Chennai News Updates: பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள்

Chennai City live updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Chennai City live updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Engineering Counseling

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
ஒரு வாரத்துக்கு வெப்பம் அதிகரிக்கும்: அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மாலை (அ) இரவு நேரங்களில் வெப்பசலனத்தால் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது
    • Jun 06, 2025 07:03 IST

      பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள்

      நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள். மே. 7 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 2.9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

      www.tneaonline.org தளத்தில் விண்ணப்பிக்கலாம்.



    • Jun 05, 2025 23:28 IST

      தீப்பிடித்து எரிந்த குடிசை வீடுகள்...

      சிதம்பரம் அருகே தாழ்வாக சென்ற மின்கம்பிகள் உரசி ஏற்பட்ட தீப்பொறியால்
      3 குடிசை வீடுகள் எரிந்து 20 சவரன் நகைகள், வீடுகளில் இருந்த பொருட்கள் சேதம்



    • Advertisment
      Advertisements
    • Jun 05, 2025 21:55 IST

      கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் மரணம்: விசாரணை நடத்த ஆணையம் அமைப்பு

      பெங்களூருவில் ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்.சி.பி அணியின் ஊர்வலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூர் கூடுதல் ஆணையர், இணை ஆணையர், துணை மற்றும் உதவி ஆணையர்கள் காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.



    • Jun 05, 2025 21:52 IST

      கருத்தரித்தல் மையம் - வழக்கு முடித்து வைப்பு

      மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் அமைக்கக் கோரிய வழக்கில் மக்களின் நலன் கருதி செயற்கை கருத்தரித்தல் மையங்களை கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்திய மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கை முடித்து வைத்தது.



    • Jun 05, 2025 21:34 IST

      ராஜ்யசபா தேர்தல்: கமல் நாளை வேட்பு மனு தாக்கல்

      ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன் நாளை நண்பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்



    • Jun 05, 2025 20:54 IST

      முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு சென்னை காவல்துறை சார்பில் பாதுகாப்பு

      சாட்சியம் சொல்ல வரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு சென்னை
      காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. துரை விக்கிரமங்கலம் காவல் நிலைய வழக்கில் கான்பரன்ஸ் மூலம் சாட்சியம் அளிக்க சென்னை சிவில் கோர்ட் வளாகத்திற்கு நாளை சகாயம் வருகிறார்.



    • Jun 05, 2025 20:29 IST

      ரூ.10 கோடியில் தூய்மை மிஷன் திட்டம்

      2 நாட்களில் 300 டன் அளவிற்கு குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களிலேயே குப்பைகள் சுத்தம் செய்யப்படாமல் இருந்தது. ரூ.10 கோடி செலவில் தூய்மை Mission திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.



    • Jun 05, 2025 20:23 IST

      சுய உதவிக்குழு கடன் மோசடி 

      கடந்த 2015 ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் 73 மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்கி 4 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மேலாளர், சுய உதவிக்குழு செயலாளர் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலாளர் ரவிச்சந்திரனுக்கு 23 லட்சம் ரூபாய் அபராதமும் இரண்டாவது குற்றவாளியான ராஜாராமிற்கு 2.63 கோடி ரூபாய் அபராதம் விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

       



    • Jun 05, 2025 20:09 IST

      தவறவிட்ட ரூ.2.10 லட்சம் பணத்தை போலீசில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு

      நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியில் ஏ.டி.எம். அறையில் ஒருவர் தவறவிட்ட ரூ.2.10 லட்சம் பணத்தை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த அல்போன்ஸ் (22) என்பவரை மாவட்ட எஸ்.பி. பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்துள்ளார்



    • Jun 05, 2025 20:09 IST

      சென்னை புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

      சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி அக்கோயிலை சுற்றியுள்ள 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை (6-6-2025) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் உத்தரவு அளித்துள்ளார். இவ்விடுமுறைக்கு ஈடாக வரும் 21.06.2025 (சனிக்கிழமை) கீழ்க்காணும் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது. கங்காதரேசுவரர்மேல்நிலைப்பள்ளி , ELM பள்ளி, MCTM ஆண்கள்மேல்நிலைப்பள்ளி, MCTM பெண்கள்மேல்நிலைப்பள்ளி அழகப்பா மேல்நிலைப்பள்ளி , Evarts School, சென்னைமாநகராட்சிபள்ளி இயங்கும்.



    • Jun 05, 2025 19:57 IST

      6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை!

      மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

      இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், நீலகிரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

       



    • Jun 05, 2025 19:48 IST

      கமல்ஹாசன் உள் நோக்கத்துடன் பேசவில்லை - கே.பி முனுசாமி

      "கமல்ஹாசன் உள் நோக்கத்துடன் பேசவில்லை. இதற்கு மன்னிப்பு கேட்க சொல்வது ஏற்புடையது இல்லை" என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார். 



    • Jun 05, 2025 19:46 IST

      தமிழ்நாடு முழுவதும் 136 சைபர் குற்றவாளிகள் கைது

      தமிழ்நாடு முழுவதும் 156 வழக்குகளில் தொடர்புடைய 136 சைபர் குற்றவாளிகளை போலீஸ் கைது செய்தது. கைதானவர்களிடம் இருந்து 124 செல்போன் பறிமுதல், 304 வங்கி கணக்குகளை போலீஸ் முடக்கியது.



    • Jun 05, 2025 19:18 IST

      நடிகை அக்ஷராஹாசன் பரபரப்பு அறிக்கை

      "என் பெயர், எங்கள் குடும்பம் மற்றும் தயாரிப்பு நிறுவன பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள். நாங்கள், ஊட்டியில் இருந்து திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக பரவும் தகவல் பொய். இப்ராகிம் அக்தர் என்ற நபருக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட நபருடன் யாரும் தொடர்பு கொள்ளவேண்டாம்" என்று நடிகை அக்ஷரா ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 



    • Jun 05, 2025 19:17 IST

      அண்ணாநகர் வேலங்காடு மயானபூமி 3 நாட்களுக்கு இயங்காது -  சென்னை மாநகராட்சி அறிவிப்பு

      அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட வேலங்காடு மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் வில்லிவாக்கம் அல்லது ஓட்டேரி மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. வேலங்காடு மயானபூமியில் மின்மயான தகனமேடையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால் 07.06.2025 முதல் 09.06.2025 வரை மேற்கண்ட மயானபூமி இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில், பொதுமக்கள் அருகிலுள்ள வில்லிவாக்கம் அல்லது ஓட்டேரி மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.



    • Jun 05, 2025 19:14 IST

      2030-க்குள் 1000 ஹைட்ரஜன் வாகனங்களை இயக்க இலக்கு

      2030-ம் ஆண்டுக்குள் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் 1,000 வாகனங்களை இயக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மின்சார வாகனங்களை தொடர்ந்து பெட்ரோல், டீசல் வாகனத்துக்கு மாற்றாக ஹைட்ரஜன் வாகனங்களை கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டுக்குள் 50 ஹைட்ரஜன் பேருந்துகளை இயக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.



    • Jun 05, 2025 19:14 IST

      ஆர்.சி.பி அணி மீது வழக்கு

      பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆர்.சி.பி அணி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெங்களூரு அணி மீதும் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் மீதும் கப்பன் பார்க் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழப்புகள் ஏற்படும் வகையில் அலட்சியமாக செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



    • Jun 05, 2025 18:34 IST

      திண்டுக்கல்: மரத்தின் மீது கார் மோதி சிறுவன் பலி 

      திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே டயர் வெடித்ததால் மரத்தின் மீது கார் மோதி சிறுவன் உயிரிழந்தான். நூருல் அமீன் (12) உயிரிழந்த நிலையில், தாய், சகோதரர்கள் அய்மன் (6), அயான் (6) படுகாயம் அடைந்துள்ளனர்.

       



    • Jun 05, 2025 18:32 IST

      மாணவி ராஜேஷ்வரியின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் - ஸ்டாலின் அறிவிப்பு

      மாணவி ராஜேஸ்வரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் வணக்கம் .அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் ஐ.ஐ.டி-க்கு உண்மையான பெருமையாக அமையும்! அதற்காக நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும்" என்று அவர் கூறியுள்ளார். 



    • Jun 05, 2025 17:35 IST

      உதயநிதி செய்தியாளர் சந்திப்பு

      "அரசு அலுவலகங்களில் இருந்து இத்திட்டத்தை தொடங்குகிறோம். இதன் மூலம் மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும்.." 2என தூய்மை மிஷன் திட்டத்தை ஆய்வு செய்த பிறகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.



    • Jun 05, 2025 17:14 IST

      கமல் கருத்தில் தவறில்லை: வைகோ

      அருமை சகோதரர் கமல்ஹாசன் சொன்னதில் எந்த தவறும் இல்லை என சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 



    • Jun 05, 2025 16:53 IST

      பெங்களூரு கூட்ட நெரிசல்.. கர்நாடக நீதிமன்றம் சரமாரி கேள்வி

      இவ்வளவு கூட்டம் வரும் போது முறையான நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் அல்லவா?,  காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டதா? அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டதால் எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் வந்தது. 50,000ல் இருந்து 60 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேர் வருகை தந்தனர் என கர்நாடக அரசு தரப்பு கூறியுள்ளது.



    • Jun 05, 2025 16:15 IST

      மாணவி ராஜேஷ்வரிக்கு வாழ்த்துகள்: பழனிசாமி

      JEE தேர்வில் இந்திய அளவில் 417ஆவது இடம் பிடித்த மாணவி ராஜேஷ்வரிக்கு வாழ்த்துகள் தந்தையை இழந்த நிலையிலும் ராஜேஷ்வரி உழைத்து பெற்றுள்ள வெற்றி மெச்சத்தக்கது; கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி; உயர்கல்வியிலும் மாணவி சிறக்க வாழ்த்துகிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 



    • Jun 05, 2025 16:10 IST

      உயிரிழந்த 11 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் : நிர்வாகம் அறிவிப்பு

      பெங்களூரு ஆர்.சி.பி வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஐ.பி.எல். கோப்பையை பெங்களூரு அணி வென்றதை கொண்டாட நேற்று சின்னசாமி மைதானத்தில் வெற்றி பேரணி நடந்தது. வெற்றி பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.



    • Jun 05, 2025 15:58 IST

      2.5 லட்சம் பேர் திரண்டதால் பாதிப்பு: அரசு

      34,000 பேர் மட்டுமே அமரும் வசதி கொண்ட மைதானத்தில் இரண்டரை லட்சம் பேர் திரண்டனர் ஜூன் 15 ல் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது; கர்நாடக அரசு பெங்களூரு ஆட்சியர், ஐபிஎல், பிசிசிஐ நிர்வாகங்கள் பதில்தர உத்தரவிட்டு ஜூன் 10க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 



    • Jun 05, 2025 15:48 IST

      பெங்களூருவில் ஆர்சிபி வெற்றி விழாவை நடத்தியது கர்நாடக அரசா? கிரிக்கெட் வாரியமா?: கர்நாடக உயர்நீதிமன்றம்

      பெங்களூருவில் ஆர்சிபி வெற்றி விழாவை நடத்தியது கர்நாடக அரசா? கிரிக்கெட் வாரியமா? என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகளை வைத்தது ஏன்? பாதுகாப்பு நடவடிக்கை என்னென்ன எடுக்கப்பட்டது? என நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழப்பு தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்துள்ளது.



    • Jun 05, 2025 15:28 IST

      அறநிலையத்துறையில் இந்து அல்லாதோர் நியமிக்கப்படுவதாக பரவும் தகவல் வதந்தி!!

      அறநிலையத்துறையில் இந்து அல்லாதோர் நியமிக்கப்படுவதாக பரவும் தகவல் வதந்தி; யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. மேலும், “தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை சட்டம் 1959, பிரிவு 10ன் படி அறநிலையத்துறை பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



    • Jun 05, 2025 15:27 IST

      திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்வது போல் தமிழ்நாட்டிலும் ஏற்பாடு : அமைச்சர் சேகர்பாபு

      திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்வது போல் தமிழ்நாட்டிலும் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்செந்தூர், திருவண்ணாமலை, பழனி கோயில்களிலும் ஆன்லைனில் முன்பதிவு செய்து வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை மூவாயிரம் கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.



    • Jun 05, 2025 15:13 IST

      மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு சல்யூட்: முதல்வர்

      அரசு உறைவிடப்பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட்; தந்தையை இழந்தாலும் அவரது கனவை நெஞ்சில் சுமந்து நனவாக்கி உள்ளார் ராஜேஷ்வரி. மாணவி ராஜேஷ்வரியின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும்; ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதே ஐஐடிக்கு உண்மையான பெருமை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். 



    • Jun 05, 2025 15:12 IST

      பெங்களூரு மெட்ரோவில் 8.7 லட்சம் டிக்கெட் விற்பனை: அமைச்சர் பரமேஸ்வரா தகவல்

      ஆர்.சி.பி. அணிக்கு பாராட்டு விழா நடைபெற்ற நேற்று பெங்களூரு மெட்ரோவில் 8.7 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. மெட்ரோவில் ஒரே நாளில் 8.7 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி உள்ளதாக அமைச்சர் பரமேஸ்வரா தகவல் தெரிவித்தார்.



    • Jun 05, 2025 14:51 IST

      பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது: பிரேமலதா விஜயகாந்த்

      பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.



    • Jun 05, 2025 14:35 IST

      இன்சூரன்ஸ் நிறுவன பணியாளர் பலி: இருவர் கைது

      சென்னை நுங்கம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி இன்சூரன்ஸ் நிறுவன பணியாளர் இறந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் பிரகாஷ் ராஜ் நேற்று முன்தினம் இரவு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சென்னை தலைமை அலுவலகத்தில் பயிற்சிக்காக வந்தபோது மின்சாரம் தாக்கி பிரகாஷ்ராஜ் (35) பரிதாபமாக உயிரிழந்தார்.



    • Jun 05, 2025 14:34 IST

      திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்று 1,491 நாட்களில் 3,000 கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

      திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்று 1,491 நாட்களில் 3,000 கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். எல்லோருக்கும் எல்லாம் எனும் நம் ஆட்சியை, பக்தர்கள் போற்றுகிறார்கள்; அற்பர்கள் கதறுகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், அமைச்சர் சேகர்பாபுவிற்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் பாராட்டு தெரிவித்தார்.



    • Jun 05, 2025 14:33 IST

      த.வெ.க. தலைவர் விஜய் குறித்த த.வா.க. தலைவர் வேல்முருகன் பேச்சுக்கு தமிழிசை கண்டனம்

      த.வெ.க. தலைவர் விஜய் குறித்த த.வா.க. தலைவர் வேல்முருகன் பேச்சுக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “குழந்தைகள் விஜயை அண்ணா என்று அழைப்பது தமிழில் அன்பின் வெளிப்பாடு மட்டுமே. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அழைப்பு. ஆனால் அந்த உறவை கொச்சைப்படுத்துவது அந்த குழந்தைகளின் மனதை புண்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஆதரவளிக்கும் பெற்றோர்களின் மனதையும் புண்படுத்துவது ஆகும். தாங்கள் இவ்வாறு புண்படுத்துவது தமிழ் பண்பாடும் இல்லை. மனித நேயமும் அல்ல. திரு.வேல்முருகன் அவர்களின் கொச்சைப் பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..”என்றார்.



    • Jun 05, 2025 13:45 IST

      பெங்களூருவில் நடந்த நிகழ்வு மிகுந்த வேதனையை தருகிறது - கமல்ஹாசன்

      பெங்களூருவில் நடந்த நிகழ்வு மிகுந்த வேதனையை தருகிறது; குடும்பத்தை இழந்தோருக்கு என் ஆறுதல்கள், காயமடைந்தோர் விரைந்து மீண்டு வரட்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.



    • Jun 05, 2025 13:31 IST

      பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு; கர்நாடக அரசிடம் விளக்கம் கேட்டது ஐகோர்ட் 

      பெங்களூருவில் ஆர்.சி.பி வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அறிக்கை கோரியுள்ளது. இந்த உயிரிழப்புகள் குறித்து விசாரிக்கும் முன்பாக கர்நாடக அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார்.



    • Jun 05, 2025 13:02 IST

      சிந்தூர் மரக்கன்றுகளை நட்ட மோடி; தியாகத்தின் அடையாளம்

      உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது அலுவலக வளாகத்தில் சிந்தூர் மரக்கன்றுகளை நட்டார். பிரதமர் மோடி தனது உரையில், "1971 இந்தியா - பாகிஸ்தான் போரில் ஈடுபட்டோரின் தாய்மார்களும் சகோதரிகளும் எனது குஜராத் பயணத்தின்போது எனக்கு கொடுத்தனர். அவை நமது தேசத்தின் பெண் சக்தியின் வீரம் மற்றும் உத்வேகத்தின் அடையாளமாக இருக்கும். இந்த மரக்கன்றுகள், 1971 போர் வீரர்களின் குடும்பங்களின் தியாகத்தையும், இந்தியாவின் பெண் சக்தியின் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் நடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.



    • Jun 05, 2025 12:57 IST

      ஜூன் 7-ம் தேதி தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு

      தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 7-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.



    • Jun 05, 2025 12:32 IST

      ‘சுற்றுச்சூழலை பாதுகாக்க துணிப்பை கொண்டு செல்லுங்கள்’ - ஸ்டாலின் வலியுறுத்தல்

      உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வொன்றில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார். அரசு மட்டும் நினைத்தால் போதாது என்றும், பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களின் அன்றாட வாழ்வில் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

      உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு நினைத்தால் மட்டும் போதாது; ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும்; வீட்டை விட்டு வெளியே செல்லும் போது துணிப்பையை கொண்டு செல்ல வேண்டும்; தண்ணீர் பாட்டிலையும் கொண்டு செல்ல வேண்டும்; மக்களுக்கு சுய ஒழுக்கம் அவசியம்; குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும்” என்று அவர் பேசியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பானது அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்பதையும், தனிமனித ஒழுக்கம் மற்றும் பழக்கவழக்க மாற்றங்களே நிரந்தர தீர்வுகளை அளிக்கும் என்பதையும் தனது பேச்சில் முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.



    • Jun 05, 2025 12:20 IST

      ‘நிதி எங்கே செல்கிறது?’ - ஸடாலினுக்கு அண்ணாமலை கேள்வி

      தமிழகத்தில் கல்வித்துறை கேலிக்கூத்தாக்கப்பட்டு அவலநிலை உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இந்த அவலநிலையை உருவாக்கியது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சிதான் என்றும் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

      இதுகுறித்து இன்று அண்ணாமலை கூறுகையில், "தி.மு.க ஆட்சியில், வெறும் விளம்பரங்களுக்காக வீண் செலவுகள் நடத்தப்படுகின்றன. அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு, மாத ஊதியம் ஒழுங்காக வழங்க முடியவில்லை. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.



    • Jun 05, 2025 12:15 IST

      பா.ம.க, வன்னியர் சங்கத்தை விமர்சிக்காமல் சகோதர எண்ணத்துடன் பயணிக்கிறேன் - வேல்முருகன்

      தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், "பா.ம.க-ல் நிலவும் பிரச்சினைகளால் நாங்களும் வருத்தம் அடைந்தோம், பிரச்சினைகள் நீங்கி சுமூகமான நிலை ஏற்பட வேண்டும் என விரும்புகிறோம். நான் பா.ம.க-வில் இணைய போகிறேன் என்ற செய்தி தவறானது, பா.ம.க, வன்னியர் சங்கம் உள்ளிட்டவற்றை விமர்சிக்காமல் சகோதர எண்ணத்துடன் பயணிக்கிறேன்" என்று தெரிவித்தார்.



    • Jun 05, 2025 12:10 IST

      லைகா நிறுவனத்துக்கு ரூ.21.26 கோடியை 30% வட்டியுடன் வழங்க வேண்டும்; நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் உத்தரவு

      நடிகர் விஷால் தனது பட தயாரிப்பு நிறுவனத்துக்காக அன்பு செழியனிடம் கடன் பெற்றது தொடர்பான வழக்கில், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.21.26 கோடியை 30% வட்டியுடன் வழங்க வேண்டும் என நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு உத்தரவிட்டுள்ளது. 



    • Jun 05, 2025 11:55 IST

      தமிழகத்தில் 10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது - ஸ்டாலின்

      சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு நாம் தான் தீர்வு காண வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. நாட்டிலே தமிழகத்தில் தான் அதிக ராம்சர் இடங்கள் உள்ளது. புதிதாக அலையாத்தி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நெகிழி மாசுபாட்டை ஒழிப்போம் என உலக சுற்றுச்சூழல் தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்



    • Jun 05, 2025 11:34 IST

      தமிழ்நாட்டில் புதிதாக 1000 பூங்காக்கள், 62 காப்புக்காடுகள், 2 பறவைகள் சரணாலயங்கள் உருவாக்கம் - தங்கம் தென்னரசு

      தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மீட்பு மிகப் பெரிய அளவில் நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், புதிதாக 1000 பூங்காக்கள், 62 காப்புக்காடுகள், 2 பறவைகள் சரணாலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் வாழ்வியலில் இயற்கையும் மொழியும் யாராலும் பிரிக்க முடியாது என உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்



    • Jun 05, 2025 10:56 IST

      ராமதாஸ் உடன் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி சந்திப்பு

      ராமதாஸூடன் அன்புமணி சந்தித்துள்ள நிலையில் ஒரே காரில் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை



    • Jun 05, 2025 10:52 IST

      முற்றிலும் உடைந்துவிட்டேன்- விராட் கோலி பதிவு

      வார்த்தைகள் இல்லை… முற்றிலும் உடைந்துவிட்டேன்

      – பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விராட் கோலி பதிவு



    • Jun 05, 2025 10:25 IST

      ஒரே நாளில் 564 பேருக்கு கொரோனா பாதிப்பு

      இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 564 பேருக்கு கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில்  7 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

      நாடு முழுவதும் 4,866 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

       - மத்திய சுகாதாரத்துறை



    • Jun 05, 2025 10:25 IST

      ராமதாஸ்- அன்புமணி சந்திப்பு நிறைவு

      தைலாபுரம் தோட்டத்தில் சுமார் 45 நிமிடம் நடைபெற்ற ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு நிறைவடைந்தது



    • Jun 05, 2025 10:04 IST

      பழனி முருகன் கோயிலில் சூர்யா

      Credit: Sun News 



    • Jun 05, 2025 09:57 IST

      காயிதே மில்லத் பிறந்தநாள்- விஜய் வாழ்த்து



    Tamilnadu News Update Chennai

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: