இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட்; சென்னையில் ப்ளாக்கில் டிக்கெட் விற்ற 12 பேர் கைது

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்களை ப்ளாக்கில் விற்ற 12 பேர் கைது; 29 டிக்கெட்களையும் போலீசார் பறிமுதல்

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்களை ப்ளாக்கில் விற்ற 12 பேர் கைது; 29 டிக்கெட்களையும் போலீசார் பறிமுதல்

author-image
WebDesk
New Update
express photo

சென்னையில் நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்களை பிளாக்கில் விற்ற 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisment

இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றிப்பெற்று, சமநிலையில் உள்ளன. இதனையடுத்து, தொடரை வெல்லப்போவது யார் என்ற 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் டிக்கெட்களை வாங்கினர்.

இதையும் படியுங்கள்: தமிழக பட்ஜெட்டில் திருச்சி மாவட்டம் புறக்கணிப்பு: வளர்ச்சி குழுமம் வேதனை

தொடர் யாருக்கு என்ற இறுதிப்போட்டி என்பதால், இரு அணிகளும் வெற்றி முனைப்புடன் களமிறங்கின. மறுபுறம் இந்த விறுவிறுப்பான போட்டியைக் காண ரசிகர்களும் ஆர்வமுடன் இருந்தனர். இதனால், போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

Advertisment
Advertisements

இந்தநிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்களை ப்ளாக்கில் விற்ற 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 29 டிக்கெட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cricket Chennai Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: