scorecardresearch

சென்னை மக்களே உஷார்… இந்த தேதியில் இருந்து பலத்த மழை!

Chennai Tamil News: ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை.

Chennai Rain
Tamil News updates

Chennai Tamil News: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் சூறாவளி சுழற்சியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் (ஆர்எம்சி) அறிவித்துள்ளது. 

இதுகுறித்து ஆர்எம்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது, ​​”சென்னையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டாலும், ஒரு சில பகுதிகளில் மட்டுமே மழை பெய்தது. தமிழக பகுதியில் சூறாவளி சுழற்சி நிலவி வருவதால், அடுத்த மாதம் முதல் வட தமிழகத்தில் மழை பெய்யும்.

“நகரின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் மற்ற மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று கூறினார்.

ஆகஸ்ட் 1 முதல் விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூர், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில், தேனியில் அதிகபட்சமாக 9 செ.மீ மழையும், திண்டுக்கல்லில் 6 செ.மீ., திருப்பூரில் 4 செ.மீ., கோவை, ஈரோடு, நீலகிரி, நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai news rain in nearby districts from august 1st

Best of Express