Chennai News Highlights: இந்தியா - பாகிஸ்தான் போரில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது: டிரம்ப் மீண்டும் பேச்சு

Tamil Nadu Latest Live News Update in Tamil 18 June 2025: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu Latest Live News Update in Tamil 18 June 2025: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
modi trump

India-US relations update: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுமார் 35 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினர். Photograph: ((File Photo: Reuters))

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
    • Jun 18, 2025 23:40 IST

      ஓரணியில் தமிழ்நாடு - திமுக உறுப்பினர்கள் சேர்க்கை பேரணி

      நெல்லை : களக்காட்டில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர்கள் சேர்க்கை மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி. களக்காடு தெற்கு ஒன்றிய செயலாளரும் நகராட்சி துணை சேர்மனுமான பி.சி.ராஜன் தலைமையில் நடைபெற்றது.



    • Jun 18, 2025 23:39 IST

      நகைகள் மாயமான வழக்கில் நீதிமன்ற ஊழியர் கைது

      காரைக்கால் நீதிமன்றத்தில் தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமான வழக்கு. நீதிமன்ற பாதுகாப்பு ஊழியர் தலைமை சிரஸ்தார் குணசேகரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்



    • Advertisment
      Advertisements
    • Jun 18, 2025 23:38 IST

      பிரச்சினைகளை போர்க்களம் மூலம் தீர்க்க முடியாது:குரோஷியாவில் பிரதமர் மோடி பேச்சு

      ஐரோப்பாவாக இருந்தாலும் சரி, ஆசியாவாக இருந்தாலும் சரி, பிரச்சினைகளை போர்க்களம் மூலம் தீர்க்க முடியாது. எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கும் மரியாதை அவசியம். இந்தி மொழியில் எனது கருத்துக்களை இங்கு முன்வைப்பதில் பெருமைப்படுகிறேன் என  குரோஷியாவில் பிரதமர் மோடி பேச்சு



    • Jun 18, 2025 23:36 IST

      இந்தியா - பாகிஸ்தான் போரில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது: டிரம்ப் மீண்டும் பேச்சு 

      இந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் மீண்டும் கருத்து  தெரிவித்துள்ளார். 3ஆம் தரப்பு மத்தியஸ்தத்தை ஏற்க முடியாது என டிரம்பிடம் பிரதமர் மோடி தெளிவுப்படுத்தியிருந்த நிலையில், டிரம்ப் மீண்டும் கருத்து கூறியுள்ளார். இந்திய பிரதமர் மோடி மிகச்சிறந்த நபர். நேற்றிரவு பிரதமர் மோடியிடம் வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து பேசினேன். இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையேயான போரை நான் நிறுத்தியுள்ளேன் போரை நிறுத்துவதற்கு, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனிர் முக்கிய காரணம் என கூறியுள்ளார்.



    • Jun 18, 2025 20:42 IST

      பேருந்தில் ஆபத்தான பயணம்: மாணவர்களுக்கு போலீஸ் அறிவுரை

      பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்ட நிலையில், அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தை உணராமல் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படும் நிலையில், பேருந்தை வழிமறித்து மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறினர்.



    • Jun 18, 2025 19:43 IST

      ஏல சொத்துகளை பதிவு செய்ய கட்டணம் குறைப்பு

      ஏலம் மூலம் வாங்கிய சொத்துகளின் விற்பனை சான்றிதழ்களை பதிவு செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



    • Jun 18, 2025 19:23 IST

      அரசு பள்ளி என்பது பெருமையின் அடையாளம் - அன்பில் மகேஷ்

      அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



    • Jun 18, 2025 19:02 IST

      குரோஷியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

      குரோஷியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக, காயத்ரி மந்திரம் ஒலிக்க, இந்திய பாரம்பரிய நடனமாடி வரவேற்பளித்தனர். 



    • Jun 18, 2025 18:45 IST

      ஈரானில் இருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள் - இன்று இரவு நாடு திரும்புவதாக தகவல்

      ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ, 110 இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து அர்மேனியா அழைத்து வரப்பட்டனர். அர்மேனியாவில் இருந்து புறப்பட்டுள்ள இந்திய மாணவர்கள் இன்று இரவு இந்தியா திரும்புகின்றனர்.



    • Jun 18, 2025 18:22 IST

      தமிழர் நாகரிகம் என்பது எரிமலையை போன்றது - த.வெ.க அருண்ராஜ்

      தமிழர் நாகரிகம் என்பது எரிமலையை போன்றது என த.வெ.க கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், "மக்கள் காதுகளில் பூச்சுற்றுவதற்காக பா.ஜ.க சொல்லும் புராணக் கதைகள் அல்ல கீழடி ஆய்வு முடிவுகள்; அறிவியல்பூர்வமான ஆதாரங்களை கொண்டு தொகுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை. இதனை, திட்டமிட்டு இருட்டடிப்பு செய்ய பா.ஜ.க முயல்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



    • Jun 18, 2025 17:45 IST

      “நட்பின் அடிப்படையில் சந்திப்பு" - திருமாவளவன்

      நட்பின் அடிப்படையில் அதிமுகவின் வைகைச்செல்வனுடன் சந்திப்பு நடந்தது அவ்வளவுதான் நாங்கள் எந்த அரசியலும் பேசவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 



    • Jun 18, 2025 17:43 IST

      மாநில தகவல் ஆணையர்கள் நியமனம் செய்து ஆளுநர் உத்தரவு

      மாநில தகவல் ஆணையர்களாக நடேசன் மற்றும் இளம்பரிதி ஆகியோரை நியமனம் செய்து ஆளுநர் ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் அடுத்த வாரம் மாநில தகவல் ஆணையர்கள் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.



    • Jun 18, 2025 17:19 IST

      'நாங்கள் பேரழிவிலிருந்து மில்லிமீட்டர் தொலைவில் இருக்கிறோம்' - ரஷ்ய வெளியுறவு அமைச்சகம்

      ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பு மீது தினசரி இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக "பேரழிவிலிருந்து நாங்கள் மில்லிமீட்டர் தொலைவில் இருக்கிறோம்" என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.



    • Jun 18, 2025 17:02 IST

      ஈரானின் கடந்த காலத்தை நினைவுபடுத்திய கமேனி, நாடு சரணடையாது என்று கூறுகிறார்

      "ஈரான், ஈரான் தேசம் மற்றும் அதன் வரலாற்றை அறிந்த புத்திசாலிகள் ஒருபோதும் இந்த தேசத்துடன் அச்சுறுத்தும் மொழியில் பேச மாட்டார்கள், ஏனெனில் ஈரானிய தேசம் சரணடையாது" என்று கமேனி புதன்கிழமை ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளரால் வாசிப்பு செய்யப்பட்ட அறிக்கையில் கூறினார்.



    • Jun 18, 2025 16:45 IST

      இஸ்ரேலிய தாக்குதலின் கீழ், ஈரானுக்கு தற்காப்புக்கான 'சட்டபூர்வ' உரிமை உள்ளது - எர்டோகன்

      இஸ்ரேலின் தற்போதைய குண்டுவீச்சு பிரச்சாரத்தை எதிர்கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஈரானுக்கு "சட்டபூர்வமான" உரிமை உள்ளது என்று துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கூறினார்.

      "இஸ்ரேலின் குண்டர் மற்றும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்வது ஈரானுக்கு மிகவும் இயல்பான, சட்டபூர்வமான மற்றும் சட்டபூர்வமான உரிமை" என்று அவர் கூறினார், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை "பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்" என்று குறிப்பிட்ட ஒரு நாள் கழித்து.

      "ஈரானிய அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது இந்த தாக்குதல்கள் ஏற்பாடு செய்யப்பட்டன" என்று எர்டோகன் கூறினார்.

      "அணு ஆயுதங்களை வைத்திருக்கும் மற்றும் எந்த சர்வதேச விதிகளையும் அங்கீகரிக்காத இஸ்ரேல் ... பேச்சுவார்த்தைகள் முடிவடையும் வரை காத்திருக்கவில்லை, ஆனால் முடிவுக்காக காத்திருக்காமல் ஒரு பயங்கரவாத செயலை நடத்தினார்."

      "ஈரான் மீதான இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். துருக்கி மீதான இந்த தாக்குதல்களின் சாத்தியமான விளைவுகள் குறித்து எங்கள் அனைத்து நிறுவனங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.

      அவர் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு வகையான சூழ்நிலைக்கும் நாங்கள் முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம்.

      "எங்களை சோதிக்க யாரும் துணிய வேண்டாம்."



    • Jun 18, 2025 16:44 IST

      ஈரானின் கடந்த காலத்தை நினைவுபடுத்திய கமேனி, நாடு சரணடையாது

      "ஈரான், ஈரான் தேசம் மற்றும் அதன் வரலாற்றை அறிந்த புத்திசாலிகள் ஒருபோதும் இந்த தேசத்துடன் அச்சுறுத்தும் மொழியில் பேச மாட்டார்கள், ஏனெனில் ஈரானிய தேசம் சரணடையாது" என்று கமேனி புதன்கிழமை ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளரால் வாசிப்பு செய்யப்பட்ட அறிக்கையில் கூறினார்.



    • Jun 18, 2025 16:41 IST

      வரலாறு கூறும் தமிழ்நாட்டுக் காசுகள் எனும் புத்தகம் 2 பாகம வெளியீடு

      அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நாணயவியல் ஆராச்சியாளர் ஆறுமிக சீதாராமன் ஆகியோர் இணைந்து எழுதிய “வரலாறு கூறும் தமிழ்நாட்டுக் காசுகள்” எனும் 2 பாகங்கள் கொண்ட புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 



    • Jun 18, 2025 16:40 IST

      "கொடிக்கம்பங்களுக்கு ரூ.1,000 கட்டணம் வசூலிக்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம்

      பொது இடங்களில் நடப்படும் கொடிக்கம்பங்களுக்கு ரூ.1,000 கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. சாலையின் நடுவில் அமைந்துள்ள தடுப்புகளில் கொடிக்கம்பங்கள் நடக்கூடாது. பொது இடங்களில் நடைபெறும் அரசியல் கட்சி கூட்டங்களுக்கும் வாடகை வசூல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    • Jun 18, 2025 16:38 IST

      தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும் என கணிப்பு

      உள் தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் இன்றும் நாளையும் இயல்பு நிலையை விட 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



    • Jun 18, 2025 16:09 IST

      டாஸ்மாக் வழக்கு - இடைக்கால உத்தரவு தள்ளி வைப்பு

      டாஸ்மாக் வழக்கு - அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த வழக்கில் இடைக்கால உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

       “ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் திரும்ப பெறப்படும்'' . அமலாக்கத்துறை “கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்க தயார்''.  அமலாக்கத்துறை பிரதான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவு வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.



    • Jun 18, 2025 15:49 IST

      டாஸ்மாக் வழக்கில் வீடுகள், அலுவலகங்களுக்கு வைத்த சீலை அகற்ற அமலாக்கத்துறை ஒப்புதல்..!!

      டாஸ்மாக் வழக்கில் வீடுகள், அலுவலகங்களுக்கு வைத்த சீலை அகற்ற அமலாக்கத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. டாஸ்மாக் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு அமலாக்கத்துறை பணிந்தது. ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகங்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற அமலாக்கத்துறை ஒப்புதல் அளித்தது. இருவரது வீடுகள், அலுவலகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை திருப்பி ஒப்படைக்கவும் அமலாக்கத்துறை ஒப்புதல் அளித்தது. இதனிடையே,இடைக்கால மனு மீதான தீர்ப்பு 4 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.



    • Jun 18, 2025 15:24 IST

      சைபர் கிரைம் வழக்கு; 5 மாதத்தில் ரூ.10 கோடி மீட்பு: காவல்துறை தகவல்

      சைபர் கிரைம் குற்ற வழக்குகளில் கடந்த 5 மாதத்தில் ரூ.10.45 கோடி மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ரூ.218 கோடியில் ரூ.48 கோடி முடக்கப்பட்டுள்ளது; ரூ.10,45 கோடி வங்கிக் கணக்கில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.



    • Jun 18, 2025 15:11 IST

      டெல்லியில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கில் தலா ரூ.8000 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் ஆவடி நாசர்..!!

      டெல்லியில் உள்ள மதராசி கேம்ப் குடியிருப்பு அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் அமைச்சர் ஆவடி நாசர் தலா ரூ.8000 நிதியுதவி வழங்கினார். ரூ.4,000 மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை முதற்கட்டமாக 150 குடும்பங்களுக்கு அமைச்சர் வழங்கினார்.



    • Jun 18, 2025 15:05 IST

      ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 241 பேரில் 158 பேரின் உடல்கள் ஒப்படைப்பு!!

      ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 241 பேரில் 158 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது. 241 பேரில் இதுவரை 184 பேரின் டி.என்.ஏ. பொருந்தி உள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.



    • Jun 18, 2025 14:38 IST

      கால்நடை மருத்துவ படிப்பு: ஜூன் 20 வரை விண்ணப்பம்

      தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் சேர நாளை மறுநாள் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிக்க நேற்று வரை 22,855 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.



    • Jun 18, 2025 14:38 IST

      பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!!

      பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ அருள் ஏற்கனவே நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



    • Jun 18, 2025 14:37 IST

      தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை தாண்டியது!!

      தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை தாண்டியது. மார்ச் 1 முதல் ஜூன் 17 வரை அரசு பள்ளிகளில் 3,12,881 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னை 17,985 பேர், குறைந்தபட்சமாக நீலகிரி 1,327 பேர் பள்ளிகளில் சேர்ந்தனர்.



    • Jun 18, 2025 14:36 IST

      பல்லி விழுந்த சுண்டல் சாப்பிட்ட பேராசிரியர்கள் மயக்கம்

      சென்னை கோட்டூர்புரத்தில் 'நான் முதல்வன்' திட்ட பயிற்சியில் பங்கேற்ற பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்ட சுண்டலில் 2 பல்லிகள் இருந்ததாக கூறப்படுகிறது இதனை சாப்பிட்ட 10க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி; தரமற்ற உணவு வழங்கப்பட்டதாகக் கூறி முகாமிற்கு வந்த பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்



    • Jun 18, 2025 14:25 IST

      சீல் வைப்பது தொடர்பான நோட்டீசை திரும்ப பெற்றுக் கொள்வதாக ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தகவல்..!!

      சீல் வைப்பது தொடர்பான நோட்டீசை திரும்ப பெற்றுக் கொள்வதாக ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அலுவலகம், வீடுகளுக்கு சீல் வைக்கும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை.டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வாதத்துக்கும், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் வீடுகளுக்கு அமலாக்கத்துறை சீல் வைக்க என்ன அதிகாரம் உள்ளது?. சீலை அகற்றி விடுகிறோம்; நோட்டீஸை எடுத்து விடுகிறோம் என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. டாஸ்மாக் வழக்கில் பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்கிறது.



    • Jun 18, 2025 14:25 IST

      கார்களுக்கு சுங்கச்சாவடி பாஸ் ஆக.15 முதல் அறிமுகம்

      கார்களுக்கு சுங்கச்சாவடி பாஸ் ஆக.15 முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி பாஸ் வாங்கினால் 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம். கார், ஜீப், வேன் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3,000 பாஸ் மூலம் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை கட்டணமின்றி கடக்கலாம்.



    • Jun 18, 2025 13:48 IST

      பா.ம.க எம்.எல்.ஏ அருள் மருத்துவமனையில் அனுமதி

      பா.ம.க எம்.எல்.ஏ அருள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



    • Jun 18, 2025 13:46 IST

      சுங்கச்சாவடிகளில் ரூ.3,000-க்கு வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ்; ஆகஸ்ட் 15 முதல் நடைமுறை - நிதின் கட்கரி அறிவிப்பு

      சுங்கச்சாவடிகளில் ஆண்டு முழுவதும் அல்லது 200 பயணங்கள் (TRIP) வரை பயன்படுத்தக்கூடிய, ரூ.3,000 கட்டணத்தில் வருடாந்திர FASTag பாஸ் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் கார், ஜீப், வேன்கள் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.



    • Jun 18, 2025 13:35 IST

      திருமாவளவன் உடன் சந்திப்பு: ‘தி.மு.க கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது’ - வைகைச்செல்வன் பதில்

      திருச்சியில் வி.சி.க தலைவர் திருமாவளவனோடு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் சந்தித்துப் பேசியது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்: “தி.மு.க கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது என்பதே திருமாவளவனை சந்தித்ததற்கான பதில்; அ.தி.மு.க கூட்ட்ணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெறும், பலர் வர உள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.



    • Jun 18, 2025 13:02 IST

      சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு 2 உலகளாவிய விருதுகள்!

      சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டு உலகளாவிய விருதுகளைப் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டு பிரிவுகளில் இந்த விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த சாதனைகளுக்காக கிரின்டெக் அறக்கட்டளையால் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் ராஜீவ் கே. ஸ்ரீவஸ்தவாவுக்கு இவ்விருதுகள் கிடைக்க முக்கிய காரணமாக இருந்தமைக்காக இயக்குநர் சித்திக்கு மெர்வின் பாராட்டு தெரிவித்துள்ளார். பாலின பாகுபாடின்றி வேலை, பயிற்சி, தலைமைப் பொறுப்புகளை வழங்கி வருவதாகவும், இயற்கை வளம் மேம்பாடு, காலநிலை மாற்றம் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.



    • Jun 18, 2025 12:54 IST

      ஈரானில் இருந்து ஏவப்பட்ட 3 ஆளில்லா விமானங்களை இடைமறித்து தாக்குதல் - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

      புதன்கிழமை ஈரானில் இருந்து இஸ்ரேலிய பகுதி நோக்கி ஏவப்பட்ட மூன்று ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAVs) இடைமறித்து தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.



    • Jun 18, 2025 12:52 IST

      ஏர் இந்தியா விமான விபத்து: 159 பேரின் உடல்கள் ஒப்படைப்பு

      அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களில் 159 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, 190 பேரின் டி.என்.ஏ மாதிரிகள் சரிபார்க்கப்பட்டு 159 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



    • Jun 18, 2025 12:44 IST

      சென்னையில் இனி தானியங்கி சிக்னல்கள்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!

      சென்னை சாலைகளில் இனி காத்திருப்பு நேரம் குறைவதற்கான புதிய தானியங்கி சிக்னல்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்சார் கேமரா அடிப்படையில் இயங்கும் இந்த அதிநவீன சிக்னல் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

      சென்சார் தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், போக்குவரத்து நிலவரத்திற்கு ஏற்ப சிக்னல்கள் தானாகவே மாற்றி அமைக்கப்படும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் வேகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிக்னல் நேரம் தானாகவே சரிசெய்யப்படும்.

      மேலும், தேவைப்படும் நேரங்களில் போக்குவரத்து காவலர்களும் ரிமோட் வழியாக இந்த சிக்னல்களை இயக்கும் வசதியும் இதில் உள்ளது. இது அவசர காலங்களில் அல்லது எதிர்பாராத போக்குவரத்து மாற்றங்களின் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதிய சென்சார் கேமராக்கள் சாலைகளில் எத்தனை வாகனங்கள் செல்கின்றன, எவ்வளவு வேகத்தில் செல்கின்றன என்பதையும் பதிவு செய்யும் திறன் கொண்டவை. இதன் மூலம் போக்குவரத்து குறித்த துல்லியமான தரவுகளைப் பெற்று, எதிர்கால திட்டமிடலுக்குப் பயன்படுத்த முடியும்.



    • Jun 18, 2025 12:24 IST

      சென்னை - டெல்லி ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து

      சென்னை - டெல்லி, டெல்லி - சென்னை 2 ஏர் இந்தியா பயணிகள் விமானம், நிர்வாக காரணங்களால் இன்று  ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு அது குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

      ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 6 மணி நேரம் தாமதம் குறித்து அதிகாரிகள்  தரப்பில் கூறுகையில், சவுதி அரேபியாவின் தமாமிலிருந்து அதிகாலை 3.25 மணிக்கு சென்னைக்கு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம்தான், அதிகாலை 5 மணிக்கு மீண்டும் சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும்.

      ஆனால் இன்று அந்த விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக, காலை 9.25 மணிக்குதான் தமாமிலிருந்து சென்னைக்கு வந்தது. எனவே சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானமும் தாமதமாக புறப்பட்டுச் சென்றது என்று கூறுகின்றனர். 



    • Jun 18, 2025 12:21 IST

      ஏ.டி.ஜி.பி ஜெயராம் சஸ்பெண்ட் ஏன்? தமிழக காவல்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

      சிறுவன் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் தமிழக காவல்துறை அதிகாரி ஏ.டி.ஜி.பி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று (ஜூன் 18, 2025) முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
      சிறுவன் கடத்தல் வழக்கில் தனக்குத் தொடர்பில்லை என எஸ்.பி. ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.

      இந்த வழக்கில் ஜெயராம் தொடர்ச்சியாக ஒத்துழைக்காததே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் என தமிழக காவல்துறை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      எஸ்.பி. ஜெயராம் பணியிடை நீக்கத்தை ரத்து செய்வது குறித்து உரிய விளக்கம் கேட்டு தெரிவிப்பதாக அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த உச்ச நீதிமன்றம், உரிய விளக்கத்தை நாளை தினமே நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.



    • Jun 18, 2025 12:10 IST

      ஈரான் தாக்குதலுக்குப்பின்... வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மக்களை மீட்க விமான சேவை தொடங்கியது இஸ்ரேல்

      ஈரான் மீதான தனது திடீர் இராணுவத் தாக்குதலுக்குப் பிறகு வெளிநாடுகளில் சிக்கித் தவித்த பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்களை நாட்டுக்கு அழைத்து வர, இஸ்ரேல் புதன்கிழமை அன்று கட்டம் கட்டமாக ஒரு விமான சேவை நடவடிக்கையைத் தொடங்கியது. தேசிய விமான நிறுவனமான எல் ஆல் (El Al) இயக்கிய முதல் மீட்பு விமானம், புதன்கிழமை அதிகாலையில் பென் குரியன் விமான நிலையத்தில் தரையிறங்கி, சைப்ரஸில் உள்ள லார்னாகாவிலிருந்து பயணிகளை அழைத்து வந்தது.



    • Jun 18, 2025 11:33 IST

      பாலி அருகில் எரிமலை வெடிப்பு: மீண்டும் டெல்லி திரும்பிய ஏர் இந்தியா விமானம்

      டெல்லியில் இருந்து பாலிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், பாலி விமான நிலையத்திற்கு அருகில் எரிமலை வெடிப்பு ஏற்பட்ட நிலையில், மீண்டும் டெல்லி திரும்பியது; டெல்லி விமான நிலையத்தில் பயணிகளுடன் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. 



    • Jun 18, 2025 11:32 IST

      எரிமலை வெடிப்பு: திருப்பி விடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

      டெல்லியில் இருந்து பாலிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், பாலி விமான நிலையத்திற்கு அருகில் எரிமலை வெடிப்பு ஏற்பட்ட நிலையில், மீண்டும் டெல்லி திரும்பியது; டெல்லி விமான நிலையத்தில் பயணிகளுடன் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. 



    • Jun 18, 2025 11:10 IST

      மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் உண்ணா விரத போராட்டம்

      மாம்பழம் விளைச்சல் அமோகமாக இருந்தும் போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள், மாம்பழங்களை சாலையோரம் கொட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில், மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் உண்ணா விரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.



    • Jun 18, 2025 11:02 IST

      சென்னையில் கட்டணமில்லா குடிநீர்: தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

      Video credit: Sun News 



    • Jun 18, 2025 10:50 IST

      மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் - 4 திட்டம்

      4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லும் ஆக்சியம் 4 திட்டம் பல்வேறு காரணங்களால் ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒத்தி வைப்பு

      ஜூன் 22ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி சரியாக மதியம் 1.12 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு



    • Jun 18, 2025 10:25 IST

      ஐடி ரெய்டு- ஹோட்டல் வேறு ஒருவருடையது- ஆர்யா மறுப்பு

      ஐடி ரெய்டு நடக்கும் ஹோட்டலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ரெய்டு நடக்கும் ஹோட்டல் வேறு ஒருவருடையது.
      சென்னையில் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக வெளியான தகவலுக்கு ஆர்யா மறுப்பு தெரிவிப்பு



    • Jun 18, 2025 10:24 IST

      பாகிஸ்தான் ராணுவத் தளபதி டிரம்ப் சந்திப்பு

      ஜி7 மாநாட்டின்போது மோடி - டிரம்ப் சந்திப்பதாக இருந்த நிலையில் முன்னதாகவே டிரம்ப் புறப்பட்டுச் சென்றதால், தொலைபேசியில் பேச்சு.

      பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீரை இன்று சந்திக்கிறார் டிரம்ப்



    • Jun 18, 2025 09:40 IST

      இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்: ஈரானில் 565 பேர் பலி

      இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த கிட்டத்தட்ட 600 பேர் கொல்லப்பட்டனர். மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சண்டை 6-வது நாளாக புதன்கிழமையும் தொடர்ந்து வருகிறது. இருநாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒத்துழைக்காமல் சண்டையிட்டு வருகின்றன.



    • Jun 18, 2025 09:40 IST

      தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-ஆந்திர காவலர் கைது

      வாணியம்பாடி அருகே தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஆந்திர காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். தோல் தொழிற்சாலை அதிபர் இம்தியாஸ் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயற்சியில் ஈடுபட்டனர். மனைவி சபீதா குல்சும் கத்தி கூச்சலிட்டதால், செல்போனை மட்டும் கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாசு ஆந்திரா திருமலா காவலர் அருண்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.



    • Jun 18, 2025 09:21 IST

      ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவா?- அரசு விளக்கம்

      தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 22-ந்தேதி (ஞாயிறு) ஊரடங்கு அறிவிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், இது பழைய வீடியோ. 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிப்பதாக வெளியான செய்தியை தற்போது வெளியான செய்தி போல் தவறாக பரப்பி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.



    Chennai

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: