சென்னை காவல்துறை சார்பில் மிட்பு பணிகள், நிவாரண உதவிகளுக்காக உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை வரலாற்றில் 6வது முறையாக இந்தாண்டில் 2,000 மி.மீ மழை பெய்துள்ளது.1976, 1985, 1996, 2005, 2015 மற்றும் தற்போது பெரும் மழை பதிவாகி உள்ளது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் நிரம்பி உள்ளது. நேற்று மாலையில் சென்னையின் முக்கிய இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. தண்ணீர் வடியாத இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை. பல்வேறு இடங்களில் தண்ணீர் முழுவதுமாக அகற்றப்படவில்லை. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். நிவாரண முகாமிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி உள்ள நபர்களை மீட்பு குழுவினர், படகு மூலம் மீட்டு வருகின்றனர். சென்னை முழுவதும் 50 நிவாரண முகாமில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு சார்பில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது. மேலும் அதிமுக சார்பிலும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்வேறு இடங்களில் மக்கள் சிக்கி உள்ளனர். மேலும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவ சென்னை பெருநகர காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2345 2359, 2345 2360, 2345 2361, 2345 2377 மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டறை எண். 2345 2437ஐ தொடர்புகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“