/indian-express-tamil/media/media_files/MoEB8fxJiiXVV9chCwHk.jpeg)
பட்டியலின பெண் சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ மகன் மருமகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
dmk | pallavaram | சென்னை பல்லாவரம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதி. இவரின் மகன் ஆண்டோ மதிவாணன். இவரின் மனைவி மெர்லினா.
இவர்கள் திருவான்மியூரில் வசித்து வந்தனர். இவர்களின் வீட்டில் பணி பெண்ணாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பணி செய்து வந்துள்ளார்.
அவர், திருவான்மியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “தனது தாயைப் பார்க்க வேண்டும் என்று கேட்ட பெண்ணை நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தி உள்ளனர். படுக்க வைத்து பிறப்புறுப்பில் மிதித்தனர்.
மேலும் ஜாதி பெயரை கூறி அப்பெண்ணை தாக்கினர்” எனத் தெரிவித்து இருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லின் தலைமறைவாகினர். இந்த நிலையில் அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுக பிப்.1ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் இன்று ஆண்டோ மதிவாணண் மற்றும் அவரது மனைவி மெர்லின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களை ஆந்திராவில் வைத்து கைது செய்ததாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.