Chennai News Updates: சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன்: விவசாய தொழிலை பலர் கைவிட வழிவகுக்கும் - செல்வப்பெருந்தகை

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Selvaperunthagai

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Jun 09, 2025 21:27 IST

    சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன்: விவசாய தொழிலை பலர் கைவிட வழிவகுக்கும் - செல்வப்பெருந்தகை

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: “கூட்டுறவுத்துறை வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் குறைவாகவே வழங்கப்பட்டு வரும் நிலையில், ‘சிபில் ஸ்கோர்’ அடிப்படையில் இனி கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் இது போன்ற திட்டங்களை அமல்படுத்தினால், விவசாய தொழிலை கைவிட வழிவகுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.



  • Jun 09, 2025 20:29 IST

    திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடி நடவடிக்கை -ஐகோர்ட் அதிரடி உத்தரவு

    திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓ.டி.டி தளங்களில் சினிமா பார்க்கும் பழக்கம் அதிகரித்திருப்பதால் திரையரங்குகள் வெகு காலம் நீடிக்காது என்பதை திரையரங்க உரிமையாளர்கள் சிந்திக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



  • Advertisment
  • Jun 09, 2025 20:25 IST

    பெங்களூரு கூட்ட நெரிசல் பலி: மத்திய அரசை அணுகிய ஐ.பி.எஸ் அதிகாரி

    பெங்களூருவில் நடந்த ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்ட பலி விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி 
    மத்திய அரசிடம் மேல்முறையீடு செய்தார். இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி விகாஸ் குமார், தனது இடைநீக்கத்துக்கு எதிராக மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தை அணுகியுள்ளார். விசாரணை முறைகேடாக நடைபெற்றதாகவும், தன்னிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் தண்டனை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விகாஸ் குமார் புகார்.



  • Jun 09, 2025 20:21 IST

    தாம்பரம் அருகே அரசு சேவை இல்லத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; காவலாளிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

    தாம்பரம் அருகே அரசு சேவை இல்லத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட காவலாளி மேத்யூ, செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். காவலாளி மேத்யூவை வரும் 23ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.



  • Advertisment
    Advertisements
  • Jun 09, 2025 20:05 IST

    மோடி திருவள்ளுவரின் மிகப்பெரிய பக்தர் - ஆளுநர் ஆர்.என். ரவி  பேச்சு

    சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி  பேச்சு: “பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவரின் மிகப்பெரிய பக்தர்; திருவள்ளுவரின் கொள்கையை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார்; பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டங்களுக்கு திருக்குறள் உந்துதலாக இருக்கிறது” என்று கூறினார்.



  • Jun 09, 2025 19:36 IST

    நாகப்பட்டினம் உத்தமசோழபுரம் கிராமத்தில் புதிய இடத்தில் ரெகுலேட்டர் - இ.பி.எஸ் கண்டனம் 

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: “நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரம் கிராமத்தில் புதிய இடத்தில் ரெகுலேட்டர் கட்டுவதை கைவிட வேண்டும்; மக்களின் நலனை மறந்து, தனியாரின் நலனுக்காக புதிய இடத்தில் ரெகுலேட்டர் அமைக்க முற்படும் முதலமைச்சருக்கு கண்டனம். விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று, அ.தி.மு.க ஆட்சியில் கட்ட திட்டமிடப்பட்ட இடத்தில் ரெகுலேட்டர் அமைக்க வேண்டும்; இல்லாவிடில் அ.தி.மு.க சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்” என்று கூறினார்.



  • Jun 09, 2025 18:20 IST

    மும்பை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க முடிவு

    மும்பை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என இந்திய ரயில்வே உறுதி அளித்துள்ளது. தானேவில் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணிகள் 5 பேர் உயிரிழந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.



  • Jun 09, 2025 18:00 IST

    ஒரே நாளில் 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

    நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பெரும்பாலானோருக்கு குறைந்த வீரியத்துடனே தொற்று பரவுகின்றது. இந்த பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு சோதனை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், மருத்துவமனைகளிலும், மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்ளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.



  • Jun 09, 2025 17:57 IST

    ”மூதாட்டி கொலை: யாரையோ கைது செய்து நாடகமா?”

    கொங்குப் பகுதிகளில் இதுவரை நடந்த அனைத்து கொலை, கொள்ளைகளுக்கும் காரணமானவர்களைக் கண்டு பிடித்து கைது செய்துவிட்டோம் என திமுக அரசு ஒருபுறம் மார்தட்டிக் கொண்டிருக்க, அதே பகுதியில் அதே பாணியில் மீண்டுமொரு கொலை அரங்கேறியுள்ளது, மக்களை குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்கவும் மக்களின் கண்டனக் குரல்களை ஒடுக்கவும் யாரையோ கைது செய்துவிட்டு குற்றவாளி அகப்பட்டுவிட்டதாக திமுக அரசு நாடகமாடுகிறதா? என்ற சந்தேகமும் மக்கள் மனதில் வலுக்கிறது என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 09, 2025 17:34 IST

    தமிழ்நாட்டில் 6 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 15 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளாவில் ஜூன் 13 முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.



  • Jun 09, 2025 17:32 IST

    ARR இசை நிகழ்ச்சி - இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவு

    ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' ,இசை நிகழ்ச்சியை காண ரூ.10,000 கொடுத்து டிக்கெட் பெற்றும், போக்குவரத்து நெரிசலால் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அர்ஜுன் என்பவர் அளித்த புகார் மனுவில் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.



  • Jun 09, 2025 17:28 IST

    திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் தேரோட்டம்

    திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 8-ம் நாளான இன்று தேரோட்டம் (ரத உற்சவம்) விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளி ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



  • Jun 09, 2025 17:17 IST

    மாநிலங்களவை தேர்தல்: 6 பேர் போட்டியின்றி தேர்வாகலாம்

    தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ள நிலையில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றித் தேர்வாக வாய்ப்புள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து நாளை (ஜூன் 10) வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது. ஜூன் 12-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.



  • Jun 09, 2025 17:10 IST

    இரவு 7 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 09, 2025 17:04 IST

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

    சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பிற்பகலில் திடீரென வானம் இருண்டது. பின்னர், மிதமான மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக, சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த திடீர் மழையால், நுங்கம்பாக்கம் ஸ்பெல்லிங் ரோடு சாலையிலிருந்து காலேஜ் ரோடு செல்லும் பகுதியில் மரம் சாய்ந்துள்ளது! மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

     



  • Jun 09, 2025 16:49 IST

    செந்தில் பாலாஜி வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகை வழங்கல்

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டது. வழக்கின் விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்



  • Jun 09, 2025 16:19 IST

    விழிஞ்சம் துறைமுகம் வந்தடைந்த உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்

    Credit: Sun News 



  • Jun 09, 2025 16:13 IST

    மாநிலங்களவைத் தேர்தல்- வேட்பு மனுத்தாக்கல் நிறைவு

    தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு. திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், ம.நீ.ம சார்பில் கமல்ஹாசன், அதிமுக சார்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் வேட்புமனு தாக்கல். மொத்தமாக 13 நபர்கள் 17 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

    - நாளை மனுக்கள் மீது பரிசீலனை



  • Jun 09, 2025 15:38 IST

    ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

    ஒடிசாவில் சார் ஆட்சியராக பணியாற்றி வரும் திமான் சக்மா, தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை லஞ்சமாக பெறும் போது பிடிபட்டார்

    அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.



  • Jun 09, 2025 15:31 IST

    பாலிடெக்னிக்கிலும் சிறப்பு துணைத் தேர்வு

    மாணவர்களின் ஒரு கல்வியாண்டு வீணாவதைத் தடுக்க, பள்ளி மாணவர்களுக்கு உடனடி தேர்வு நடத்துவது போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணைத் தேர்வு

    வரும் 18ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

    - உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு



  • Jun 09, 2025 15:29 IST

    குற்றம் நடக்காமல் தடுப்பதுதான் அரசின் முதல் கடமை: அண்ணாமலை



  • Jun 09, 2025 14:51 IST

    முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எதிராக புகார்

    மதுரையில் ஜூன் 22-ஆம் தேதி, இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு தடை விதிக்கக் கோரி, தமிழ்நாடு டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வி.சி.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட இயக்கத்தினர் புகாரளித்துள்ளனர்.



  • Jun 09, 2025 14:45 IST

    அரசியல் கலாசாரத்தை மாற்றிய மோடி - ஜே.பி. நட்டா

    நாட்டின் அரசியல் கலாசாரத்தை பிரதமர் மோடி மாற்றியுள்ளதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். மேலும், "11 ஆண்டுகளில் மோடி தலைமையிலான ஆட்சி செய்த பணிகள் கற்பனைக்கு எட்டாதவை; நாட்டின் பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் மோடியின் தலைமை முக்கிய பங்கு வகிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 



  • Jun 09, 2025 14:33 IST

    எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யக் கோரி ஆர்.சி.பி மனு

    பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், ஆர்.சி.பி மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்ய வேண்டும் என அந்த அணியின் தரப்பில் இருந்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதுகாப்பு குறைபாட்டை மறைக்க தங்கள் மீது பழி சுமத்துவதாக ஆர்.சி.பி குற்றம்சாட்டியுள்ளது.



  • Jun 09, 2025 14:17 IST

    கோழிக்கோடு அருகே சரக்கு கப்பலில் தீ விபத்து

    கொழும்புவில் இருந்து மும்பைக்கு சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்கு கப்பல், கோழிக்கோடு அருகே நடுக்கடலில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கப்பலில் இருந்த 18 ஊழியர்களும் கடலில் குதித்து தப்பியதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்க இந்திய கடற்படை கப்பல் விரைந்துள்ளன.



  • Jun 09, 2025 14:07 IST

    விரைவில் நல்ல தீர்வு வரும் என்று ராமதாஸ் கூறியிருக்கிறார் - ஜி.கே. மணி

    பா.ம.க நிறுவனர் ராமதாஸை, ஜி.கே. மணி இன்று சென்னையில் சந்தித்தார். அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "மிக விரைவில் நல்ல தீர்வு வரும் என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்" என்று தெரிவித்தார்.



  • Jun 09, 2025 13:47 IST

    அமித்ஷா பகல் கனவு காண்கிறார் - செல்வப்பெருந்தகை

    தமிழ்நாட்டின் கள நிலவரம் அறியாமல், அமித்ஷா பகல் கனவு காண்கிறார்; தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் பாஜகவை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். தமிழில் அர்ச்சனைக்கு எதிராக வாதாடியோருக்கு, முருக பக்தர்கள் மாநாடு நடத்த என்ன தகுதி உள்ளது? என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்விகளை எழுப்பியுள்ளார். 



  • Jun 09, 2025 13:36 IST

    தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி

    தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். தகுதியுள்ள மகளிருக்கு விரைந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.



  • Jun 09, 2025 13:33 IST

    அருண்ராஜுக்கு தவெகவில் மாநில பொறுப்பு

    தவெகவில் இணைந்த ஒய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜுக்கு கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் பதவி. அண்மையில் விருப்ப ஓய்வுபெற்ற அருண்ராஜ் ஐஆர்எஸ் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்



  • Jun 09, 2025 12:56 IST

    தமிழ்நாட்டில் 3 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

    தமிழ்நாட்டில் ஜூன் 13, 14, 15 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 09, 2025 12:55 IST

    ராமதாஸ், அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடு: பாமகவினர் யாகம்

    ராமதாஸ், அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடு நீங்க வேண்டி பா.ம.க.வினர் சிறப்பு யாகம் நடத்தி வருகின்றனர். தஞ்சை வடக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் சார்பில் திருவிடைமருதூர் சூரியனார் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.



  • Jun 09, 2025 12:55 IST

    சென்னை மாநகரில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?: ஐகோர்ட் கேள்வி

    சென்னை மாநகரில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன? என்றும் கேள்வி எழுப்பிய நிலையில், ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை நொளம்பூர் அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு என புகார் அளித்த பட்டியல் இனத்தவரை அவமானப்படுத்தியது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி காவல் ஆணையர் விளக்கம் அளித்த நிலையில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.



  • Jun 09, 2025 12:17 IST

    கல்விநிதி; தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க முறையீடு

    ஒன்றிய அரசு கல்வி நிதியை விடுவிக்க கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது. ஒன்றிய அரசு தர வேண்டிய ரூ.2,151 கோடி நிதி, அதற்கு 6% வட்டியுடன் சேர்த்து ரூ.2,291 கோடி வழங்கக் கோரிய வழக்கில், கடந்த ஓராண்டாக ஒன்றிய அரசு நிதி வழங்காததால் 48 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



  • Jun 09, 2025 12:17 IST

    கூட்டணி ஆட்சி என தூண்டில் போடுகின்றனர் - திருமாவளவன்

    கூட்டணி ஆட்சி என்பதை தூண்டிலாக போட்டுப் பார்க்கிறார்கள்; கூட்டணி ஆட்சி அமைந்தால் அமைச்சர் பதவி தருவோம் என ஆசைகாட்ட பார்க்கிறார்கள் கூட்டணி ஆட்சி என்ற சூழலுக்கு அதிமுகவே உடன்படாது என்பதுதான் என் நம்பிக்கை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 



  • Jun 09, 2025 12:15 IST

    புதுச்சேரியில் போலீசார் சீருடையில் துப்பாக்கியுடன் ரோந்து பணி மேற்கொள்ள ஆணை

    போலீசார் சீருடையில் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட சட்டம்-ஒழுங்கு எஸ்.பி. கலைவாணன் ஆணையிட்டுள்ளார். நாள்தோறும் காலை 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.



  • Jun 09, 2025 11:02 IST

    2026 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும்: டாக்டர் ராமதாஸ்

    தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வரும் என்று அமித்ஷா கூறியது குறித்து கருத்து தெரிவித்துன்ன பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும் என கூறியுள்ளார்.



  • Jun 09, 2025 10:33 IST

    மெட்ரோ நிறுவனம் தகவல்

    சென்னை மெட்ரோவில் 10 ஆண்டுகளில் இதுவரை 39 கோடி பேர் பயணம் மாதம்தோறும் பயணிப்போரின் எண்ணிக்கை  விரைவில் 1 கோடியை எட்ட வாய்ப்புள்ளதாக மெட்ரோ நிறுவனம் தகவல் 



  • Jun 09, 2025 10:31 IST

    மாணவிக்கு பாலியல் தொல்லை - காவலாளி கைது

    சென்னையில் அரசு சேவை இல்லத்தில் தங்கியுள்ள 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு சேவை இல்ல காவலாளி மாத்யூ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில்
    மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது



  • Jun 09, 2025 09:44 IST

    நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம்: மோடி

    நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம்; 140 கோடி இந்தியர்களின் ஆசீர்வாதம், கூட்டு பங்கேற்பால் பல்வேறு துறைகளில் விரைவான மாற்றம். வேகம், அளவு, உணர்திறன் கொண்ட புதிய மாற்றங்களை தேஜகூட்டணி அரசு வழங்கியுள்ளது பாஜக அரசு அமைந்து 11 ஆண்டுகள் நிறைவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். 



  • Jun 09, 2025 09:35 IST

    கூட்ட நெரிசல் - சித்தராமையா

     “கூட்ட நெரிசல் நடந்ததே 2 மணிநேரம் கழித்துதான் எனக்குத் தெரிய வந்தது” என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அதிர்ச்சித் தகவல் கூறியுள்ளார். 



  • Jun 09, 2025 09:12 IST

    விஜய் தலைமையில் இன்று தவெக அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்

    விஜய் தலைமையில் தவெகா அவசர ஆலோசனைக் கூட்டம் (விஜய் தலைமையில் தமிழ்நாட்டு வெற்றி கழகத்தின் (தவெகா) அவசர ஆலோசனைக் கூட்டம்.) தவெகா அவசர ஆலோசனைக் கூட்டம் அக்கழகத் தலைவர் விஜய் தலைமையில் இன்று (ஜூன் 09) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாகத் தகவல். பனையூர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் தவராமல் கலந்து கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்.



  • Jun 09, 2025 09:09 IST

    சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் செல்லும் இந்திய வீரர்

    சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு இந்திய விண்வெளி வீரர் சுபஷ் சுக்லா, நாசாவின் ஆக்சியோம்-4 (Axiom-4) மிஷன் மூலம் நாளை (ஜூன் 10, 2025) செல்கிறார்.

    இந்த பயணத்தில், சுபஷ் சுக்லாவுடன் இணைந்து போலந்து, ஹங்கேரி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களும் விண்வெளிக்குச் செல்கின்றனர்.

    ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்திய வீரர் சுபஷ் சுக்லா என்பது குறிப்பிடத்தக்கது.



  • Jun 09, 2025 08:26 IST

    பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தை அகற்ற பரிசீலனை

    பெங்களூரு, RCB அணியின் வெற்றிப் பேரணியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை நகரின் மையப்பகுதியில் இருந்து அகற்ற பரிசீலிக்கப்படும்  என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.



  • Jun 09, 2025 08:25 IST

    வைகாசி விசாகம்

    திருச்செந்தூரில் வைகாசி விசாகம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கோவில் வளாகம், கடற்கரை, நாழி கிணறு பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 



  • Jun 09, 2025 07:59 IST

    திமுக அரசின் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்து உள்ளார் அமித்ஷா - ஆர்.எஸ்.பாரதி

    அதிமுகவை மிரட்டி விழுங்கி வரும் அமித்ஷா கூட்டணி அமைத்த அன்றே தனக்கு அடிமைதான் இபிஎஸ் என்பதை உலகிற்கே காட்டினார். மதுரையில் நேற்று திமுக ஆட்சி மீது அவதூறு பொய் மூட்டைகளை அவிழ்த்து உள்ளார் என ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.



  • Jun 09, 2025 07:55 IST

    சென்னை திரும்பும் மக்கள்-போக்குவரத்து நெரிசல்

    3 நாட்கள் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் கிளாம்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம் வரை சுமார் 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் காத்திருக்கின்றனர். 



  • Jun 09, 2025 07:28 IST

    முதல்வர் தலைமையில் துறை சார்பான ஆலோசனைக் கூட்டம்

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துறை சார்பான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள், வணிகவரி கூட்டுறவு உள்ளிட்ட துறை சார்பிலான ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது.



  • Jun 09, 2025 07:26 IST

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

     சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     



  • Jun 09, 2025 07:26 IST

    பொறியியல் படிப்பு- சான்றிதழ்களை பதிவேற்ற இன்றே கடைசி நாள்

     

    பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் மாணவர்களுக்கு ஜூன் 11இல் ரேண்டம் எண் ஒதுக்கப்படவுள்ளது.



news updates Tamilnadu Live News Udpate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: