/indian-express-tamil/media/media_files/2025/05/29/UlSHPtcTXQWWyN4TUzo9.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொச்சி கப்பல் விபத்து - பேரிடராக அறிவிப்பு: கேரளாவில் கொச்சி அருகே சரக்கு கப்பல் ஒன்று சில நாட்களுக்கு முன்பு, மூழ்கி விபத்தில் சிக்கியிருந்தது. இந்நிலையில், கப்பலில் இருந்த கண்டெய்னரில் இருந்து, ரசாயன பொருட்கள் கடலில் கலக்க தொடங்கியுள்ளன. இதனால், கேரள அரசு இதனை பேரிடராக அறிவித்துள்ளது.
-
May 29, 2025 21:28 IST
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உடன் தைலாபுரம் தோட்டத்தில் ஜி.கே.மணி சந்திப்பு
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உடன் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி சந்தித்தார்.
-
May 29, 2025 21:23 IST
கொச்சி அருகே கப்பல் விபத்து: மாநில பேரிடராக கேரள அரசு அறிவிப்பு
கேரளா மாநிலம், கொச்சி அருகே MSC ELSA 3 கப்பல் கவிழ்ந்த சம்பவத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில பேரிடராக கேரள மாநில அரசு அறிவித்தது.
-
May 29, 2025 20:06 IST
மே 31, ஜூன் 2-ல் கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 17 புறநகர் ரயில்களின் சேவை ரத்து
கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் மே 31, ஜூன் 2ல் 17 புறநகர் ரயில்களின் சேவைக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி யார்ட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2 நாட்களும் ரத்து செய்யப்படும் புறநகர் ரயில்களுக்கு பதிலாக கூடுதல் சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 29, 2025 19:45 IST
வைகோவின் சகோதரி மரணம்
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் இரண்டாவது சகோதரி சரோஜா, அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவரது உடலுக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
-
May 29, 2025 19:03 IST
கமல்ஹாசன் கருத்து சரியானது -சபாநாயகர் அப்பாவு
கமல்ஹாசன் கருத்து சரியானது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, திராவிட குடும்பத்தின் முதல் மொழி தமிழ் எனவும், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் தமிழில் இருந்துதான் பிறந்துள்ளதாகவும் ராபர்ட் கால்டுவெல் ஆய்வு செய்து கூறியுள்ளார். கமல்ஹாசன் கருத்துக்கு ஆதாரங்கள் உள்ளன.அவரின் கருத்து சரியானது. என தெரிவித்தார்.
-
May 29, 2025 18:50 IST
சென்னையில் வாஷிங் மெஷின் வெடித்து தீ விபத்து
சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சிவன் கோவில் பகுதியில் சேர்ந்தவர் கண்ணன். இவர் துணிகளை துவைப்பதற்காக வீட்டில் உள்ள வாஷிங் மெஷினில் அதிகளவிலான துணிகளை போட்டு ஆன் செய்துள்ளார். இதனால் வாஷிங் மெஷினில் இருந்து புகை வந்தது. இதனையடுத்து வாஷிங் மெஷின் உடனடியாக வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தீயானது மலமலவென பரவத்தொடங்கியது. இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
-
May 29, 2025 18:22 IST
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலும் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
May 29, 2025 18:20 IST
7வது மாநில நிதி ஆணையம் அமைத்தது தமிழக அரசு
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 7வது மாநில நிதி ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன் தலைமையில் 6 பேர் கொண்ட மாநில நிதி ஆணையம் அமைத்து ஆணை பிறப்பித்துள்ளது. பல்வேறு நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை குறித்து ஆணையம் ஆய்வு செய்யும். மாநில அரசு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வு குறித்து உரிய பரிந்துரைகளை ஆணையம் வழங்கும்.
-
May 29, 2025 18:19 IST
உச்சநீதிமன்றத்தில் 3 புதிய நீதிபதிகள் நியமனம்
காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியத்தின் பரிந்துரையின்படி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளான என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய் மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதி அதுல் எஸ்.சந்துா்கா் ஆகியோரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். இதனையடுத்து, முழு அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் எண்ணிக்கையுடன் நீதிமன்றம் செயல்படும்.
-
May 29, 2025 17:55 IST
துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்கணும்: நயினார்
சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு பயம் ஏற்படும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது துருப்பிடித்துப் போன இரும்புக் கரத்தைப் பழுது பார்க்க வேண்டிய நேரமிது என்றும் நயினார் கூறி உள்ளர்.
-
May 29, 2025 17:51 IST
16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல், நாமக்கல், சேலம், திருச்சி, விருதுநகர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 29, 2025 17:45 IST
சரக்கு கப்பல் மூழ்கி விபத்து-பேரிடராக அறிவித்தது கேரள அரசு
கொச்சி துறைமுகம் அருகே சரக்கு கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதை பேரிடராக கேரள அரசு அறிவித்தது. சரக்குக் கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் கவிழ்ந்து அதில் இருந்த ரசாயனங்கள் கடலில் படர்ந்துள்ளன. கண்டெய்னர்களில் இருந்த ரசாயனங்கள் கடலில் படர்ந்துள்ளதால் பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது
-
May 29, 2025 17:44 IST
25 மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்ய ராமதாஸ் முடிவு?
25 மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பட்டியலையும் தயாரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோருடன் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
-
May 29, 2025 17:41 IST
கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு ஸ்டாலின் அடிக்கல்
சென்னை தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 29) அடிக்கல் நாட்டினார்.
-
May 29, 2025 17:38 IST
பராமரிப்பு பணி: கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்
பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மே 31, ஜூன் 2 தேதிகளில் 19 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. காலை 11.15 மணி முதல் மாலை 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இடையே ரயில் சேவை மாற்றப்பட உள்ளது. பயணிகள் வசதிக்காக மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர் இடையே 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
May 29, 2025 17:32 IST
அன்புமணி தலைமையில் நாளை பாமக நிர்வாகிகள் கூட்டம்?
ராமதாஸைத் தொடர்ந்து பா.ம.க. நிர்வாகிகளுடன் நாளை அன்புமணி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சோழிங்கநல்லூரில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அன்புமணி சந்திக்க இருப்பதாகவும், அன்புமணி மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை ராமதாஸ் வீசிய நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
-
May 29, 2025 17:27 IST
கர்நாடகாவில் `தக் லைஃப்' வெளியாகாது
கமல்ஹாசன் நாளைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் `தக் லைஃப்' வெளியாகாது. தமிழை, கன்னட மொழியின் தாய் என கூறுவதை ஏற்க முடியாது.
கமல் என்ன விளக்கம் கூறினாலும் ஏற்க மாட்டோம், கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு அறிவிப்பு
-
May 29, 2025 17:10 IST
தகுதிகாண் பருவகாலத்தின் போது எடுக்கும் மகப்பேறு விடுப்புக் காலம்
திருமணமான அரசு பெண் பணியாளர்கள் தகுதிகாண் பருவகாலத்தின் போது எடுக்கும் மகப்பேறு விடுப்புக் காலம் அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ள அனுமதியளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டம் 2016-ல் உரிய திருத்தங்கள் செய்து பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 29, 2025 16:33 IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான 971 கிராம் உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி செல்லப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்தின் பெயரில் பயணி ஒருவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் சூட்கேசில் மறைத்து வைத்திருந்த 2 பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டது. அதில் ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவர் வைத்திருந்த கஞ்சா போடலங்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
May 29, 2025 15:53 IST
நாளை கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார் அன்புமணி
ராமதாஸின் சரமாரி குற்றச்சாட்டுக்கு மத்தியில், சென்னை சோழிங்கநல்லூரில் நாளை கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ். நாளை முதல் 3 நாட்களுக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
-
May 29, 2025 15:26 IST
பா.ம.க நிர்வாகிகளை அன்புமணி சந்திக்க இருப்பதாக தகவல்
பா.ம.க-வின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை நாளை (மே 30) பனையூர் அலுவலகத்தில் அன்புமணி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அன்புமணி குறித்து கடுமையான விமர்சனங்களை ராமதாஸ் கூறிய நிலையில், இத்தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
-
May 29, 2025 14:55 IST
கரையைக் கடந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
மேற்கு வங்கம் - வங்கதேச கடலோர பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை சாகர் தீவு - கேபுபாராவிற்கு இடையே கரையைக் கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
-
May 29, 2025 14:32 IST
வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காண்பிக்கும் த.வெ.க
2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணிகளை தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, வேட்பாளர்களை நியமிக்கும் வகையில் கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
-
May 29, 2025 13:39 IST
மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு ஸ்டாலின், உதயநிதி நேரில் அஞ்சலி
மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ. வேலு ஆகியோர் உடனிருந்தனர்.
-
May 29, 2025 12:58 IST
பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் ராஜினாமா
திண்டிவனம்: பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ராஜினாமா கடிதத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு முகுந்தன் அனுப்பி வைத்தார். சொந்தக் காரணங்களுக்காக பாமக இளைஞர் சங்க பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக முகுந்தன் அறிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ்தான் தங்களின் எதிர்காலம் என்ற உணர்வுடன் கட்சிப் பணியாற்றுவேன் என உறுதி அளித்துள்ளார்
-
May 29, 2025 12:29 IST
சென்னையில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்கியது!
சென்னையில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்கியது. அமைச்சர் சிவசங்கர் தலைமையில் குரோம்பேட்டை அரசு ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தொமுச, அண்ணா தொழிற்சங்கம், சிஐடியுசி உள்ளிட்ட 85 தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
-
May 29, 2025 12:24 IST
அன்றே நான் செத்துவிட்டேன்... - ராமதாஸ்
"மாவட்ட செயலாளர்களுக்கு அன்புமணியே ஃபோன் செய்து, ‘கூட்டத்துக்கு சென்றால், உங்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கிவிடுவார் ஐயா' என சொல்லியிருக்கிறார் அதனால் 108 பேரில், 8 பேர்தான் கூட்டத்துக்கு வந்தார்கள்; அன்றே நான் செத்துவிட்டேன்; கற்பனை கூட செய்ய முடியாத இப்படியான பொய்களை, கூசாமல் சொல்வார் அன்புமணி” என்று நா தழுதழுக்க பேசிய ராமதாஸ்
-
May 29, 2025 12:14 IST
மாநிலங்களவை சீட் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியால் தன்னிச்சையாக செயல்பட முடியாது: மாணிக்கம் தாகூர்!
மாநிலங்களவை சீட் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியால் தன்னிச்சையாக செயல்பட முடியாது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவது பற்றி அமித்ஷாவை ஆலோசிக்காமல் இபிஎஸ் முடிவெடுக்க முடியாது. நகைக்கடன் புதிய நிபந்தனை விவகாரத்தில் நிர்மலா சீதாராமனை இபிஎஸ் ஏன் கண்டிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
May 29, 2025 12:13 IST
தமிழ் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
கலைஞர் மீது அளவற்ற மரியாதையும் அன்பும் கொண்டு விளங்கினார் ராஜேஷ். 2022ல் அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன தலைவராக ராஜேஷை நியமித்தோம். 40 ஆண்டுக்கு மேல் 150 படங்கள், டிவி தொடர்களில் நடித்த ராஜேஷ் பின்னணி குரல் கலைஞராகவும் முத்திரை பதித்தவர். நடிகர் ராஜேஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துகொள்கிறேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.
-
May 29, 2025 12:12 IST
ஆட்சி அதிகாரத்தில் பங்கு-பிரேமலதா வரவேற்பு
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான்; வரும் காலங்களில் நிச்சயம் ஆட்சியில் பங்கு என்ற நிலை உருவாகும். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தவெக விஜய் ஏற்கெனவே கூறிய நிலையில் பிரேமலதா வரவேற்பு
-
May 29, 2025 12:05 IST
நடிகர் ராஜேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த இரங்கல்
நடிகர் ராஜேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த இரங்கல் தெரிவித்துள்ளார். என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது.அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
-
May 29, 2025 12:05 IST
பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் ”உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரம், மாணிக்கமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்தார்
-
May 29, 2025 11:50 IST
சீட் தருவது அதிமுகவின் கடமை - பிரேமலதா
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவது அதிமுவின் கடமை. மாநிலங்களவை சீட் கொடுக்கவில்லையென்றால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்; பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள், நாங்கள் பதற்றமின்றி தெளிவாக உள்ளோம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
May 29, 2025 11:41 IST
"பாஜக-தான் வேண்டுமென அழுதார்கள்" - ராமதாஸ்
அதிமுக-வோடு கூட்டணிக்கு போங்கள் என சொன்னேன்; ஆனால் அன்புமணியும் சௌமியாவும் என் கால்களை பிடித்துக் கொண்டு பாஜக-வோடு கூட்டணி வைக்க வேண்டும் என அழுதார்கள்; வேறு வழியின்றி சம்மதித்தேன். அதிமுக-வோடு சேர்ந்திருந்தால் குறைந்தது மூன்று இடமாவது கிடைத்திருக்கும்; அவர்களும் 6-7 இடங்களுக்கு மேலேவே ஜெயித்திருப்பார்கள் என்று ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
-
May 29, 2025 11:03 IST
மேடை நாகரீகம் தெரியாத அன்புமணி - ராமதாஸ் ஆவேசம்
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எங்கள் கட்சியை பற்றிய செய்திகளை பலமுறை கேள்வி கேட்டுள்ளீர்கள் நானும் பதில் அளித்திள்ளேன். தர்மபுரியில் ஒரு கூடத்தில் அன்புமணி பேசியதை நீங்க பார்த்திருப்பீர்கள். நானும் பார்த்தேன். நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் பதவி நீக்கம்? என்றும் அன்புமணி பேசினார். இது முழுக்க முழுக்க மக்களையும், கட்சிக்காரர்களையும் திசை திருப்பும் முயற்சியாகும்.
தான் செய்த தவறுகளை மறைத்து மகளிடமும், கட்சிக்காரர்களிடம் அனுதாபம் பெற முயற்சி செய்துள்ளார். அதற்குண்டான விளக்கம் அளிப்பது என் கடமையாகும். இனிப்பை தவிர்த்து கசப்பான மாத்திரைகளை கொண்ட மருந்தாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தவறு செய்தது அன்புமணி அல்ல. நான் தான். அன்புமணியை 35 வயதில் என் சத்தியத்தியத்தையும் மீறி மத்திய அமைச்சராக நான் தான் தவறு செய்துவிட்டேன். என்னை குற்றவாளியாக மக்களிடம்மும், கட்சிக்காரர்களிடம் அனுதாபம் தேடி முயற்சி செய்துள்ளார். வளர்த்த கிடா நெஞ்சில் பாய்ந்துவிட்டது" என்று அவர் கூறியுள்ளார்.
-
May 29, 2025 10:40 IST
சவரனுக்கு ரூ.320 குறைந்த தங்கம் விலை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.71,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.8,895-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
May 29, 2025 10:23 IST
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது - இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.மேற்கு வங்கம்-வங்கதேசம் இடையே இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாகர் தீவுகள்-கேப்புபுராவிற்கு இடையே இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என தெரியவந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
May 29, 2025 09:54 IST
‘‘தீ விபத்து-துரித நடவடிக்கை எடுத்துள்ளோம்’’ - அமைச்சர் சேகர்பாபு
சென்னை வியாசர்பாடி தீ விபத்து தொடர்பாக துரித நடவடிக்கை எடுத்துள்ளோம். 24 குடும்பங்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளோம். தீ விபத்தில் சிறுகாயம் அடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
-
May 29, 2025 09:11 IST
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையக் கூடும்.
-
May 29, 2025 08:38 IST
குற்றால அருவியில் குளிக்க 5வது நாளாக தடை
தென்காசியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குற்றால அருவியில் குளிக்க 5வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
May 29, 2025 08:18 IST
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இன்றும் நாளையும் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை, மாலை என நடைபெறும் கூட்டத்தில் 42 மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.
-
May 29, 2025 08:01 IST
பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்
தென்கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கங்களை தமிழக வீரர்கள் குவித்து வருகின்றனர். கலப்பு பிரிவு 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் சந்தோஷ்குமார் தமிழரசன், விஷால் தென்னரசு, சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்று அபாரம்.
-
May 29, 2025 07:59 IST
தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு முயற்சி
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவங்களை கட்டுப்படுத்த, தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள 200 கருத்தடை மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கால்நடை மருத்துவமனைகளில் நாய்களுக்கு கறுத்தடை அறுவை சிகிச்சை செய்வதுடன், வெறிநோய்டுப்பூசியும் செலுத்த கால்நடைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த பணிகளை வரும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
May 29, 2025 07:52 IST
18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் காலை 10 மணி வரை 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
May 29, 2025 07:51 IST
11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தியது தமிழக அரசு
பழனி, குன்றத்தூர் உள்பட 11 நகராட்சிகளை சிறப்புநிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம், அம்பை, மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோவில், அரியலூர் ஆகிய நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
-
May 29, 2025 07:30 IST
ஹமாஸ் புதிய தலைவர் கொல்லப்பட்டார் - இஸ்ரேல் அறிவிப்பு
ஹமாஸ் புதிய தலைவர் முகமது சின்வாரை கொன்று விட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டார். அவரது சகோதரர் யாஹ்யா சின்வார் கடந்த அக்டோபரில் கொல்லப்பட்ட நிலையில், தலைவராக செயல்பட்டு வந்தார்.
-
May 29, 2025 07:29 IST
பழனி, திருச்செங்கோடு உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தியது தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் 11 நகராட்சிகளின் தரத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியது. திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி சிறப்புநிலை நகராட்சிகளாகவும், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, ராமேஸ்வரம் பல்லடம் தேர்வுநிலை நகராட்சிகளாகவும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோயில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகியவை முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
-
May 29, 2025 07:26 IST
காணொளி காட்சி வாயிலாக கலைஞர் பன்னாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர்
முட்டுக்காட்டில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள கலைஞர் பன்னாட்டு மையத்திற்கு இன்று ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். 5000 இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், கண்காட்சி அரங்கம், கூட்ட அரங்குகளுக்கான அரங்கம் ஆகியவை இங்கு அமைய உள்ளன.
-
May 29, 2025 07:24 IST
‘எளிமை ஆளுமை’ திட்டம் இன்று தொடங்கிவைப்பு
அரசு சேவைகளை எளிதாக்கும் எளிமை ஆளுமை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சுகாதாரச் சான்று, பொதுக் கட்டட உரிமம், சொத்து மதிப்பு சான்றிதழ், மகளிர் தங்கும் விடுதி, நன்னடத்தை சான்றிதழ் உள்ளிட்டவற்றையும் பெற முடியும். மக்கள் தொழில் நிறுவனங்களை மையப்படுத்தி சேவைகளை துரிதப்படுத்த ஏதுவாக திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.