தாயார் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள வைரமுத்துவின் இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் ஆறுதல் கூறினார்
-
May 17, 2025 11:36 IST
ரித்தீஷ் என்பவரின் வீட்டிற்கு அமலாக்கத்துறை சீல்
சென்னை எம்.ஆர்.சி. நகரில் ரித்தீஷ் என்பவரின் வீட்டிற்கு சீல் வைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள். பலமுறை ரித்தீஷ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அமலாக்கத் துறையினர் போனில் தகவல் தெரிவித்தும் யாரும் வரவில்லை என தகவல். வீட்டில் உள்ள ஆவணங்களை பாதுகாக்கும் வகையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டை பூட்டி சீல் வைத்துள்ளனர்
-
May 17, 2025 11:18 IST
சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்த கார்
சென்னை பூந்தமல்லி அருகே சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விரைந்து வந்து தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்துள்ளனர்.
-
May 17, 2025 11:16 IST
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
ஏழுமலையானை தரிசிக்க 16 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள். இதனால் திருப்பதியில் கூட்டம் அலைமோதியுள்ளது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம்
-
May 17, 2025 10:54 IST
17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கோவை, திருப்பூரில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
May 17, 2025 10:51 IST
விசாகனிடம் ED அலுவலகத்தில் 2ஆவது நாளாக விசாரணை
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் 2ஆவது நாளாக விசாரணை. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள வீட்டில் நேற்று முதல் சோதனை நடக்கிறது; நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாகனிடம் 5 மணி நேரம் விசாரணை நடந்தது
-
May 17, 2025 10:44 IST
பெண்களுக்காக பொருளாதார புரட்சி: மா.சு.
பெண்களுக்காக ஒரு பொருளாதார புரட்சியே தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. 700 கோடி பயணங்களை மகளிர் விடியல் பயணம் நெருங்குகிறது; மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1.15 கோடி பேர் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
-
May 17, 2025 10:13 IST
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 1.8 லட்சத்தை தாண்டியது
"தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1.8 லட்சத்தை தாண்டியது நடப்பாண்டில் 3 லட்சம் மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க இலக்கு” என்று பள்ளிக்கல்வித் துறை பள்ளி திறக்க 16 நாட்கள் உள்ளதால் சேர்க்கையை தீவிரப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
-
May 17, 2025 10:11 IST
4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது; நிதி ஒதுக்குவதற்கான 4 சட்ட திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்
-
May 17, 2025 09:49 IST
நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18-வது டைமண்ட் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, 90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனையைப் படைத்தார். பிரதமர் மோடி எக்ஸ்தள பதிவில் கூறியதாவது: ஈட்டி எறிதலில் அற்புதமான சாதனை. இந்தியா பெருமை கொள்கிறது நீரஜ் சோப்ரா. தோஹா டயமண்ட் லீக் 2025 தொடரில் நீரஜ் சோப்ரா 90 மீ. தூரம் ஈட்டி எறிந்தற்கு வாழ்த்துகள். நீரஜ் சோப்ராவின் அயராத அர்ப்பணிப்பு, ஆர்வத்தின் வெளிப்பாடு இது என பதிவிட்டுள்ளார்.
-
May 17, 2025 09:25 IST
நடிகர் சூரிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு
மண்சோறு சாப்பிட்ட ரசிகர்களை கடுமையாக சாடிய சூரிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'திரைக்கலைஞர் தம்பி சூரியைப் பாராட்டுகிறேன். தனது திரைப்பட வெற்றிக்காக மண்சோறு தின்ற ரசிகர்களைப் பகிரங்கமாகச் சாடியிருக்கிறார். மண்ணிலிருந்து தானியம் வரும்; தானியம் சோறாகும். ஆனால், மண்ணே சோறாக முடியாது. இந்த அடிப்படைப் பகுத்தறிவு இல்லாதவர்கள் தன் ரசிகர்களாக இருக்கமுடியாது என்று சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும். கதாநாயகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ரசிகர் கூட்டத்தை இப்படி நெறிப்படுத்தி வைத்திருந்தால் கலையும் கலாசாரமும் மேலும் மேலும் மேம்பட்டிருக்கும். மண்சோறு தின்றால் ஓடாது மக்களுக்குப் பிடித்தால் மாமன் ஓடும். பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை 'பலே பாண்டியா' என்று பாராட்டுகிறேன்' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
-
May 17, 2025 09:18 IST
தயாரிப்பாளர் ஆகாஷ் வீட்டில் தொடரும் ரெய்டு
சென்னை தேனாம்பேட்டையில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. இட்லி கடை, பராசக்தி உள்பட ஒரே நேரத்தில் 3 ஸ்டார்களின் படங்களை தயாரித்து வரும் நிலையில், திடீர் சோதனை நடக்கிறது.
-
May 17, 2025 09:13 IST
நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் மூலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. ராக்கெட்டுக்கு தேவையான திட மற்றும் திரவ எரிபொருள் நிரப்பப்பட்டு உள்ளது. ராக்கெட்டுக்கான இறுதி கட்டப் பணியான 22 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 7.59 மணிக்கு தொடங்கியது
-
May 17, 2025 08:57 IST
முதல் முறையாக 90 மீ. தூரம் ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா
தோஹா டயமண்ட் லீக் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையுடன், 90 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்த மூன்றாவது ஆசிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஜூலியன் வெபர் முதலிடத்தைப் பிடித்தாலும், நீரஜின் சாதனை இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.
-
May 17, 2025 08:49 IST
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வான சேவூர் எஸ். ராமச்சந்திரன் வீட்டில் சுமார் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். அவரது மகன்களான விஜய்குமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சேவூர் ராமச்சந்திரன், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
May 17, 2025 08:14 IST
இன்றும் நாளையும் கடற்கரை-வேளச்சேரி, ஆவடி ரயில்கள் ரத்து
சென்னை கடற்கரை - வேளச்சேரி, ஆவடி இடையே இயங்கும் 24 புறநகா் மின்சார ரயில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) ரத்து செய்யப்படவுள்ளன. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் மே 17-ம் தேதி இரவு 10 மணி முதல், மே 18-ம் தேதி காலை 8 மணி வரை நடைபெறவுள்ளன. இதனால், பணிகள் நடைபெறும் நேரங்களில் கடற்கரை - வேளச்சேரி, ஆவடி, திருவள்ளூா் இடையே இயங்கும் 24 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
-
May 17, 2025 08:13 IST
சுற்றுலா வேன் மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி
கரூர் அருகே டிராக்டர் மீது தனியார் சொகுசு பேருந்து மோதிவிட்டு எதிரே வந்த சுற்றுலா வேன் மீதும் மோதியதில் பெண் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்த கரூர் நகர காவல் நிலையம் மற்றும் வெங்கமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்குச் சென்று இடுபாடுகளுக்குள் சிக்கிய தனியார் பேருந்து மற்றும் வேன்களையும் அகற்றி வேனுக்குள் சிக்கி இருந்த நபர்களை மீட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.