Chennai News Highlights: பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் உயிரிழப்பு; ராகுல் காந்தி இரங்கல்

இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
RL condolences

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Jun 04, 2025 21:31 IST

    பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் உயிரிழப்பு; ராகுல் காந்தி இரங்கல்

    பெங்களூருவில் ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இனி வரும் நாட்களில் இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.



  • Jun 04, 2025 20:50 IST

    தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே எச்சரித்திருந்தேன் - ஸ்டாலின்

    தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே எச்சரித்திருந்தேன் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது.

    தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்த துரோகத்துக்கு துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

    நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



  • Advertisment
  • Jun 04, 2025 20:42 IST

    ஆர்.சி.பி விழாவில் கடும் கூட்ட நெரிசல்; உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்த சித்தராமையா

    ஆர்.சி.பி வெற்றி விழாவில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 04, 2025 20:21 IST

    கர்நாடக அரசும், ஆர்.சி.பி அணி நிர்வாகமும் தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க  வேண்டும் - அன்புமணி

    பெங்களூருவில் ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 10 பேர் உயிரிழந்த நிலையில், இச்சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடக அரசும், ஆர்.சி.பி அணி நிர்வாகமும் தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க  வேண்டும் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Jun 04, 2025 20:14 IST

    பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் உயிரிழப்பு; மோடி இரங்கல்

    பெங்களூருவில் ஆர்.சி.பி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சுமார் 10 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.



  • Jun 04, 2025 19:46 IST

    ரசிகர்களை நாங்கள் தடுக்க முடியுமா? டி.கே. சிவக்குமார் கேள்வி

    எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் வந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை, ஆர்வமிகுதியில் வரும் ரசிகர்களை நாங்கள் தடுக்க முடியுமா? கல நிலவரம் குறித்து பெங்களூரு கமிஷ்னரிடம் கேட்டறிந்துள்ளேன், மருத்துவமனைக்கு செல்ல உள்ளேன். உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.



  • Jun 04, 2025 19:45 IST

    கர்நாடக முதல்வர் முழு பொறுப்பேற்க வேண்டும்: கர்நாடக பா.ஜ.க தலைவர்

    பெங்களூரு துயர சம்பவத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா முழு பொறுப்பேற்க வேண்டும். அவசர அவசரமாக வெற்றிப் பேரணியை
    ஏற்பாடு செய்துள்ளனர், கர்நாடக அரசு முன்னேற்பாடுகள் செய்யவில்லை என கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கூறியுள்ளார்.



  • Jun 04, 2025 19:44 IST

    பெங்களூரு கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக முதல்வர் ஆறுதல்

    பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்,  மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களை  கர்நாடக முதல்வர் சித்தராமையா  நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்



  • Jun 04, 2025 19:24 IST

    பெருமை இருக்கட்டும், ஆனால் உயிரை விட பெரியது அல்ல: கர்நாடக துணை முதல்வர் கருத்து

    ரசிகர்கள் கொண்டாட்டத்தை விட பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், “ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டங்களைக் காணவிருந்த மக்கள், சோகம் மற்றும் மரணம் ஆழ்ந்த வலியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களுக்கு எனது இரங்கல். அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கல். பெருமை இருக்கட்டும், ஆனால் உயிரை விட பெரியது அல்ல. அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”



  • Jun 04, 2025 19:23 IST

    வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்: முன்னாள் முதல்வர் கடும் குமாரசாமி வலியுறுத்தல்

    ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட துயர கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழப்பு ஏற்பட்டதற்கு கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி கண்டனம் தெரிவித்தார். திட்டமிடல் இல்லாதது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தத் தவறியது ஆகியவற்றைக் காரணம் காட்டி, காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசை  குற்றம் சாட்டி குமாரசாமி, காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவியையும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடி ஆதரவையும் உறுதி செய்யுமாறு நிர்வாகத்தை அவர் வலியுறுத்தினார்.

    "கொண்டாட்டங்களைக் காண மைதானம் மற்றும் விதான சவுதா அருகே கூடியிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் பீதியோ அல்லது துயரமோ இல்லாமல் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்பது எனது மனமார்ந்த கவலை. இது தொடர்பாக காவல்துறை அவசர நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும்," என்று கூறியுள்ளார்.



  • Jun 04, 2025 19:21 IST

    ஊடகங்களை சந்திக்கும் கர்நாடக முதல்வர்

    பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஆர்சிபி வெற்றி அணிவகுப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் போன்ற துயர சம்பவத்தைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளார். மாலையில் நடந்த இந்த சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் அஞ்சப்படுகிறது.



  • Jun 04, 2025 19:19 IST

    பெங்களூர் மெட்ரோவில் கூட்ட நெரிசல் : அலைமோதும் ரசிகர்கள் கூட்டம்

    ஆர்.சி.பி அணி ஐபிஎல் கோப்பை வென்றதை கொண்டாடும் வகையில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விழாவுக்கு ரசிகர்கள் குவிந்தததால், பெங்களூர் மெட்ரோவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது, இதனால் சின்னசாமி மைதானத்திற்கு அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் பெங்களூர் மாநகரம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.



  • Jun 04, 2025 18:08 IST

    பெங்களூரு மெட்ரோ நிலையங்களில் கூட்ட நெரிசலைத் தடுக்க இந்த நடவடிக்கை

    ஆர்.சி.பி வெற்றி கொண்டாட்டத்திற்காக ரசிகர்கள் பலரும், சின்னசாமி மைதானம் நோக்கி செல்வதால், பெங்களூரு மெட்ரோ சேவைகள் கப்பன் பூங்கா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மெட்ரோ நிலையம், விதான சவுதா ஆகிய இடங்களில் நிற்காது. மெட்ரோ நிலையங்களில் கூட்ட நெரிசலைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.



  • Jun 04, 2025 18:04 IST

    ஆர்.சி.பி வெற்றி கொண்டாட்டம்: கூட்ட நெரிசலுக்காக மன்னிப்பு கேட்க கர்நாடக துணை முதல்வர்

    கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் "கர்நாடகா மற்றும் பெங்களூரு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்ள விரும்பினோம், ஆனால் கூட்டம் மிகவும் கட்டுப்படுத்த முடியாததால் அந்த ஊர்வலத்தை கைவிட்டோம் என்று கூறியுள்ளார். 



  • Jun 04, 2025 18:03 IST

    சின்னசாமி ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசல்: உயிர் பலி அதிகரிக்க வாய்ப்பு

    சின்னசாமி ஸ்டேடியம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது இரண்டு பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது, மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் பவுரிங் மருத்துவமனை மற்றும் வைதேஹி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.



  • Jun 04, 2025 17:57 IST

    RCB பேரணி - கூட்ட நெரிசலில் 6 பேர் பலி

    ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்.சி.பி. அணி பெங்களூருவில் வெற்றிப்பேரணியில் ஈடுபடும் நிலையில் ரசிகர்கள் குவிந்துள்ளதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலி, 14 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



  • Jun 04, 2025 17:55 IST

    2027ம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய அரசு திட்டம்

    நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027 ம் ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Jun 04, 2025 17:20 IST

    சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jun 04, 2025 16:52 IST

    ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை உயர்வு -அரசாணை வெளியீடு.

    ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.500 இருந்து ரூ. 1000 ஆக உயர்ந்துள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4000ல் இருந்து ரூ.6000 ஆக உயர்ந்துள்ளது.



  • Jun 04, 2025 16:49 IST

    நடிகர் சங்க வழக்கில் விஷால் பதில் மனு

    நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றால் சங்க கட்டட கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும். கட்டடப் பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகளின் பதவிக்கால நீட்டிப்பில எந்தவித விதிமீறலும் இல்லை. நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக் காலம் நீட்டிப்பை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.ஐ.ஏ.ஏ பொதுச்செயலாளர் விஷால் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.



  • Jun 04, 2025 16:13 IST

    உலகின் மிக உயரமான ரயில் பாலம்

    உலகின் மிக உயரமான ரயில் பாலமாக ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள செனாப் பாலத்தை வரும் 6ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி கத்ரா - ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கவுள்ளார். 



  • Jun 04, 2025 16:08 IST

    ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி

    மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்த நிபந்தனையுடன்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகலின் செயலாளர்களிடம் ரூ. 25 ஆயிரத்தை மனுதாரர்கள் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 



  • Jun 04, 2025 15:12 IST

    சென்னையில் நாளை 102 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

    சென்னையில் நாளை 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும்.



  • Jun 04, 2025 15:12 IST

    காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல தாதா ஸ்ரீதரின் கூட்டாளி கைது

    காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல தாதா ஸ்ரீதரின் கூட்டாளி பொய்யாகுளம் தியாகுவை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல தாதா ஸ்ரீதர் கம்போடியாவில் ஏற்கனவே தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்த நிலையில் ரவுடி தியாகுவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள தியாகு 80 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.



  • Jun 04, 2025 15:11 IST

    மாம்பழம் விலை வீழ்ச்சி, உழவர்கள் நலனைக் காக்க அரசே விலை நிர்ணயிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

    “தமிழ்நாட்டில் மாம்பழ விளைச்சல் அதிகரிப்பால் அதன் விலை கடும் வீழ்ச்சி. உழவர்கள் மட்டுமின்றி, மாமரங்களை குத்தகைக்கு எடுத்து மாம்பழங்களை அறுவடை செய்து சந்தையில் விற்பனை செய்யும் குத்தகைதாரர்களும், சிறு வணிகர்களும் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுபடியாகும் விலையை நிர்ணயம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.



  • Jun 04, 2025 14:43 IST

    பகுஜன் சமாஜ் கட்சி மனுவை தள்ளுபடி செய்க: த.வெ.க.

    தங்கள் கட்சிக் கொடிக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. த.வெ.க. கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடரப்படத்து. பல தகவல்களை மறைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது. தனித்துவத்துடன் தவெக கொடி உருவாக்கம், வாக்காளர்களை குழப்பும் வகையில் உருவாக்கப்படவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் மனுவை உச்சபட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.



  • Jun 04, 2025 14:15 IST

    உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கே நன்றி: கமல்

    “எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கே நன்றி சொல்ல வேண்டும் உயிரே உறவே தமிழே என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.  



  • Jun 04, 2025 14:04 IST

    விமான நிலைய ஓடுபாதைகளில் பறவைகளை விரட்ட புதிய கருவி!

    சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக பறக்கும் பறவைகளை விரட்ட ‘தண்டர் பூம்ஸ்’ என்ற இடி ஓசை எழுப்பக்கூடிய, புதிய கருவிகள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை பட்டாசுகள் வெடித்து ஒலி எழுப்பி, பறவைகள் விரட்டப்பட்டு வந்தன. அதில் 100% பலன் எட்டாததால் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



  • Jun 04, 2025 14:02 IST

    ஜூலை 21 முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்

    "நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறும்” என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல்முறையாக கூட்டத் தொடர் நடைபெறுகிறது



  • Jun 04, 2025 13:53 IST

    அ.தி.மு.க இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புகழேந்தி ஐகோர்ட்டில் கோர்ட்டில் மனு

    மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக புகழேந்தி மனு தாக்கல் செய்துள்ளார். இ.பி.எஸ் அறிவித்த வேட்பாளர்களை அ.தி.மு.க வேட்பாளர்களாக அறிவிக்கக் கூடாது என  கோரிக்கை மனு அளித்திருந்த புகழேந்தி, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி சார்பில் தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.



  • Jun 04, 2025 13:07 IST

    செய்தித்தாளில் பஜ்ஜி தரக் கூடாது - உணவு பாதுகாப்புத் துறை அறிவிப்பு

    செய்தித்தாள் போன்ற அச்சிட்ட காகிதத்தில் உணவுப் பொருட்கள் விற்கக் கூடாது. விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்த வேண்டும். உணவு நிறுவன ஊழியர்கள் டைபாய்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.



  • Jun 04, 2025 12:48 IST

    கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன் - ஸ்டாலின் வாழ்த்து

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: “இந்தியாவுக்கான குரலாக ஒற்றுமை மொழியை ஸ்பெயின் மண்ணில் பேசிய கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன். கனிமொழி தமிழ்நாட்டின் அன்புமொழியை, ஒற்றுமை மொழியைப் பேசியுள்ளார். இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை என உரக்கச்சொல்லிய கனிமொழிக்கு வாழ்த்து” என்று கூறினார்.



  • Jun 04, 2025 12:44 IST

    தமிழை அடுத்த மொழியோடு தொடர்புபடுத்தி பேசுவது சரியாக இருக்காது - நயினார் நாகேந்திரன்

    தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன்: “தமிழை உயர்த்தி பேசினால் அனைத்து கட்சிகளும் கமலுக்கு ஆதரவு கொடுக்கும். ஆனால், அடுத்த மொழியோடு சம்பந்தப்படுத்தி பேசுவது சரியாக இருக்காது. தமிழை உயர்த்திப் பேசினால் கமலுக்கு மட்டுமல்ல முதல்வருக்கும் நான் ஆதரவு தருகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். 



  • Jun 04, 2025 12:31 IST

    பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் அடுத்தக்கட்ட பணிகள்: ஸ்டாலின் ஆலோசனை 

    பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தில் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில்,  அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை அதிகாரிகள், டிட்கோ அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சென்னையின் 2வது விமான நிலையம், காஞ்சிபுரம் பரந்தூரில் 20 கிராமங்களை உள்ளடக்கி 5,000 ஏக்கரில் அமைகிறது. தற்போது நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. 



  • Jun 04, 2025 12:25 IST

    'தக் லைஃப்' படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி - தமிழக அரசு

    கமல்ஹாசனின் 'தக் லைஃப்' படத்தின் சிறப்பு காட்சிக்கு நாளை ஒரு நாள் மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் காட்சி காலை 9 மணீக்கு தொடங்கி இறுதி காட்சி இரவு 8 மணி என மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



  • Jun 04, 2025 12:22 IST

    காஞ்சிபுரத்தில் சிப்காட் தொழிற்பூங்காவை திறந்து வைத்தார் ஸ்டாலின்

    காஞ்சிபுரத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோடிக் இயந்திர பாகங்கள் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். ரூ.300 கோடியில் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.



  • Jun 04, 2025 12:20 IST

    பிரவீன் ஆணவ கொலை வழக்கு: சி.பி.ஐ-க்கு மாற்ற முடியாது - சென்னை ஐகோர்ட்

    சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த இளைஞர் பிரவீன் ஆணவ கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி அவருடைய தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆணவ கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.



  • Jun 04, 2025 11:56 IST

    சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

    கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலில், இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் நாளை (வியாழக்கிழமை) ஆகும். இதற்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

    நாளை அதிகாலை பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை தொடங்குகிறது. பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 04, 2025 11:14 IST

    தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம்: அன்பில் மகேஸ்

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இருந்தாலும் அந்த அளவிற்கு தீவிரம் இல்லை. தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்.

    இருப்பினும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அன்பில் மகேஸ்



  • Jun 04, 2025 11:09 IST

    பெங்களூரு அணிக்கு சென்னை அணி வாழ்த்து



  • Jun 04, 2025 10:33 IST

    அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடி

    அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்த விவகாரத்தில் கைதான அதிமுக ஐ.டி. விங் மாநில நிர்வாகி மயிலாப்பூர் பிரசாத், அஜய் வாண்டையார் உள்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய போலீசாரின் மனு எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது



  • Jun 04, 2025 09:51 IST

    மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம்

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 9,000 இடங்களில் புதிதாக இணைபவர்களுக்கான விண்ணப்பபதிவு முகாம்கள் இன்று நடைபெற உள்ளன. இதில், அதிகபட்சம் 15 லட்சம் பேர் வரை புதிதாக சேரக்கூடும் என்று கூறப்படுகிறது. முகாமில் கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஜூலை மாதம் முதல் அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படும்.



  • Jun 04, 2025 09:35 IST

    த.வெ.க. சார்பில் இன்று 2ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா

    த.வெ.க. சார்பில் 2ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறும் இந்த விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த 84 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு த.வெ.க. தலைவர் விஜய் பரிசு, ஊக்கத்தொகை, சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறார்.



  • Jun 04, 2025 09:26 IST

    ஈரானில் மாயமான இந்தியர்கள் 3 பேர் பத்திரமாக மீட்பு

    கடந்த மாதம் ஈரானில் காணாமல் போன இந்தியர்கள் 3 பேர் தெஹ்ரானில் போலீசாரால் மீட்கப்பட்டனர். கடந்த மே மாதம் பஞ்சாபின் சங்ரூர், ஹோஷியார்பூர், எஸ்.பி.எஸ்., நகர் ஆகிய இடங்களிலிருந்து ஈரானுக்கு இந்தியர்கள் மூன்று பேர் சென்றுள்ளனர். அங்கு 3  பேரும் காணாமல் போகினர். ஹுஷன்பிரீத் சிங், ஜஸ்பால் சிங், அம்ரித்பால் சிங் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு மாதத்திற்கு பிறகு ஈரானில் காணாமல் போன இந்தியர்கள் 3 பேர் தெஹ்ரானில் போலீசாரால் மீட்கப்பட்டனர்.



  • Jun 04, 2025 09:01 IST

    மின் தடையால் நீட் தேர்வில் எந்த பாதிப்பும் இல்லை: அரசு

    மே 4-ம் தேதி சென்னையில் நடந்த நீட் தேர்வில் மின்வெட்டு ஏற்பட்டதால் 13 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் தேர்வு முடிவுகளை தற்காலிகமாக தடை செய்தது. மின் தடையால் நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மத்திய அரசு தரப்பில் வாதிட்டது. மாணவர்கள், கண்காணிப்பு கேமரா காட்சிகளை சமர்ப்பிக்கக் கோரியுள்ளனர். நீதிபதி தீர்ப்பை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.



  • Jun 04, 2025 08:48 IST

    TNSTC ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு புதிய உச்சம்!

    தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 2025 மே மாதம் மட்டும் திட்டத்தில் 7,74,493 பேர் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இதற்கு முன் கடந்த ஜனவரி மாதம் 6.64 லட்சம் பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்தது அதிகபட்சமாக இருந்தது. கடைசி நேர நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.www.tnstc.in, TNSTC மொபைல் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.



  • Jun 04, 2025 08:40 IST

    பரந்தூர் விமான நிலையம்: ஸ்டாலின் இன்று ஆலோசனை

    பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11.30 மணிக்கு முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனையில் தொழில்துறை அமைச்சர், தொழில்துறை செயலாளர் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகள், டிட்கோ அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.



  • Jun 04, 2025 07:58 IST

    ஐபிஎல் கோப்பை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு ஸ்டாலின் வாழ்த்து

    முதல்முறையாக ஐபிஎல் கோப்பை வென்ற பெங்களூரு அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சபாஷ்.. ஆர்.சி.பி. பல ஆச்சர்யங்கள் நிறைந்த சீசனுக்கு நிறைவான ஒரு முடிவு. விராட் கோலி இந்த கோப்பைக் கனவை பல ஆண்டுகளாக சுமந்துள்ளார். இப்போது இந்த மகுடம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸிடம் இருந்து அடுத்த சீசனில் சிறப்பான COME BACK-யை எதிர்பார்க்கிறேன்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



  • Jun 04, 2025 07:56 IST

    விபத்தை தடுக்க பேருந்துகளில் அதிநவீன கருவி பொருத்த முடிவு

    தமிழக்ததில் ஏற்படும் விபத்துகளை தடுக்க அரசுப் பேருந்துகளில் அதிநவீன கருவியை தமிழக அரசு நிறுவப்பட உள்ளது. அதாவது, அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர் கண்காணிப்பு அமைப்புகளை நிறுவ தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கியுள்ளது.



  • Jun 04, 2025 07:52 IST

    பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்

    பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்குப் பிறகு பிரதமா் தலைமையில் கூடும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து மத்திய அச்சா்களிடம் விரிவாக விவரிக்கப்பட வாய்ப்புள்ளது.



Tamilnadu Live News Udpate Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: