Advertisment

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை; விடுதியில் சடலம் கண்டெடுப்பு

சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் முதலாமாண்டு படித்து வந்த அரவிந்த் இன்று (செப்டம்பர் 4) தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
pg medical student die

மருத்துவக் கல்லூரி விடுதி அறையில் மாணவர் அரவிந்த் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் முதலாமாண்டு படித்து வந்த அரவிந்த் இன்று (செப்டம்பர் 4) தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவக் கல்லூரி விடுதி அறையில் மாணவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் முதலாமாண்டு படித்து வந்த அரவிந்த் இன்று காலை (செப்டம்பர் 4) தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் (29) என்ற மருத்துவ கல்லூரி மாணவர் இன்று காலை விடுதி அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லூரி மாணவி ஷெர்லின் என்பவர் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

அதே போல, நேற்று முன்தினம் விருதுநகரில் இளங்கலை மருத்துவம் முதலாம் ஆண்டு மாணவி ஆதி ஸ்ரீவிவேகா தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

அதேபோல் பொத்தேரியில் இன்று ஒரு மாணவர் கல்லூரி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்துகொள்வது எதற்கு தீர்வல்ல, தற்கொலை செய்துகொள்வதால் அந்த பிரச்னை முடிந்துபோவதுமில்லை. தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்க ஆலோசனை பெறுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment